Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனந்தி அவர்களின் அமைச்சுப் பதவியே தமிழ் பெண்களின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Ananthy-Elilans-150.jpg

திருமதி அனந்தி எழிலன் அவர்களின் பாதுகாப்பும் ,தமிழ் பெண்களின் தலைமைத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் அனந்தி அவர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டுமென கிழக்குவாழ் தமிழ் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

  

திருமதி.அனந்தி எழிலன் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்களாகிய நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

 

அவர் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட பங்கு வகித்தவர் என்ற வகையிலும் தமிழ் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்தின் புதிய பரினாமமாக தற்போது அவர் தோற்றம் பெற்று இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார் என்பதை கருத்தில் கொண்டு அனந்தி அவர்களுக்க வட மாகாணசபையில் அமைச்சுப்பதவி ஒன்று வழங்கப்பட வேண்டு மென்ற நியாயமான கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் முன்வைக்கின்றோம்.

 

மிக முக்கியமாக அனந்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெண்கள் தலைமைதுவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அனந்தி அவர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

 

குறிப்பாக அனந்தி அவர்கள் வடமாகாணசபை தேர்தல் களத்தில் மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டதோடு இலங்கைக்கு வருகைதந்த ஐநாவின் மனிதவுரிமை ஆணையாளர் நவநிதம்பிள்ளையிடம் இலங்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக நேரடியாக கலந்துரையாடியும் இருந்தார். அத்தோடு வடமாகாணசபை தேர்தலில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதுடன் எதிர் காலத்தில் ஜெனிவா மனிதவுரிமை மாநாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக நேரடியாக ஆஜராகி சாட்சி சொல்லக் கூடிய பெண்மணியாக அவர் உள்ளதால் அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களாகிய அனைவருக்கும் உண்டு.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண்கள் தலைமைத்துவம்�� மற்றும் இளைஞர் தலைமைத்துவம் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள இக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளித்து வடமாகாணசபை தேர்தலில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற திருமதி.அனந்தி எழிலன் அவர்களுக்கு அமைச்சுப்பதவி ஒன்றை வழங்குமாறு கிழக்கு வாழ் தமிழ் சமூகத்தினராகிய நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

 

-நன்றி-

கிழக்குவாழ் தமிழ் சமூகம்

திருகோணமலை

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93584&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தி அவர்களுக்கு மகளிர் மேன்பாடு சிறுவர் நலன் வழங்கப்பட வேண்டும் என்று நான் நேற்றே சொல்லியாச்சு

டூ லேட் கிழக்கு வாழ் மக்களே :D

ஆனாலும் நாலு அமைச்சுப்பதவிகளில் சகல

மாவட்ட மக்களும் பிரதிநிதித்துவம் பண்ண வேண்டி இருப்பதால் அங்கும் ஒரு சிக்கல் இருக்கு

ஏன் என்றால் முதல் அமைச்சர் யாழில் இருந்து தெரிவாகி இருப்பதால் அமைச்சு பொறுப்புகள் மற்றைய மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழலாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் மகளிர்க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டி இருப்பதால் பலத்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து துணிச்சலாக செயல்ப்பட்ட அனந்திக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கும் என்பதே சுண்டலின் எதிர்வு கூறல்

போனஸ் ஆசனம் வேறு மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அவர் அமைச்சர் ஆக்கப்படலாம்

Edited by SUNDHAL

அடுத்த கூட்டத்துக்கு வரும்போது தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது சுயவிபரங்களை தன்னிடம் தரவேண்டும் என முதலமைச்சர் கேட்டதாக அறிகின்றேன் .இதிலிருந்து ஊகித்துகொள்ளுங்கள் என்னமாதிரியான அமைச்சரவை நியமிக்கப்படும் .

 

கிழக்குவாழ் தமிழ் சமூகம்

திருகோணமலை

எங்களுக்கு தெரியாத கிழ்க்குவாழ்சமுகம் அதுவும் திருமலையில் இருந்து  :D

சபேசன் வாக்களிக்கிறார். ஆனால் தேர்தலை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.