Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக உருவாகும் நிலை?

Featured Replies

Jaffna-Tamil.jpgநாட்டின் அடுத்த பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்யும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமைச்சர்

''ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சிலர் விரட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அந்தத் தலைவரை விரட்ட முயற்சித்தாலும், காப்பாற்ற முயற்சித்தாலும் அந்தத் தலைவர் எவ்விதப் பிரயோசனமும் அற்றவர். இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்க்கட்சிக்கு நல்லதொரு தவைலர் உருவாகப் போவதில்லை.

எதிர்க்கட்சியின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கைநழுவிச் சென்றுகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் வந்து எதிர்க்கட்சியை சரிசெய்துகொள்வதற்கு ஏதாவது வழிமுறையொன்றுவதைக் கோருவதைத் தவிர அவருக்கு மாற்று வழி எதுவும் இல்லை'' எனத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/home

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாற்றமடைந்து, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் 1977 ஆம் ஆண்டு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. சிங்கள அரசை, உலகத்தின் துணையுடன் கடைந்து உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமிர்தலிங்கத்திற்குக் கிடைத்தபோதும், அன்றைய தமிழ் இளைஞர்களின் எழுச்சி தன்னை மிஞ்சிவிடுமோ என்ற பீதியில், ஐே. ஆரின் சாணக்கியத்தைப் புகழ்ந்து பேசி எதையுமே பெற்றுக்கொள்ளாது தன் பதவியை முடித்துக் கொண்டு பின் தானும் முடிந்தார்.

 

தற்போது மறுபடியும், நாட்டின் அடுத்த பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்யும் என ஆரூடம் கூறப்படுகிறது.

தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாற்றமடைந்து, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் 1977 ஆம் ஆண்டு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. சிங்கள அரசை, உலகத்தின் துணையுடன் கடைந்து உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமிர்தலிங்கத்திற்குக் கிடைத்தபோதும், அன்றைய தமிழ் இளைஞர்களின் எழுச்சி தன்னை மிஞ்சிவிடுமோ என்ற பீதியில், ஐே. ஆரின் சாணக்கியத்தைப் புகழ்ந்து பேசி எதையுமே பெற்றுக்கொள்ளாது தன் பதவியை முடித்துக் கொண்டு பின் தானும் முடிந்தார்.

 

தற்போது மறுபடியும், நாட்டின் அடுத்த பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்யும் என ஆரூடம் கூறப்படுகிறது.

இல்லாத பிள்ளைக்கு தொட்டில் கட்டினால் போகுது  தாலாடும் பாட வேண்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் ஆளும் நபர்களே மாறுகின்றனர். ஆட்சியின் தன்மையோ அதனது அரசியல் உபாயங்களோ மாறியதில்லை. யே.ஆரைவிடப்படுமோசன இனவாதியான மகிந்த குடும்ப ஆட்சியில், யேஆரைப்போல் ஒருகுழுவை உருவாக்கி எதிர்கட்சியாக இருத்தினாலும் இருத்துவார்களேயன்றித் தமிழர்களைச் சிங்களபௌத்த சிறிலங்காவினது எதிர்க்கட்சியாகக்கூட இருக்க அனுமதிக்க மாட்டார்கள். எதிர்கட்சியாய் நடிக்க வீரவன்ச, கெலஉறுமய, யாதிககெல உறுமய, எனப்பல உறுமயாக்கள் , ஈபீடீபீ எம்.வீ.பீ போன்ற 'பீ'க்களும் நாடாளுமற்றத்துள் இருக்கும்போது கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக...  வாய்பேயில்லை. அது ரனிலைத் தனது காலில்(ஏலவே அப்படித்தான்) முழுமையாக விழவைத்து எதிர்காலத்தில் முழுமையான ஒரு அரசனாகுவதே இனப்படுகொலையாளனான மகிந்தவின் மகிந்த என்ற நரமுண்ணியின் நோக்கம். தற்போதுள்ள அரைஅரசன் தகுதியில் இருந்து கீழேவந்தால் , தன்னை மின்சாரக்கதிரைக்குக் கொண்டுவந்துவிடுவார்கள் என்றபயம். து ஒரு தேவையற்ற பயம். ஏனென்றால் தமிழர்கள் ஒருபோது ஒற்றுமையாக ஒன்றையும் செய்யமாட்டார்கள் என்பது வரலாறு. ஏனென்றால் முக்கொடியாண்டு இன்று கோ .. இழந்தபின்பும், சிங்களத்தைக் காக்க ஒருகூட்டம் கிந்தியத்தைக் காக்க ஒருகூட்டமென்றிருக்கும் போது  எதற்காகச் சிங்களத் தலைமைகள் பயப்பிடவேண்டும்!

Edited by nochchi

ஆற்றோடு நீந்திச் சென்று அதன் அழகை ரசிப்பது போல அரசியலை அதன் உடன் இணைந்து சென்று விளங்க்கிகொள்ள முயன்றிருக்கிறீர்கள். 

 

தமிழர்கள் அமிர்தலிங்கம், இராமநாதன், செல்ல்வநாயகம் என்றெல்லாம் பிழை பிடித்து பிரிந்து கொள்வதல்லாமல் இன்று உலகநாடுகள் இலங்கையை புரிந்து வைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை ப்யன் படுத்தி ஒன்றாக இணைந்து சர்வதேச உதவியுடன் உரிமையை பெற்றுகொள்ள தயார் இல்லை. வருகால சந்ததி இவர்களுக்குள் இருக்கும் அமிர்தலிங்கம், செல்வநாயகம், இராமநாதன் கதை மட்டும் எழுதி வைக்கத்தான் இடமளிக்கிறார்கள். எல்லோரும் மனமாக கூடி முயன்றால் பொதுநலவாய மகாநாட்டை நிறுத்த முடியாதா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.