Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது இங்குள்ள சிலரின் இன்றைய கவலை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது இங்குள்ள சிலரின் இன்றைய கவலை"

05 அக்டோபர் 2013

சிங்கள வானொலி நிகழ்வில் மனோ கணேசன்


இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில சிங்கள் தீவிரவாத குழுக்களுக்கு மனதுக்குள்ளே பெரும் மனக்கவலையை தந்துள்ளது. இனவாதிகளின் நாடிபிடித்து பார்க்கும் வல்லமை எனக்கு இருப்பதாக நான் நம்புவதால் இது எனக்கு புரிகிறது என வி எப்எம் தனியார் வானொலியில் ஒலிபரப்பாகும் "சித்தாமுல்ல" என்ற பிரபல சிங்கள நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மனோ கணேசனுடன், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரச்சார செயலாளர் நிஷாந்த வர்ணசிங்க கலந்துகொண்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் விக்கினேஸ்வரனுக்கு, பாலசிங்கம் என்ற பட்டத்தை சூட்டி மகிழ்கின்றார்கள். விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத பயங்கரவாதி என்றும், தமிழக கட்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்றும், புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளினால் இயக்குவிக்கப்படுகின்றார் என்றும் இங்கு வந்து நண்பர் நிஷாந்த சொல்கிறார். இவர்களை எனக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் இவர்களது இந்த கவலையை என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது.

விக்கினேஸ்வரன், இலங்கையின் உயர்நீதிமன்ற கட்டமைப்பில் மிக உயர் பதவி வகித்தவர், தொழில்முறையில் நாடு முழுக்க வாழ்ந்து பணியாற்றியவர், கடைசியாக வெள்ளவத்தையில் வாழ்ந்தவர், நன்கு சிங்களம் பேசக்கூடியவர், சிங்கள இனத்துடன் தனிப்பட்ட உறவு தொடர்புகளை கொண்டவர் என்ற கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைத்துவிட்டு அவரை தமிழ் இனவாதியாக காட்டுவதற்கு, இந்த சிங்கள இனவாத கூட்டு மிகவும் கஷ்டப்படுகிறது.

ஏனென்றால் விக்கினேஸ்வரனும், சம்பந்தனும் தமிழ் இனவாதிகளாக இருந்தால்தான் சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் வண்டி ஓடும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், விக்கினேஸ்வரனுக்கும் வடக்கு தேர்தலின் போது முன்னின்று பிரச்சாரம் செய்த, காரணத்தால் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரான நானும் ஒரு தமிழ் இனவாதி என்று நண்பர் நிஷாந்த சொல்கிறார். இவருக்கு நான் இன்னொன்றையும் சொல்கிறேன். நான் வடக்கிற்கு சென்று பிரச்சாரம் மட்டும் செய்யவில்லை. வடக்கு முதல்வர் வேட்பாளர் நியமனத்தை விக்கினேஸ்வரன் ஏற்றுகொண்டதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியிலிருந்து நான் பங்களிப்பு வழங்கியிருந்தேன். எங்களுக்கு சரி என்று படுவதை நாம் எப்போதும் கொள்கைவழி நின்று செய்து வந்துள்ளோம்.

நண்பர் நிஷாந்த வர்ணசிங்கவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பாருங்கள், இவர் சொல்வதை சிங்கள மக்களே இன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிகழ்வில் இன்று தொலைபேசியில் கேள்விகள் கேட்டு கருத்து தெரிவித்த ஒன்பது நேயர்களில் ஏழு பேர் சிங்களவர்கள். இவர்களில் ஒருவர் கூட என்னை திட்டவில்லையே. இரண்டு பேர் நிஷாந்தவை மிகவும் கடுமையாக திட்டி என்னை பாராட்டினார்கள். யுத்தம் முடிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், வடக்கில் தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று அனைவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

அதுமட்டும் அல்ல, அதிகம் வெளியில் வராத இன்னொரு உண்மை இருக்கின்றது. நடந்து முடிந்த மத்திய மாகாண, வட-மேற்கு மாகாண தேர்தல்களில் போட்டியிட்ட சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகளை சேர்ந்த ஒரு வேட்பாளர்கூட வெற்றிபெறவில்லை. அனைவரும் படுதோல்வி அடைந்து விட்டார்கள்.

சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாற்ற கிளம்பியுள்ளதாக சொல்லிக்கொள்ளும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன ஆகிய சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகளின் வேட்பாளர்களை சிங்கள மக்கள் நிராகரித்துவிட்டார்கள். ஆகவே இந்த நாட்டில் இன்று இனவாதம் தோல்வியடைந்து வருகின்றது. உங்களது இனவாத கூட்டு கட்சிகளின் கருத்துகளும், பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் கூச்சல்களும் மக்களை சலிப்படைய வைத்துள்ளன.

கடந்த சில மாதங்களாக நான் அநேகமான சிங்கள ஊடக நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றேன். அனைத்து நிகழ்வுகளிலும் சிங்கள மக்கள் நான் சொல்லும் கருத்துகளை புரிந்து கொண்டு வருவது எனக்கு மிக தெளிவாக தெரிகிறது. எங்களது அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் மூலம் நான், விக்கரமபாகு, சிறிதுங்க, அசாத் சாலி, சுமந்திரன் ஆகியோர் உண்மைகளை சிங்கள மக்கள் மத்தியில் பேசி வருகிறோம். இது எங்கள் வெற்றி. நாங்கள் அரசாங்கத்துக்கு சாமரம் வீசி, சுயலாப வரப்பிரசாதங்களை வாங்கி கொண்டு காட்டிகொடுக்கும் அரசியல் செய்யாமல், உண்மைகளை மட்டும் துணிந்து பேசி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மனங்களை வென்று வருகிறோம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97350/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாதியாக இல்லாதது தென்னிலங்கை இனவாதிகளுக்கு மட்டுமில்லை, புலம் பெயர் பினாமி வியாபாரிகளுக்கும் பெரும் பிரச்சினையாய் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் தம் இருப்பை உறுதி செய்ய, வியாபாரத்தை பெருக்க இன்னொரு தனிநாட்டு போராட்டம் உடனடியாக தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாதியாக இல்லாதது தென்னிலங்கை இனவாதிகளுக்கு மட்டுமில்லை, புலம் பெயர் பினாமி வியாபாரிகளுக்கும் பெரும் பிரச்சினையாய் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் தம் இருப்பை உறுதி செய்ய, வியாபாரத்தை பெருக்க இன்னொரு தனிநாட்டு போராட்டம் உடனடியாக தேவைப்படுகிறது.

 

 

நீங்கள்  மரத்தில் இருந்தபடி

ஆணிவேரை வெட்டும் வேலையைச்செய்கின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளும்வரை......

உங்களுடைய  கருத்துக்கு எந்த பெறுமதியும்  கிடையாது......... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போதும் என் நிலம் எனும் மரத்தில்தான் இருக்கிறேன். விடுதலையின் பெயரால் சேர்த்த சொத்துக்களை இன்று தன் பெயரிலும் தன் குடும்பத்தின் பெயரிலும் மாற்றிக்கொண்டு, பினாமி வியாபாரத்துக்காக இன்னொமொரு கொடும்ப்போரை தூண்டும் எந்த வியாபாரியும் நான் இருக்கும் மரத்தின் ஆணிவேராக என்ன நார் வேறாக கூட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போதும் என் நிலம் எனும் மரத்தில்தான் இருக்கிறேன். விடுதலையின் பெயரால் சேர்த்த சொத்துக்களை இன்று தன் பெயரிலும் தன் குடும்பத்தின் பெயரிலும் மாற்றிக்கொண்டு, பினாமி வியாபாரத்துக்காக இன்னொமொரு கொடும்ப்போரை தூண்டும் எந்த வியாபாரியும் நான் இருக்கும் மரத்தின் ஆணிவேராக என்ன நார் வேறாக கூட இல்லை.

 

 

நீங்கள் மறைமுகமாக

பலதடவை இது பற்றி  பேசுகின்றீர்கள்

இங்கு எழுதுபவர்களின்  தனிப்பட்ட  வாழ்க்கையையும்  நன்றாக அறிந்து வைத்தக்கொண்டு எழுதிவருகின்றீர்கள்.

 

உண்மைதான்

இவை கண்டுபிடிக்கப்படணும்

தண்டிக்கப்படணும்

இதில்  எந்த மாற்றுக்கருத்தும் இல்லை

ஆனால்  அதற்கெல்லாமட முன்னுதாரமாக அதைக்கேட்பவர் தன்னை விடுவிக்கணும்

தன் முகத்தையும்  தனது கொடுக்கல்  வாங்குதல்களையும்

எங்கு கொடுத்தார்

என்பது போன்ற  தகவல்களையும் எழுதணும்.

 

இதன்படி

என்னைப்பற்றி  தெரிந்து கொள்ளவேண்டுமாயின்

இங்குள்ள ஒருங்கிணைப்புக்குழுவிடம் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி  முழுமையாக அறிந்து கொள்ளமுடியும்.

அவர்களில் நம்பிக்கை  இல்லையென்றால்

அதன் தலைவர்களான

திலகர் அண்ணா

மனோ அண்ணா

இளங்கோ அண்ணா

அதை அடுத்து பருதியண்ணா (இவர் இல்லை)

இன்றுள்ள  பார்த்திபன்......... வரை விசாரிக்கமுடியும்.....

அத்துடன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

நாடு கடந்த அரசு

மற்றும்

நடுவர் வரை என்னைத்தெரிந்தவர்கள் பொறுப்பான பதவிகளில் இன்றும் உள்ளனர்.

அவர்களுடன் இன்றும் தொடர்பிலுள்ளேன்.

 

அல்லது என்னை  நேரில்  சந்தித்தால் அத்தனை  விபரங்களும் தரமுடியும்.

இப்படி செய்யாது

தன்னை  ஒழித்துக்கொண்டு

மற்றவர் மேல் கை காட்டுவது   வெறும் புரளி  கிளப்புதலும்  நழுவல் போக்குமே ஆகும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நான் ஒரு போதும் உங்கள் மீது எந்த குற்றசாட்டையும் வைத்ததில்லை.

எதைவைத்து நீங்கள் நான் இங்கு எழுதுபவர்களின் தனிவாழ்வை பற்றி தெரிந்துவைத்துள்ளேன் என்று சொல்கிறீர்கள் எனும் புரியவில்லை.

ஆதாரம் - இனப்படுகொலை செய்தவர்கள் கேட்கும் அதே கேள்வியை திருப்பி நீங்களும் எம்மிடம் கேட்க்காதீர்கள்.

புலிக்கே நாமம் போட்டு சொத்தை லவட்டியவர்கள் வெளிப்படையாக ஆதரம் எதையும் வைத்திருக்க போவதில்லை.

சிலரின் 2009 பின் செளபாக்கியத்தையும், அவர்கள் யாரின் சொத்தை நிர்வகித்தார்கள், யாருக்காக பணம் சேர்த்தார்கள் என்பதை அறிந்து இருந்தாலே போதும் 2+2= 4 எனறு அறிய.

இன்னும் சிலரை பற்றி கொஞ்சம் தகவல்கள் இருக்கிறது. இதை இப்போது சொன்னால் நான் மானநஸ்டவழக்கை எதிர்கொள்ள நேரிடும். ஆதாரம் இன்னும் கிடைத்ததும், தெரியப்படுத்துவேன்.

முகம் காட்டாமை - உயிர் பயம் யாரை விட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிலரை பற்றி கொஞ்சம் தகவல்கள் இருக்கிறது. இதை இப்போது சொன்னால் நான் மானநஸ்டவழக்கை எதிர்கொள்ள நேரிடும். ஆதாரம் இன்னும் கிடைத்ததும், தெரியப்படுத்துவேன்.

முகம் காட்டாமை - உயிர் பயம் யாரை விட்டது?

 

அதுவரை

எவரையும் குற்றம் காணாதீர்கள்

இதனால்

கள்ளர்கள்  ஒழித்துவிடவும்

நல்லவர்கள் மனம் புண்படவும் மட்டுமே முடியும் :( 

  • கருத்துக்கள உறவுகள்

நான் எந்த தனிநபரையும் நோக்கி இந்த குர்ரச்சாட்டை இதுவரை வைத்ததில்லை. ஆனால் சிலரின் அரசியலை விளங்கி கொள்ள, விளங்கப்படுத்த இதை பற்றி பேச வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு இந்திய அரசியலை பட்றிக் கதைக்கும் போது அரசியல் வாதிகளின் ஊழலை,, கறுப்பு பணத்தை பற்றி, சுவிஸ் வங்கிகளை பற்றி பேசித்தான் தீரவேண்டும். ஒவ்வொர்ன்றுக்கும் நீதிமன்ரில் குறம் தீர்க்கும் அளவுக்கு ஆதாரங்களை வைத்து விட்டுத்தான் பேன் வேண்டுமென்பதில்லை.

தொப்பி அளவானவர்கள் மட்டும் போடட்டும். மறையவர்கள் ஏன் மனம் நோக வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.