Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவி பிள்ளையை இந்திய உளவுத் துறை தொடர்ந்தது ஏன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவி பிள்ளையை இந்திய உளவுத் துறை தொடர்ந்தது ஏன்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இலங்கை சென்ற போது அவரை இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்ததாக சிங்களப்பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் படைத்துறையினரின் உளவுப்பிரிவினரின் அறிக்கை ஒன்றில் இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் நவி பிள்ளை அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் நவி பிள்ளை என்ன அறிக்கை விடுகிறார் என்பதைப்பற்றியும் தகவல்கள் திரட்டினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனல்-4 தொலைக்காட்சி முதல் முதலாக இலங்கையில் கைதிகள் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை காணொளியாக வெளியிட்டவுடன் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணை அறிக்கை இதுவரை வெளிவிடப்படவில்லை. இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கு உள்ள பங்கு பற்றிய காணொளிப் பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என அஞ்சித்தான் அந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக அப்போது பேசப்பட்டது.

நவி பிள்ளைக்கு இலங்கைப் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக எதாவது தகவல் கிடைக்குமா என்ற அச்சத்தில்தான் நவி பிள்ளையை இந்திய உளவுத்துறை தொடர்ந்ததா என்னும் கேள்விக்கான விடையை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் "ஐநாவின் பானிற்கான சவால்: போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் பதில் உண்டு.

அந்தக் கட்டுரையில் சொல்லபப்ட்ட முக்கியமானவை:

எம் கே நாராயணனுக்குப் புதிய பட்டம்

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம் கே நாராயணனை தனது கட்டுரை முழுக்க திரு வீ எஸ் சுப்பிரமணியம் அவர்கள் முள்ளிவாய்க்கால் நாராயணன் என்றே குறிப்பிட்டுள்ளார்.

கொலைக்குழு

Ground Reportஇல் வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் 2009இல் நடந்த போரில் இணைந்து செயற்பட்டதாக தெரிவித்திருந்தார்.

வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார்

விஜய் நம்பியார் டில்லி தென்மண்டலத்தின் (Delhi’s South Block) ஒரு முகவராக செயற்படுகிறார் என்றும் கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல விஜய் நம்பியார் இலங்கைக்கு ஐநாவின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்கும் சாத்தியமும் உண்டு என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்ட ராஜீவ் காந்தி

இந்திய "அமைதிப்படை" இலங்கையில் இருந்த வேளை ராஜீவ் காந்தி (எனப்படும் ராஜீவ் கான்) பிரபாகரனைக் பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்துக் கொல்ல உத்தரவிட்டதையும் அதை அமைதிப்படைக்குப் பொறுப்பாக இருந்த ஹரிக்கிரத் மறுத்ததையும் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சோனியாவின் பழிவாங்கல்

சோனியாவின் பழிவாங்கல் விடுதலைப்புலிகளை அழிப்பதற்க்கு மேலாக தமிழர் போராட்டத்தை ஒழிப்பது வரை சென்றது என்கிறார் கட்டுரையாளர் டில்லிப் பேராசிரியர் பிரம்மா செல்லனியை மேற்கோள் காட்டி.

பன்னாட்டு நீதி விசாரணை தேவை

கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் அடங்கிய குழு 2009இல் நடந்த கொலைகளில் எப்படிச் சம்பந்தப்பட்டன என்பதை ஒரு பன்னாட்டு நீதி மன்ற விசாரணையால் மட்டுமே கண்டறிய முடியுமென்று தெரிவித்திருந்தார். சுப்பிரமணியம்.

2G அலைக்கற்றை ஊழலும் அடங்கிய திமுகவும்

2007இற்குப் பிறகு 2G அலைக்கற்றை ஊழலை வைத்து காங்கிரஸ் திமுகவை மிரட்டிப் பணிய வைத்துவிட்டதாம். பிரணாப் முகர்ஜீ கருணாநிதியைச் சந்தித்து மிரட்டி தமிழ்நாட்டில் எழும் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை அடக்கும்படி கட்டளையிட்டாராம். (இப்போது தெரிகிறதா கலைஞர் ஆ ஊ என்றால் சீமானை ஏன் கைது செய்தார் என்று? இப்போது தெரிகிறதா கலைஞர் யாரை ஏன் சொக்கத் தங்கம் என்றார் என்று? ஏன் பாரதிராஜாவின் பணிமனை உடைபட்டது என்று? )இந்தச் சந்தர்ப்பத்தை சோனியா திமுக மீது தமிழர் நலன்பேணும் என்ற நம்பிக்கையைத் தகர்க்க சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். (ஐயா தந்தை பெரியார் அவர்களே உங்கள் வாரிசுகளின் சுயமரியாதை என்னாச்சு?)

Thus the TN protests that gathered momentum in 2008 quietened. M’kal Narayanan also visited Chennai frequently to make clear to TN CM that Delhi’s pro SL stance even after the Mullivaykal massacres required the TN CM to keep Tamil sentiments calm even though Delhi diplomatically worked to stall the international UNHRC war crimes initiatives in May 2009. M’kal Narayanan and other South Block accomplices have a vested interest in stalling all war crimes initiatives.

2008இற்குப்பிறகு தமிழ்நாட்டு எதிர்ப்பு அடக்கப்பட்டுவிட்டது. முள்ளிவாய்க்கால் நாராயணன் அடிக்கடி சென்னை வந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும் டில்லியின் சிங்கள் ஆதரவு நிலைப்பாடுடுக்கு எதிராக கிளம்பும் தமிழ்நாட்டுத் தமிழர் உணர்வுகளை அடக்கி வைக்குப் படி பணிப்பார். போர்குற்றத்தில் தமக்கும் பங்கிருப்பதால் நாராயணன் போர்க்குற்ற விசாரணை முடக்க முற்பட்டார்.

போர்க்குற்றத்தில் நம்பியாரும் பங்காளி

வீ எஸ் சுப்பிரமணியம் அவர்களின் முக்கிய பந்திகளில் ஒன்று:

Nambiar’s coziness with the Rajapakses resulted in his May 2009 involvement in the plot that led to the massacre of the ‘white flag’ waving resistance leaders - a war crime. The Rajapakses expectation that Nambiar’s membership in the Delhi South Block partnership in SL crimes will give them the leverage to extricate him and his partners from those crimes working from within the UN establishment. SL sees merits in dragging Delhi in, to share culpability for those crimes committed in SL. The Rajapakses expect overt assistance from Nambiar here.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் நம்பியாருக்கும் பங்கிருப்பதால் அவர் அது தொடர்பான மூடிமறைப்பு வேலைகளில் பங்கு பற்றியே ஆக வேண்டும்.

கோத்தபாயவின் பொறிக்குள் இந்தியா

வீ எஸ் சுப்பிரமணியம் இத்துடன் நிற்கவில்லை எம் கே நாராயணன் இலங்கைப் போரில் இலங்கையோடு இணைந்து செயற்பட்டபடியால் கோத்தபாய ராஜபக்சவின் பொறிக்குள் இந்தியா அகப்பட்டுள்ளது என்கிறார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் இந்தியாவின் சம்பந்தம் தொடர்ப்பன பதிவுகளை கோத்தபாய ராஜபக்ச வைத்துக் கொண்டு அவர் இந்தியாவை மிரட்டுகிறார் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் பணயக் கைதிகளாக நாராயணனும் நம்பியாரும்.

M’kal Narayanan was similarly entrapped by the Rajapakses in the M’kal massacres with Gothabhaya Rajapakse making explicit his ‘in the loop’ involvement charge. This explains Delhi over appeasing Colombo, post resistance. M’kal Narayanan was acting on the specific orders of his Delhi bosses (Sonia faction in the ruling Congress) for which he used his frequent visits to Colombo in early 2009 for the ‘in the loop’ sessions with the Rajapakses. It is not just coincidence that Nambiar joined M’kal Narayanan for the May 2009 ‘in the loop’ sessions that resulted not only in the white flag massacres but the equally severe Mullivaykkal massacres. By these acts M’kal Naraynan and Nambiar became hostages to the Rajapakse blackmail.

கொழும்பில் நிருபாமா பல்லை இளிப்பது ஏன்?

போர்க்குற்றத்தில் நாராயணனையும் நம்பிராரையும் சம்பந்தப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இலங்கையைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தியா போருக்குப் பின்னர் நடந்து கொள்கிறதா? இப்போது தெரிகிறது படங்களில் நிருபாம ராவ் ஏன் ராஜபக்சமுன் பல்லை இளித்துக் கொண்டு நின்றார் என்று.

2009இல் நடந்த லோக் சபா தேர்தலுக்கு முன் இலங்கைப் போரை முடிக்க வேண்டும் என்று டில்லி அவசரப்பட்டதாம். அதற்கான அழுத்தம் இலங்கைமீது இந்தியாவால் கொடுக்கப்பட்டதாம். அதற்காக இலங்கை பல நடவடிக்கைகளை மேற் கொண்டது. அவை போர்க்குற்றங்களாக கருதப்படக்கூடியவையாம். இலங்கை மீது வரும் போர்க்குற்றச் சாடுக்களை இந்தியா தடுத்தே ஆகவேண்டுமாம். அல்லது இந்தியாவும் போர்க்குற்றத்தில் சம்பத்தப்படுத்தப் படலாமாம். இந்த மாதிரிப் போகிறது கதை. தப்பித் தவறி தேர்தலில் தோல்வியடைந்தால் ராஜீவ் கான் குடும்பத்தின் பாது காப்பு எப்படியாகும் என்ற அச்சமோ?

போரின் இறுதிக்கட்டத்தில் பெரிய மனித அழிவு நிகழ்வதைத் தடுக்க விஜய் நம்பியாரை இலங்கை அனுப்பினார். அவர் சந்தித்தது தனது சகோதரரும் இலங்கையின் படைத்துறைக் கூலி ஆலோசகருமான சதீஸ் நம்பியார், கோத்தபாய, நாராயணன், சிவ்சங்கர மேனன் ஆகியோரச் சந்தித்தமையையும் வீ எஸ் சுப்பிரமணியம் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.

எஸ் சுப்பிரமணியம் அவர்களின் கட்டுரையின் மிக முக்கியமான வாசகம்:

sufficient details are out in the open now that Delhi knowingly partnered in the SL genocide and the massacres.

Thanks:vel tharma

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவில் உண்மை..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் அவசர அவசரமா இந்தியாவின் ஒரு ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் நளினியை பிரியங்கா போய் பார்த்ததும் அதன் பின்னர் இன்னும் யுத்தம் வேகம் எடுத்தும் ஆழமா பாத்தால் புரியும் ப ஆக இலங்கை 2009 முள்ளி வாய்க்கால் என்ற சோகமான திரைப்படத்தின் தயாரிப்பு இயக்கம் screen play என்று எல்லாம் இந்தியா தான்

அனாலும் இவை எல்லாவற்றையும் கடந்த இந்தியாவுடன் எமது உறவுகளை புதுப்பிக்க வேண்டிய ஒரு நிலையில் நாம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் உறவை புதுப்பிக்கமுடியும் என்று நம்ப முடியவில்லை.. அப்படி புதுப்பித்தால்கூட இன அழிப்புக் குற்றச்சாட்டை கைவிடவேண்டி வரும்.. சிங்கள அரசுக்கு மிகப்பெரிய அனுகூலம் அது..

ஐநாவில் இந்தியாவின் பிடியை இளகச்செய்ய வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக எமது பிரச்சினையை அஜென்டாவில் வைத்திருக்கச் செய்யவேண்டும்.. நவி பிள்ளையின் வருகையின் பிற்பாடு கொஞ்சம் இளக்கம் கண்டுள்ளது.. அவர்களுக்கும் வேறு வழி கிடையாது.

இந்தியாவுடன் புதுப்பிக்க என்ன இருக்கு? நரந்திர மோடி வந்து சோனியாவை துரத்தினால், தமிழ் நாட்டில் அண்ணன் சீமான் முதல்வரானால் ஏதாவது நடக்கலாம். அடுத்த எலக்சனில் பதவி போனவுடன் சோனியாவும் அவவின் குடும்பமும் அழிக்கப்படும். இன அழிப்பு நடத்தும் அனைவருக்கும் அது ஒரு பாடமாக அமையும். ராஜிவுக்கு நடந்தது அந்த குடும்பத்துக்கே நடக்கும்.

 

                                                        தன் வினை தன்னை சுடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் உறவை புதுப்பிக்கமுடியும் என்று நம்ப முடியவில்லை.. அப்படி புதுப்பித்தால்கூட இன அழிப்புக் குற்றச்சாட்டை கைவிடவேண்டி வரும்.. சிங்கள அரசுக்கு மிகப்பெரிய அனுகூலம் அது..

ஐநாவில் இந்தியாவின் பிடியை இளகச்செய்ய வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக எமது பிரச்சினையை அஜென்டாவில் வைத்திருக்கச் செய்யவேண்டும்.. நவி பிள்ளையின் வருகையின் பிற்பாடு கொஞ்சம் இளக்கம் கண்டுள்ளது.. அவர்களுக்கும் வேறு வழி கிடையாது.

தமிழர் கூட்டமைப்பு முழுக்க முழுக்க இந்திய நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையத்தானே செயல்ப்படுது

கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் அடங்கிய குழு 2009இல் நடந்த கொலைகளில் எப்படிச் சம்பந்தப்பட்டன என்பதை ஒரு பன்னாட்டு நீதி மன்ற விசாரணையால் மட்டுமே கண்டறிய முடியுமென்று தெரிவித்திருந்தார். சுப்பிரமணியம்.

 

சு.சா க்கு கொடுக்க பணம் இருந்தால் இவர்கள் எல்லோரையும் தொடுக்கும் ஆவணங்களை பெற்றுகொள்ள முடியும்.

 

சு.சாவை சுதர்சன நாச்சியப்பன் மாதிரியே பக்கம் திரும்பி கதைக்க வைக்க முடியும். அதற்கு கொடுக்க பணம் வேண்டும். மக்ந்தாவுக்கு சீனா கடன் கொடுக்கும். நமக்கும் தர ஒரு ஆள் இருந்திருந்தால்....

இவங்கலால்தானே இவளவு பிரச்சனை என்னும் ஏன் எங்கட பிரச்சனைக்குள் மூக்கை நுளைக்கினம் 
பலதடவை மூக்கு உடைபட்டும் இதுகள்  திருந்தேல்லை  
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டமைப்பு முழுக்க முழுக்க இந்திய நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையத்தானே செயல்ப்படுது

இந்தியா பக்கம் நிற்பதாக காட்டிக்கொள்ளும்போது ததேகூ இலங்கைக்கு எதிராக செய்வதற்குத் தேவையான ஒரு அரசியல் செல்வாக்கைப் பெற்றுக்கொள்கிறது.. அவ்வளவே..

2009 ஆம் ஆண்டில் போர் முடிந்த கையோடு கனடா இலங்கையை கண்டித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இந்தியா அதை தோற்கடிக்க உதவியது மட்டுமல்லாமல் இலங்கையைப் பாராட்டி இரு தீர்யானத்தை நிறைவேற்ற உதவியது.. நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் சுமூகமான அந்த உறவு இன்று பிணக்கில் உள்ளது.. நன்றி ராஜபக்ச/சீனா..

இப்போது போர்க்குற்றச்சாட்டை ஒரு வரையறைக்குள் பாவிக்க நினைக்கிறது இந்தியா.. அதாவது இலங்கையை மிரட்டும் அளவுக்கு மட்டும்.. ஐநாவில் உள்நாட்டு விசாரணையைக் கேட்பதன் தார்ப்பரியமும் அதுதான்.. தங்களை குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கம் இந்தியாவுக்கு உள்ளது.. ஆனால் சிங்களவனிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன..

ஒருவேளை இலங்கை பணிந்துபோய் இந்தியாவின் காலில் விழுந்தால் ஐநாவில் ஒரு தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்.. அதாவது பிராந்திய ஒத்துழைப்புடன் உள்நாடடு விசாரணை.. அதில் சில பொனசேகா ஆதரவு அதிகாரிகளைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டு கதையை முடித்துவிடுவார்கள்..

ஆனால் அவ்வாறு காலில் விழாமல் தடுப்பது சிங்கள இனவாதம். அதுதான மகிந்தர் இப்ப இந்தியக் கண்களுக்கு ஒரு பெரிய இடைஞ்சலாகத் தெரிகிறார்.. தமிழர்களைவிட இந்தியாவுக்கு மகிந்தர் பெரிய எதிரி.. அற்காகத்தான் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.. தமிழரின் நலன் வேண்டி அல்ல..

இந்தச் சமயத்தில் இந்தியாவின் தயவை வேண்டி நின்று தமிழர்கள் பிரதிகூலத்தைத்தான் அடைவார்கள்.. ஆகவே ஐநாவில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை தொடர்ந்து கோருவதே தமிழர்களுக்கு இப்போது உள்ள ஒரே தெரிவு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.