Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரணைமடு, யாழ் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு வடமாகாண சபை பூரண ஒத்துழைப்பை வழங்­கும்-முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CVW-victory.jpg

எங்கும் பிரச்­சினை உள்­ளது. எங்கும் பாதிப்­புக்­களும் உள்­ளன. எனினும் எவ்­வா­றான பாதிப்­புக்கள் வந்­தாலும் இத்­திட்டம் நன்­றாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதால் யாழ், கிளி­நொச்சி குடி­தண்ணீர்த் திட்டம் விரைந்து நடை­மு­றைப்­ப­டுத்த ஓர் அல­காக செயற்­படும் மாகாண சபையும் பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என மாகாண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். 

இர­ணை­மடு யாழ் குடி­நீர்­ வி­நி­யோகத் திட்டம் தொடர்­பான கூட்டம் நேற்று முன்­தினம் கிளி­நொச்­சி­யி­லுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­ற­போது பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் தலை­மையில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்தில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த காலங்­களில் உள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளினால் இத்­திட்­டத்தின் தூர­நோக்கம் குறித்த செயற்­பா­டுகள், வேலைத்­திட்­டங்கள், நிதி ஒதுக்­கீ­டுகள் மற்றும் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மக்­களின் தேவைகள், விவ­சா­யிகள் தேவைகள் அவர்­க­ளது குடும்­பங்­க­ளுக்கு ஏற்­ப­ட­வுள்ள பாதிப்­புக்­க­ளுக்­கான தீர்­வுகள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

திட்­டங்­க­ளையும் வெ ளிப்­ப­டை­யாக முன்­வைக்­க­வேண்டும். வரட்சி காலத்தில் யாழ்.குடா­நாட்­டுக்­கான குடி­தண்ணீர் விநி­யோகம் நடை­பெ­ற­மாட்­டாது என ஏற்­க­னவே கூறப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகா­ணத்தில் எவ்­வ­ளவு நிதி இருக்­கின்­றது என இன்னும் எனக்குத் தெரி­யாது. இந்தப் பணத்­துக்கும் என்ன நடந்­தது என எனக்குத் தெரி­யாது. எதிர்­வரும் 25ஆம் திகதி முதலாம் அமர்வு இடம்­பெறும்.

எனினும் இன்­றைய கூட்­டத்தில் விவ­சா­யிகள், உத்­தி­யோ­கத்­தர்கள், திட்ட நிபு­ணர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்சர் எனப் பலரும் கூறிய கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் விவ­சா­யி­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டா­வண்ணம் வட­மா­காண சபை எதிர்­கா­லத்தில் ஒரு­மித்த முடி­வு­களை எடுக்கும் என்றார்.

இக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட மாவை சேனா­தி­ராசா உரை­யாற்­று­கையில்,

1962ஆம் ஆண்டில் வடக்­குக்கு வந்த இஸ்ரேல் விஞ்­ஞா­னிகள் இன்னும் 25 வரு­டத்தில் வட­மா­காணம் தண்­ணீ­ரற்ற பாலை­வனம் ஆகி­விடும் என்றும் உலக அளவில் வெப்­ப­ம­டைதல் தொடர்­பாக ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­த­துடன் இத்­திட்­டத்தை எவரும் பாதிப்­புறா வண்ணம் நடை­மு­றைப்­ப­டுத்த அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் எனக் கேட்­டுக்­கொண்டார்.

மேலும் ஐந்­துகான் மதகு, வழுக்­கை­யாறு ஊடாக அராலி கட­லுக்குள் செல்லும் மழை­நீரைத் தேக்கி குடா­நாட்டுத் தண்­ணீரை வள­மாக்க நீர்ப்­பா­சன அமைச்சர் முன்­வர வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்டார்.

இக்­கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஈ.சர­வ­ண­பவன் உரை­யாற்­று­கையில்,

வெளிப்­ப­டுத்தல் தன்மை என்­பதை எங்கும் காண­மு­டி­யாத ஆட்­சியே கடந்த காலத்தில் இடம்­பெற்­றது. பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டங்கள் நீண்ட பல மாதங்­க­ளாக இடம்­பெ­ற­வில்லை. கிளியில் அது தேவை­யற்ற ஒன்­றா­கி­விட்­டது. வடக்கு மாகா­ணத்­துக்கும், ஆளு­ந­ருக்கும், அர­சாங்க அதி­ப­ருக்கும் காவடி எடுத்­த­வர்கள் ஆட்­டத்தை குறைத்து ஆட வேண்டும் என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் உரை­யாற்­று­கையில்,

இர­ணை­மடுக் குளம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்குள் உள்­ளது. இவ்­வா­றான கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்டு வெ ளிப்­ப­டை­யாக மக்கள் சென்று பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

நிவாரணத் திட்டம், கடல் நீரேரியை நன்னீராக்கும் திட்டம் மற்றும் கழிவுநீர்த் திட்டம் தொடர்பாக விரைவான திட்ட­மிடலை துரிதமாக மேற்கொள்ள அமைச்சர்­கள் முன்வர வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைத் தலைவர் நா.வை.குகராஜா வரவேற்புரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9673:---------s---&catid=1:latest-news&Itemid=18

 

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடுக்குளத்துநீரை யாழ்குடாநாட்டுக்ககெடுத்துச்செல்வதில் மாகாணசபையும் யாழ்குடாநாட்டு மக்களும் மும்மரமாகவிருப்பார்களாக இருந்தால், அதற்கெதிரான மக்கள் இயக்கம் தொடங்கப்படும். என் கருத்துடன் உடன்படும் யாழ்கள் அங்கத்தவர்களையும் அனுதாபிகளையும் ஒரு குடையின்கீழ் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

யாழ்குடாநாட்டில் ஏனைய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இருக்கும்வளங்களைச் செப்பனிடுதல்மூலமும், தண்ணீர் முகாமைத்துவத்தை அனைத்துக்குடியிருப்பாளர்கட்கும், விவசாயிகளுக்கும் அறியத்தருவதன்மூலமும் இப்பிரச்சனையை இலகுவாகத் தீர்த்துக்கொள்ளலாம். அதைவிடுத்து சோம்பேறிகள்போல் அடுத்தவனது வளங்களில் கைவைப்பது அன்றைய பிரிட்டிஸ் காரர்களுக்கும் இன்றைய சிங்களப் பேரினவாதத்துக்கும் ஒன்றும் சளைத்தவிடையமில்லை.

Edited by Elugnajiru

இரணைமடுக்குளத்துநீரை யாழ்குடாநாட்டுக்ககெடுத்துச்செல்வதில் மாகாணசபையும் யாழ்குடாநாட்டு மக்களும் மும்மரமாகவிருப்பார்களாக இருந்தால், அதற்கெதிரான மக்கள் இயக்கம் தொடங்கப்படும். என் கருத்துடன் உடன்படும் யாழ்கள் அங்கத்தவர்களையும் அனுதாபிகளையும் ஒரு குடையின்கீழ் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

யாழ்குடாநாட்டில் ஏனைய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இருக்கும்வளங்களைச் செப்பனிடுதல்மூலமும், தண்ணீர் முகாமைத்துவத்தை அனைத்துக்குடியிருப்பாளர்கட்கும், விவசாயிகளுக்கும் அறியத்தருவதன்மூலமும் இப்பிரச்சனையை இலகுவாகத் தீர்த்துக்கொள்ளலாம். அதைவிடுத்து சோம்பேறிகள்போல் அடுத்தவனது வளங்களில் கைவைப்பது அன்றைய பிரிட்டிஸ் காரர்களுக்கும் இன்றைய சிங்களப் பேரினவாதத்துக்கும் ஒன்றும் சளைத்தவிடையமில்லை.

"எனினும் இன்­றைய கூட்­டத்தில் விவ­சா­யிகள், உத்­தி­யோ­கத்­தர்கள், திட்ட நிபு­ணர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்சர் எனப் பலரும் கூறிய கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் விவ­சா­யி­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டா­வண்ணம் வட­மா­காண சபை எதிர்­கா­லத்தில் ஒரு­மித்த முடி­வு­களை எடுக்கும் என்றார்."  :rolleyes: 

வன்னி வளங்களை யாழ்பாணத்துக்கும் யாழ்பாண வளகங்களை வன்னிக்கும் பயன் படுத்த போராட்டங்கள் தொடக்கி வைக்க கூடாது. இது முடிவில் ஒருவனும் தன் காணிக்கு வெளியே வரக்கூடாது என்ற சட்டம் போட வேண்டிவரும்.

 

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பத்தில் யாழ்ப்பாணத்து,புலம் பெயர் வளங்களை கொண்டு வருவதுதான் சரியே அல்லாமல் தமிழ் மக்களுக்கிடையில் ஆப்பிறுக்கும் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்க கூடாது.

 

முதல் எல்லா போராட்டங்களையும் கைவிட்டுவிட்டு தீர்வுக்கான மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க யாழ் உறவுகளை வந்து குவியுமாறு நான் அழைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.