Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திகாம்பரம் - தொண்டமான் கட்சிகளுக்கிடையில் கொட்டகலையில் மோதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
fight-120813-seithy-150.jpg

கொட்டகலை, கொமசல் பிரதேசத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், ராஜதுறை மற்றும் தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் சிறிதரன் ஆகியோர் ஹட்டன் நோக்கி பயணித்த வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னதாக அப்பிரதேசத்தில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் சிறிதரனுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகனத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களே தம்மை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

  

இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரனினுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டே மோதலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக சிறிதரன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அத தெரண தமிழிணையம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தொடர்பு கொண்ட போதும், எமது அழைப்புக்கு அவர்களிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90570&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நுவரெலிய திம்புல்லப்பத்தனைப் பகுதியில் இரண்டு அரசியல் கட்சிகளின் அதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் எட்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

kottahajfj.jpg

இன்று மாலை 4 மணியளவில் இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் குறித்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை, கொமசல் பிரதேசத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கிடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. 

Nuwara-Eliya-was-tense-this-evening-with

பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், ராஜதுரை மற்றும் தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் சிறிதரன் ஆகியோர் ஹட்டன் நோக்கி பயணித்த வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னதாக அப்பிரதேசத்தில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. 

இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6534

935880_638237629534520_213465914_n.jpg//

விட்ட ஓவரா பேசுறான்.... ஆளுக்கு ஒரு அருவாளோட கெளம்புங்கலே..... போட்டுதள்ளிடுவோம்...//

மலையக மக்களை அழித்துவரும் இரண்டு மலையகத் தமிழ்க் காடையர் கும்பல்.

  • கருத்துக்கள உறவுகள்

1446915099cwc.jpg

அவர்களே எம்மை தாக்கினர் - தொழிலாளர் காங்கிரஸ் குற்றச்சாட்டு  கொட்டகலை - கொமர்ஷல் பிரதேசத்தில் வைத்து தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களே தமது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. 

 

ங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை வேட்பாளர்களான உதயகுமார், சக்திவேல் மற்றும் ரமேஸ் ஆகியோர் கொட்டகலை - கொமர்ஷல் பகுதி ஹோட்டல் ஒன்றின் முன் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த வேளை தமது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் மெய் பாதுகாப்பாளர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை எனவும் தமது கட்சி வேட்பாளர் உதயகுமாரை நோக்கியே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஊடகங்களுக்கு பேசவல்ல விஜேந்திரன் தெரிவித்தார். 

உதயகுமாரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் அங்கிருந்த வாகனத்தை சேதப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். 

இதேவே​ளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களே தம் மீது தாக்குதல் நடாத்தியதாக தொழிலாளர் தேசிய சங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

http://tamil.adaderana.lk/news.php?nid=43541

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

n2(31).jpg
மத்திய மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய  சங்க ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பையடுத்து தொழிலாளர் தேசிய சங்கத்திற்குரிய ஹட்டன், தலவாக்கலை, பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் ஆகிய நகரங்களிலுள்ள காரியாலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொட்டக்கலை மற்றும் ஹட்டனில் வைத்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் ஒருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 12 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
n7(4).jpg
n21.jpg
n65.jpg
n68.jpg

http://tamil.dailymirror.lk/--main/79557-2013-08-20-12-03-57.html

இவர்கள் ஏன் இந்தியக்கொடியின் வர்ணங்களில் வாகனங்களில் ஸ்ரிக்கர் ஒட்டி இருக்கினம் இலங்கை தொழிலார் காங்கிரஸ் என்ற பெயரை இந்திய தொழிலார் காங்கிரஸ் என்று வைத்திருக்கலாம்    :D

நம்ம டெலோவின் கொடியும் இந்திய மூவர்ன கொடிதான் .அவர்கள் ஆவது தங்களை இந்திய வம்சாவளி என்று காட்ட மூவர்னகொடி வைச்சு இருக்குறாங்க. ஆனால் நம்ம டெலோ ஏன் வைச்சிருக்குது என்று தெரியாது முதலில் இவர்களை மாற்ற சொல்லுங்கோ அப்புறம் அவங்க மாற்றுவாங்க 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.