Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு
[ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 02:26 GMT ] [ நித்தியபாரதி ]


போர் முடிவுற்ற கையோடு சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமது அடுத்த கட்ட நிலை தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர். குறிப்பாக தமிழ் மக்கள் தமக்கான அரசியல் எதிர்காலம் தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர்.

இவ்வாறு சமூக சிற்பிகள் அடைப்பின் [The Social Architects - TSA.] நிறுவக உறுப்பினர்களான *Gibson Bateman and Rathika Innasimuttu ஆகியோர் [sep 23, 2013] எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.

இவ்வார இறுதியில் சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 38 ஆசனங்களில் 30 ஆனங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியானது ஏழு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.

ஆகஸ்ட் 2009ல், யாழ்ப்பாணத்தில் மாநகரசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 50.7சதவீத வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுக் கொண்டதுடன் 23 ஆசனங்களில் 13 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது.

2010ல் சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற போது, யாழ் மாவட்டத்தின் பத்து தேர்தற் தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 44 சதவீத வாக்குகளையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியானது 32 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்ட அதேவேளையில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பகுதியான கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 45.51 சதவீத வாக்குகளையும் ஆளும் கூட்டணியானது 36.55 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டது.

யூலை 2011ல், உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 16 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்றதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 13 சபைகளில் வெற்றி பெற்றது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் கோட்டையாக விளங்கிய வேலணை, ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு ஆகிய உள்ளுராட்சி சபைத் தொகுதிகளில் சிறிலங்கா ஆளும் கூட்டணி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 63 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியானது 34 சதவீத வாக்குகளையும் பெற்றன.

செப்ரெம்பர் 21, 2013ல் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 82.8 சதவீத வாக்குகளையும் ஆளும் கூட்டணியானது 16.1 சதவீத வாக்குகளையும் பெற்றன.

மேற்கூறப்பட்டுள்ள தேர்தல் பெறுபேறுகள் எவ்வாறான போக்கைக் கொண்டுள்ளன என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குகள் அதிகரித்துள்ளதையும் காண்பிக்கின்றன.

இந்தத் தேர்தலில் ஆளும் அரசாங்கமானது தான் தோல்வியுற்றுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதாவது சிறிலங்காவில் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாடு மற்றும் மார்ச் 2014ல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25வது அமர்வு போன்றவற்றில் அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்படும் அழுத்தத்திலிருந்து சிறிலங்கா தப்பிப்பதற்கு இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்தலில் சிறிலங்கா அரசாங்கமானது மிகப் பெரிய தோல்வியை அடைந்துள்ளது என்பதை கற்பனை செய்துபார்ப்பதென்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

2009ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றதற்கும் தற்போது இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியைச் சந்தித்தமைக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாட்டை அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது. 2009ல் 50.7 சதவீத ஆதரவைப் பெற்றிருந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஆதரவானது தற்போது 16.1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

போர் முடிவுற்ற கையோடு சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமது அடுத்த கட்ட நிலை தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர். குறிப்பாக தமிழ் மக்கள் தமக்கான அரசியல் எதிர்காலம் தொடர்பில் குழப்பமடைந்திருந்தனர். சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை வழங்கி நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதாக வாக்குறுதி வழங்கிய போதிலும் தமிழ் மக்கள் தமக்கான அடுத்த கட்ட அரசியல் நகர்வு எவ்வாறிருக்கும் என்பதில் தெளிவான தீர்மானத்தை எடுக்க முடியாது குழம்பினர். "நாங்கள் இதயபூர்வமாக வாக்களிப்பதானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களிப்போம். நாம் அழுத்தத்தின் பேரில் வாக்களிக்க வேண்டுமெனில் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கே வாக்களிப்போம்" என யூலை 2009ல் மக்கள் சிலர் தெரிவித்திருந்தனர். தற்போது காலம் மாறிவிட்டது.

சிறிலங்காவின் வடக்கு வாழ் மக்களின் வாழ்வியலின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் சிறிலங்கா இராணுவத்தின் தலையீடுகள் காணப்படுகின்றன. இங்கு அதிகாரங்கள் மத்திய மயப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழ் சமூகம் உட்பட்டுள்ளது. தவிர, மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக் கோட்பாடுகள் போன்றவற்றில் தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போருக்குப் பின்னான சூழலில் தமிழ் மக்கள் கௌரவத்துடனும், அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டு தமிழ் மக்கள் சமமாக மதிக்கப்படுவதற்கான வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் கொண்டிருந்தது. ஆனால் சிறிலங்காவை ஆளும் தற்போதைய அரசாங்கமானது தமிழ் மக்களின் உரிமையை மதித்து அவர்களை சமமாக நடாத்தத் தவறிவிட்டது. "எவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த அபிவிருத்திகள் மக்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு ஈடாகாது" என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாக ஆளும் அரசாங்கத்திற்கு ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையில் பெற்றுக் கொண்ட வெற்றியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான மிகப் பெரிய வெற்றியாகும். தற்போதைய அரசாங்கத்தின் கோட்பாடுகளால் தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதைப் பிரதிபலிக்கின்ற ஒன்றாகவே இத்தேர்தல் பெறுபேறு அமைந்துள்ளது. இது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தொடர்பான ஒரு கருத்து வாக்கெடுப்பாகவும் காணப்படுகிறது.

முதற்தடவையாக மாகாண சபை அரசாங்கத்தை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இது ஒரு சவாலாக இருக்கும். இதனை ஆட்சி செய்வதென்பது மிகவும் கடினமானதாக இருக்கும். மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மாகாண சபை நிர்வாகத்தை மிகவும் சவாலுடன் நடாத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மூலோபாயத்துடன், யதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் கூட்டமைப்பானது தமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அது கொழும்பிலுள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் கூட்டமைப்பானது தனது கைகளில் ஒப்படைக்கப்பட்ட இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

Gibson Bateman and Rathika Innasimuttu are founding members of The Social Architects - TSA.


http://www.puthinappalakai.com/view.php?20130926109141

இலங்கை தேர்தலில் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்று இருக்கிறது...  காரணம் பற்றி எல்லாம் ஆராயும் பழக்கம் அருகிவருகிறது...  கடந்த தேர்தல்களின் பிறகு கூட்டமைப்பு என்ன செய்தது  இவ்வளவு பெரிய வெற்றி பெற என்பதுக்கும் யாரும் காரணம் சொல்வதும் கிடையாது....   

 

நாடாளுமண்ற தேர்தல்,  மாநகரசபை தேர்தல்,   போண்றவற்றி  அரசாங்கம் வாங்கிய வாக்குக்களில் வீழ்ச்சி ஏற்படவில்லை...   ஆனால்  கூட்டமைப்பின் வாக்குக்கள் அதிகரித்து காணப்படுகிண்றன...    அதாவது வாக்களிக்காமல் புறக்கணித்த பலர் இந்த தேர்தலில்  கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்பதுதான் உண்மை...  

 

பலர் இதை ஒட்டி புலம்பெயர்ந்தவை எதையும் இனி சொல்ல தேவை இல்லை மக்கள் கூட்டமைப்பை தங்களின் தலைமையாக ஏற்றுக்கொண்டனர் எண்று சொல்கிறார்கள்...  கேட்க அவர்கள் மேல் அனுதாபம் மட்டும் தான் ஏற்படுகிறது... 

 

வாக்களிக்காமல் புறக்கணித்து இருந்த தமிழர்களின் ஆதரவை பெற கூட்டமைப்பு என்ன செய்தது என்பதுக்கான விடையே பலன் தரும்...     கூட்டமைப்பு அந்த மக்களுக்கு கொடுத்த நம்பிக்கையை புறம் தள்ளாமல்  நம்பிக்கையானவர்களாக நடந்து கொள்வார்களா என்பதை  காலம் தான் சொல்ல வேண்டும்... 

 

 

 

 

 

 

Edited by தயா

தமது  அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகள் கூட்டமைப்பினால் திறமையுடன் முன்னெடுத்து  அதில் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலாவது வெற்றியை அடையும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாலேயே கூட்டமைப்பினால் பெரிய வெற்றியை பெற முடிந்துள்ளது. இதே விட அதிக  நம்பிக்கையை யுத்த காலத்தில் விடுதலை புலிகள் மீது அனைத்து தமிழ் மக்களும் வைத்திருந்தனர்.  விடுதலை புலிகள் விடயத்தில் மக்கள் வைத்த  நம்பிக்கை தகர்த்தெறியபட்டது போல் அல்லாமல், கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் படித்து   மிகவும் கவனத்துடன் கூட்டமைப்பினர்  தமது கடமையை புரிய வேண்டும். புரிவார்கள் என்று எதிர்பார்போம். மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்ற கூட்டமைப்பினால் முடியாது விட்டாலும் குறிப்பிட தக்க அளவிற்கான முன்னேத்தை தமது அரசியல் ராஜதந்திர முயற்சிகள் மூலம் அடைய கூட்டமைப்பினர்  உரிய வேலைத்திட்டங்களை எடுக்க வேண்டும்.  இல்லையெனில்  தமக்கு தலைமை வகித்த மிதவாத தீவிரவாத அனைத்து தலைமையையும் நம்பி  ஏமாந்த ஒரு இனமாக தமிழினத்தின் வரலாறு பதிவு செய்யப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.