Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டம் இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது - இரா.சம்மந்தன்

Featured Replies

தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இதனாலே சர்வதேச கண்காணிப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

IMG_8726.JPG

தேசிய இனப்பிரச்சினைக்கு கடந்த 60 வருடமாக உள்நாட்டில் தீர்வு காணப்படாததாலேயே அது இன்று சர்வதேச மயமாக்கப்பட்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை யாழ்.மாட்டின் வீதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடக்குமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

தமிழர்களுடைய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்தில் கடந்த 60 வருடங்களான எமது தலைவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். ஆனாலும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. வெருமனே காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் சிறிலங்கா அரசாங்கமும் இதனைத்தான் செய்து வருகின்றது.

IMG_8747.JPG

இதனால் தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான போராட்டம் இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் உச்சக்கட்டத்திலேயே நாம் இருக்கின்றோம். சர்வதேசத்தின் சட்டங்கள், நியமங்கள், ஒப்பந்தங்கள் உட்பட ஜ.நா சபையின் விதிமுறைகளை மீறப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசம் இனியும் அவதானித்துக் கொண்டு வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. இப்பிரச்சினையில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டியது அவர்களுடைய கடமை. அதனை அவர்கள் சரிவர நிறைவேற்றிக் கொள்வார்கள்.

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு பெறப்பட வேண்டுமானால் வடக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும்.

அதற்கு மாறாக அரசாங்கம் அல்லது அரசாங்கத்திற்கு அடிபணிந்த கட்சிகள் மாகாணசபையினை கைப்பற்றுவது மிக பாதகமான நிலையினை ஏற்படுத்தும். இதுவே தேர்தலில் போட்டியிடும் அரசாங்க தரப்பினர் அல்லது அவர்களுக்கு அடிபணிந்த கட்சிகள் எம்மைபோன்று தேர்தல் அறிக்கை வெளியிட முடியுமா?

வெறும் வறட்டு கோஷங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அபிவிருத்தி என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை தெரியுமா? வீதிகளுக்கு தார் இடுவதும், பாலங்களை கட்டுவதும் தங்களுடைய அபிவிருத்திக்கே தவிர மக்களுடைய அபிவிருத்திக்கு அல்ல.

மக்கள் அபிவிருத்தியடைவது எப்போது? எனவே மக்கள் இந்த வெற்று கோஷங்களுக்கு செவிமடுக்கக் கூடாது. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு 80 தொடக்கம் 90 வீதமான மக்கள் வாக்களிக்கவேண்டும். அனைத்து மக்களும் தங்களுக்குள்ள இடர்பாடுகளை மறந்து தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள். அது வரலாற்று கடமை.

எமது வேட்பாளர்கள் ஆகக்குறைந்தது 30 பேர் தெரிவு செய்யப்படுவதன் மூலமே மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த முடியும். அதனை எமது மக்கள் செய்வார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.sankathi24.com/news/32827/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்
போராட்டம் இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது
யாரால் சர்வதேச மயமாக்கப்பட்டது என்பதை சொல்லவேணும் ஐயா....30 வருடம் உங்கள் போராட்டத்தால் முடியாததை ஆயுதபோராட்டம் செய்து முடித்தது என்பதுதான் உண்மை
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவைப் பொறுத்தவரை அவர் குடும்பத்தில யாருமே ஆயுதப் போராட்டம் செய்யல்ல. செய்யாமலே சர்வதேச மயப்படுத்தினது என்றால்.. அது...???! அவரின் சாணக்கியம் மட்டுமல்ல.. நம்ம சுழியன்களாக உள்ள தமிழர்களின் சாணக்கியமும் கூட..!

 

என்ன சர்வதேச மயப்படுத்தினவன்.. பயங்கரவாதி.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினவன்.. சாணக்கியன். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

என்னது....? ஆக்கிட்டாங்களா...? என்றிலிருந்தையா....? இதை நீங்க முன்னம் சொல்லவே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

என்னது....? ஆக்கிட்டாங்களா...? என்றிலிருந்தையா....? இதை நீங்க முன்னம் சொல்லவே இல்லை!

 

தேர்தல் முடிந்த பிறகு, அதை... திரும்ப சொல்லமாட்டார். :D

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் குரலில் உருவாக்கப்பட்ட பாட்டில் 30 வருட வரலாறு கிழிக்கப்பட்டிருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் குரலில் உருவாக்கப்பட்ட பாட்டில் 30 வருட வரலாறு கிழிக்கப்பட்டிருக்கின்றது. 

 

 

வருத்தமான  செய்தி  தான்

அவர்கள்  மக்கள் மனங்களில் இருக்கிறார்கள்

வாக்குகளிலும்  இருக்கிறார்கள்

 

இன்றைய  நிலைப்படி

அதிக வரவேற்புள்ள பாடகர்  மற்றும் இசைக்குழு

சாந்தனுடையது தானாம்.

அவர்களும் இதேபோல்

வருவார்கள்.........

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் குரலில் உருவாக்கப்பட்ட பாட்டில் 30 வருட வரலாறு கிழிக்கப்பட்டிருக்கின்றது. 

 

சங்கிலியனைப்பற்றி,அல்லது பன்டாரவன்னியனைபற்றி வெள்ளைகள் ஆட்சி செய்த பொழுது ஒருத்தரும் புகழ்ந்து பாடியிருக்கமாட்டார்கள் வெள்ளைகள் வெளியேறியபின்புதான் புகழ்ந்து பாடினார்கள்.அதேபோல புலிகளைப்பற்றி சிங்கள ஆட்சியாளரக்ள் வெளியேறியபின்பு நிச்சயம் பாடுவார்கள்....அதுவரை அந்த 30 வருடங்களும் மெளனமாக டமிழர் நெஞ்சில் மெளனகீதம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.