Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜெனிவா வந்தால் அது பெரும் சக்தியாக இருக்கும் - இமானுவேல் அடிகளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Father-Emmanuel-seithy-2-150.jpg

மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை ஜெனிவாவில் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதன்பிரகாரம் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி இந்த மக்கள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று தெரிவித்தார். புலம்பெயர் எழுச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இதில் பங்கேற்க லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி உட்பட புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் பிரதிநிதிகள் ஜெனீவாவுக்குச் செல்லவுள்ளனர்.

  

குறிப்பாக இந்தியாவிலுள்ள தமிழர் ஆதரவு அமைப்புகளுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டவர்களுக்கு ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கும் வகையில் ஆங்கில கையேடுகளும் விநியோகிக்கப்படவுள்ளன. அதேவேளை, எழுச்சி மாநாடு நடைபெறும் மண்டபத்தில் இறுதிகட்ட யுத்தத்தில் படைத் தரப்பால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள், வடக்கு மக்களின் ஜனநாயக ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள் உட்பட பல்வேறு கொடூரச் சம்பவங்களை விளக்கும் வகையில் புகைப்படகாட்சிப் பிரிவொன்றும் அமைக்கப்படவுள்ளது.

இதில் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்களை அறிந்து, தமிழருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்று புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதயொருவர் தெரிவித்தார். இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜெனிவா வந்தால் அது பெரும் சக்தியாக இருக்கும் என்று தெரிவித்த இமானுவேல் அடிகளார், இது தொடர்பில் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100052&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவினதும் தமிழர் விரோத தேசமாம் இந்தியாவினதும், ஈழத்தமிழர்மீதான  இனப்படுகொலையை மூடிமறைக்க  அவர்களுடன் ஒத்தூதும் கூத்தமைப்பு புலம்பெயர் தமிழர்களுடன் எப்போதுமே நீதிக்காகக் கைகோர்க்காது. புலம்பெயர் தமிழர்கள் கள்ளத்தோணியேறி கக்கூசு கழுவ மேற்குலக நாடுகளுக்குப் போனவர்கள் என்பதே அவர்களது கருத்து. படிப்பறிவில்லாத அரசியல் தந்திரமல்லாதவர்களையும் இள்ளடிக்கியதான ஒரு கூட்டமே புலம்பெயர் தமிழர்களது அமைப்பு என்பதே கூத்தமைப்பதும் அவர்களது துதிபாடிகளதும் கருத்தாகும்.

 

ஆங்கில மொழித்திறமையும் அப்புக்காத்துச் சேட்டிபிக்கற்ரும் இருந்துவிட்டால் தங்களுக்கு தமிழர்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் புலமை வந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

 

பல்லாயிரம் மாவீரர்களது வீர வரலாற்றை பிரித்து ஏலம்போடும் செயலயே அவர்கள் செய்கிறார்கள்.

 

யாழ்கள மட்டுறுத்தினர்கள் கடந்த சில காலமாக எனது கருத்துக்களை பிரசுரம் செய்வதிலிருந்து மறுதலித்துவருகிறார்கள் என்பதை நான் அறிவேன். மேலும் அவர்கள் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான கருத்துடையவர்களது, விடுதலைக்காகத் தம்மைத் ஆகுதியாக்கியவர்களது வரலாற்றை ஏளனம் செய்யும் சொற்கட்டுகளைப் பதிவோரையும் ஆதரிக்கிறார்கள் எனத் துணிந்து குற்றம் சுமத்துகிறேன். யாழ் நிர்வாகம் தற்போது வழிமாறிப்போகின்றதெனவும் துணிந்துகூறுகிறேன். காலப்போகில் யாழ்களம் கயவர்கள் கைகளுக்குள் முற்றுமுழுதாகப் போய்விடும் என்பதையும் எதிர்வுகூறுகிறேன்.

நல்ல கோரிக்கை . ஒரு சிலர் வந்தாலே போதும்.

கூட்டமைப்பு 2012 ல் வர முயன்ற போது மகிந்தா இனக்கலவரம் வெடிக்கும் என்று மிரட்டி தடுத்தவர். ஆனல் சம்பந்தர் வராவிட்டாலும் சிறிதரன், சுரேஸ் வந்தார்கள். போன முறை ஐவர் அதிகாரபூர்வமற்ற முறையில் பங்கெடுத்தார்கள். 

 

இந்த முறை பங்கெடுப்பதை இப்போது எதிர்வு கூறுவது அவர்களுக்கு பங்கெடுப்பதை கடினமாகும்.  அடிகளார் விடுத்த அழைப்பு சரியானது. ஆனால் கூட்டமைப்பு அதற்கு உடனே பதில் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.