Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேடுவாரின்றி இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைமையகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேடுவாரின்றி இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைமையகம்! 

[sunday, 2014-03-09 19:29:02]
sathyamoorthy-bhavan-090314-150.jpg

பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சி அலுவலகங்களுமே களை கட்டி காணப்படுகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஆள் ஆரவார மின்றி எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அ.தி.மு.க. அல்லது தி.மு.க. ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து வந்துள்ளது.பெரும்பாலான தேர்தல்களில் இக்கூட்டணியே வெற்றியும் பெற்று வந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக தேர்தல் களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

  

பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் தே.மு.தி.க., பா.ம.க., கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட தி.மு.க., அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எப்படியும் சேர்ந்து விடும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க.வில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் காங்கிரசின் கூட்டணி கனவு கலைந்து போனது. தமிழகம் தேர்தல் களத்தில் அக்கட்சி தனித்து விடப்பட்டுள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்று தெரியாமல் அக்கட்சி தொண்டர்கள் கடுமையான குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவே ஏற்படும். தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்த நிலையில் தே.மு.தி.க. மற்றும் சில உதிரி கட்சிகளை சேர்த்துக் கொண்டு தனி அணியாக களம் காணவும் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. தற்போது தே.மு.தி.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டதால் அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது. இப்போதைய சூழ்நிலையில் காங்கிரசுக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தி.மு.க. மட்டுமே. எனவே அக்கட்சியுடன் எப்படியும் கூட்டணி அமைத்து விட வேண்டும் என்பதில் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தி.மு.க.வுடனான கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், மாநிலங்களவை தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. எனவே 2 கட்சிகளுக்கிடையேயான உறவுகள் அறுந்துவிட வில்லை என்று கூறியுள்ளார்.இந்நிலையில் மீண்டும் டெல்லி சென்றுள்ள அவர் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் பற்றி டெல்லி தலைவர்களுடன் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி முறிவுக்கு 2ஜி விவகாரமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை காங்கிரஸ் கட்சி வட்டம் போட்டு சிக்க வைத்துவிட்டதாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் இலங்கை தமிழர் விவகாரத்திலும் தி.மு.க.வின் கோரிக்கையை காங்கிரஸ் சரியான முறையில் பரிசீலிக்கவில்லை என்ற கோபமும் அக்கட்சியினரிடையே காணப்படுகிறது.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை அதன் தேர்தல் பிரசாரம் முழுவதுமே காங்கிரசுக்கு எதிராக அமைந்துள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனைத்து கூட்டங்களிலுமே காங்கிரஸ் அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் இதையும் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்படும்.எனவே, மீண்டும் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி என்பது சந்தேகமே என்று தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105298&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் பிச்சைக்காரர்களை வைத்து கூட்டம் நடத்துவதால்....
தமிழகக் காங்கிரஸ் கட்சியை... க‌லைத்து விட்டு,

தமிழக முதல்வர் அதன் தலைமையகத்தை கைப்பற்றி... பிச்சைக்காரர் புனர் வாழ்வு மையமாக,  அறிவிக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு கிடைத்த ஒரேயொரு போற்றுதற்குரிய  வெற்றி  இது மட்டும் தான் இதுவரை......

 

இதன் தொடர்ச்சி

பெரும் மாற்றங்களைத்தரணும்  

ஈழத்தமிழர்க்கு......

இதற்காக  உழைத்த அத்தனை  தமிழக  உறவுகளையும் இந்நேரத்தில் மிகவும் பெருமையுடன்   நினைவு கூருகின்றேன்...

Edited by விசுகு

கொங்கிரசின் ஒட்டுண்ணி அரசியல் இந்த முறை எடுபடவில்லை.

கொங்கிரஸ் குடும்ப நிறுவனத்தை செல்லாகாசாக்கிய தமிழக உறவுகளுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.