Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக தாளம் போடும் இலங்கையின் நீதித்துறை"- குளோபல் தமிழ்ச் செய்திகள்

Featured Replies

"ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக தாளம் போடும் இலங்கையின் நீதித்துறை"- குளோபல் தமிழ்ச் செய்திகள்
26 செப்டம்பர் 2013
 

"உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமே மாற்றி அமைத்தது" காணி அதிகாரங்கள் குறித்த தீர்மானங்களை மத்திய அரசாங்கமே எடுக்க முடியும் - உச்ச நீதிமன்றம்

justice---l-body2_CI.jpg

 

காணி அதிகாரங்கள் குறித்த தீர்மானங்களை மத்திய அரசாங்கமே எடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காணி அதிகாரங்களை மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கா மாகாண அரசாங்கத்திற்கா என்பது தொடர்பில் கண்டியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலனை செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதம நீதியரசர் தலைமையிலான நீதவான்கள் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளனர்.

காணி அதிகாரங்கள் குறித்த தீர்மானங்களை மத்திய அரசாங்கமே எடுக்க முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, காணி அதிகாரங்கள் மாகாணசபைக்கு உரியது என உச்ச நீதிமன்றம் முன்னர் அறிவித்திருந்தது. முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இலங்கை அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கே உரித்தானது என அவர் தீர்பளித்திருந்தார். 

எனினும் அரசாங்கத்தில் அரசியல் பித்தலாட்டங்களுக்கு எதிரான தீர்புகள் பலவற்றை வழங்கியமையினால் சிரானி பண்டாரநாயக்கா மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு பலாத்காரமாக அவரை அரசாங்கம் தூக்கி எறிந்தது.

இதேபோல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா – றணில் விக்கிரம சிங்க இணையாட்சியின் சமாதான காலத்தில் வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாக சபை மற்றும் சிரான் அமைப்பு, முறைமைகளுக்கு எதிராக அப்போது ஜே.வீபீ தாக்கல் செய்த மனுவுக்களுக்கு ஆதரவாக அப்போதைய பிரதம நீதியரசர் சரத். என். சில்வா தீர்பளித்தார்.

பின்னர் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வீ.பி தாக்கல் செய்த மனுவுக்கு சாதகமாக தீர்பளித்த சரத் என் சில்வா வடகிழக்கு இணைப்பை நிரந்தரமாக துண்டித்து தீர்பளித்தார்.

இப்போ எல்லாவற்றுக்கும் மேலாக சென்று முன்னர் தமது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்பையே மாற்றி அமைத்து காணி அதிகாரங்கள் மத்திய அரசிற்கே உரியது என தீர்ப்பை எழுதியுள்ளார் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் மோஹான் பீரிஸ். 

1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டபோதும் அரசியல் தலையீடுகள் அற்ற சுயாதீனமான நீதிச் சேவை ஆணைக்குழுக்கள், தேர்தல் ஆணைக்குழுக்கள், நிர்வாக சேவை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆயினும் அவையாவற்றையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ செயலிழக்கச் செய்து அனைத்து அதிகாரங்களையும் நீதி முறைமையினையும் தமது குடும்ப அரசியலுக்கு ஏற்ப தாளம் போடும் அலகுகளாக உருவாக்கி உள்ளார். 

ஆரசியல் யாப்பமைவில் குறைந்தபட்ச  ஜனநாயகம்  நிலவும் நாடுகளில் வலுவேறாக்கக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைவாக சட்டத்துறை நிர்வாகத்துறை நீதித் துறை ஒன்றில் ஒன்று தலையிடாமல் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படும் முறைமை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆட்சியில் உள்ள அதிகாரம் படைத்தவர்களையே நீதித் துறைகள் கேள்விக்கு உட்படுத்தி மக்களின் உரிமைகளை காக்கும் மன்றங்களாக செயற்படுகின்றன. 

ஆனால் துர்ப்பாக்கியம் இலங்கையில் 1978 இரண்டாம் குடியரசு யாப்பில் நிறைவேற்று அதிகார முறைமை கொண்டுவரப்பட்டபின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அன்றய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோணிற்கு எதிராக அரசியல் அழுத்தத்தை கொடுத்து அவரை தூக்கி எறிந்தார்.

பிரேமதாஸாவின் ஆட்சிக் காலம் மற்றும் டீபீ விஜயதுங்கவின் ஆட்சிக் காலங்களிலும் நீதித்துறை ஆட்சியளருக்கு அடங்கிச் செயற்படும் துறையாகத் தொடர்ந்தது. பின் சந்திரிக்கா குமாரதுங்க அட்சியில் ஒப்பீட்டளவில் அரசியல் அழுத்தங்கள்  சற்று குறைவாகக் காணப்பட்டது. இப்போ முழுக்க முழுக்க இலங்கையின் நீதித் துறை மகிந்த சகோதரர்களினதும் அவர்களின் அரசாங்கத்தினதும் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப தாளம் போடும் அமைப்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஏற்கனவே முன்னைய பிரதம நீதியரசர்கள் அல்லது உயர் நீமன்ற நீதியரசர்கள் குழாம் எழுதிய தீர்ப்புக்களையே மாற்றி எழுதுவதன் முலம் இதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

விசேட  செய்தியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96995/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.