Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''என்றோ ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம்' -கலா­நிதி தயான் ஜய­தி­லக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற தூக்­கு­மே­டையில் நிறுத்தும் மாநா­டா­கவே மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாடு அமையப் போகின்­றது. எனவே டேவிட் கம­ரூனின் கருத்­துக்­களை குறைத்து மதிப்­பி­ட­லா­காது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளhர்.
 
அர­சாங்கம் இப்­போ­தி­ருந்தே இதற்கு முகம் கொடுப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தயா­ராக வேண்­டு­மென்றும் இல்­லா­விட்டால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம் என்றும் அவர் எதிர்வு கூறி­யுள்ளார்.
 
இது தொடர்­பாக கலா­நிதி தயான் ஜய­தி­லக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
 
பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் அச்­சு­றுத்­தலை நாம் குறைத்து மதிப்­பி­டவோ அல்­லது அதனை கணக்­கி­லெ­டுக்­காது இருக்கவோ கூடாது.
 
அவ­ரது கருத்தில் நவ­நீ­தம்­பிள்­ளையை இணைத்துக் கொண்டு இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான முழு ஆத­ர­வையும் பிரிட்டிஷ் வழங்கும் என்றும் கமரூன் தெரி­வித்­துள்ளார்.
 
2012, 2013 ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்கை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணையைப் போன்று 2014 ஆம் ஆண்டு அமையப் போவ­தில்லை. அது பயங்­க­ர­மா­ன­தாக அமையும்.
 
கடந்த ஆண்­டு­களில் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­க­ளா­னது 2016ஆம் ஆண்டில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள எம்மை சர்­வ­தேச விசா­ரணை என்ற தூக்கு மேடையில் நிறுத்­து­வ­தற்­கான முன்­னேற்­பா­டுகள் ஆகும்.
 
இலங்கை அர­சாங்கம் இதற்கு எதி­ராக தலை­கீ­ழாக நின்று அடம் பிடித்­தாலும் கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் எது­வுமே நடக்கப் போவ­தில்லை. மாறாக ஜெனீ­வா­வுக்கே வெற்றி கிடைக்கும். 2012, 2013 இல் வாக்­கெ­டுப்பு தோல்வி கண்­டது அப்ப­டி­யானால் 2014 இல் எவ்­வாறு வெல்­ல­மு­டி­யு­மென சிலர் கேட்­கலாம்.ஆணைக்­கு­ழுவில் எமது நட்பு நாடுகள் இருக்கின்­ற­னவே எனக் கூறலாம். அவ்­வாறு அங்கம் வகித்த நிலை­யி­லேயே 2012இல் தோல்வி கண்டோம்.
 
இம் முயற்­சி­யா­னது ஜனா­தி­ப­தி­யி­னதும் மக்­க­ளி­னதும் கண்­களில் மண்ணை தூவு­வது போலா­ன­தாகும்.இவ் ஆணைக்­கு­ழுவில் மீண்டும் எமது நட்பு நாடு­க­ளான 6 நாடு­களே அங்கம் வகிக்­கின்­றன.அதா­வது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீ­ரியா, சவூதி அரே­பியா அந் நாடு­க­ளாகும்.இந் நாடுகள் இருப்­பதால் வாக்­கெ­டுப்பில் எம்மால் வெல்ல முடி­யாது.
 
2009 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிர­தமர் கமரூன் அரசு டேவிட் மிலிபேண்ட் தலை­மையில் நவ­நீ­தம்­பிள்­ளையின் ஒத்­து­ழைப்­புடன் இதே போன்ற முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.அதன் போது அக் கூட்­ட­ணிக்கு 12 வாக்­கு­களே கிடை­த்தன. இலங்கைக்கு 29 வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. ஆனால் நான்கு வரு­டங்­க­ளுக்கு பிறகு என்ன நடந்­துள்ளது.
 
இலங்­கைக்கு நேர­டி­யா­கவே விஜயம் செய்த கமரூன் ஜெனீ­வாவில் இலங்­கையை தோல்­வி­ய­டையச் செய்வேன் என அச்சு­றுத்தல் விடுத்து சென்­றுள்ளார். இவ்­வா­றான நிலை­மைக்கு இலங்கை எப்­படித் தள்­ளப்­பட்­டது.
 
எமக்கு நட்பு நாடுகள் உள்­ளன எனக் கூறு­வது வெறும் எண்­ணிக்கை கணக்­காகும். கம­ரூனின் அச்­சு­றுத்தல் செயற்­படத் தொடங்­கினால் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
 
இம் மாநாட்டில் இலங்கை கலந்­து­கொள்­ளா­விட்­டாலும் தனித்து தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும். அத் தீர்­மானம் எவ்­வாறு அமையும் என்­பதை ஏற்­க­னவே தருஷ்மன் அறிக்­கையில் வெளியி­டப்­பட்­டுள்­ளது. அதுதான் தூக்கு மேடைக்­கான சர்வதேச விசா­ரணை என்ற தீர்ப்­பாகும்.
 
இத் தீர்ப்­புக்கு அமைய உலகின் பலம் பொருந்­திய நாடுகள் தத்­த­மது பாரா­ளு­மன்­றங்­களில் பிரே­ர­ணை­களை நிறை­வேற்றி பல்­வே­று­வி­த­மான பொரு­ளா­தார தடை­களை விதிக்க ஆரம்­பிக்கும்.
 
இதனால் மக்கள் கஷ்­டங்­க­ளுக்கு தள்­ளப்­ப­டு­வார்கள். வேலை­யில்லாப் பிரச்­சினை தலை­தூக்கும். அத்­தோடு பொருளாதாரத் தடை­களால் நாட்டு மக்­களின் வாழ்க்கை நடை­மு­றைகள் தலை­கீ­ழாக மாறும்.
 
அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே, 2009ஆம் ஆண்டு வெற்றி 2012, 2013 ஆண்­டு­களில் பெற்ற தோல்­வி­க­ளையும் பாட­மாகக் கொள்ள வேண்டும்.எதிர்­வரும் 4 மாதங்­களில் ஜெனீவா போராட்­டத்­திற்கு தீர்க்­க­மான ராஜ­தந்­திர ரீதியில் புத்திக் கூர்­மை­யுடன் காய் நகர்த்­தல்­களை அர­சாங்கம் நகர்த்த தயா­ராக வேண்டும்.இது தவிர்க்க முடி­யா­த­ சவா­லாகும்.
 
இந்த சர்­வ­தேச பொறி முறையால் நாம் பெற்ற வெற்­றிக்கும் கௌர­வத்­திற்கும் இழுக்கு ஏற்­படும்.இதனால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி நாடு உரு­வா­வ­தற்கு தேவை­யான சர்­வ­தேச மற்றும் தெற்­கா­சிய வல­யத்தின் எழுத்து மூல­மான நிபந்­த­னைகள் தயா­ராகும் நிலை உரு­வாகும்.
 
பொதுநலவாய மாநாட்டில் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பிலும் நாட்டுத் தலைவர் மற்றும் வடபகுதி தொடர்பில் வெளிக்காட்டிய செய்திகள் சாதகமற்றதாகவே காணப்பட்டன. இது இலங்கையின் எதிராளிகளுக்கு விருந்தாக அமைந்தது. கமரூனின் யாழ். விஜயம் தமிழ் இனவாத சக்திகளின் பரம்பலுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளhர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=787782457920760423#sthash.5UHdZP30.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
எமது நட்பு நாடு­க­ளான 6 நாடு­களே அங்கம் வகிக்­கின்­றன.அதா­வது ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், அல்ஜீ­ரியா
"புரட்சிகர தோழர்கள்" எங்கன்ட நண்பன்டா.....மகிந்தா
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் நாங்கள் வடக்கிற்கு செல்ல முடியாது

 

சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதனை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எமது உள்நாட்டு விசாரணை ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறைவுபடுத்த எமக்கு காலம் தேவையாகும். அந்த பயணத்தில் செல்வோம். ஆனால் சர்வதேச விசாரணையை ஏற்கமாட்டோம். 
Mahinda-Samarasinghe.jpg
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்பதில் நான் அன்றிலிருந்து தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றேன். காரணம் வடக்கில் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட நிலைமையை பார்க்கும்போது பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் எம்மால் கூட வடக்கு பகுதிக்கு செல்ல முடியாது போகும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
 
காணி அதிகாரங்களை வழங்கினால் கொழும்பில் உள்ளவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு சென்று காணிகளை பெற தமிழ்க் கூட்டமைப்பு இடமளிக்காது. இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். இதனை புரிந்துகொள்ள கலாநிதி பட்டம் பெற்றவராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
அமைச்சர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
செவ்வியின் முழு விபரம் வருமாறு
 
கேள்வி: பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் மார்ச் மாதம் வரை இலங்கைக்கு காலக்கெடுவை விதித்துள்ளமை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
 
பதில்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் திட்டமிட்ட ரீதியில் இலங்கைக்கு வந்து இந்த கூற்றை வெளியிட்டதாகவே நாங்கள் கருதுகின்றோம். அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிக்கலை ஏற்படுத்துவதாக அவர் கூறியது திட்டமிட்ட வகையிலாகும் என்றே நாங்கள் நோக்குகின்றோம்.
 
காரணம் அவர் இலங்கைக்கு வருமுன்னர் லண்டனில் 7 க்கும் மேற்பட்ட தமிழ்க் குழுக்களை சந்தித்து .பேச்சுவார்த்தை நடத்திவிட்டே இந்தக் கூற்றை வெளியிட்டார். அந்தவகையில் அது பண்பான விடயம் அல்ல. பிரிட்டன் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவே இலங்கை வந்தார்.
 
மாறாக இலங்கையின் விவகாரங்களை கையாள வரவில்லை. பொதுநலவாயத்தை பயன்படுத்தி பிரிட்டன் பிரதமர் இலங்கைக்கு எதிராக அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்துள்ளார்.
 
இலங்கை தற்போது காலனித்துவ நாடு அல்ல என்பதனை டேவிட் கமரூன் மறந்துவிட்டார். இது காலனித்துவ நாடு அல்ல. இலங்கை சுயாதீன நாடாகும். இங்கு வந்து அவர் திகதி நிர்ணயம் செய்ய முடியாது. சுயாதீனமான எந்த நாட்டுக்கும் எவரும் வந்து திகதி நிர்ணயம் செய்ய முடியாது.
 
இது அச்சுறுத்தலாகும். அப்படியானால் பிரிட்டன் குறித்து நாங்களும் கேள்விகளை எழுப்பலாம். பிரிட்டனில் எத்தனையோ விசாரணைகள் தாமதமாகிக்கொண்டிருக்கின்றன. எனவே மற்றுமொரு நாடு பிரிட்டனுக்கு எதிராக திகதி நிர்ணயம் செய்யலாம்.
 
கேள்வி: பிரிட்டன் இவ்வாறு ஒரு விடயத்தை முன்வைக்க எமது பக்கத்தில் ஏதாவது குறைபாடுகள் காணப்பட்டனவா?
 
பதில்: போருக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்ற செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. பரந்துபட்ட நல்லிணக்கத்தை அடைய நாங்கள் வேலை செய்துவருகின்றோம். குறுகிய காலத்தில் செய்ய முடியாது. அதற்கு காலம் தேவையாகும். போருக்குப் பின்னரான சூழலில் அரசாங்கம் ஒரு இடத்தில் முடங்கி இருக்கவில்லை.
 
பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்னும் செய்வதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன. இதற்கு காலம் தேவையாகும். ஆனால் வேறொரு நாட்டின் தலைவர் இவ்வாறு நாட்டுக்குள் வந்து அச்சுறுத்தலை மேற்கொண்டு செல்வது மிகப்பெரிய அநீதியாகும்.
 
கேள்வி: மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை வந்தால் இலங்கை எவ்வாறு அதனை எதிர்கொள்ளும்?
 
பதில்: கடந்த மார்ச் மாதத்திலும் இலங்கை தொடர்பான பிரேரணை வந்தது. அடுத்த வருடத்திலும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவர கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பில் பரந்துபட்ட அறிக்கை ஒன்றை மனித உரிமைப் பேரவையில் விடுக்கவுள்ளார். எனவே இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணையை கொண்டுவரத் தேவையான பின்னணியை உருவாக்கியுள்ளனர்.
 
அது எவ்வாறு திட்டமிடப்படவேண்டும் என்பதனை நாம் பார்க்கவேண்டும். பிரிட்டன் பிரதமர் இவ்வாறு காலக்கெடு விதிப்பது மற்றுமொரு பிரேரணைக்கான சாத்தியத்தை வெளிக்காட்டுகின்றது.
 
கேள்வி: அப்படியான நிலைமை வந்தால் எதிர்கொள்ள தயாரா?
 
பதில்: அந்த நிலைமையிலேயே அதனை பார்க்கவேண்டும். எவ்வாறு இருப்பினும் அந்த நிலைமைக்கு நாங்கள் முகம்கொடுக்கவேண்டும். அதாவது எமது முன்னேற்ற செயற்பாடுகளுக்கு காலம் தேவை என்பதனை வலியுறுத்துவோம். நாங்கள் ஒரு இடத்தில் நின்றுவிடவில்லை. அந்த வகையில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதனை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
 
இது ஆரம்பத்தில் இருந்தே இலங்கையிடம் காணப்பட்ட நிலைப்பாடாகும். சர்வதேச விசாரணைக்கு இணங்கமாட்டோம். எமது உள்நாட்டு விசாரணை ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறைவுபடுத்த எமக்கு காலம் தேவையாகும். அந்த பயணத்தில் செல்வோம். ஆனால் சர்வதேச விசாரணையை ஏற்கமாட்டோம்.
 
சர்வதேச விசாரணைகளை நம்ப முடியாது. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக தருஷ்மன் அறிக்கையானது வேறு யாரோ தயாரித்த அறிக்கையாகும். தருஷ்மன் குழுவானது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவாகும். அவை அரசியல் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றவையாகும்.
 
எனவே சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது உள்நாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளோம். அதனை கொண்டு நடத்துகின்றோம். அதற்கு காலம் தேவையாகும். அந்த விசாரணையில் கூட சாட்சிகள் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இறந்தவர்களை மீண்டும் எழுப்பி சாட்சியம் பெற முடியாது. எனினும் விசாரணைக்கு முயற்சிக்கின்றோம். எமது பக்கத்தில் யாராவது தவறுகளை செய்திருந்தால் அதனை அனுமதிக்க மாட்டோம். அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். ஆனால் சாட்சிகள் இருக்கவேண்டும்.
 
இதற்கிடையில் வடக்கு கிழக்கில் எவ்வளவு அபிவிருத்திகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என்பது முக்கியமான விடயமாகும். 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வடக்கின் அபிவிருத்திக்காக கடந்தகாலங்களில் செலவழித்துள்ளோம். பாடசாலைகள்இ வீதிகள் மருத்துவமனைகள் என அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். வடக்கு மக்கள் எமது மக்கள் என்று கருதியே இந்த அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். அந்த மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதற்காகவே இவற்றை செய்துள்ளோம். அதுவே மிகப்பெரிய அபிவிருத்தியாகும்.
 
கேள்வி: வடக்குத் தேர்தல் தொடர்பில் ?
 
பதில்: வடக்குத் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெற்றது. கூட்டமைப்பினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றனர். அந்தவகையில் ஜனாதிபதி கூறியதைப்போன்று வடக்கில் சிறுபான்மையாகவுள்ள சிங்கள முஸ்லிம் மக்களை பாதுகாக்கவேண்டியது கூட்டமைப்பின் கடமையாகும்.
 
கேள்வி: வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தினால் வழங்க முடியாது என கூறும் அதிகாரங்களை கேட்டால்?
 
பதில்: அவர்கள் இது தொடர்பில் தர்க்கம் ஒன்றை முன்வைப்பார்கள். அந்த தர்க்கம் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திலேயே சென்று முடியும். 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த வியாக்கியானத்தை உயர்நீதிமன்றமே வழங்கும். நான் மேல்மாகாண சபையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபையை நிறுவி ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை எடுத்தேன்.
 
அதாவது தனியார் பஸ்களுக்கு வீதி அனுமதி பத்திரம் வழங்குதல் போன்றவற்றை நான் எடுத்தேன். ஆனால் வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் தனியான போக்குவரத்தை அமைக்க முயற்சித்தார். இரண்டு விடயங்களும் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது.
 
அதன்போது உயர்நீதிமன்றம் மாகாணம் ஒன்றில் தனியான போக்குவரத்து சேவையை நடத்த முடியாது என்றும் ஒழுங்கு விதிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் கூறியது.
 
கேள்வி: மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
 
பதில்: மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்பதில் நான் அன்றிலிருந்து தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றேன். காரணம் வடக்கில் கடந்த 30 வருடங்களாக காணப்பட்ட நிலைமையை பார்க்கும்போது பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் எம்மால் கூட வடக்கு பகுதிக்கு செல்ல முடியாது போகும்.
காணி அதிகாரங்கள் குறித்து பேச்சு நடத்தலாம். அதனை ஒரு முறைமைக்கு கொண்டுவரவேண்டும். நாட்டின் அனைத்து மக்களும் அனைத்து இடங்களுக்கும் சென்று காணிகளை பெற அனுமதி வழங்கவேண்டும். கொழும்பில் வாழும் என்னால் யாழ்ப்பாணத்துக்கு சென்று காணியை வாங்கும் உரிமை இருக்கவேண்டும். அதேபோன்று யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஒருவர் கொழும்பில் காணிகளை பெற உரிமை இருக்கவேண்டும்.
 
காணி அதிகாரங்களை வழங்கினால் கொழும்பில் உள்ளவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சென்று காணிகளை பெற முடியாது போகும். இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். இதனை புரிந்துகொள்ள பேராசிரியராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அதனால்தான் கூட்டமைப்பு காணி அதிகாரங்களை கோருகின்றது. எனவே தேசிய மட்டத்தில் ஆணைக்குழு ஒன்றின் ஊடாக காணி அதிகாரங்கள் கையாளப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். .
 
அனைத்து மக்களும் அனைத்து இடங்களுக்கும் சென்று காணிகளை பெறும் உரிமை இருக்கவேண்டும். அதற்கு காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டியது அவசியமாகும்.
 
கேள்வி: மாகாண சபை முறைமை அவசியம் என்பதனை ஏற்கின்றீர்களா?
 
பதில்: மாகாண சபை முறைமையை நான் எதிர்க்கவில்லை. மாகாண சபை முறைமை அவசியமாகும். அது சிறந்த விடயமாகும். ஒற்றையாட்சி முறைக்குள் நாடு இருக்கவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் மாகாணசபைகள் உருவாகியுள்ளமை சிறந்த விடயமாகும்.உண்மையில் வேலை செய்வதற்கு மாகாண சபையில் எவ்வளவோ விடயங்கள் உள்ளன. இந்த பொலிஸ் மற்றும காணி அதிகாரங்களை கேட்டுக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை. எனவே மாகாண சபை என்பது தேவையாகும். ஆனால் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பாகவே சிக்கல்கள் உள்ளன.
 
தற்போது பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இது குறித்து ஆராயலாம்.
 
கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் இதுவரை வரவில்லையே?
 
பதில்: அந்தக் கட்சிகளின் முடிவுகள் அவ்வாறு உள்ளன. ஆனாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இயங்கும். எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவில் வந்து அமரும் என்று நம்புகின்றோம். ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு சிறந்த இடமாகும்.
 
கேள்வி: நவநீதம்பிள்ளை இலங்கை வந்ததன் மூலம் எமக்கு என்ன நன்மை கிடைத்தது?
 
பதில்: ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்ததன் மூலம் அவரின் பக்கச்சார்பு நிரூபணமாகியது. இங்கு வந்த பலர் இலங்கையில் குறுகிய காலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவே குறிப்பிட்டனர். ஆனால் நவநீதம் பிள்ளை இலங்கை வந்து பக்கச்சார்பாக நடந்துகொண்டார். அவர் எந்த இடத்தில் இருக்கின்றார் என்பதனை காட்டிவிட்டார்.
 
கடந்த செப்டெம்பர் மாதம் அதனை ஜெனீவாவில் எடுத்துரைத்தோம். எதிர்வரும் மார்ச் மாதத்திலும் அதனை கூறுவோம். நான்கு வருடங்களில் பாரிய தூரம் வந்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துவோம். எமது நாட்டை பொறுத்தமட்டில் பல மொழி இன மத கலாசார கட்டமைப்பைக் கொண்டதாகும். அவற்றை பாதுகாத்தே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம். இந்த பல்வகைத்தன்மையை பாதுகாத்து இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தவேண்டும். அதனை பாதுகாக்கவேண்டும்.
 
கேள்வி: இந்திய மற்றும் கனடா நாடுகளின் பிரதமர்கள் பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தராமை தொடர்பில்?
 
பதில்: இந்திய பிரதமர் பேர்த் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை. அந்தவகையில் இலங்கைக்கும் வரவில்லை. அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வந்தார். அனைத்து கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டார். இந்திய பிரதமர் வராமைக்கான காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்.
 
கனடாவின் பிரதமர் வராமைக்கு அழுத்தங்களே காரணமாகும். அதற்கு பொதுநலவாயத்துக்கு அவர் பதிலளிக்கவேண்டும். எவ்வாறெனினும் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. பல நாடுகளின் தலைவர்கள் இலங்கையை பாராட்டிவிட்டே சென்றனர். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 10 நாடுகள் பொதுநலவாய அமைப்பில் உள்ளன.
 
கேள்வி: தென்னாபிரிக்காவிடம் அனுபவங்களை பெற தயாரா?
 
பதில்: தென்னாபிரிக்காவிடம் நல்லிணக்க அனுபவங்களை பெற நாம் தயார். ஆனால் இறுதி தீர்மானம் உள்நாட்டு ரீதியில் அமையவேண்டும். சர்வதேச நாடுகளிடம் உதவிகளையும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டு உள்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். ஆனால் சர்வதேச விசாரணைக்கு இணங்கமாட்டோம்.
 
virakesari

 

மாகாண சபைக்கு கூட காணியும் போலிசும் தரமாட்டினமாம் பிறகு எதுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு?

 

அதில இருந்து என்ன முடிவு எடுக்கப்போரிங்கள்?

 

 

டேவிட் கமரூன் எதுக்கு வந்தார் என்பது முக்கியமா என்ன சொல்லிவிட்டுபோனார் என்பது முக்கியமா? 

 

இன்னும் எத்தனை காலம் அவகாசமாக வேண்டும்? காலத்தை இழுத்தடிக்காமல் நல்லெண்ண சமிஞ்சைகளை காட்டுவின்களா?

 

நாட்டின் அபிவிருத்தி வேற இன ஒற்றுமை மனிதவுரிமை வேற நீதி வேற இதெல்லாம் உங்களுக்கு நடந்தால் தெளிவா அறிக்கை விடுறிங்க அனால் எங்களுக்கு நடந்தால் மாத்திரம் நடிகிருங்க. 

 

 

என்னது காநியகுடுத்தா நீங்க வந்து காணிவாங்க முடியாதா? சின்னப்புள்ள தமா உங்களுக்கே தெரியலையா? 

 

இதுக்கெல்லாம் நிங்கள் பத்தி சொல்லியே ஆகவேண்டும். கூட்டுங்க்கடா சர்வதேச விசாரணை கமிசனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.