Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வர்: சுஷில் குமார் ஷிண்டே தாக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வர் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்னையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பிரச்னையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்தினர். துணை நிலை கவர்னர் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டார். அப்போது பகர்கஞ்ச் மற்றும் மாளவியநகர் காவல் நிலைய 2 அதிகாரிகளை விடுப்பில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நாள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

 

 

இந்நிலையில், மகராஷ்ட்ரா மாநிலம் ஹிங்கோலியில் பேசிய சுஷில் குமார் ஷிண்டே, ''நான் கேர்வாடியில் போலீசாக பணியாற்றியபோது, எனது திருமணத்திற்கு பின்னர் அங்கு கலவரம் நடந்தை அடுத்து எனது விடுப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது, ஒரு பைத்தியக்கார முதல்வரின்  தர்ணாவால் நான் போலீசாரின் விடுமுறையை ரத்து செய்துள்ளேன்" என்று முதல்வர் கெஜ்ரிவாலின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=23627

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜ.க.வின் வெற்றியை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொண்டு வந்தனர். அவர் ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நின்ற அனுபவம் இல்லாமல் நேராக முதல்–மந்திரி ஆகிவிட்டார். இதனால் ஆட்சி நடத்த தொயாமல் திணறுகிறார்.

மத்தியிலும், டெல்லியிலும் பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது போலீஸ் கட்டுப்பாட்டினை பா.ஜ.க. மாநில அரசுக்கு கொடுக்கவில்லை. டெல்லி இந்தியாவின் இதயம் போன்ற பகுதி. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதில் தவறு கிடையாது. ஆனால் காவல்துறையினர் சரியாக இருக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க., ஐ.ஜே.கே. கட்சிகள் உறுதியாகிவிட்டன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நரேந்திரமோடியை முன்னிறுத்தி பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

பா.ம.க.வுடன் நாளை அதிகார பூர்வ பேச்சுவார்த்தை நடக்கிறது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் கூட்டணி உறுதியான ம.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது.

தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர்கள் பா.ஜ.க. அணிக்குள் வருவார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க. அணிக்கு யார்? தலைமை என்பது கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் சமமாக கருதப்படுவார்கள்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்கள் சந்தோஷமாக வாழவும், தமிழர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஈழத்தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் அதை உறுதிபடுத்த தமிழக பா.ஜ.க. மத்திய அரசை வலியுறுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/2014/01/22172557/PonRadhakrishnan-says-Kejriwal.html

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் ஆட்சி செய்ய முடிவில்லையானால், பதவி விலகுங்கள்: கெஜ்ரிவாலுக்கு ப. சிதம்பரம் அறிவுரை

 

 

ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு மிகக்குறுகிய காலத்தில் டெல்லி அரியணையில் அமர்ந்துள்ள கட்சி ஆம் ஆத்மி கட்சி. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற வேகத்தில் செயல்படும் அக்கட்சியின் நடவடிக்கைகள் அராஜகமாக மாறியிருக்கிறது என்று விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. 

டெல்லியில் சரியாக செயல்படாத போலீஸ் அதிகாரிகளை மாற்றவேண்டும் என்று மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாருக்கு எதிராக திடீரென 30 மணி நேர போராட்டத்தில் கெஜ்ரிவால் இறங்கினார். டெல்லியின் மத்தியப்பகுதியில் நடந்த இப்போராட்டத்தால் வாகனப்போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள நிதிமந்திரி ப. சிதம்பரம் கெஜ்ரிவால் குறித்து கூறியதாவது:-

டெல்லி அரசில் இருக்கிறபோது, நீங்கள் ஆட்சி செலுத்தவேண்டும். உங்களால் ஆட்சி செலுத்தமுடியவில்லை என்றால், உடனே பதவியை விட்டு விலகுங்கள். தெருப்போராட்டத்தால் உங்களது ஆளும் திறமையின்மையை மறைக்க முடியாது. கடந்த சில நாட்களில் கெஜ்ரிவால் அராஜகத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

http://www.maalaimalar.com/2014/01/23031445/If-you-cant-govern-just-quit-P.html

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை அதிகாரம் ஒரு முதல்வருக்கு இல்லாவிட்டால் சட்ட ஒழுங்கை எவ்வாறு செம்மைப்படுத்த முடியும்?? நடைபெறும் குற்றங்களுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாதல்லவா??

ஆனாலும் இவர் ரொம்பத்தான் சத்தம் போடுறார்.. பக்கத்தில் முதல்வர் விக்கி ஒரு அதிகாரமுமே இல்லாமல் எப்படி காலத்தை ஓட்டுறார் என்பதை அரவிந்து அறியவேணும்.. :lol:

சிதம்பரம் கெஜிரிவாலுக்கு ஆடசி நடத்த தெரியவில்லை என்று நினைத்தால்  காங்கிரசின் உறுபினர்கள் ஒரு நம்பிக்கை இல்லா பிரேரணையைக்கொண்டுவரலாமே. ஆம் அதாமி கட்சியை தி.மு.காவை மிரட்டி வைத்திருந்தது மாதிரியே செய்கிறார்கள். தி.மு.கவின் நிலையைத்தான் இந்த பதவி ஆசையால் அலைந்த கெஜ்ரிவால் சந்திக்க போகிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.