Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNAவசமுள்ள உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது' சீ.வி.விக்கினேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார்.

எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாது போனால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம். அல்லது ஒத்துப்போக முடியாதவர் தமது பதவிகளை ராஜினாமாச்செய்யலாம். அதை விடுத்து எமது கட்சி சார்பில் கொண்டுவரும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை தோற்கடிப்பது மன்னிக்க முடியாத குற்றம். ஏனெனில் அதில் குறைகள்; இருந்தால் ஏற்கனவே அதனை பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறான நடவடிக்கைகள் எடுத்து தமது வரவு செலவுத்திட்டத்தை; தாமே தோற்கடித்தவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தனதுரையினில் தெரிவித்தார்.

அத்துடன் எமது உட்கட்சி பூசல்கள் வெளித்தெரிவதை தவிர்க்க கேட்டுக்கொண்ட அவர் வடக்கு மாகாணசபையில் உள்ளுராட்சி மன்ற விடயம் தன்னுடன் தொடர்பு பட்டதென தெரிவித்த அவர் வடக்கு மாகாணசபை இவ்விவகாரங்களை இனி கண்காணிக்குமெனவும் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு வசமுள்ள வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வலி.கிழக்கு மானிப்பாய் பிரதேச சபைகள் வரவு செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100616/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்.. புலிகளுக்கு மட்டுமல்ல.. இலங்கையில் உள்ள  ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் தலைவராக இருந்துள்ளார் என்பது இப்பதான் விளங்குது. :icon_idea:

கூட்டமைப்புக்குள் வந்து சேர்ந்த பிரதேச சபை உறுபினர்கள் எல்லாம் நீதியரசர் விக்கினேஸ்வரன் போன்று இனி தேவை இல்லை கூறத்தக்க வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல். அப்படி வந்திருந்தால் கூட மனித மனத்தின் ஆசை எப்போது அடங்கும் என்றது சொல்ல முடியாது. நாட்டில் எந்த இடத்திலும் பார்த்து பழக நல்ல உதாரணம் கிடையாது. சினிமாப்படங்களில், சஞ்சிகைகளில் பார்த்துப்பழக  தமிழ்நாட்டில் கூட உதாரணம் கிடையாது. ஜனநாய மேற்கு நாடுகளை பார்த்து பழகத்தக்க வசதியும் அவர்களுக்கு இருக்கா தெரியாது. 

EPDP போல ஒரு தலையும், அங்கத்தவர்களும் தனக்கு வந்து சேரவில்லை என்ற மனத்துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வழி நடத்த வேண்டும். ஆரம்பம் நமது பக்கத்தில் இருக்க வேண்டியதில்லை. அது நமது பக்கத்தில் இருந்தால் நமக்கு வெற்றி என்று ஒன்று வர இடம் இருக்காது. ஆரம்பம் அவர்கள் பக்கத்தில் இருக்கட்டும். முடிவை நமது பக்கம் திருப்பி வைத்தால் நாம் வெற்றி யாடைகிறோம். அப்போது அவர்கள்தான் தோல்வி அடைகிறவர்களாவார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.