Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

18 அக்டோபர் 2013

"ஒவ்வொரு மனிதர்களின் இரவுக் கனவுகளும் சம்பூர் பற்றியதாகத்தான் இருக்கிறது"

sampur_CI.jpg

உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக அகதிகளாக்கப்பட்ட பலர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை. யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் அகதிகள் இன்னமும் தமது சொந்த இடத்தில் குடியமர முடியவில்லை என்பது நாட்டின அரசியலின் ஸ்திரமற்ற தன்மையை தெளிவாக உணர்த்துகின்றது. யுத்தம், இடப்பெயர்வு என்பவற்றின் அரசியலும் மீள் குடியமர்த்தல் என்பவற்றின் அரசியலும் அவை இடம் பெறும் நிலப்பகுதியை சேர்ந்த மக்களை கடுமையாக துன்புறுத்துகின்றன. நில அபகரிப்பு என்பது பாதிப்பல்ல சனக்குழுமத்தினை அழித்தல் என்றே சொல்லப்படுகிறது.  

சம்பூர் வரலாறு

ஈழத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இடங்கள் அவர்களின் வரலாறு பண்பாடு மொழி வாழ்வியல் என்று  இன்னோரன்ன விடயங்கள் கலந்த பூமியாகும். சம்பூரும் அப்படியானதொரு கிராமமமே. குளக்கோட்ட மன்னன் காலத்திற்கு முன்பாகவே சம்பூரில் மக்கள் வாழ்ந்து வந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன. திருக்கரசை புராணம், மற்றும் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் வைத்து பார்க்கும்பொழுது 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை கொண்டிருப்பதை மதிப்பிட முடிகிறது. அதற்கு முன்னரும் சம்பூரில் மக்கள் வாழந்;திருக்க்கூடும். சம்பூர் என்பது அக் கிராமத்தின் வனப்பு மிகுந்த எழிலைக் குறிப்பிடுகின்றது. சம்பூரண அழகு பெற்ற ஊர் என்பதனால் சம்பூர் என்ற பெயர் டிந்தக் கிராமத்திற்கு ஏற்படட்டிருக்கிறது.

ஈழத்தில் கிழக்கில் திருகோணமலை மண்ணில் தனித்துவமான தமிழ் மொழி, பண்பாடு, மண்வாசனை என்பன உள்ளன. திருகோணமலை பல்லவர் காலத்தில் பாடல் பெற்ற திருத்தலம் என்கிற கோணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள நிலப்பகுதி. திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாராப்பற்று என் பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வந்த நிலப்பகுதியில் சம்பூர் அமைந்துள்ளது. சம்பூர் பிரதேசத்தில் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரட்ணபுரம், கடற்கரைச்சேனை ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இலங்கை இந்திய கூட்டு உற்பத்தியான இலங்கை அரசின் உத்தேச அனல் மின்னிலையம் அமைப்பதற்காக அபகரிக்கபட்டன.

முதல் இடப்பெயர்வு

ஈழத்தில் நான்காம் ஈழப்போர் தொடங்கிய பொழுது முதல் முதலில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசம் சம்பூர்பகுதியே. விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் மனிதாபிமான யுத்தம் என அறிவிக்கப்பட்டு இலங்கை அரசு யுத்தத்தை தொடங்கிய நாட்களில் முதன் முதலில் அகதியாக்கப்பட்டவர்கள் சம்பூர் மக்கள். 2006.04.26 அன்று தொடங்கப்பட்ட யுத்தத்தில் இந்த மக்கள் அகதியான வரலாறு தொடங்கியது. அன்றைய நாளில் சம்பூர் கிராமம்மீது மிகக் கடுமையான விமானத்தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. மக்கள் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று சனங்கள் பலரும் செத்துச் சிதறுவதைப் பார்த்த மக்கள் இரவோடு இரவாக சம்பூரை விட்டு இடம் பெயர்ந்ததார்கள். காலம் காலமாக வாழ்ந்த நிலத்தை விட்டு போகும் திசை அறியாதது செல்லத் தொடங்கினார்கள் மக்கள்.

இந்த மக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பிற்குச் சென்று கதிரவெளிப் படாசாலையிலும் வாகரையிலும் தங்கியிருந்தனர். அங்கு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். தொடர் யுத்த நடவடிக்கை காணரமாக சம்பூரிலிருந்து 100 கிலோ மீற்றர் கால் நடைப்பயணமாக மட்டக்களப்பு நகரை அடைந்தார்கள். சம்பூரில் யுத்தம் தொடங்கியது முதல் அதன் பாதிப்புக்களை எதிர்கொள்ளத் தொடங்கிய சம்பூர் மக்கள் இன்றுவரை அதை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். யுத்தம் உடல்ரீதியான காயங்களை ஏற்படுத்தியது. உயிர்களைப் பறித்தது. யுத்தத்தின் முடிவில் மாபெரும் சிறை வாழ்வாக அகதிமுகாங்களை வந்தடைந்தனர் சம்பூர் மக்கள். முதலில் மட்டக்களப்பு நகரில் உள்ள முகாங்களிலும் பின்னர் திருகோணமலை மூதூரில் உள்ள கிளிவொட்டி, பட்டித்திடல், மணற்சேணை, கட்டைப் பறிச்சான் முதலிய இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். ஏழு ஆண்டுகளைக் கடந்தும் நிலம் மறுக்கப்பட்ட, நிலம் பறிக்கப்பட்ட சனங்களாய் அந்த முகாங்களில் உள்ளனர்.

அபிவிருத்திக்கான அபகரிப்பு

ஈழத்தின் வடக்கில் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை உயர்பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசு அபகரித்த பொழுது 'நாட்டின் பாதுகாப்பிற்காக மக்கள் தமது நிலங்களை தியாகம் செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. கிழக்கில் சம்பூர் நிலம் அபகரிக்கப்பட்ட பொழுது 'அபிவிருத்திக்காக நிலங்களை மக்கள் தியாகம் செய்ய வேண்டும்' எனப்பட்டது. இங்கு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு எப்படியானது? அபிவிருத்தி எப்படியானது? ஈழ மக்களின் நிலங்களை அபகரிக்க இப்படிப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஏற்கனவே மனிதாபிமான யுத்தத்திற்காக இந்த மக்களின் அங்கங்கள் பறிக்கப்பட்டன. காயங்கள் உண்டாக்கப்பட்டன. உயிர்கள் பறிக்கப்பட்டன. இப்பொழுது இந்த மக்களிடம் எஞ்சியிருப்பது நிலம் மட்டுமே. அந்த நிலத்திற்காகவே வாழ்வதும் போராடுவதும். அதையும் பறிக்கும் பொழுது இந்த மக்கள் எங்கு செல்லுவார்கள்? என்ன செய்வார்கள்?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல வந்தது இந்தச் செய்தி. 1499ஃ25 ஆம் இலக்க 2007 ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி வர்த்தமானியில் விசேட பொருளாதாரத்துடன் இணைந்த சம்பூர் அனல் மின்னிலையத்திற்கான நிலச்சுவிகரிப்பு பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. இந்தத் திட்டடத்தில் சுமார் 1700 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர், கடல் வளம்,  மண் வளம், மரங்கள் என்று அழகும் வளமும் கொண்ட சம்பூரின் வளத்தை குறித்த அனல் மின்னிலையம் பாதிக்கும் என்றே கருதப்படுகிறது. 530 குடும்பங்கள் வசிக்கும் சன நெரிசல் கொண்ட சம்பூர் இதில் நேரடியாகப்பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு மக்களை மீள்குடியேற்றம் செய்வோம் என்று தெரிவித்த இலங்கை அரசு அந்த மக்களின் வாழ்வை வளத்தை அபகரித்திருப்பது என்ன வகையான மனிதாபிமானம்?

மூதூரில் அகதிமுகாங்கள்

தகரங்களுக்குள் தவிக்கும் ஒரு வாழ்வை இந்த மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூதூர் பிரதேசத்தில் உள்ள அகதிமுகாங்களில் தங்கள் சொந்த நிலத்திற்கே செல்வோம் என்றும் வாழ்வையே ஒரு போராட்டமாக்கிக் கொண்டு இந்த மக்கள் வாழ்கிறார்கள். தகரங்களால கட்டப்பட்ட நீண்ட கொட்டகைகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன இந்த மக்கள் வசிக்கும் அகதிமுகாம். துகரங்களாலும் தறப்பால்களாலும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறைகளிலும் குடியிருப்பத்தப்பட்டு இருக்கிறார்கள். வயல் வெளிகளுக்குள்தான் பட்டித்திடல் முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைகாலத்தில் அந்தக் தகரக் கொட்டகைகளினுள் வெள்ளம் நுழைந்து விடும்பொழுதும் அவற்றுக்குள்தான் மக்கள் வசிக்கின்றனர். இவைகள்தான் இயல்வான வாழ்வு ஒன்றைப்போல அனர்த்த கால முகத்துடன் ஒவ்வொரு முகாமும் காணப்படுகிறது.

இந்த முகாங்களில் பார்த்த குழந்தைகள் நமது அரசியல் துயரத்தை தமது முகங்களில் வெளிப்படுத்துகின்றனர். கூடுகளைப் போலிருக்கும் தகர வீடுகளுக்குள் இருந்து சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வாடிய முகத்தோடு குந்தியிருக்கிறார்கள். நிவாரண பொருட்களில் சமைத்த உணவை பசியோடு அள்ளி உண்டு கொண்டிருக்கும் பல குழந்தைகள் எதிர்காலம் குறித்த ஏக்கத்துடன் இருக்கிறார்கள். எவ்வளவு காலத்திற்குத்தான் இந்க் குழந்தைகள் அகதிமுகாம் பிள்ளைகளாக வளர்வது என்ற ஏக்கமே அந்த மக்களின் நெஞ்சில் அனலால் கொதிக்கிறது. தமது ஊரை அறியாத தமக்கொன்று ஒரு வீட்டை அறியாத பிள்ளைகளுக்கு 'சம்பூர் என்று எமக்கொரு ஊர் இருக்கிறது' என்று தர்மார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சல்மான்குர்ஷின் கையெழுத்து

இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது பயணத்தில் ஒரு நிகழ்வாக சம்பூர் அனல்மின்னிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டுள்ளார். சல்மான் குர்ஷித் சம்பூர் அனல் மின்னிலையம் தொடர்பில் எட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார். இலங்கை இந்திய கூட்டு யுத்தத்திற்கு பரிசாக சம்பூரை இந்தியாவுக்கு கொடுத்திருக்கிறது இலங்கை. தமது நிலம் தமக்குக் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் இந்தச் செய்தி இடிபோல விழுந்திருக்கிறது என்று சம்பூர் மக்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் வடக்கு கிழக்கு மக்களின் மேம்பாட்டிற்காக என்று இந்தியா சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பயணமும் தமிழ் மக்களின் நிலத்தை பறித்தெடுக்கும் பயணமாகவே அமைந்துவிட்டது. இருப்பதையும் புடுங்கிய கதையாக சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் சம்பூர் அகதிகளை நிரந்தர அகதிகளாக்கியுள்ளது. சல்மான் குர்ஷித் ஒப்பந்த்தில் இட்ட கையெழுத்து அந்த சம்பூர் மண்ணின் குழந்தைகனை நிரந்தர அகதிகளாகக்கும் தலையெழுத்தாக்கிவிட்டது.

எப்பொழுது ஊர்?

சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த நிலையில் இன்னமும் தாம் அகதி முகாங்களில் தங்கியிருப்ப்பதாகவும் தம்மை தமது இருப்பிடங்களில் குடியமர்த்துமாறும் கோரி சம்பூர் பிரதேச மக்கள் மனுவை தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுவுக்கு அனல் மின்னிலையம் அமைக்கும் அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாற்றிடங்களில் குடியேற வருமாறு பல தடவைகள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டபோதும் தமது சொந்த இடங்களே தமக்குத் தேவை என்றும் மாற்றிடங்களில் குடியேறமுடியாது எனவும் மக்கள் தெரிவித்தனர். எங்களை வேறு ஒரு நிலத்தில் குடியேற்ற வேண்டாம்! சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்பதே சம்பூர் மக்களின் உறுதியான கோரிக்கை. உயர்நீதிமன்றமும் மக்களை மீள்குடியேற்றவே தீர்ப்பளித்துள்ளது.

புலிகளால் திருகோணமலை நகரத்திற்கும் துறைமுகத்திற்கும் பிறிமா ஆலைக்கும் மாத்திரமல்ல சம்பூர் மக்களுக்கும்தான் பாதிப்பு என்று சம்பூர்மீது யுத்தம் தொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு சம்பூரில் மக்கள் மகிழ்ச்சியோடு நிம்மிதியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அன்று தொடங்கிய யுத்தம்தான் சம்பூர் மக்களின் நிலத்தை பறித்தது. அதுவே சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கச் உதவியது. அதுவே இப்பொழுதும் இந்த மக்களை ஆபத்திற்குள் தள்ளியது.

அகதி முகாங்களும் நிலப் பறிப்புக்களும் குழந்தைகளதைதான் அதிகம் பாதிக்கின்றன. இன்றைய அகதிமுகாங்களும் அரசியலும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறது என்பதே இங்குள்ள சனங்களின் துக்கம். ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது என்பதே இந்த மக்களின் கேள்வி. நிச்சயமாக இங்குள்ள ஒவ்வொரு மனிதர்களின் ஒவ்வொரு இரவுக் கனவுகளும் ஊர் பற்றியதாகத்தான் இருக்கிறது. ஊரில் வாழ்வது போல ஊருக்கச் செல்வதுபோல தினமும் இவர்கள் கனவு காண்கிறார்கள். தாம் காணாத ஊருக்குச் சென்று வசிப்பதுபோலவும் தமது ஊரிலுள்ள வீட்டில் விளையாடுவதுபோல, பள்ளிக்கூடம் செல்வது போல இங்குள்ள குழந்தைகள் உரிமையோடு கனவுகள் காண்கிறார்கள். குழந்தைகள் காணும் கனவுகள் நியாயமும்உன்னதமும் மிக்கவை.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97787/language/ta-IN/article.aspx

நல்ல பகிர்வு 

வலிகாமம் வடக்கு காணி பிரச்சனை ஊடகங்களில் வந்த அளவிற்கோ அல்லது மக்களால் நடத்தப்பட்ட போராட்டுங்களின் அளவிற்கோ சம்புர் பிரச்சனை பெரிது படுத்தப்படவில்லை.

மயிலட்டி மக்கள் தங்கள் இடங்களை பார்பதற்கு பல தடவைகள் கொடுக்கப்பட்ட சந்தர்பங்கள் இந்த மக்களுக்கு ஒரு தடவையேனும் கொடுக்கப்படவில்லை.

சம்பூர் மக்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமது  நிலையும் இதுதான் .

பல விடயங்களை உணர்வுபூர்வமாக அணுகாத வரையில் இதே நிலை எமக்கு தொடரத்தான் போகுது .இலங்கை இந்திய ஒப்பந்ததை ஏற்றிருந்தால் எவ்வளவு உயிர்கள் ,உடைமைகள் ,எமது நிலங்கள் பாதுகாக்க பட்டிருக்கும் .

இன்றும் விறிசு விடுவதிலேயே காலம் போகுது .தீபச்செல்வன் உட்பட .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமது  நிலையும் இதுதான் .

பல விடயங்களை உணர்வுபூர்வமாக அணுகாத வரையில் இதே நிலை எமக்கு தொடரத்தான் போகுது .இலங்கை இந்திய ஒப்பந்ததை ஏற்றிருந்தால் எவ்வளவு உயிர்கள் ,உடைமைகள் ,எமது நிலங்கள் பாதுகாக்க பட்டிருக்கும் .

இன்றும் விறிசு விடுவதிலேயே காலம் போகுது .தீபச்செல்வன் உட்பட .

 

 

நீங்கள் சொல்வதுதான் உண்மை...........
1987 லிபெரசன் ஒபெரசனுக்குள் இருந்து நாங்கள் தப்புவோம் என்று வயது வந்த இளைஞர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இராணுவம் நாலு திசையாலும் முன்னேறிக்கொண்டு இருந்தது. மில்லரின் வேடியோசையின் அதிர்வினால்தான் கொஞ்சம் அடங்கிற்று. பின்பு இந்திய விமானங்கள் பறந்துவந்து உலர்  உணர்வு பொட்டலங்களை வீசி சென்றது. கீழிருந்து பார்த்த எங்களுக்கு கடவுளாகத்தான் அது தெரிந்தது.
பின்பு கடவுள்கள் நேரிலேயே வந்தார்கள்.
எங்களுக்கு இனபத்தை அடக்க முடியாத ஒரு சோகம்.
 
பின்பு அவர்கள் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அவர்களே சொன்னார்கள்.
சிங்கள காடை அரசும். இந்திய அரசும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதில் இருந்த எதுவும் நடைமுறையில் இருக்கவில்லை. ஏன் ன்று கேட்டால் பதில் இல்லை.
புலிகள் சத்தியா கிரகம் செய்தார்கள் தீலீபனை இழந்தார்கள்.
பின்பு அவர்களுடைய இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட 16 பேரை இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு  அமைவாக விடுதலை  செய்யுங்கள். இல்லை என்றால் இந்தியாவிற்கு கொண்டு செல்லுங்கள் என்றார்கள்............. மன்றாடினார்கள்.
அப்போதுதான் அவர்கள் சொன்னார்கள் ஒப்பத்தை நடைமுறை படுத்த முடியாது. சும்மா பேப்பரில்  எழுதியிருக்கு என்று. பரிதாபமாக அவர்கள் நஞ்சு அருந்தி இறந்தார்கள்.
 
வந்த கடவுள்களின் உண்மை முகத்தை நான்கு நாள் கடந்து காண கூடியதாக இருந்தது.
இந்திய இலங்கை கொடூர கொலை கார கும்பல்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால். என்று நாம் இத்தனை அரிய  புலிகளை இழந்திருப்போமா ??? 
 
தேசத்திற்காக குண்டுகளை தம்மோடு அணைத்தவர்கள். மக்களின் மரணங்களை தடுக்க தம் உடல்களை  காப்ரனாக்கியவர் இன்று இருந்திருந்தால்........... எமது தேசத்திற்கு வேறு என்ன வேண்டும்??

ஏன் ஆயுதப்போரட்டத்தையே ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம். தம்பி அர்சுண் உங்களுக்கு அளவான இடத்தில ஏன் நிப்பாட்டிறியள். ஏதோ 1987 ஒப்பந்தத்திற்கு முன்னர் ஒன்றுமே நடக்சாத மாதிரி.

 

நீங்கள் சொல்வதுதான் உண்மை...........
1987 லிபெரசன் ஒபெரசனுக்குள் இருந்து நாங்கள் தப்புவோம் என்று வயது வந்த இளைஞர்கள் யாரும் நினைத்திருக்கவில்லை. இராணுவம் நாலு திசையாலும் முன்னேறிக்கொண்டு இருந்தது. மில்லரின் வேடியோசையின் அதிர்வினால்தான் கொஞ்சம் அடங்கிற்று. பின்பு இந்திய விமானங்கள் பறந்துவந்து உலர்  உணர்வு பொட்டலங்களை வீசி சென்றது. கீழிருந்து பார்த்த எங்களுக்கு கடவுளாகத்தான் அது தெரிந்தது.
பின்பு கடவுள்கள் நேரிலேயே வந்தார்கள்.
எங்களுக்கு இனபத்தை அடக்க முடியாத ஒரு சோகம்.
 
பின்பு அவர்கள் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அவர்களே சொன்னார்கள்.
சிங்கள காடை அரசும். இந்திய அரசும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதில் இருந்த எதுவும் நடைமுறையில் இருக்கவில்லை. ஏன் ன்று கேட்டால் பதில் இல்லை.
புலிகள் சத்தியா கிரகம் செய்தார்கள் தீலீபனை இழந்தார்கள்.
பின்பு அவர்களுடைய இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட 16 பேரை இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு  அமைவாக விடுதலை  செய்யுங்கள். இல்லை என்றால் இந்தியாவிற்கு கொண்டு செல்லுங்கள் என்றார்கள்............. மன்றாடினார்கள்.
அப்போதுதான் அவர்கள் சொன்னார்கள் ஒப்பத்தை நடைமுறை படுத்த முடியாது. சும்மா பேப்பரில்  எழுதியிருக்கு என்று. பரிதாபமாக அவர்கள் நஞ்சு அருந்தி இறந்தார்கள்.
 
வந்த கடவுள்களின் உண்மை முகத்தை நான்கு நாள் கடந்து காண கூடியதாக இருந்தது.
இந்திய இலங்கை கொடூர கொலை கார கும்பல்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால். என்று நாம் இத்தனை அரிய  புலிகளை இழந்திருப்போமா ??? 
 
தேசத்திற்காக குண்டுகளை தம்மோடு அணைத்தவர்கள். மக்களின் மரணங்களை தடுக்க தம் உடல்களை  காப்ரனாக்கியவர் இன்று இருந்திருந்தால்........... எமது தேசத்திற்கு வேறு என்ன வேண்டும்??

 

"பின்னர் அவர்கள் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அவர்களே சொன்னார்கள் "

சொன்னவர்கள் யார் ? எப்ப சொன்னார்கள் என்று கூறமுடியுமா ?.

இங்கு சில உண்மைகளை எழுதத்தான் வேண்டும் .வெறுமன புலிகள் செய்தபிரச்சாரத்தை வைத்துத்தான் பலரின் பதிவுகள் இருக்கு ,அதைவிட பலர் போராளிகளாக மட்டும் இருந்தவர்கள் .நான் கொஞ்சம் மேல் மட்டத்தில் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் ,றோ மட்டத்தில் தொடர்பில் இருந்தவன்  (இயக்கங்களுடன் றோ சார்பில் தொடர்பாளராக இருந்த சந்திரசேகரன் அதில் முக்கியமானவர் ).

இந்திய வெளியுறவு கொள்கை தமிழ் ஈழத்திற்கு எதிரானது ஆனால் என்ன விலை கொடுத்தும் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நிறைவேற்றவேண்டும் என்பதில் மிக கடுமையாக நின்றார்கள் .அவர்கள் தமிழ் தரப்பை விட சிங்கள தரப்பை கட்டுக்குள் கொண்டுவரத்தான் மிக கஷ்டப்பட்டார்கள் .ஜே,ஆர் ,சிறிமா ,பிரேமதாச ,அத்துலத்முதலி,பிக்குகள் என அத்தனை பிரிவுகளையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் இலகுவானதல்ல .முதலில் கப்பலும் பின்னர் பிளேனும் அனுப்பித்தான் படியவைத்தார்கள் .அதைவிட இராஜதந்திர அழுத்தம் .

தமிழ் தரப்பு அனைத்தும் முதலிலேயே ஓம் என்று சொல்லிவிட்டது .இவ்வளவு சீரியசாக விரைவாக வந்து ஒப்பந்தம் கையெழுத்து வைக்கபோகின்றார்கள் என்று புலிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை .பிரபாகரனின் தீர்வு தனி தமிழ்ஈழம் மட்டுமே .இந்த நேரம் தான் எப்படியாவது இந்த ஒப்பந்த்தை குழப்பவேண்டும் வேண்டும் என்று முடிவெடுத்தபுலிகள் தமது வழக்கமான செயற்பாடுகளில் இறங்குகின்றார்கள்.அதன் பின்னர் தான் பிரபா டெல்கி கொண்டுசெல்லப்பட்டதும் பின்னர் சுதுமலையில் இறக்கிவிடப்பட்டதும் .புலிகள் என்ன செய்கின்றார்கள் என்றதை றோ அவதானிதுக்கொண்டே இருந்தது .ஒப்பந்ததத்திற்கு புலிகள் தடையாக இருக்க முனைகின்றார்கள் என்ற செய்தி வர புலிகளையும் அழிக்க றோ முடிவேடுத்ததுதான் நடந்தது .

இதில் பெரும் பகிடி டெல்கிக்கு பிரபாகரனை கொண்டு சென்றது .வெருட்டியது.பிரபாகரன் தனது முடிவில் மாறாமல் திடமாக இருந்தது என்றெல்லாம் எழுதுகின்றார்கள் .உண்மை ,ஆனால் இந்தியா அந்தளவிற்கு இறங்கி வந்திருக்கவே தேவையில்லை என்பது கூட எம்மவருக்கு விளங்கவில்லை .

இதில் இன்னொமொரு விடயமும் இருக்கு ,எமது ஆய்வாளர்கள் புலம்பி தள்ளும் விடயம் .அது என்ன இலங்கை -இந்திய ஒப்பந்தம் .ஆரம்பத்தில் இயக்கங்கள் தான் இந்தியாவை கேட்டவை எங்களை சிங்களம் ஏமாற்றிவிடும் நீங்களே மூன்றாவது தரப்பாக எமது சார்பில்  ஒப்பந்தில் கையெழுத்து இடுங்கள் என்று .

அதற்காக இந்திய இராணுவம் இலங்கையில் செய்த அநியாயங்களை எந்த வகையிலும் நியாய படுத்த முடியாது ,இந்திய இராணுவம் இப்படியான அநியாயங்களை செய்யவேண்டும் என்று புலிகள் மிக பிரயாசைப்பட்டு அதில் வெற்றியும் கண்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
 

எல்லா  விதத்திலும் புலிகளை  மாட்ட நினைத்து

நீங்களே  உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து எழுதுகின்றீர்கள்

இது தான் தங்களது வரலாறோ.........

எழுதுங்கள்

எழுதுங்கள்

எல்லோரும் சந்திரனில் இருந்து தற்பொழுழுதான்  இறங்கி  வந்துள்ளோம்....... :(  :(  :(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.