Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞர் கருணாநிதி கேள்வி பதில்கள் அவர் புத்தகத்தில் இருந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கூறியிருக்கிறாரே?

பதில் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?:D :d :D

கேள்வி :- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், திரு. வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல் கிறார்களே?

பதில் :- அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ. இராசா, மற்றும் வழக்கறிஞர் திரு. வாகனாவதி ஆகியோரிடையே எந்த ஆலோசனையும் நடைபெற வில்லை என்றும், ஆனால் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக ஆ. ராஜா பிரதமருக்குத் தவறான தகவலை அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்தே, அந்தக் கூட்டம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், (அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக) நடைபெற்றதற்கான ஆதார ஆவணங் களை, திரு. இராசா முறைப்படிக் கேட்டுப் பெற்று; தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தோடு, சாட்சியம் அளிக்க வந்த அரசு வழக்கறி ஞரிடம், அந்தக் கூட்டம் நடைபெற்றது உண்மை தான் என்றும், ஆனால் தான் முன்பு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் கொடுத்த போது, அதனை அவர் மறந்து விட்டதாகவும், நீதிமன்றத்தில் இராசா கேள்வி மூலமாகக் கேட்டு அரசு வழக்கறிஞரிடம் உண்மையைப் பெற்றுள்ளார். இதிலிருந்து மத்திய அரசின் வழக்கறிஞர் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் தெரிவித்தது உண்மைக்கு மாறான தகவல் என்றும், அந்தத் தகவலைத்தான் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளது என்றும் தெளிவாகியுள்ளது. இதிலிருந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒன்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி :- அ.தி.மு.க. வில், நாடாளுமன்ற வேட்பாளராக ஜெயலலிதாவுக்காக 255 பேர் தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டி வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பது எதைக் காட்டுகின்றது?

பதில் :- அந்தக் கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் நன்றாக வளம் பெற்றிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. அந்தக் கட்சியிலே உள்ள அமைச்சர்கள் முதலமைச்சரைப் பாராட்டி சாலையோரங்களில், நடைபாதைகளில் வைக் கின்ற """"கட்-அவுட்""கள், """"ப்ளக்ஸ் போர்டு""கள், நாளேடுகளில் முதலமைச்சரைப் புகழ்ந்து கொடுக்கின்ற விளம்பரங்கள் போன்றவற்றை வருமான வரித் துறை கணக்கெடுத்தால் எந்த அளவிற்கு அவர்கள் எல்லாம் வளம் பெற்றிருக் கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை... கடுப்பேத்தாதீங்க ராசா.
அந்தாள்... சக்கர நாற்காலியில், இருப்பதே... நமக்குப் பெருமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இருந்தாலும் கலைஞரின் தமிழுக்கும் அவருடைய நக்கல் கலந்த பதில்களுக்கும் நான் அடிமை முதலாவது கேள்வியை பாருங்க எப்பிடி ஒரு நக்கலான நகைச்சுவையான பதில்

மற்றது இப்பொழுது யாழ் களத்திற்கு அதிகமாக வருபவர்கள் இந்தியாவில் இருந்து என்று புள்ளிவிபரங்கள் கூறுவதால் தமிழக அரசியலை சேர்ந்த அனைத்து விடையங்களையும் கொண்டு வரவேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதிக்கு... யாழ்களமும், யாழ்ப்பாணமும், ஏன்... வன்னியும், கிழக்கு மாகாணமும் அடிமையாக... இருந்தது.
எப்போ... தனக்கு ஈழப் போரை தடுத்து நிற்பாட்ட வேண்டிய தகுதி இருந்தும்...
அதனைத் தடுத்து நிறுத்தத் தெரியாமல், தடுமாறி... மூன்று மணித்தியால உண்ணாவிரதத்தில்... உண்மை முகம் தெரிந்தது.
கள்வன்... ஒரு முறை திருடினால்... திருடன் பட்டம் வாழ்நாள் முழுக்கப் பொருந்தும்.
அதில்... கருணாநிநிதிக்கு விதிவிலக்கு கொடுக்க முடியாது.

கருணாநிதியின் பேச்சாற்றல், எதிராளிக்கு பதில் வழங்காமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு குழப்பும் வித்தை போன்றவை ஆளுமை! ஆனால் அவர் எம் பெயரால் செய்த நாடகம் தான் வரலாற்றில் என்றும் மன்னிக்க மறக்க முடியாதது!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எமக்கெதிரான ஒரு அரசியல் சகுனி பார்லிமெண்டில் எமக்காக குரல் கொடுக்க எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தும் கடிதம் ,தந்தி(அம்மாவும் அதேதான்)என்று காலத்தை ஓட்டி விட்டு பதவி,அதிகாரமற்ற ஓய்வு பொழுதுகளில் வெற்றுஅறிக்கைகள் மூலம் எம்மை மயக்கி கொஞ்சமாவது எமக்கு செய்யலாம் எனநினைக்கும் அம்மாவையும் அதே அறிக்கைகளினால் எம்மை அவருக்கு எதிரியாக்கிவிடுவார் பிறகென்ன தமிழின தலைவரு. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.