Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்தில் ஊழல்- பலவீனமான தளபதிகள்: சரத் பொன்சேக

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா இராணுவத்தில் ஊழல் நபர்களும் பலவீனமான தளபதிகளும் உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள நேர்காணல்:

சிங்கப்பூரிலிருந்து நான் திரும்பிய போது மாவிலாறு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நான் பொறுப்பேற்ற பின்னர் படை நகர்வுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உத்திகள் வகுக்கப்பட்டன. இப்போது முழு அளவில் இயங்கி வருகிறேன்.

மூதூர் மீட்புக்கான சமர் எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் நடந்தது. நாம் படை பின் நகர்வை மேற்கொண்டு மேலதிக படையினரை வவுனியாவிலிருந்து அழைத்துக் கொண்டு விரைவில் மீட்டோம். 24 மணி நேரம் அல்லது 48 மணிநேரம் தாமதமாகியிருந்தால் முகாம்களும் மூதூர் நகரும் இழக்கப்பட்டிருக்கும். அரைவாசி கடற்படை முகாம்கள் ஏற்கனவே வீழ்ந்துவிட்டன. அவற்றை மீட்டுவிட்டோம்.

இராணுவத் தலைமையகத்திலிருந்து பாரிய பங்களிப்புச் செய்தோம். இப்போது அதனை மீட்க விடுதலைப் புலிகள் முனைகின்றன.

யாழ்ப்பாணம் அல்லது வவுனியா போன்ற முக்கிய இடங்களைத் தாக்கி வெற்றியைப் பதிவு செய்ய விடுதலைப் புலிகள் முனைகின்றனர். இத்தகைய இடங்களில் மேலதிக கவகம் செலுத்தப்படுகிறது. சமர் நடக்கும் பகுதிகளில் கிளைமோர் தாக்குதல் நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதில் தாக்குதல் நடத்துகிறோம்.

யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகள் வலுவடைந்துள்ளனர். குறிப்பாக தென்னிலங்கையில் அவர்களின் புலனாய்வுத்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

டிகனவில் என்ன நடந்ததோ அதுபோல்தான் நடக்கிறது. அவர்களிடம் மேலதிக எறிகணைகளும் மோர்ட்டார்களும் உள்ளன என்று நினைக்கிறேன். அவற்றை மூதூர் மற்றும் கட்டைபறிச்சானில் பயன்படுத்தினர். யுத்த நிறுத்த காலத்தில் அவர்கள் கண்டிப்பாக வலுவடைந்துள்ளனர்.

கடந்த கால யுத்த களங்களில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. முல்லைத்தீவு, ஆனையிறவு மற்றும் மாங்குளம் ஆகியவற்றை இழந்திருக்கிறோம். இந்த நிகழ்வுகளிலிருந்து பாடங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இடங்களை இழந்தமைக்கு அப்பகுதிகளில் சரியான வழிகாட்டுதல் கொண்ட தளபதிகள் இல்லாமைதான் காரணம். இப்போது அதை நாம் எதிர்கொள்வோம். திறமை வாய்ந்த தளபதிகள் களங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முகம் கொடுக்கிற வகையில் இராணுவம் தயாராக உள்ளது. எமது தயாரிப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எமது முகாம்களை விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ள முடியாது என்பதில் நம்பிக்கையோடு உள்ளோம்.

கருணா குழுவினருடன் எமக்கு இப்போது தொடர்பில்லை. நாம் இந்தச் சூழ்நிலையில் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் ஏற்படும்போது கருணாவின் உதவியைக் கோருவது குறித்து யோசிப்போம். கருணா மட்டுமல்ல விடுதலைப் புலிகளுடன் யார் போரிடுகிறார்களோ அவர்களை இணைத்துக் கொள்வோம்.

ஜெனீவாவில் கருணா குழுவினரது ஆயுதங்களைக் களைவோம் என்று அரசாங்கத்தரப்பில் எதுவித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கருணா குழு மட்டுமல்லாது எந்த ஒரு ஆயுதக் குழு அல்லது துணை இராணுவக் குழுவினர் இயங்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கருணா குழுவோ இதர ஆயுதக் குழுக்களோ இல்லை.

இராணுவ முகாம் முன்பாக 17 குழந்தைகளை கருணா குழு கடத்தியதாக கூறப்படும் சம்பவம் நடந்திருக்க சாத்தியமில்லை. அப்படி அவர்கள் செய்யமாட்டார்கள். கிழக்கில் போதுமான விடுதலைப் புலிகள் உள்ளனர். 17 குழந்தைகளை கடத்திச் செல்லுமளவிற்கு கருணா குழுவினர் சுதந்திரமாக நடமாடுவதாக நீங்கள் கருதுகிறீர்களா?

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சில விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்கேயும் பயன்படுத்தவில்லை. விமானப் படையினர் சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். விமானப் படையினரின் வலு சிறப்பாக உள்ளது.

திருகோணமலை, மூதூர் இறங்குதுறை, துறைமுகத்தின் தென்பகுதி ஆகிய இடங்களில் அனைத்து தாக்குதல்களையும் நடத்தி யாழ்ப்பாணத்துக்கான விநியோகப் பாதையை சீர்குலைக்க எண்ணுகின்றனர். ஆகையால் விடுதலைப் புலிகளின் நீண்டகால இலக்காக யாழ்ப்பாணம் இருக்கலாம். விரைவில் அத்தாக்குதல் நடக்குமா என்று தெரியவில்லை.

ஒருவேளை யாழ்ப்பாணத்தை நாளை அவர்கள் கைப்பற்றினால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பெறுவதற்கு சில விலை கொடுத்தாக வேண்டும். யாழில் மொத்தம் 25 ஆயிரம் இராணுவத்தினர் உள்ளனர். ஆனையிறவில் 9 ஆயிரம் அளவிலான இராணுவத்தினர் இருந்தனர்தான். நாம் முன்பே கூறியது போது இராணுவ நடவடிக்கைகளில் தவறுகள் ஏற்படிருக்கின்றதான்.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற எங்கெங்கே இராணுவம் குவிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறதோ அதைச் செய்யக் கூடிய ஒரு தளபதியின் பணிதான் எனது பணி. சமாதானம் மற்றும் அரசியலைச் சுற்றி இராணுவம் செயற்படவில்லை.

பண ஆசைக்காக இராணுவத்தில் சிலர் உளவாளிகளாக மாறியுள்ளனர். நாம் எச்சரிக்கையாக உள்ளோம். இராணுவத் தலைமையகத்தின் மீதான தாக்குதல் நல்ல உதாரணம். யாரோ ஒரு சிலரது உதவியுடன்தான் தற்கொலைதாரி உள்ளே நுழைந்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை நாங்கள் ஒரு யுத்த சூழலாகக் கருதவில்லை. மாவிலாறு பிரச்சனை ஒரு மனிதாபிமான பிரச்சனை. ஆகையால் பொறுப்புள்ள அரசாங்கம் மற்றும் இராணுவம் என்கிற வகையில் தலையிட்டோம். பேச்சுக்கள் தோல்வியடைந்தமையால்தான் வெளிப்படையாக இராணுவம் தலையிட்டது. இதில் அரசியல்வாதிகளிடத்தில் நாம் குறை இருப்பதாக கருதவில்லை. விடுதலைப் புலிகளே பொறுப்பு.

இராணுவத்தில் ஊழல் என்பது ஒவ்வொரு நிலையிலுமே உள்ளது. சிலர் பணியிலிருந்து விலகிவிட்டனர். சிலர் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதைக் களைவது என்பது கடினமானது. ஊழல் நடைபெற்றாலும் ஆதாரங்களைப் பெறுவதும் அவர்களை நீக்குவதும் எளிதானதும் அல்ல. இருந்தபோதும் ஊழல் செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்போம். இராணுவக் கொள்வனவு தொடர்பான விடயங்களில் மேலதிக கவனம் செலுத்துகிறேன். ஊழல் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல வழிகளில் இராணுவத்தில் பணம் பெறுகின்றனர். இத்தகைய நபர்களை அடையாளம் காண இராணுவ புலனாய்வுப் பிரிவும் இராணுவ காவல்துறையும் தீவிரமாக செயற்படுகின்றன. அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டால் கடும் தண்டனைக்குள்ளாவார்கள்.

இப்போதும் பிற்பகல் உணவுக்கான வீட்டுக்குத்தான் செல்கிறேன். ஆனால் சில எச்சரிக்கை உணர்வுகளோடுதான்.

இராணுவத்தில் எம்முடன் ஒத்துழைக்காமல் இருந்தால் கடும் நடவடிக்கைக்குள்ளாக நேரிடும். இந்த நாட்டின் நன்மைக்காக இராணுவம் சீரமைக்கப்படும்.

நான் எத்தனை ஆண்டுகாலம் தளபதியாக நீடிப்பேன் என்று தெரியாது. இராணுவத் தளபதிக்கு பணி நீட்டிப்புகள் உண்டு.

பயங்கரவாதம் உள்ள இதுபோன்ற நாட்டில் எந்த ஒரு இடமும் நூறு விழுக்காடு பாதுகாப்பானது அல்ல. ஆனால் நாங்கள் எச்சரிக்கை நடவடிக்கையோடு உள்ளோம் என்றார் சரத் பொன்சேகா.

  • கருத்துக்கள உறவுகள்

பெறப்போகும் தோல்விகளுக்கு ஆரம்பத்திலேயே நொண்டிச்சாட்டுச் சொல்லுகின்றார் போலிருக்கின்றது.

பாவம்...ஏற்கனவே நொந்து நூலான ஆளை..இப்படி கஸ்டபடுத்துகிறார்களே!!

ஒரு இராணுவ தளபதி பேசும் பேச்சா இது?

கட்டுரையை வாசித்து கொண்டிருக்கும் போது நான் நினைத்தேன் யாரோ அவரை கிண்டலடித்து எழுதியிருக்கின்றார்கள் என்று?

தளபதி வெல்வோம் என்று சொல்கின்றரா இல்லை ஒடப்போகின்றோம் என்று சொல்கின்றரா? ஒன்றுமே புரியலை. :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.