Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜீவ் இராஜீவ் இராஜீவ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!

வழிப்போக்கன்

rajiv+gandhi.jpg

அன்புள்ள ராஜீவ் காந்தி அவர்களுக்கு,

நிச்சயம் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கடிதம் எழுதியாக வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. இன்று மீண்டும் உங்களது கொலை வழக்கைப் பற்றிய விவாதங்களும் அநியாயமாய் தண்டனைப் பெறப்பெற்ற அப்பாவிகளின் விடுதலையைக் குறித்த குரல்களும் எழத் துவங்கி உள்ளன. இந்நிலையில் என் மனதில் இருக்கும் எண்ணங்களையும் கேள்விகளையும் உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே தோணுகின்றது.

உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தும் இன்றைக்கு உங்களின் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற எண்ணம் இந்திய மக்களின் இடையே வெகுவாக பரப்பப்பட்டு உள்ளது. ஈழத்தில் நீங்கள் தமிழர்களைக் கொன்றீர்கள் அதனால் பழிக்கு பழியாக உங்களை விடுதலைப் புலிகள் கொன்று விட்டனர் என்றே மக்கள் நம்ப வைக்கப்பட்டு உள்ளனர். "பழிக்கு பழி...இரத்தத்திற்கு இரத்தம்" என்ற வகையிலான திரைப்படங்களை மட்டுமே கண்டு வளர்ந்த ஒரு சமூகத்திடம் அக்கருத்து விரைவாக சென்று அடைந்ததில் நமக்கு வியப்பு ஒன்றும் இல்லை தான்.

இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்...!!!

யாரால்?

விடுதலைப்புலிகளால்...!!!

ஏன்?

ஈழத்தில் அவர் தமிழர்களைக் கொன்றார் அதனால்...!!!

ஆ...சரிதான்...அப்படித்தான் இருக்க வேண்டும்...!!!

என்றவாறே தான் இன்றைய மக்களுள் கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. பிழை அவர்களின் மேல் இல்லை...காரணம் அவர்களை அந்த அளவு அரசியல் தெளிவோடு தான் இன்றைய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வைத்து இருக்கின்றன. நாட்டின் நிலைமை அவ்வாறு தான் இருக்கின்றது.

ஆனால் நிச்சயம் உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்...ஒரு விடுதலைப் போராட்டத்தில் பழி வாங்கும் எண்ணம் சிறிதும் உதவாது என்பதனை. விடுதலையை நோக்கிப் போராடும் ஒவ்வொரு போராளியின் இலக்கும் விடுதலையாகவே இருக்குமே அன்றி, தனி மனித விருப்பங்களோ அல்லது வெறுப்புகளோ முக்கியமாக இருக்காது. ஆயிரம் இழப்புகளைச் சந்தித்தாலும் இலக்கு விடுதலையாகவே இருக்கும். அதற்கு பங்கம் விளைவிக்கும் யாதொரு செயலையும் எந்த ஒரு விடுதலைப் போராளியும் எப்பொழுதும் செய்ய மாட்டான். இதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள்...விடுதலைப் புலிகளும் அறிந்து தான் இருப்பர்.

அந்நிலையில் அவர்கள் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உங்களைக் கொன்றால், அண்டை நாடான இந்தியாவின் ஆதரவினை நிரந்திரமாக இழக்க வேண்டி வரும் என்பதையும்...தாய் தமிழகத்தின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்பதையும் அறிந்தே தான் இருப்பர். அதனை விட பெரிய இழப்பு அவர்களுக்கு நிச்சயம் கிடையாது. உங்களின் மரணத்தினால் புலிகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக கிட்டி இருக்கும்...மேலும் அவர்களின் விடுதலை போராட்டமும் ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கும்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நிச்சயம் அவர்கள் உங்களைக் கொலை செய்ய எந்த ஒரு காரணமும் இல்லை என்றே தோணுகின்றது. காரணம் அதில் அவர்களுக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லை.

இங்கே ஒரு புத்தகம் எனக்கு நியாபகம் வருகின்றது 'தி கவுன்ட்ஆப் மோன்டே கிறிஸ்டோ' என்றொரு புத்தகம் அது. அதில் ஒரு அப்பாவி இளைஞன் எந்த ஒரு தவறுமே செய்யாது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பான். ஏன் தான் சிறையில் இருக்கின்றோம் என்றே அவன் குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு பெரியவர் "ஏன் காரணமே அறியாது துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்று எண்ணுகின்றாயா...உன்னுடைய துன்பத்தினால் யார் யார் எல்லாம் இன்பமும் பலனும் அடைந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பார்...அப்பொழுது உன்னுடைய துன்பத்திற்கான காரணத்தை நீ கண்டு அறிவாய்" என்றே கூறிச் செல்வார்.

அதையேதான் நாமும் இங்கே முயன்றுப் பார்க்க வேண்டி இருக்கின்றது. உங்களின் மரணத்தினால் நிச்சயம் விடுதலைப்புலிகளுக்கு யாதொரு நன்மையையும் இல்லாத நிலையில்...உங்களின் மரணத்தினால் யாரெல்லாம் ஆதாயம் அடைந்து இருப்பார்கள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் உங்களின் வாழ்க்கையை சற்று திரும்பித் தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

பிறப்பும் இறப்பும் நமது கைகளில் இல்லை. நீங்கள் பிறக்கும் பொழுதே நூறு கோடி மக்களை ஆளும் வாய்ப்பினைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தீர்கள். இருந்தும் ஆட்சியில் உங்களுக்கு ஆர்வம் இருந்ததா என்பது தெரியவில்லை. காரணம் உங்களின் அண்ணன் சஞ்சய் காந்தி அப்பொறுப்புகளில் ஆர்வம் கொண்டு இருந்தமையால் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து இருக்க சாத்தியக் கூறுகள் அதிகமாகத் தான் இருக்கின்றது.

ஒருவேளை உங்களது அண்ணனும் மர்மமாக இறக்காமல் உங்களது தாயும் கொலை செய்யப்படாமல் இருந்து இருந்தால் நீங்கள் அரசியலுக்கு வராமலே போயிருந்து இருக்கலாம். எனக்கும் இந்த கடிதத்தை எழுத வேண்டிய தேவை இல்லாது போயிருக்கும். ஆனால் அவை அனைத்தும் நிகழ்ந்து விட்டன. எனவே நாமும் அவற்றைக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

நீங்கள் ஒரு அரசியல்வாதி அல்ல ராஜீவ் அவர்களே...அண்ணன் எப்பொழுது செல்வான் திண்ணை எப்பொழுது காலி ஆகும் என்று அரசியலையே கண்ணாக வைத்து கொண்டு இருந்தவராக எனக்குத் தெரியவில்லை...உங்களின் அண்ணனின் மறைவிற்குப் பின்னர் தான் நீங்கள் களம் இறக்கப்படுகின்றீர்கள். சந்தர்ப்பம் உங்களை அரசியலுக்கு இழுத்து வருகின்றது.

அப்பொழுது கூட நீங்கள் பிரதமராக ஆவீர்கள் என்று எண்ணினீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை...காரணம் நாட்டினை ஆண்டுக் கொண்டு இருக்கும் நமது அம்மா மரணம் அடைவார்கள் என்று எந்த பிள்ளையுமே எண்ணி இருக்க மாட்டான் தான். ஆனால் உங்களின் தாயார் கொலை செய்யப்பட நாட்டின் தலைமைப் பொறுப்பு உங்களின் வசம் வருகின்றது. இங்கே தான் சில கேள்விகள் கிளம்புகின்றன...

1) உங்களின் தலைமைப் பொறுப்பை அதாவது நீங்கள் பிரதமர் ஆவதை உங்களின் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்களா?

2) பிரதமராவதற்கு உரிய பக்குவம் உங்களுக்கு இருந்து இருக்குமா?

இவ்விரண்டுக் கேள்விகளுக்குமே விடைகள் இல்லை என்றே வருகின்றது.

நிச்சயமாய் இந்திரா காந்தி அவர்கள் இருந்து இருக்கக் கூடிய கால கட்டம் வரைக்கும் அவரைத் தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதம மந்திரி ஆகி இருக்க முடியாது. அந்நிலையில் அவருக்கு அடுத்து சஞ்சய் காந்தி என்று ஒருவர் வரிசையில் இருந்தாலும் சிலருக்கு பிரச்சனைகள் தான். அந்நிலையில் அவ்விருவரின் மரணத்தையும் சிலர்....உங்கள் கட்சிக்காரர்களே கொண்டாடி இருப்பர். அவர்களுக்கு நிச்சயமாய் நீங்கள் அரசியலுள் நுழைந்தது கசப்பாகத் தான் இருந்து இருக்கும். எப்பொழுது நீங்கள் இறப்பீர்கள் எப்பொழுது அவர்கள் பிரதமர் ஆகலாம் என்றே அவர்களின் சிந்தனை இருக்கும் தானே.

அதன் அடிப்படையில் பார்த்தால் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக பிரதமர் ஆகி இருக்க வேண்டிய திரு. நரசிம்ம ராவ் அவர்கள் உங்களால் அந்த வாய்ப்பினை இழந்து விட்டார். நீங்கள் பிரதமராக ஆக்கப்பட்டு விட்டீர்கள். இனி நீங்கள் இருக்கும் வரை அப்பதவி அவருக்கு கிடையாது.

இந்நிலையில் உங்களின் மரணத்திற்கு பின்னர் திரு.நரசிம்ம ராவ் அவர்களே பிரதமர் ஆகி இருப்பதும், உங்களுடைய மரணத்திற்கான சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் சந்திராசாமியும் நரசிம்ம ராவும் தோழர்கள் என்பதும் இங்கே நாம் சிந்தித்துப் பார்த்தாக வேண்டிய விடயங்களாக இருக்கின்றன.

மேலும் நீங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுதே உங்களை சதியால் அகற்ற நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி, சந்திராசாமி போன்றவர்கள் முயன்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்தே இருந்தீர்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அதாவது நீங்கள் பிரதமர் ஆனதில் உங்கள் கட்சிக்கு உள்ளேயே புகைச்சல் இருந்து இருப்பது புலனாகின்றது. சரி இது இருக்கட்டும்...!!!

உங்களின் தாயார் தீவிர சோவியத் ஆதரவாளர். சோவியத் ஆதரவாளர் என்றால் அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது மறைமுகப் பொருள் தானே. இது நிச்சயமாய் அமெரிக்காவிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விடயமாக இருந்து இருக்காது என்பது தெளிவு.

நூறு கோடி மக்கள் தொகையினைக் கொண்ட நாட்டினை இழக்க நிச்சயம் அமெரிக்கா தயாராக இருக்காது. இந்தியாவின் கொள்கைகள் அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தால் அமெரிக்கா பெறப் போகும் இலாபங்கள் கணக்கில் அடங்காதவை என்பதை அமெரிக்கா அறிந்தே தான் இருக்கும். அதற்குத் தேவை எல்லாம் அதனை நாட்டிற்குள் அனுமதிற்கும் ஒரு தலைவர். அமெரிக்காவின் அடிமையாக இருக்க காத்து இருக்கும் ஒரு தலைவர். ஆனால் அந்த தலைவர் தான் அதற்கு கிட்டவில்லை.இந்திரா காந்தி சோவியத் ஆதரவாளராக இருந்தார்.

இந்நிலையில் வந்தால் நூறு கோடி மக்கள் இருக்கும் ஒரு மாபெரும் சந்தை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளங்களைக் கொண்டுள்ள ஒரு பூமி...அதற்கு வேண்டியது ஒரு தலைவரின் மரணம்...ஒரே ஒரு தலைவரின் மரணம்..என்ற நிலையில்...அமெரிக்கா என்ன செய்து இருக்கும். வரலாற்றில் அது என்ன செய்து இருக்கின்றதோ அதையே தான் செய்து இருக்கும். அந்த தலைவரைக் கொலை செய்ய முயற்சி செய்து இருக்கும். இந்திரா காந்தியின் மரணத்திலும் சந்திராசாமியின் பெயர் அடிபடுவதுடன் அவரின் மரணத்திலும் மர்மம் நிலவுதும் அமெரிக்காவின் தலை ஈட்டினை நிச்சயமாய் உறுதி செய்கின்றன.

Manmohan+Singh+President+Obama+Visits+In

இந்திரா காந்தியின் மரணத்துடன் சந்திராசாமியின் தோழரான நரசிம்ம ராவ் பிரதமராகி இருந்தால் அன்றே அமெரிக்கா இந்தியாவினுள் நுழைந்து இருக்கும். ஆனால் எதிர்பாராவிதமாய் நீங்கள் உள்ளே புகுந்து இருக்கின்றீர்கள். யாரும் இதனை எதிர் பார்த்து இருக்க முடியாது. அமெரிக்காவும் தான். கூடுதலாக நீங்களும் சோவியத் ஆதரவாளர். அமெரிக்காவின் நிச்சயமாய் தீர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்களின் பெயரைச் சேர்க்க அந்த ஒரு காரணம் போதாதா.

போதாகுறைக்கு வளைகுடா போரில் நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக பேசியதும்...'என்றுமே இந்தியா அமெரிக்காவிற்கு வால் பிடிக்காது...நாங்கள் முன்னேற்றத்திற்காக ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளை நாடுவோம்...' என்று அமெரிக்காவை எதிர்த்ததும் நிச்சயமாய் அமெரிக்காவிற்கு இனித்து இருக்காது.

இந்நிலையில் உங்களை நீக்கவே அமெரிக்கா முயன்று இருக்கும். உங்களை நீக்கி விட்டு அதன் கொள்கைகளுக்கு கதவினை திறந்து விடும் ஒரு அடிமைத் தலைவனைத் தான் அமெரிக்கா இந்தியாவின் பிரதமராக அமைக்கப் பார்க்கும்.

இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால்...

அமெரிக்காவினை எதிர்த்த தலைவரான உங்களின் மரணத்திற்கு பின்னர், உங்களின் மரணத்தைக் காரணமாக வைத்தே ஆட்சியில் அமர்ந்த உங்களது கட்சியானது செய்த முதல் வேலை உங்களின் கொலைக்கான வழக்கை முடக்க முயன்றதும்...அமெரிக்காவினை இந்தியாவினுள்...'தாராளமயமாக்கம்...தனியார்மயமாக்கம்...உலகமயமாக்கம்...' என்ற கொள்கையின் வாயிலாக அனுமதித்ததுமே ஆகும்.

இதனை இன்று வரை எந்த ஒரு ஊடகமுமே கேள்விக்கு உட்படுத்தாமல் இருப்பது நிச்சயமாய் ஆச்சரியப்படத் தான் வைக்கின்றது.

கடிதம் தொடரும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில

- ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி

- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

- http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/

- http://realkillersofrajiv.blogspot.in/

- http://www.outlookindia.com/article.aspx?205868

- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2014/02/1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!

வழிப்போக்கன்

அமெரிக்காவினை நீங்கள் எதிர்த்து இருக்கின்றீர்கள். அதே நேரம் உங்களின் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்கு உங்களது கட்சியினாலேயே சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. உங்களது மரணத்தை அடிப்படையாக வைத்து ஆட்சியினைப் பிடித்த உங்களது கட்சியே உங்களது கொள்கையினை காற்றில் பறக்க வைத்து உள்ளது. ஏன் இந்த முரண்பாடு என்று சிந்திக்கவோ அல்லது விவாதிக்கவோ நமது நாட்டினில் ஊடகங்கள் ஏனோ தயாராக இல்லை. அவை ஏன் தயாராக இல்லை என்பதை நாம் முக்கியமாக கண்டாக வேண்டி இருந்தாலும் இப்பொழுது அதனை விட முக்கியமான விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது என்றே எண்ணுகின்றேன். அதுவும் குறிப்பாக நீங்கள் கொலையுண்ட காலப் பின்னணியை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றே எண்ணுகின்றேன்.

அது ஒரு தேர்தல் காலம். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1991 ஆம் ஆண்டு. அந்த தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு நீங்கள் வரும் பொழுது தான் கொல்லப்பட்டு இருக்கின்றீர்கள். இங்கே என்னுள் எழும் கேள்வி என்னவென்றால் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கப் பெரும் பாராளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டில் தான் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் இரு வருடங்களிலேயே பாராளுமன்றத் தேர்தல் மீண்டும் வந்து இருக்கின்றது. அதுவும் அந்த இருவருடங்களில் இரண்டு பிரதமர்களை நமது நாடு சந்தித்து இருக்கின்றது.

சுருக்கமாக சொல்வதென்றால் நமது நாடு அந்த ஆண்டுகளில் ஏதோ மறைமுகப் பிரச்சனைகளைக் கண்டு வந்துக் கொண்டு இருந்து இருக்கின்றது என்றே என்னால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. நிச்சயம் அதனை நீங்களும் அறிந்து இருப்பீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

1989 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற வி.பி.சிங் அவர்களை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஈழத்தில் நீங்கள் அனுப்பிய அமைதிக் காக்கும் படையினை திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு உன்னதமான மனிதர். இன்று வரை தமிழர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் ஒரு பிரதமர் என்றால் அது திரு.வி.பி.சிங் அவர்கள் தான் என்பதனை தமிழகம் நீங்கள் வந்து இருந்தால் நிச்சயம் அறிந்து இருப்பீர்.

ஆனால் வி.பி.சிங் அவர்கள் அமைதிப் படையினை திரும்பப் பெற்றதோடு மட்டும் நிற்க வில்லை...நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இட ஒதுக்கீடுக்கான மண்டல் கமிசனின் பரிந்துரைகளை சட்டமாக்கியவரும் அவரே. "ஆட்சிப் போனாலும் கவலை இல்லை...மக்களுக்கு உரிய இந்த இட ஒதுக்கீட்டினை நான் சட்டமாக்கியே தீருவேன்" என்று கூறி பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டினை பெற்றுத் தந்த ஒரு மாபெரும் தலைவர் அவர்.

இட ஒதுக்கீட்டை அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக அவர் பதவி விலக வேண்டி இருந்தது என்பதையும், அவருக்கு பின்னர் சந்திரசேகரன் என்பவர் பதவி ஏற்றார் என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்.

இந்த சந்திரசேகரன் என்பவர் தான் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியாவில் எரிவாயு நிரப்ப அனுமதி தந்தவர் என்பதையும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் வன்மையாக கண்டித்தீர்கள் என்பதையும் வரலாற்றை சற்று கவனித்து இருப்பவர்கள் நிச்சயம் அறிந்துத் தான் இருப்பர். மேலும் இவரும் ஒரு வருடத்திற்கு மேலாக ஆட்சியில் இல்லாமல் ஆட்சி கவிழ மீண்டுமொரு பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்தியா தயாரானது என்பதையும் நீங்கள் அறிவீர். இதனால் தான் 1991 ஆம் ஆண்டில் நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக வேண்டி இருந்தது.

இங்கே பலரும் 1991 ஆம் ஆண்டை மட்டுமே கண்டுக் கொண்டு இருக்கும் பொழுது ஏனோ தெரியவில்லை எனது கவனம் 1989 ஆம் ஆண்டில் திரு.வி.பி.சிங் அவர்களால் கொண்டு வரவேற்றப்பட்ட இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மீதே செல்லுகின்றது. காரணம் மீண்டும் தேர்தல் வருவதற்கு அடிப்படைக் காரணியாகவே அச்சட்டம் விளங்குகின்றது.

அச்சட்டத்தின் வாயிலாக அனைத்து அரசு பணிகளிலும் அனைத்து வகையான மக்களுக்கும் உரிய உரிமைகள் கிட்டப்பெறும். ஆனால் அதே சமயம் இந்தியாவில் பிராமணர்களும் உயர் சாதியினரும் கொண்டு இருந்த ஆதிக்கம் படிப்படியாக குறைந்து இருக்கும். இதனை நிச்சயம் அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள். ஆண்டாண்டுக் காலமாக அநியாயமாக அனுபவித்து வந்த சுகங்களை அவர்கள் இழக்க எவ்வாறு விரும்புவார்கள்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் பெரும்பான்மையானோர் பிராமணர்கள்.

பா.ஜ.க வைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

பொதுஉடைமை கட்சி என்றுக் கூறிக் கொள்ளும் கட்சியின் தலைமையிலும் பிராமணர்களும் மலையாளிகளுமே நிறைந்து உள்ளனர்.

இவ்வாறு இந்திய அரசியலில் முக்கியமான இடங்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு இருக்கும் பிராமணர்களும் உயர் சாதியினரும் எவ்வாறு அவர்களது ஆதிக்கத்திற்கு எதிராக வரும் சட்டத்தை ஏற்றுக் கொள்வர். மாட்டார்கள் தானே. எதிர்க்கத் தானே செய்வார்கள். அவர்களின் எதிர்ப்பினால் தானே திரு.வி.பி.சிங் அவர்கள் பதவி விலக வேண்டி இருந்தது. இதனை நீங்களும் தானே அறிவீர்கள்.

இந்த நிலைமையிலேயே தான் நாம் உங்களின் மரணத்திற்கு பின்னர் உங்களது கட்சி கொண்டு வந்த 'தனியார் மயக் கொள்கையினைப்' பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

வி.பி.சிங் சட்டத்தினைக் கொண்டு வந்து விட்டார். இனி அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கும் இருக்கும். படிப்படியாக பிராமணர்கள் மற்றும் இதர உயர் சாதியினரின் செல்வாக்கு குறையும். அதாவது அரசு வேலைகள் என்ற ஒன்று இருந்தால் பிராமணர்களின் செல்வாக்கு குறையும். அரசு வேலைகள் என்று ஒன்று இல்லாது போனால் இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போகும். இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாது போனால் பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினரின் செல்வாக்கு குறையாது. இதில் உள்ள உண்மையை நீங்கள் அறிவீர்கள் தானே...!!!

இதனை அடிப்படையாகக் கொண்டுப் பார்த்தால் 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசு அதனுடைய பணிகளை பெரும்பாலும் தனியார் வசம் விட்டு இருப்பதன் காரணத்தை நாம் அறிய முடிகின்றது தானே.

'பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாவதும்...அச்சட்டத்தை காரணமாகக் கொண்டு ஒரு அரசைக் கலைத்து அதற்குப் பின்னர் தனியார் மயமாக்கும் வேலையை ஆரம்பிப்பதும்' நிச்சயம் தொடர்புடையவைகளே என்பதனை நீங்கள் இங்கே இருந்து இருந்தால் நிச்சயம் அறிந்தே இருப்பீர்கள்.

இதோ இன்று நமது நாட்டினைப் பாருங்கள்...பெரும்பாலும் அனைத்தும் தனியார் மயமாக்கப் பட்டுக் கொண்டே வந்துக் கொண்டு இருக்கின்றது. அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேல் இடங்களில் பிராமணர்களும் உயர் சாதியினருமே நிறைந்து இருக்கின்றனர்.

Caste-1.jpg

இதோ 2010 இல் எடுத்த ஒரு ஆய்வு...தலைசிறந்த தனியார் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகிப்பவர்களில் 93% சதவீதம் பேர் உயர் சாதியினரே என்பதனை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது (இவர்கள் இந்திய சனத்தொகையில் வெறும் 10% அவ்வளவே).

இதன் மூலமாக உங்களின் மரணத்தில் ஆதாயம் அடைந்து இருப்பது வெறும் அமெரிக்க நாட்டவர்கள் மட்டும் அல்ல இங்கே இருக்கும் உயர் சாதியினரும் பிராமணர்களும் தான் என்பது உங்களுக்கு புலனாகும் என்றே நம்புகின்றேன். இந்தக் கூற்றுக்கு சான்றாக உங்களின் மரணத்திற்கு வழிவகுத்த ஒருவராக அறியப்படும் சுப்பிரமணிய சாமி ஒரு பிராமணராக இருப்பதை எடுத்துக் கொள்ளலாம் தானே.

சுப்பிரமணிய சுவாமியை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். நீங்கள் இறந்து விட்ட செய்தியை அவ்விடத்தில் உள்ளவர்களே அறியாத நிலையிலேயே எங்கோ இருந்துக் கொண்டு இராஜீவ் காந்தி இறந்து விட்டார்...விடுதலைப் புலிகள் அவரைக் கொன்று விட்டார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த ஒருவர் அவர். நிச்சயம் அவரை நீங்கள் அறிந்து இருப்பீர். இல்லை அறியவில்லை என்றாலும் அறிந்துக் கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் காரணம் உங்களின் மரணத்தில் சுப்பிரமணிய சாமியை விசாரிக்க விசாரணை கமிசன் பரிந்துரைத்தும் இன்னும் விசாரிக்கப்படாமலே நாட்டினுள் உலா வந்து கொண்டு இருக்கும் ஒரு மாபெரும் தலைவர் அவர்.

மேலும் நீங்கள் மரணித்த ஒரு மாதத்திற்குப் பின்னர் காஞ்சிபுரத்தில் பிரம்மஹத்தி தோஷ யாகம் நடத்தியவர் அவர். பிரம்மஹத்தி தோஷ யாகம் என்றால் என்னவென்று சாமானியனான எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஒரு பிராமணனைக் கொன்றால் அதை விட பெரிய பாவம் இல்லை என்றும் அப்பாவத்தை தீர்க்க யாகம் செய்ய வேண்டும் என்றும் அதுவே பிரம்மஹத்தி யாகம் என்பதும் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஏன் என்றால் நீங்களும் ஒரு பிராமணர் தானே. உங்கள் ஆட்கள் தானே இந்த கதைகளை எல்லாம் நாட்டினுள் கட்டி வைத்து இருக்கின்றனர். ;ஆகையால் நிச்சயம் உங்களுக்கு அந்த யாகத்தைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

பண்டிட் ஜவர்ஹலால் நேரு...உங்களின் தாத்தாவின் பெயர். இதில் பண்டிட் எனப்படுவது அவர் படித்து வாங்கியப் பட்டம் இல்லை...அது காஷ்மீரத்து பிராமணர் என்பதைக் குறிக்கும் சொல். அதாவது நீங்கள் காஷ்மீரத்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நீங்கள் ஒரு பிராமணர். நீங்கள் மரணித்து இருக்கின்றீர். இல்லை கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர். அக்கொலையினில் சந்தேகத்துக்கு உரிய ஒருவர் பிராமணரை கொன்றால் செய்ய வேண்டிய யாகத்தை செய்கின்றார். அதுவும் நீங்கள் இறந்த ஒரு மாத காலத்திற்குள். இந்நிலையில் அவர் யாரைக் கொலை செய்தார்...எந்த பிராமணனைக் கொலை செய்தார்...என்ற கேள்விகள் சாதாரண மனிதனின் மனதிலேயே எழக்கூடும் தான் அல்லவா....ஆனால் ஏன் இந்தக் கேள்விகள் விசாரணை அதிகாரிகளின் மனதிலும் ஊடகங்களின் மனதிலும் எழவே இல்லை?

ஏன் சுப்பிரமணிய சாமி விசாரிக்கப்படவே இல்லை?

அவர் பிராமணர் என்பதாலா? இல்லை ஊடகங்கள் அனைத்தும் பிராமணர்களின் கையிலேயே இருக்கின்றன என்பதாலா...அல்லது இந்திய அரசியல் இன்றும் பிராமணர்களின் கைகளிலேயே தான் மறைமுகமாக இருக்கின்றது என்றக் காரணத்தினாலா?

இடஒதுக்கீடு வந்து இருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி கலைக்கப்படுகின்றது. பின்னர் உங்களை கொலை செய்வதன் வாயிலாக அமெரிக்கா உள்ளே அழைத்து வரப்படுகின்றது...தனியார்மயம் அமெரிக்காவின் துணையுடன் ஊட்டி வளர்க்கப்படுகின்றது...அரசு இயந்திரம் பழுதடைய செய்யப்படுகின்றது.

இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. நிச்சயம் உங்களுக்கும் அவ்வாறே தோன்ற வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்...இல்லையெனில் உங்களின் மரணத்தை காரணமாக வைத்து ஆட்சியைப் பிடித்த உங்களின் கட்சியே உங்களின் மரணத்தைக் குறித்து உண்மையான அக்கறைக் காட்டாமலும் அதனைக் குறித்த விசாரணையை மழுங்கடிக்கச் செய்ததும் உங்களின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டதும் ஏன் என்ற கேள்விகளுக்கு உங்களால் விடை அளிக்க முடியுமா ஐயா?

மேலும் தங்களுக்கு சாதகம் என்றால் எதையும் பிராமணர்கள் செய்வர் என்பது நாம் அறிந்த ஒன்று தானே...ஆங்கிலேயன் இங்கே முதலில் வந்த பொழுது அவனுக்கு வால் பிடித்தது யார்? அவர்கள் தானே. காரணம் அவர்களும் அன்னியர்கள் தானே. சரி இருக்கட்டும் வரலாறு பெரியது. உங்களுக்கு அவ்வளவு பெரிய வரலாறு தெரிந்து இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே...இருந்தும் அவற்றை நாம் பார்க்க வேண்டிய நேரத்தில் பார்க்க முயலலாம்.

இப்பொழுது உங்களின் மரணத்தினால் ஆதாயம் அடைந்தவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இந்தியாவில் வாழும் பிராமணர்களும் உயர் சாதியினருமே ஆவர் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். இதனை குறித்து எந்த ஒரு ஊடகமும் பேசாது இருப்பதற்கு காரணம் ஊடகங்கள் அனைத்தும் ஒன்று அமெரிக்கா சார்ந்து இருக்கின்றன அல்லது பிராமணர்கள் சார்ந்து இருக்கின்றன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது மேலும் சில விடயங்களைக் குறித்து நான் உங்களிடம் பேச வேண்டி இருக்கின்றது.

உங்களின் மரணத்திற்கு காரணமாக தமிழர்கள் அடையாளப்படுத்தப் பட்டு உள்ளனர். அது உண்மையா...உண்மை இல்லாவிடில் ஏன் தமிழர்கள் குறி வைத்து பழி வாங்கப்பட்டனர் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

கடிதம் தொடரும்....!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில

- ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி

- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

- http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/

- http://realkillersofrajiv.blogspot.in/

- http://www.outlookindia.com/article.aspx?205868

- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2014/02/2.html

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்க்கு ஏற்ற அருமையான பதிவு இன்றும் நமது முன்னால் செத்துபோன ஊடகம் பேருக்கு வெப்பில் இலங்கையரசுக்கு சார்பாக "ராசீவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கியது எப்படி எப்படி எப்படி " என்று குளிருக்குள் நின்று  பிளைற் கழுவுறு காசை கரியாக்கிறார் காலம் மாறிவிட்டுது நன்றி இனைப்பிற்க்கு கிருபன்.

ராஜீவ் படுகொலை.. அதிரும் உண்மைகள்! இதுவரை வெளிவராத தகவல்கள்

 
TV.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. 

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே... தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’ 

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான். 

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார். 

எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி - சூரியகதிர்

http://veerathamilan.blogspot.dk/2011/06/blog-post_22.html?m=1

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 3 - இந்தியா என்றொரு தேசம்!!!

வழிப்போக்கன்

உங்களது மரணத்தில் உண்மையான ஆதாயத்தினை அடைந்தது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் இங்குள்ள பிராமணர்கள் மற்றும் உயர் சாதியினருமே என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இருந்தும் உங்களது மரணத்துக்கான பழி தமிழ் இனத்தின் மீது சுமத்தப்பட்டு இருக்கின்றது. அது ஏன் என்பது உங்களுக்கும் கூட குழப்பமாகத் தான் இருக்கலாம். அக்குழப்பத்திற்கு விடையினைக் காண வேண்டும் என்றால் அதற்கு நாம் இந்தியாவினைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் சிறிது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு கேள்வி

அமெரிக்க கிருத்துவர்கள் இந்தியர்களா?

முட்டாள்தனமான கேள்வியாகத்தானே தெரிகின்றது. உண்மையும் அது தான். அமெரிக்க கிருத்துவர்கள் அமெரிக்கர்கள் ஆவார்களே அன்றி இந்தியர்கள் ஆக மாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் வந்து தங்கினாலும் அவர்கள் இந்தியர்கள் ஆக மாட்டார்கள். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நான் நம்புகின்றேன்.

இதன் அடிப்படையிலேயே நாம் சீரியக் கிருத்துவர்களைக் காண வேண்டி இருக்கின்றது. கி.பி நான்காம் நூற்றாண்டில் இன்றைய கேரளக் கடற்கரைக்கு வந்து சேர்ந்த சீரிய நாட்டினைச் சார்ந்த சீரியக் கிருத்துவர்கள் இன்று இந்தியர்களாக இருக்கின்றனர். அதுவும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கின்றனர் என்றக் கேள்விக்கு விடைத் தேடத் துவங்குவதில் இன்று இந்தியா சந்தித்துக் கொண்டு இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் விடைகள் கிட்டும் என்பதே எனது எண்ணம்.

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை ராஜீவ் அவர்களே. இதனை நீங்கள் உங்களது தாத்தா எழுதிய கடிதங்கள் மற்றும் நூல்களை படித்து இருந்தீர்கள் என்றாலே சிறிது அறிந்து இருப்பீர்கள். பல்வேறு காலங்களில் பல்வேறு இனக்குழுக்கள் இன்று இந்தியா என்று இருக்கும் நிலப்பரப்பின் மீது போர் தொடுத்தோ அல்லது வணிகம் சார்ந்தோ அல்லது பிழைக்க வழி தேடியோ வந்து அங்கேயே குடி கொண்டே தான் இருந்து இருக்கின்றனர்.

அசோகனின் காலத்தில் அவனது ஆட்சிக்கு உட்பட்ட யவன அரசர்களைப் பற்றியக் குறிப்பு இருக்கின்றது. தெற்கே இன்று கேரளம் என்று வழங்கப்பெறும் கடற்கரையோரம் கிரேக்க குடி இருப்புகள், ரோம குடி இருப்புகள், யூத குடி இருப்புகள் மற்றும் அவர்கள் ஆட்சி புரிய வழங்கப்பட்ட இடங்கள் என்று பல்வேறு இடங்கள் இருந்ததை வரலாற்றில் நாம் அறியத் தான் முடிகின்றது.

மேலும் சத்திரியர்கள் என்று ஆரியப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்பெறும் பிரிவினைச் சார்ந்தவர்களான ராஜபுத்திரர்கள் என்பவர்களும் இந்தியாவிற்கு வெளியே இருந்து இங்கே வந்த நாடோடி இனத்தினைச் சார்ந்த சகர்கள் மற்றும் சித்தியர்கள் ஆகியோரின் வம்சாவளியினரே என்றே உங்களின் தாத்தா கூறி இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியா என்று இன்று வழங்கப்பெறும் நிலப்பரப்பினில் பல்வேறு இன மக்கள் ஆண்டு இருக்கின்றனர்...குடி ஏறி இருக்கின்றனர்...இங்கேயே நிரந்தரமாக தங்கியும் இருந்து இருக்கின்றனர். கிரேக்கர்கள் இருந்து இருக்கின்றனர்...ஈரானியர் இருந்து இருக்கின்றனர்...ரோமர்கள் இருந்து இருக்கின்றனர்...சீரியர்கள் இருந்து இருக்கின்றனர்...யூதர்கள் இருந்து இருக்கின்றனர்....இன்னும் பல்வேறு மக்கள் இருந்து இருக்கின்றனர். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவர்கள் அனைவரும் இன்று அவர்களாக இங்கே இல்லை. அதாவது...

இந்திய நிலப்பரப்பினில் வந்துத் தங்கிய யூதன் இன்று யூதனாக இல்லை...!!!

இந்திய நிலப்பரப்பினில் வந்து குடியேறிய கிரேக்கன் இன்று கிரேக்கனாக இல்லை..!!!

இந்திய நிலப்பரப்பினில் குடியேறிய சகர்கள் இன்று சகர்களாக இல்லை...!!!

அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற பெயரிலே ஒன்றாக இருக்கின்றனர். அதுவும் நீங்கள் நன்றாக அறிந்த வர்ணாசிரமத்தின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் பெரும்பாலும் உயர் சாதியினராக இருக்கின்றனர். அதே நேரம் இந்திய நிலப்பரப்பின் பூர்வீக குடியினரான பெரும்பான்மையினரான மக்கள் தாழ்த்தப்பட்டு சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றுமே வைக்கப்பட்டு இருக்கின்றனர். வியப்பாக இருக்கின்றது தானே.

இந்த சூழ்நிலையைப் பற்றி நீங்கள் மேலும் விரிவாக அறிந்துக் கொள்ள அமெரிக்காவின் வரலாறு உங்களுக்கு உதவக் கூடும்.

உண்மையில் அமெரிக்கா என்று ஒரு நாடோ அல்லது அமெரிக்கர்கள் என்ற ஒரு இனமோ கிடையாது என்பதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள் என்றே நம்புகின்றேன். அமெரிக்கா என்று இன்று வழங்கப்படும் நிலப்பரப்பினில் வாழ்ந்துக் கொண்டு இருந்த பூர்வீக மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைக் கொன்று ஒடுக்கியப் பின்னர் அங்கு சென்று இடத்தினைப் பிடித்த ஐரோப்பிய மக்களே இன்று அமெரிக்கர்கள் என்று வழங்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் பிடித்த இடமே அமெரிக்கா என்றும் நீங்கள் அறிவீர்கள். இடத்தினைப் பிடித்த அந்நியர்களும் வந்தேறிகளும் அங்கே ஆட்சியினைப் பிடித்துக் கொண்டு இருக்கும் பொழுது மண்ணின் மைந்தர்களான மக்களின் நிலை என்னவென்று யாரும் அறியாத நிலை தான் அங்கே இருக்கின்றது.

அதே வரலாற்று நிகழ்வு தான் இங்கேயும் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இங்கே உள்ள மண்ணின் மைந்தர்களை செவ்விந்தியர்களைக் கொன்றது போல் யுத்தத்தினால் வெல்ல முடியாத நிலையில் சூழ்ச்சிகள் பல கையாளப்பட்டு வந்தேறிகளும் அந்நியர்களும் உயர் சாதியினராய் இருக்க மண்ணின் மைந்தர்களோ சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் வைக்கப்பட்டு அறியாமையில் இருக்கின்றனர்.

இந்த வரலாற்றினை நீங்கள் அறிந்தால் தான் ஏன் உங்களின் மரணத்தினையும் உங்களையும் சாக்காக வைத்து மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் தாழ்த்தப்பட்டும் அழிக்கப்பட்டும் கொண்டு இருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிய முடியும்.

தமிழர்கள் சிறப்பானவர்கள் ஐயா...!!!

உலகின் முதல் இனம் என்று இன்று பெரும்பாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும் ஒரு இனம் தமிழ் இனம். ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுமையுமே தமிழர்களே இருந்து வந்தனர் என்று அம்பேத்கர் அவர்கள் கூறியது வெறும் மிகையல்ல. அதற்கு சான்றாக இன்று சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்று பல ஆராய்ச்சிகள் கூறுவதும் அங்கே தமிழர்களின் புகழ் பெற்ற ஊர்ப் பெயர்களான மதுரை, வஞ்சி, தொண்டி போன்றவை காணப்படுவதும் தமிழர்களின் பெருமைக்கும் அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கும் சான்றுகளாகும். ஏன் இந்திய நிலப்பரப்பு முழுவதையும் கிட்டத்தட்ட பிடித்த அசோகனின் காலத்திலும் தெற்கே பாண்டியர்களும் சோழர்களும் சுதந்திரமாய் ஆட்சி புரிந்துக் கொண்டு தானே இருந்தனர்.

அப்பேர்பட்ட தமிழர்கள் தாம் இன்று உங்களது பெயரினால் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு முக்கியமாக தமிழர்களை அழிக்கும் பணியை முன் இருந்து செய்பவர்கள் பிராமணர்கள் மற்றும் மலையாளிகள் என்பதையும் நீங்கள் அறிந்து இருக்கக் கூடும். காரணம் உங்களைச் சுற்றி பெரும்பாலும் அவர்கள் தானே இருந்து இருப்பர். அதனால் அவர்களை நீங்கள் அறிந்து இருக்கக் கூடும்.

அவர்கள் அவ்வாறு அழிக்க முயல வேண்டியக் காரணம் என்ன? தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதனாலா? தமிழர்கள் இருக்கும் வரை அவர்களால் அவிழ்த்து விடப்பட்டு இருக்கும் பொய்களும் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் என்றாவது உடைந்து அவர்களின் மேலாதிக்கம் உடைந்து விடும் என்ற அச்சத்தினாலா?

என்ற கேள்விகளுக்கு நாம் நிச்சயம் பதில் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது ராஜீவ் அவர்களே.

அதுவும் குறிப்பாக பிராமணர்கள் என்பவர்கள் வந்தேறிகள் என்று தமிழ் இனம் முழங்கிக் கொண்டு இருக்கும் பொழுது,

மலையாளிகள் என்று இன்று அழைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அந்நிய நாட்டினைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் (மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நிகழ்ந்த யூத குடியேற்றங்கள், கிரேக்க மற்றும் ரோம குடியேற்றங்கள், சீரியக் குடியேற்றங்கள் போன்ற அன்னியர்கள் இன்று கேரளா எனப்படும் பகுதியில் ஆட்சிகள் புரிந்ததை வரலாறு கூறிக் கொண்டு இருக்கும் பொழுது)

அன்னியர்கள் என்று வழங்கப்படும் அவர்கள் மண்ணின் மைந்தர்களாக அறியப்படும் தமிழர்களை அழிக்க முயல்வது எதனால் என்றக் கேள்வி உங்களுக்கு முக்கியமாக படுகின்றதோ இல்லையோ தமிழர்களுக்கு நிச்சயமாய் முக்கியமான ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது.

மேலும் பிராமணர்கள் தமிழ் இனத்தின் தலைவரான திரு.காமராஜர் அவர்களையும் கொல்ல முயற்சித்து இருக்கின்றார்கள் என்ற வரலாற்றையும் இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

மேலும் ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது...ஒரு மலையாளி எங்கே சென்றாலும் மற்றொரு மலையாளியை அழைத்துக் கொண்டு விடுவான் என்று மலையாளிகளின் ஒற்றுமையை பெருமையாக யூதர்களின் ஒற்றுமையைப் போல் பேசும் மக்கள் காலங்களில் தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் வந்து குடி அமர்ந்த யூதர்களையும் இன்றைய மலையாளிகளையும் ஏன் ஒற்றுமைப்படுத்தி பார்க்கவில்லை என்பது நிச்சயம் ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது.

சரி இருக்கட்டும். நீண்ட நெடிய வரலாற்றினை சுருக்கமாகப் பார்ப்பது என்பது கடினமான ஒரு செயல் தான் இருந்தும் தமிழர்களான நாங்கள் எதனால் உங்களின் மரணத்திற்கு காரணமாக காட்டப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்பதனை அறிய இந்த வரலாறு தேவைப்படத் தான் செய்கின்றது.

இப்பொழுது எப்படி உங்களின் மரணத்திற்கு பழியினை தமிழ் இனம் சுமக்க நேர்ந்தது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

கடிதம் தொடரும்....!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

http://vazhipokkanpayanangal.blogspot.in/2014/03/3.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - இறுதிப்பகுதி!!!

வழிப்போக்கன்

இந்தியா என்பது என்றுமே ஒரே நாடாக இருந்தது இல்லை என்றும் அதனுள் பல்வேறு இனத்தவர் வசித்து வந்தனர் என்றும் அவர்களின் இடையே பல்வேறு அரசியல்களும் நிலவி வந்தன என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம் ராஜீவ் அவர்களே...!!! அதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே எண்ணுகின்றேன்.

அப்பேர்பட்ட ஒரு நாட்டினை ஆள்வது என்பது எளிதான காரியம் கிடையாது என்பதனை நிச்சயம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஒரே இன மக்கள் வசிக்கும் நாட்டினை ஆள்வதற்கே பலர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் ஒருங்கே விளங்கிக் கொண்டு இருக்கும் ஒரு நாட்டினை முழுமையாக ஆள்வது என்பது அரசியலில் மிகுந்த அனுபவம் மிகுந்தவர்களுக்கு கூட ஒரு சவாலான காரியம் தான்.

நிலைமை அவ்வாறு இருக்கும் பொழுது தற்செயலாக தங்களின் தாயாரின் மரணத்திற்குப் பின்னர் அரசியலினுள் நுழைந்த உங்களின் கைகளில் இந்தியா போன்றதொரு மாபெரும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு வந்து சேர்ந்த பொழுது அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள தகுதியானவராக இருந்து இருப்பீர்களா என்றால் இல்லை என்பதே உண்மையான விடையாக இருக்கும்.

நிச்சயமாய் இந்தியா போன்ற ஒரு தேசத்தினை ஆளும் பக்குவம் உங்களுக்கு அன்று இருந்து இருக்காது. இந்திய அரசியல் எவ்வாறு இருக்கின்றது...உங்களது தாயார் விட்டுச் சென்ற பணிகள் யாவை? நமது அயல் உறவுக் கொள்கைகள் என்ன? நாடு சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன? என்பதனை எல்லாம் அறிந்துக் கொண்டு சுய முடிவினை எடுக்கும் தன்மை ஒரு மனிதனுக்கு காலத்தினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே வருமே அன்றி பதவியினை ஏற்ற நொடியிலே வந்து சேராது.

ஆனால்இந்திய நாட்டினை ஆள்வது என்ற மிகப்பெரிய பொறுப்பு உங்களின் கைகளில் வந்துச் சேர்ந்த பொழுது உங்களுக்கு அத்தகைய அனுபவம் வாய்க்கப் பட்டு இருக்கவில்லை என்பதனை நீங்கள் உணர்ந்தே தான் இருப்பீர்கள். அந்நிலையில் நிச்சயமாய் நீங்கள் உங்களைச் சுற்றி இருந்தவர்களின் உதவினை நாடி இருக்கத்தான் செய்வீர்கள். அதுவும் குறிப்பாக உங்களின் தாயின் உடனேயே இருந்தவர்களைத் தான் நீங்கள் நம்பி இருப்பீர்கள். உங்களின் கட்சி ஆட்களை நீங்கள் நம்பி இருப்பீர். அவர்கள் உங்களுக்கு நன்மையைத் தான் செய்வர்...நன்மையானவற்றைத் தான் சொல்வர் என்றே தான் நீங்கள் நம்பி இருப்பீர். அது தானே இயற்கை.

இந்த அடிப்படையிலேயே தான் என்னால் உங்களது ஈழத்தைக் குறித்த நடவடிக்கைகளைக் காண முடிகின்றது.

எந்த ஒரு பெரிய தேசத்திற்கும் ஒரு நோய் இருக்கின்றது. அவைகள் பெரும்பாலும் மற்ற தேசங்களை அடக்கி ஒடுக்கி வைத்து தான் வல்லரசாக வேண்டும் என்ற கனவுகளையே கொண்டு விளங்குகின்றன...மாறாக நல்லரசாக வேண்டும் என்ற எண்ணம் அவைகளிடையே பெரும்பாலும் எழுவதே இல்லை.

அந்த நோய் இந்தியாவிற்கும் இருந்து இருப்பதில் நமக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான். நூறு கோடி மக்கள் தொகை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளம்..போதாதா வல்லரசுக் கனவுக் காண்பதற்கு. எனவே நீங்களும் வல்லரசுக் கனவினைக் கண்டத்தில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்.

பலம் வாய்ந்த தேசம் இருக்கின்றது. வல்லரசுக் கனவும் இருக்கின்றது. அண்டை நாடுகளுக்கு இடையே பிரச்சனையும் இருக்கின்றது. வல்லரசுக் கனவினை நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் கண் முன்னே விரிந்து இருக்கின்றது. இவை போதாதா உங்களைக் கனவுக் காண வைக்க....மனிதனுள் இருக்கும் இயல்பான வல்லரசு நாட்டின் தலைவன் என்ற ஆசையை வளர்க்க...!!!

ஆனால் அந்த ஆசையினைக் கொண்டு தங்களை தவறான வழியில் வழி நடத்தியதினால் தான் ஈழத்தில் உங்களது அமைதி காக்கும் படை புரிந்த படுகொலைகள் நிகழ்ந்தன என்றே நான் கருதுகின்றேன். இதனை மெய்ப்பிக்கும் படியாகவே

"எனக்கு அந்த (ஈழ மக்கள்) போராட்டம் பற்றி சரியாக ஏதும் தெரியவில்லை. திடீர் என்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் பக்கத்தில் இருந்தவர்களின் ஆலோசனையின் படி அப்படி முடிவு எடுக்க வேண்டியதாக போயிற்று. உங்களின் பிரச்சனை எனக்குத் தெரியவில்லை. அதனால் அங்கு தமிழர்களுக்கு பாதகமான சில முடிவுகளை எடுத்து விட்டேன். இப்பொழுது தான் எனக்கு எல்லாம் புரிகிறது. மீண்டும் நான் பிரதமராக வருவேன்.அப்பொழுது உங்களின் போராட்டத்திற்கு துணையாக உறுதியாக நிற்பேன்" என்று நீங்கள் உங்களை வந்து சந்தித்த ஈழப் பிரதிநிதிகளான கவிஞர் காசி ஆனந்தனிடமும் சச்சிதானத்தினிடமும் நீங்கள் இறப்பதற்கு ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் கூறியது இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 205)

மேலும் இந்து நாளேட்டிலும்

"கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிடுவோம்...நமது உறவில் புதிய அத்தியாயத்தை துவக்குவோம். எங்கள் இயக்கம் இந்தியாவிற்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்று புலிகள் இராஜிவிடம் கூறினர். அவரும் இதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார். பிரபாகரனுக்குத் தனது வாழ்த்துக்களை கூறுமாறு தெரிவித்த ராஜீவ், போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறும் தனது சார்பில் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ராஜீவ் கூறிய கருத்துக்கள் உடனே பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டன. பிரபாகரனும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இராஜீவை விடுதலைப் புலிகள் கொலை செய்து இருப்பார்கள் என்று கூறப்படுவதில் அடிப்படை இல்லை"

என்று 28.05.91 ஆம் தேதி வந்த கட்டுரை புலிகளைக் குறித்த உங்களின் பார்வை காலங்களில் மாற்றம் அடைந்து இருப்பதையும் புலிகள் உங்களுடன் சமாதானம் செய்வதற்கு தயாராக இருந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது. ( பார்க்க : புத்தகம் - ராஜீவ் காந்தி தூக்கு கயிற்றில் நிஜம் பக்கம் 217)

நிலைமைகள் அவ்வாறு இருக்க உங்களை கொல்வதற்கு புலிகளுக்கு யாதொரு தேவையுமே இருந்து இருக்க வாய்ப்பு இல்லையே. அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில் தங்களது இலட்சியத்தினை பின்னடைவிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு செயலையும் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் அளவிற்கு புலிகள் முட்டாள்கள் அல்ல என்பதனை நீங்கள் அறிந்தே தான் இருப்பீர்கள்.

இருந்தும் உங்களின் மரணத்திற்கு புலிகள் காரணமாக காட்டப்பட்டு உள்ளனர். பழி வாங்கும் நோக்கில் உங்களை புலிகள் கொலை செய்து விட்டனர் என்றே கருத்துக்களும் பரப்பப்பட்டு உள்ளன.

இது நிச்சயம் உங்களைக் குழப்பிக் கொண்டு இருக்கும் பல கேள்விகளுள் சிலவான,

1) ஏன் என்னுடன் வேறு ஒரு காங்கிரஸ் தலைவர் கூட மரணமடைய வில்லை?

2) எப்பொழுதும் என்னுடம் இருக்கும் பாதுகாப்பாளர் ஏன் அன்றைக்கு எனது அருகில் இல்லை?

3) என்னுடைய உயிருக்கு ஆபத்து அந்நிய நாடுகளின் வாயிலாக இருக்கின்றது என்று பாலஸ்தீன போராளி இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்த போதும் ஏன் அதற்கு உகுந்த கவனம் செலுத்தப்படவில்லை...ஏன் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை?

4) ஏன் என்னுடைய கொலை வழக்கை முடக்க எனது கட்சியே முயன்றது. ஏன் என்னுடைய மனைவியே எனது கட்சியின் தலைமையில் இருந்தும் உண்மையான குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முழுமையாக முயற்சி செய்யாதது ஏன்?

5) அந்நிய நாட்டு உளவு அமைப்புகளுக்கும் சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று தெரிந்தும் ஏன் விசாரிக்கவில்லை அவர்களை?

என்பனவற்றுடன் நிச்சயமாய் ஏன் விடுதலைப்புலிகளை உங்களின் மரணத்தோடு அனைவரும் தொடர்புபடுத்தினர் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கும்.

அதுவும் ஏன் புலிகளின் இயக்கத் தலைவரான பிரபாகரன் அவர்கள் உங்களது மரணத்தை குறித்து 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்று மட்டுமே குறிப்பிட்டார் எனபதும் நிச்சயம் ஒரு கேள்வியாகத் தான் இருக்கின்றது. அதாவது உங்களை கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்று அனைவருமே கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அவ்வியக்கத்தின் தலைவர் முதலில் 'உங்களின் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் உங்கள் கொலைக்கான விசாரணையில் அனைத்து வித உதவியும் செய்ய தயார்' என்று கூறி விட்டு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 'அது ஒரு துன்பவியல் சம்பவம்' என்றுக் கூறி இருப்பது ஏன் என்று நாம் கண்டாகத் தான் இருக்கின்றது.

அதற்கு நாம் ஒரு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. உங்களின் கொலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் ஈடுபட்டு ஆதாயம் அடைந்து இருக்கின்றனர் என்றே நாம் கண்டு வருகின்றோம். இந்நிலையில் உங்களை காங்கிரஸ் கட்சி கொலை செய்து விட்டது என்று ஒட்டு மொத்த பழியையும் காங்கிரசின் மீதும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் மீதும் சுமத்துவது சரியானதொரு செயலாக அமையுமா?

அமையாது தானே. காங்கிரஸ் கட்சியினைப் பிடிக்க அக்கட்சியினுள் உள்ள சிலர் செய்த சதிக்கு அவ்வியக்கத்தினை முழுமையாக குறைக் கூற முடியாது தானே.

இந்த அடிப்படையிலேயே தான் நாம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தையும் காண வேண்டி இருக்கின்றது. இராஜீவ் அவர்களே. எந்த ஒரு இயக்கத்திலும் பிளவுகளும் துரோகங்களும் இருக்கத் தான் செய்யும்...காரணம் அவை மனிதனுள்ளே இருக்கும் மிருகத்தினாலே தூண்டப்படுபவை. அந்த மிருகம் பெருன்பான்மை மக்களுக்கும் அடங்காது உலாவிக் கொண்டு தான் இருக்கின்றது என்பதனை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர். அந்த மிருகத்திற்கு இயக்கங்கள் தெரியாது...எங்கே பேராசை, பொறாமை, ஆசை, வெறி போன்றவைகளுக்கு இடம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அது சுதந்திரமாக உலாவும். இதனை நாம் வரலாற்றில் தொடர்ந்து கண்டுக் கொண்டு வந்து இருக்கின்றோம். காங்கிரசிலும் கண்டு இருக்கின்றோம். விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் கண்டு தான் இருக்கின்றோம். அதைத் தான் நாம் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

மாத்தையா...இந்த பெயர் உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்குமா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை...ஆனால் நிச்சயம் இந்திய உளவுத்துறைக்கு அப்பெயர் பரிச்சயமாகத் தான் இருக்கக் கூடும்...காரணம் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த பொழுது புலிகளின் சார்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு இருந்தது புலிகளின் தலைமையில் இரண்டாம் இடத்தில் இருந்த மாத்தையா தான்.

பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையா, இந்திய உளவுத்துறையோடு இணைந்துக் கொண்டு பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கொலை செய்து விட்டு புலிகளின் தலைமையை பிடிக்க சதி செய்ததற்காகவும் கிட்டுவின் மரணத்திற்கும் காரணமாக குற்றம் சாட்டப்பட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தூக்கிலிடப்பட்ட விடயம் உங்களுக்கு தெரியாமல் தான் இருக்கும். காரணம் இவை அனைத்தும் உங்களின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகும்.

புலிகளின் இயக்கத்தில் பிளவுகள் இருந்து இருக்கின்றது...புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் இந்திய உளவுத்துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்...உங்களின் மரணத்தில் இந்திய உளவுத்துறை ஒழுங்காக செயல்படாமலும் உண்மையை மூடி மறைக்கும் விதமாகவும் செயலாற்றி இருக்கின்றது...உங்களின் மரணத்தில் காரணமாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பொழுது பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாது இருந்து இருக்கின்றது...மேலும் முன்னரே பிரபாகரன் அவர்கள் மாத்தையாவால் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று இந்திய உளவுத்துறை கிளப்பி விட்ட கதைகள் வேறு வரலாறாய் நின்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்...இந்திய உளவுத்துறையையும் மாத்தையாவையும் பயன்படுத்தி உங்களை கொலை செய்து விட்டு பழியை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின் மீதும் சுமத்துவது என்பது சாத்தியமானதொன்றாகவே தெரிகின்றது.

அதுவே தான் நடந்தும் இருக்கின்றது என்பதே எனது மனதில் புலப்படும் எண்ணமும் ஆகும் அய்யா...!!! மேலும் வெளிநாடுகளில் ஈழம் குறித்த தமிழ் போராளிகள் என்றாலே புலிகள் என்ற பெயர் தான் அறியப்பட்டு இருக்கின்றது. மாறாக அங்கே பல்வேறு போராளி இயக்கங்கள் இருந்து இருக்கின்றன என்பதனை அவர்கள் அறிய மாட்டார்கள். காரணம் ஒரு சிறு தீவினுள் நிகழும் பிரச்சனைகளும் பெரும்பாலும் பலருக்கு மெய்யான ஆர்வம் இருப்பதில்லை தான். ஆனால் இந்திய உளவுத்துறைக்கு அவ்வாறு இல்லை...தமிழ் போராளி இயக்கங்கள் பல இருக்கின்றன என்பது அதற்குத் தெரியும்...அந்த இயக்கங்களுள் பலவற்றை அது தனக்காக பயன் படுத்தியும் இருக்கின்றது என்பது வரலாறு.

இந்நிலையில் உங்கள் மரணத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்களை சூழ்ச்சியினால் பயன்படுத்தி விட்டு பழியினை புலிகளின் மீது சுமத்தி இருக்கின்றனர் என்றே எமக்குத் தோணுகின்றது. உங்களுக்கும் அவ்வாறே தோணும் என்றே நினைக்கின்றேன் அய்யா...காரணம் உங்களின் மரணத்தினால் புலிகள் அடைந்த இலாபம் என்பது ஒன்றும் இல்லை என்றே நாம் வரலாற்றில் கண்டு இருக்கின்றோம்.

உண்மையில் உங்களது மரணத்தினால் ஆதாயம் அடைந்தது இந்தியாவில் உள்ள சிலரும்...உங்களின் கட்சியில் உள்ள சிலரும்....வெளிநாடுகளுமே அன்றி விடுதலைப்புலிகள் அல்லர்.

உங்களின் மரணத்தை சிறிது உன்னிப்பாக அறிவினைக் கொண்டு காண்பவர்களுக்கே இவ்விடயம் புலனாகும் பொழுது இது வரை இந்த விடயத்தினை உங்களின் கட்சியினரே...ஏன் நீங்கள் காதலித்து கைப்பிடித்து இன்று உங்களால் உங்களின் கட்சிக்கு தலைவராக இருக்கும் உங்களின் மனைவியுமே காணாமலும் அதனைக் குறித்து மேலும் ஆராயாமலும் இருப்பது நிச்சயம் உங்களுக்கு புதிராகத் தான் இருக்க கூடும் ராஜீவ் அவர்களே...!!!

மகாபாரதத்தில் ஒரு பகுதி உண்டு...ஊரினைச் சுற்றிப் பார்க்க தர்மனும் துரியோதனனும் செல்வார்களாம்...தர்மன் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஊரில் அனைவரும் நல்லவர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான்...துரியோதனனோ ஊரில் அனைவரும் கள்வர்களாக இருக்கின்றனர் என்றுக் கூறுவான். அக்கதையின் முடிவு மனிதர்கள் நாம் கொண்டு இருக்கும் பார்வையின் படியே இருக்கின்றனர் என்பது ஆகும்.

இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் காதலையும் மணவாழ்வையும் தூய்மையானதொன்றாக கருதுபவன் இராஜீவ் அவர்களே...அதனைக் குறித்து சந்தேகங்கள் எழுவதை கேவலமாக கருதுபவன். எனவே தான் நான் உங்களின் காதலையும் மெய்யானதொன்றாகவே காணுகின்றேன். இருந்தும் "அந்நிய நாட்டின் தலைவரின் வாரிசுகள் எங்களின் நாடுகளுக்கு படிக்க வந்தால்...அவர்களை எங்களின் வலையில் சிக்க வைக்க அனைத்து முறைகளையும் கையாளுவோம்...அதில் பெண்களை விட்டு காதலிக்கச் செய்வதும் உண்டு..." என்று அமெரிக்கா மற்றும் மேற்கு உலகத்தின் முகத்திரையை கிழிக்கும் வேலையைச் செய்து கொண்டு வருபவர்களும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறும் பொழுதுசிறிய சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை இராஜீவ் அவர்களே...!!! உங்களின் துணைவியார் இங்கே வந்ததிற்கு பின்னர் தான் உங்களின் தம்பியும் சரி அன்னையும் சரி...நீங்களும் சரி கொலை செய்யப்பட்டு இருக்கின்றீர்...உங்களின் கொலைக்கான உண்மையான குற்றவாளிகளை உங்களின் கட்சியின் தலைமையில் இருந்தும் உங்களின் மனைவி கண்டுப்பிடிக்க முயலாது இருக்கின்றார்...அவரிடம் உண்மைகளைப் பற்றி பலர் கூறியும் அதனைக் காணாது இருக்கின்றார்...இந்நிலையில் அவர் மேல் சிறிது சந்தேகம் வரத்தான் செய்கின்றது இராஜீவ் அவர்களே...!!! அதற்கு மன்னியுங்கள்...ஒருவேளை இந்த கணிப்பு தவறானதொன்றாக இருந்தால் நிச்சயம் என்னை நீங்களும் உங்களின் துணைவியாரும் என்னை மன்னித்தே ஆக வேண்டும்...!!!

எனது இந்த கணிப்பு தவறானதொன்றாக இருக்கும் என்றே நான் வேண்டிக் கொள்கின்றேன். ஏன் தெரியுமா இராஜீவ்...

உங்களின் மேல் நான் பாவப்படுகின்றேன்...ஆயிரமாயிரம் ஈழத் தமிழர்களின் மரணத்திற்காக தமிழகமே உங்களை வெறுக்கும் பொழுது நான் உங்களுக்காக வருந்துகின்றேன்.

தம்பியை இழந்தீர்...!!!

தாயை இழந்தீர்...!!!

உண்மையான நண்பர்கள் யார் என்று அறியாது சதிகாரர்களுடன் சகவாசம் கொண்டீர்...!!!

தவறான வழிகாட்டலால் பாவம் பல பெற்றீர்...!!!

இறுதியில் மரணமும் கொடூரமாக எய்தினீர்...!!!

உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற காதல் ஒன்றாவது மெய்யாக இருக்கும் என்றே நம்பி இருப்பீர்...அதற்காகவாவது உங்களின் காதலைக் குறித்த எனது சந்தேகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன் அய்யா!!!

நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலி ஆடு இராஜீவ் அவர்களே...!!!

இதனை...

இந்தியாவில் இருந்து பிரிந்துக் போன ஆரியக் கூட்டத்தில் ஒருவர்களான சிங்களர்கள் இந்திய ஆரியர்களின் மீது சொந்தம் கொண்டாடுவதும்...

""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்" - இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம்."

இங்கே இருக்கும் ஆரியர்கள் தமிழர்களுக்கு எதிராக பேசுவதில் இருந்தும்...

""இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது. அங்கு நடந்தது இனப்படுகொலை அல்ல..." என்று காங்கிரஸ் தரப்புக் கூறுகின்றது.

"இலங்கையை போர் குற்றவாளியாக அறிவிக்க முடியாது..." இது பா.ஜ.க கட்சியினரின் கூற்று.

"இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்..." இது RSS இன் கூற்று.

போராடும் தமிழ் இளைஞர்களை 'தமிழ் பொறுக்கிகள்' என்று சு. சுவாமி வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருக்கின்றார்."

என்பனவற்றின் வாயிலாக நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் இராஜீவ்...!!!

இந்தியாவின் பூர்வீக குடியினரான தமிழருக்கும்...வந்தேறிகளான ஆரியர்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு யுத்தத்தில் நீங்கள் பலியாக்கப்பட்ட ஒரு பலிகடா இராஜீவ்...அவ்வளவே!!!

வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் எங்கள் உள்ளம்...உண்மையாக உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றது.

இருந்தும் உங்களின் பெயரால் அழிக்கப்பட்ட தமிழ் இனம்...மீண்டும் வளரும் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை அய்யா...உலகின் முதல் இனம் எளிதில் அழியாது...!!!

முற்றும்...!!!

பி.கு:

1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!

2) ஈழத்தின் வரலாற்றினை அறிந்துக் கொள்ள

ஈழம் : முகப்புப் பக்கம்

3) தொடர்புடைய இடுகைகள்

http://tamilthesiyam.blogspot.in/2011/08/raw-3.html

http://thiruvadiyan.blogspot.in/2006/10/blog-post_05.html

//http://www.outlookindia.com/article.aspx?204614//

- ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி

- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

- http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/

- http://realkillersofrajiv.blogspot.in/

- http://www.outlookindia.com/article.aspx?205868

- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2014/03/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.