Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் காலில் விழுகிறதா சிறிலங்கா? – வொசிங்டனுக்கு லலித் வீரதுங்க திடீர் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lalith-weerathunge.jpg

வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க திடீரென அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக லலித் வீரதுங்க ஜெனிவா சென்றிருந்தார். 

நேற்று அவர் அங்குள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார். 

இந்தநிலையில், அவர் திடீரென வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வொசிங்டனில் அவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், காங்கிரஸ் மற்றும் செனெட் உறுப்பினர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜெனிவாவில் அடுத்த தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் லலித் வீரதுங்க வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இதற்கிடையே, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் நேற்று திடீரென யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுடன் சுமார் 3 மணிநேரம் வரை பேச்சு நடத்தியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140123109831

 

இவர்கள் யாரும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்ற முடியாது. இந்தியாவின் ஊத்தை காங்கிரஸ் இன்னமும் பதவில் இருப்பத்தால் திரும்பவும் காலை வாரலாம். ஆட்சி அமைக்கத்தேவையாயின் தேர்தலுக்கு பிறகு கருணாநிதியும் காங்கிரசில் இணையும் சந்தர்ப்பங்கள் இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாரும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்ற முடியாது. இந்தியாவின் ஊத்தை காங்கிரஸ் இன்னமும் பதவில் இருப்பத்தால் திரும்பவும் காலை வாரலாம். ஆட்சி அமைக்கத்தேவையாயின் தேர்தலுக்கு பிறகு கருணாநிதியும் காங்கிரசில் இணையும் சந்தர்ப்பங்கள் இருக்கு.

கலைஞர் வால் இம்முறை ஒத்தை இலக்கத்தில் தான் (1 - 9) பெறுவார் போல படுகிறது.

போன தடவை தகிடு தத்தம் பண்ணி வென்ற சிதம்பரம் மண் கவ்வுவார்.

Edited by Nathamuni

உள்ளுக்குள் போனாலும் பரவாயில்லை எவர் காலிலும் விழ சிங்களவன் தயாரில்லை போல கிடக்கு .

இன்று கோத்தா மட்டகிளப்பில் அமெரிக்காவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுக்குள் போனாலும் பரவாயில்லை எவர் காலிலும் விழ சிங்களவன் தயாரில்லை போல கிடக்கு .

இன்று கோத்தா மட்டகிளப்பில் அமெரிக்காவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார் .

கெடுகுடி சொற் கேளாது.

உள்ளுக்குள் போனாலும் பரவாயில்லை எவர் காலிலும் விழ சிங்களவன் தயாரில்லை போல கிடக்கு .

இன்று கோத்தா மட்டகிளப்பில் அமெரிக்காவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார் .

 

சீனா கணனிகளை முடக்கினால் காலில் விழுந்துதான் ஆக வேண்டும். 

 

(இவர்கள் அமெரிக்காவை எப்படி நடத்துவார்கள், பாகிஸ்த்தான், சீனா, ஈரானை எப்படி நடத்துவார்கள் என்பதை அறிந்துதான் புலிகளின் தலைமை இவர்கள் வருவதை தடுக்காமல் விட்டது. அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல ரொபேட் பிளேக் நடந்து கொண்டார். தமிழருக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமாயின் நாம் கோத்தா மட்டக்களப்பில் பேசிய பேச்சுக்கு கோத்தாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். கோத்தாவின் அந்த பேச்சை கவனித்தவர்கள் யாரும் இனிமேல் இதில் புலிகள் தவறு விட்டார்கள் என்று கூற் முடியாது)

அமெரிக்காவுக்கு கோட்டாபய கடும் கண்டனம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜனவரி, 2014 - 18:44 ஜிஎம்டி
Facebook
Twitter
Google+
பகிர்க
நண்பருக்கு அனுப்ப
பக்கத்தை அச்சிடுக
மட்டக்களப்பில் கோட்டாபய ராஜபக்ஷ
மட்டக்களப்பில் கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
மட்டகளப்புக்கான ஒரு நாள் பயணமாக வியாழனன்று வந்த கோட்டாபய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம் என்று கூறிய அவர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட அமெரிக்க அதிகாரிகளை கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டார்.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம், "உங்களின் கருத்துக்களை எங்களிடம் திணிக்க வேண்டாம்", என்று தாம் கூறியதாக தெரிவித்த கோட்டாபய, நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதியுடைய தலைவர்கள் இலங்கையிலேயே பலர் இருக்கிறார்கள் என்று தான் தெளிவாக அவரிடம் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
"அமெரிக்க தூதரால் இலங்கை பிரச்சனையை தீர்க்கமுடியுமா?"
"இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரால் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியுமா?", என்று வினா எழுப்பிய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய, அவர் தற்போது எல்லா இடமும் செல்வதாகவும், சிலர் அவருக்கு பின்னால் செல்வதாகவும் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ கூட்டத்தின் ஒரு பகுதி
கோட்டாபய ராஜபக்ஷ கூட்டத்தின் ஒரு பகுதி
"அவரிடம் சிலர் சில விடயங்களை சொல்கிறார்கள். நான் அவரிடம் எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது உங்கள் வேலை அல்ல என கூறியுள்ளேன். ராஜதந்திரிகள் ராஜதந்திர வேலைகளை மட்டும் பார்க்காமல் வேறு வேலைகள் பார்க்கிறார்கள்", என்று கூறினார் கோட்டாபய ராஜபக்ஷ.
இந்த பயணத்தின்போது மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்ற கோட்டாபய ராஜபக்‌ஷ, மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அவரது கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாக ஆயர் பொன்னையா ஜோசப் கூறுகினறார்.
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குதல், வழக்கு விசாரனைகளை துரிதப்படுத்துதல் அல்லது புனர்வாழ்வு வழங்குதல் போன்ற விடயங்களை அவரிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் இது தொடர்பில் சாதகமான முறையில் அவரது பதில் அமைந்திருந்தது என்றும் ஆயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஐநாவின் மனித உரிமை ஆணையர் நவிபிள்ளையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெனீவாவில் சந்தித்து இலங்கையின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசு தரப்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்

 

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/01/140123_gotabayarajabaksha.shtml

உள்ளுக்குள் போனாலும் பரவாயில்லை எவர் காலிலும் விழ சிங்களவன் தயாரில்லை போல கிடக்கு .

இன்று கோத்தா மட்டகிளப்பில் அமெரிக்காவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார் .

அண்ணா,

இதன் ஆங்கில செய்தியாக்கம் இருக்கிறதா?

மற்றும் சிறி லங்கா அமெரிக்காவை தடவி கொண்டே நுள்ளுவதற்கு என்ன காரணம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.