Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் காலடிக்குள் குழி தோண்டும் இலங்கை.

Featured Replies

obama-statement-story-top.jpg

அமெரிக்காவின் காலடிக்குள் குழி தோண்டும் இலங்கை

  • அமெரிக்காவின் காலடிக்குள் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் ஒன்றைத் தேடும் முயற்சியில் இலங்கை தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு கீழே, தென் அமெரிக்க நாடுகளை தன் பக்கம் திருப்பும் திட்டமே இது. இந்த முயற்சியை இலங்கை அரசாங்கம் தொடங்கியது, இப்போதல்ல. அதற்கான முயற்சிகள், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போதே, தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும், அதற்கான பலன், கடந்த ஆண்டு கூட ஜெனிவாவில் சரியாக கிடைக்கவில்லை. இந்த ஆண்டிலாவது, தென் அமெரிக்க நாடுகளின் மூலம் இலங்கை பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் நீடிக்கின்றன. 

    இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, மேற்குலக நாடுகள் தவிர, ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவும் அதற்கு அதிகமாக கிடைத்திருந்தது.  அது, இலங்கைக்கு ஒரு உண்மையை புலப்படுத்தியது. தனியே ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை, அதற்கு அப்பாலும் உறவுகளை தேடிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. குறிப்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதன் மூலமே, ஜெனிவாவில் நிலைத்திருக்க முடியும் என்று உறுதியாக நம்பியது அரசாங்கம். 

    அமெரிக்கா முதலாவது தீர்மானத்தைக் கொண்டு வந்த போதே, இலங்கைக்கு இன்னொரு ஒரு விடயமும் வெளிச்சமாகி விட்டது. இனிமேல், ஜெனிவா தலைவலி தொடரப் போகிறது என்பதே அது.போர்க்குற்ற விவகாரங்களுக்கு ஒரு முடிவு காணப்படும் வரை, அமெரிக்கா விடப் போவதில்லை என்பதை உணர்ந்த அரசாங்கம், அதற்கேற்றவாறு, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்தத் தொடங்கியது. இந்த நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, தூதுவர்கள் நியமிக்கப்பட்டனர்.  ஆபிரிக்காவில் நைஜீரியா, கென்யா, உகண்டா உள்ளிட்ட பல நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆபிரிக்க நாடுகளுக்கு தீவிரவாதம் முக்கியமான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால், அதனை அடக்குவதற்கு இலங்கைப் படையினரின் அனுபவங்களை பெறுவதற்கு விரும்புகின்றன. அந்தச் சந்தர்ப்பத்தை வைத்து, பல நாடுகளை மடக்கிப் போட்டுள்ளது இலங்கை அரசாங்கம். உள்நாட்டில் சிறு சிறு திட்டங்களுக்குக் கூட, வெளிநாடுகளிடம் கையேந்தும், இலங்கை அரசாங்கம், உகண்டாவில் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு தனது வெளிநாட்டு கொள்கையை மாற்றிக் கொண்டது. அதேவேளை, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தீவிரவாதம் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்குரியதொரு விவகாரமாக இல்லாததால், அங்கு அந்த விவகாரம் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இதனால், பொதுவாகவே, தென் அமெரிக்க நாடுகளிடம் ஊறியுள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வை தனக்குச் சாதகமாகத் திருப்ப முற்படுகிறது இலங்கை. 

    அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு என்பது, இலத்தீன் அமெரிக்காவின் முக்கியமான ஒரு விடயம்.  அமெரிக்கா தமது வளங்களைச் சுரண்டுவதாக இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றிடம் உள்ள கருத்தும், கியூப புரட்சி ஏற்படுத்திய தாக்கமும் அதற்கு முக்கிய காரணம். இதனை, இப்போது இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. 

    இலத்தீன் அமெரிக்காவில், இலங்கைக்கு இரண்டு முக்கியமான நட்பு நாடுகள் உள்ளன. 

    முதலாவது கியூபா, 

    இரண்டாவது வெனிசுவேலா. 

    வெனிசுவேலாவில், ஹியூகோ சாவேஸ் ஜனாதிபதியாக இருந்த வரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார்.  இப்போதைய ஜனாதிபதியுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாவிட்டாலும், அந்த உறவு கெட்டுப் போகாமல் தொடர்கிறது. கியூபாவும், வெனிசுவேலாவும், அமெரிக்க எதிர்ப்பை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் நாடுகள். இந்த நாடுகளை வைத்து, மேலும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளைத்துப் போட இலங்கை அரசாங்கத்தினால் முடியவில்லை.  இலத்தீன் மொழி பேசும் இராஜதந்திரிகளை வைத்தே அதனைச் செய்ய வேண்டியிருந்தது.ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் தோற்றுப் போனதும், ஜெனிவாவுக்கான தூதுவராக பதவியில் இருந்த தாமரா குணநாயகத்தை நீக்கிய அரசாங்கம் பின்னர், அவரை, கியூபாவுக்கான தூதுவராக நியமித்து இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளைத்துப் பிடிக்க முனைந்தது. 

    காரணம், அவர் நன்கு இலத்தீன் மொழி பேசக்கூடியவர்.  ஆனால், தாமரா குணநாயகம் அதற்கு இணங்காததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது, பிறேசிலை வைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது அரசாங்கம். 

    கடந்த ஆண்டு, பிறேசில் தமக்கு ஆதரவு வழங்கும் என்று நம்பி ஏமாந்து போயிருந்த அரசாங்கத்துக்கு இப்போது கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளது.  காரணம், அந்த நாட்டுடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவு மட்டுமல்ல, பிறேசிலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளி அதிகரித்திருப்பதும் தான். 

    அமெரிக்க � பிறேசில் உறவு நெருக்கமாகவே முன்னர் இருந்தது.  ஆனால் பிறேசிலின் எண்ணெய் வளத்தை அமெரிக்க நிறுவனங்கள் கொள்ளையிடுவதாக எழுந்த குற்றச்சாட்டினால் இருதரப்பு உறவுகளில் விரிசல் எழுந்தது.  அண்மையில், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு, பிறேசிலில் உளவு பார்த்த விவகாரத்தை எட்வேர்ட் ஸ்னோடன் அம்பலப்படுத்தியதை அடுத்து இந்த உறவுகளில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இவை தமக்குச் சாதகமாக மாறும் என்று இலங்கை நம்புகிறது. அதேவேளை, பிறேசிலுடள் இலங்கை நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது. 

    கடந்தமாதம் பிறேசில் சென்றிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அந்த நாட்டின் உயர்மட்டங்களுடன் நடத்திய பேச்சில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில், அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பயிற்சிகளை பரிமாறிக் கொள்வது, இதில் முக்கியமானது. முன்னர், இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் பிறேசில் முக்கியமானதொரு நாடாக இருந்து வந்தது. இப்போது பயிற்சி, ஒத்திகை என்று அந்தப் பாதுகாப்பு உறவு விரிவடைந்துள்ளது. இலங்கையின் முக்கிய ஆயுத ஏற்றுமதி நாடாக இருந்ததால் தான், சந்திரிகா அரசாங்கம், முன்னாள் கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்தையை பிறேசிலுக்கான தூதுவராக நியமித்திருந்தது. இப்போதைய அரசாங்கமும், அந்த உறவுகளைத் தொடர்வதற்காகவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை பிறேசிலுக்கான துணைத் தூதுவராக நியமித்துள்ளது. இவர் இறுதிப் போரில் 53வது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர். 

    அதிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு இவரது படைப்பிரிவே காரணம் என்று மனிதஉரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.  போர்க்குற்றம் சாட்டப்படும் ஒருவரை துணைத் தூதுவராக ஏற்றுக் கொண்ட பிறேசில், இலங்கைக்கு எதிரான மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகளை எந்தளவுக்கு தீவரமாக எடுத்துக் கொள்ளும் என்பது நியாயமான கேள்வியே. 

    உலகில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளாக இன்று பிறேசிலும் இந்தியாவுமே கருதப்படுகின்றன. ஐ.நா பாதுகாப்புச்சபையில் இந்த இரண்டு நாடுகளுக்கும் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தளவுக்கு செல்வாக்குப் பெற்ற பிறேசிலை கைக்குள் வைத்துக் கொண்டு அமெரிக்காவின் காலடிக்குள், தமக்குச் சாதகமான அணியொன்றை கட்டியெழுப்ப முனைகிறது இலங்கை.  இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதன் மூலம், ஜெனிவாவில் தமது சவால்களை சமாளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதற்கு வரும் மார்ச் 28ம் திகதி தான் பதில் கிடைக்கும்.

தொல்காப்பியன்..தாய் நாடு .

 

வெனிசுவேலாவை எப்படி கூபாவின் காஸ்ட்ரோ சகோதரர்கள் அடக்கி ஆளுகிறார்கள் என்று ஒரு கட்டுரை வாசித்து திகைத்துவிட்டேன்.

ஏகாதிபத்தியத்தை, முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்று கிளம்பியோரே அதை நிகழ்த்துவது பகிடி.

மதங்களை எதிர்க்கிறோம் என்று ரோலேக்ஸ் சேகுவாராவின் ஒற்றை கையை வைத்து பூசிப்பதும் பெரிய பகிடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவை எதிர்த்தவர்கள் சீரும்சிறப்புமாக வாழ்ந்ததை நான் கேள்விப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.