Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏட்டிக்கு போட்டியான கடத்தல்கள்-நியுட்டனும் ஜெயரட்னமும்

Featured Replies

அண்மைய ஊ்டகங்களில் 2005 இல் கல்கிசை பயங்கரவாத தடுப்பு இன்ஸ்பெக்டர் கடத்தப்பட்டு வன்னியில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பாக வெளியாகிவருகிறது. அன்று அவர் கடத்தப்பட்ட பின்னணித்தகவல்கள் குறித்து ஆராய்ந்தபோது கிடைத்தவை இந்தப்பதிவில்,

2004 ஆம் ஆண்டு கருணா புலிகளை விட்டு வெளியேறிய பின்னர் கிழக்கிலும் தெற்கிலும் புலிகளின் புலனாய்வுத்துறை வளம் பெருமளவு கருணாகுழுவின் நடவடிக்கைகளுக்கான திருப்பப்பட்டது.கிழக்கில் புலிகளின் புலனாய்வுத்தளபதி கீர்த்தியின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தெற்கில் ஏற்கனவே இருந்த புலனாய்வுவலைப்பினலுடன் புதிதாக நியுட்டன் என்வரும் களம் இறக்கப்பட்டார்.

(கிழக்கு புலனாய்வுத்துறை தளபதி கீர்த்தி)

c5.jpg

நியுட்டன் என்ற நவம்பர் விஸ்கி

விடுதலைப்புலிகளின் மூத்த முக்கிய உறுப்பினரான தாமோதரம் பிள்ளை சிவகுமார்(2005 இல் வயது 43) என்ற நியுட்டன் ஆரம்பகாலத்தில் விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு பிரிவில் செயற்பட்டார்.இந்தியாவில் புலிகளின் முதலாவது தொலைத்தொடர்பு பயிற்சிப்பாசறையில் பயிற்சி பெற்ற லெப்.கேணல் ஜொனி உட்பட்ட 10 பேரில் நியுட்டனும் ஒருவர்.அத்துடன் வெடிபொருட்கள் தொடர்பான அறிவுிலும் நிபுணரான நியுட்டன் பின்னர் வெடிபொருட்கள் தயாரிப்புப்பகுதியிலும் நீண்டகாலம் பணியாற்றினார்.அவரது தொலைத்தொடர்பு சங்கேத பெயர் குறியீடு நவம்பர் ஒஸ்கார் என்பதாகும்.(சில முக்கிய புலிகளின் சங்கேத பெயர்கள் பால்ராஜ்-நவம்பர் லீமா,தீபன் – நவம்பர் ரோமியோ என்னினும் தேவைக்கேற்ப இவை மாற்றப்படும்)

c3.jpg

 

(படத்தில் நடுவில் நியுட்டன் வலது ரஞ்சித், இடது கரிகாலன் 1990 இல் எடுக்கப்பட்டபடம்)

2002 சமாதான நடவடிக்கை ஆரம்பித்தமையடுத்து புலிகள் அரசபகுதிக்குள் உலாவரத்தொடங்கிய காலத்தில் நியுட்டன் உட்பட்ட புலனாய்வுப்பிரிவு உறுப்பினர்களும் தமது தேவைகளுக்கேற்ப அரச பகுதிக்குள் வந்து சென்றிருந்தனர்.2004 கருணாவின் வெளியேற்றத்தைத்தொடர்ந்து புலிகள் கடும் இறுக்கத்தை சந்திக்கத்தொடங்கியது.முடங்கிக்கிடந்த சிங்களபப்புலனாய்வுப்பிரிவு விழித்துக்கொண்டது.கருணாவை கையாள சிங்கள புலனாய்வுப்பிரிவு கட்டளை அதிகாரியாக இருந்த கபில கந்தவிதாரன மிகவும் நுட்பமாக காய்நகர்த்தியதுடன் கருணாகுழுவை புலிகளுக்கெதிராக கையாண்டதுடன் சிங்கள புலனாய்வுப்பிரிவை தனியாக  பல நடவடிக்கைகளுக்கு நகர்த்தி புலிகளுக்கு நெருக்கடியைக்கொடுத்தார்.இங்கேதான் புலிகளின் 2009 தோல்வி நி்ச்சயமாகத் தொடங்குகிறது.உண்மையில் இநத இடத்தில் புலிகளை விஞ்சியே நின்றது சிங்கள புலனாய்வுத்துறை.

இந்தநிலையில் நியுட்டன் கொழும்புவந்து முதலில் நட்சத்திரவிடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.குறிப்பிட்ட ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளவத்தையிலிருந்த நேரு மாஸ்டர் (வட-கிழக்கு மாகாண கல்வி அதிகாரி) என்பவருடன் தொடர்புகொண்டு கண்டி செல்லவேண்டும் வாகன உதவி வேண்டும் எனக்கேட்டுள்ளார்.இருவரும் நேரு மாஸ்டர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றனர்.பின்னர் அவர்கள் பற்றிய தகவல் இல்லை.நியுட்டன் கொழும்பு நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்த போதே சிங்களபுலனாய்வுப்பிரிவின் கண்களுக்குள் அகப்பட்டுக்கொண்டார்.2005 இல் சிங்கள புலனாய்வுப்பிரிவு மிகவும் விழிப்பாக கொழும்பில் இருந்த நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நியுட்டன் கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.கருணா இருந்த காலத்தில்.இதனால் கருணாவுக்கெதிரான நடவடிக்கைக்கு களமிறங்கியபோதே அவர் கடத்தப்பட்டு காணாமல் போனார்.இது புலிகளுக்கு உண்மயில் பேரிழப்பே.

இந்த நடவடிக்கையையடுத்து புலிகளின் கொழும்பு மையம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது.கல்கிசையில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயரட்னம் அவர்கள் நியுட்டன் கடத்தப்பட்ட மறுநாள் மாலை புலிகளால் கடத்தப்பட்டார்.இந்தக்கடத்தலும் சுவாரசியமானது.

(இன்ஸ்பெக்டர் ஜெயரட்னம் மற்றும் மனைவி)

c2.jpgc1.jpg

புளொட் அமைப்பில் வவுனியாவில் செயற்பட்ட மனோ என்பவரை 2002 இன் பின்னர் வவுனியா வந்த புலிகள் தமது கைக்குள் போட்டுக்கொண்டனர்.அவரும் புளியங்குளம் புலிகளின் சோதனைச்சாவடிப்பகுதியில் புலிப்புலனாய்வாளர்களுடன் சில காலம் நின்றுள்ளார்.திடீரென ஒருநாள் செட்டிக்குளம் வந்து பின் கொழும்பு வந்த அவர் இன்ஸ்பெக்டர் ஜெயரட்னத்துடன் தொடர்ப ஏற்படுத்தி தான் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து விட்டதா அவருக்குக்கூறி அவருடன் நெருக்கமாகச்செயற்பட்டுளார்.உண்மையில் புலிகளின் முகவராகவே அவர் செயற்பட்டார்.

நியுட்டன் கடத்தப்பட்டதையடுத்து செயலில் இறங்கிய புலிகளுக்கு இலகுவான இலக்காக இருந்தவர் ஜெயரட்டனம்.ஏப்ரல் 21 ஆம்திகதி மனோ ஜெயரட்டத்துடன் தொடர்புகொண்டு தனது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார் அவருடன் விருந்துண்ண வருமாறு அழைத்துள்ளார்.அவரும் மனைவியுடன் அன்றிரவு சென்று்ள்ார்.விருந்து முடிந்த பின்னர் மனோ நீர்கொழும்பு கொச்சிக்ககடைப்பகுததியில் புலிகள் தொடர்பான ஒருவரை அறிமுகப்படுத்துவதாக கூறி ஜெயரட்னத்தை அழைத்துள்ளார்.அவரும் நல்ல புலிவேட்டை என நினைத்து மனைவியை வீட்டுக்கு அனுபபிவிட்டு மனோவுடன் கிளம்பியுள்ளார்.கொச்சிக்கடையில் புலிகளின்  முகவர்களால் மடக்கப்பட்டு புத்தளம் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து படகு மூலம் மன்னார் விடத்தல்தீவில் இறக்கப்பட்டார்.விடத்தல் தீவில் வைத்து புலிகளின் முக்கியஸ்தர் காந்தி அம்மான் என்பவரின் கீழ் செயற்பட்ட புலிககளின் புலனாய்வுப்புலகளால் அழைத்துச்செல்லப்பட்டார்.

இவரைகடத்திய புலிகள் தமது தொடர்புகள் மூலமாக சிங்களபுலனாய்வுப்பிரிவுடன் பேரப்பேச்சில் ஈடுபட்டனர்.நியுட்னனை விடுவித்தால் ஜெயரட்டத்தை விடுவிக்கமுடியும் எனக்கூறினர்.எனினும் அந்த டீல் சரிப்படவில்லை.சிங்களப்டை புலனாய்வுபிரிவால் நியுடட்டன் விசாரிக்ப்பட்டனபின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவே தெரிகிறது.நியுட்டனுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.அவருடைய மனைவி சங்கீத ஆசிரியை.அவரது சகோதரர் சூரி புலிகளின் மருத்துவப்பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தார்.நியுட்டன் யாழ்.கரவெட்டியைச் சேர்ந்தவர்.

இந்த நிலையிலேயே அண்மையில் ஜெயரட்டணம் 2006 செப்டெம்பர் அளவில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதாக கைதான புலி உறுப்பினர் தெரிவித்ததாக சிங்கள காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://urumal.com/2013/08/05/14454/

  • கருத்துக்கள உறவுகள்

நியூட்டன் நெல்லியடியை சேர்ந்தவர் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

கரவெட்டி நெல்லியடிக்குள்தானே வருகிறது  என நினைக்கிறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.