Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல்காலத்தில் முகாம்களுக்குள் முடங்கச் சொன்னதால் திருடர்களை அவிட்டு விட்டிருக்கிறார்களா படையினர்?

Featured Replies

மீண்டும் கிரிஸ் மனிதன் பாணியில் மக்களை பணியவைக்கும் முயற்சியில் படையினர் – திருடர்களை கட்டுப்படுத்த முடியாது என கைவிரிக்கும் பாதுகாப்பு தரப்பினர் –

vanni%20news%20round%20up_CI.jpg

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் தொடர்ச்சியாக திருடர்கள் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் அச்சுறுத்தலான சூழ்நிலையில் நாட்களை நகர்த்தி வருவதாகத் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். 

இரவு மட்டுமன்றி பகலிலும் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அண்மையில் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர். 

இன்றைய தினம் பட்டப்பகலில் சுற்றிவர வீடுகளில் ஆட்கள் இருந்த வேளையில் இரத்தினபுரம் 16 வீட்டுத் திட்டப்பகுதியில் நுழைந்த திருடர்கள் வீட்டில் தனியே இருந்த சிறுமி ஒருத்தியை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக மர்ம மனிதர்களும் திருடர்களும் இந்தக் கிராமத்தின் மக்களின் நிம்மதியை பறித்துள்ளனர். இரவு பகல் என்று எப்பொழுதும் என்ன நடக்குமென்று தெரியாமல் மக்கள் வசித்து வருவதாகத் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதனிடையே இந்த திருட்டுச்சம்பவங்களை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவங்கள் நிகழும் பொழுது இராணுவச் சீருடையுடனோ, ஆயுதத்துடனா சம்பவ இடத்திற்கு செல்ல முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பவங்கள் இடம்பெற்று முடிந்ததும் அதை அறியும் இராணுவத்தினர் சிவில் உடையில் சென்று  நடந்த விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்துகொள்கின்றனர். 

 வடக்கு மாகாண சபைத் தேர்தளை முன்னிட்டு இராணுவத்தினரை முகாங்களுக்குள் முடங்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தமையினாலேயே தாம் கிராமங்களுக்குள் நுழைந்து இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாதுள்ளது என்றும் தம்மால் மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலமை காணப்படுவதாகவும்  விளக்கம் அளித்துள்ளனர்.  இராணுவத்தரப்பு தெரிவிக்கின்றது. 

அண்மைக்காலமாக திடீரென ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் கிறிஸ்மனிதன் காலத்து அச்சுறுத்தல்கள் போல அமைந்துள்ளதாகவும் படையினருடைய பிரசன்னம் மக்களுக்கு அவசியம் என்பதனை வெளியுலகிற்கு காட்டுவதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கடுமையான நெருக்குதலைக் கொடுத்து வன்னியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட அவர்களே காரணம் என காட்டுவதற்குமே படையினருடைய ஆசீர்வாதத்துடன் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95150/language/ta-IN/article.aspx

 

ராணுவத் திருடர்கள்!

ஊர்காவல் படை அமைத்து அவர்களுக்கு துப்பாகிகள் வழகுவதே தற்காலிகத் தீர்வு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.