Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 வேஷம்...!
 

 

-எஸ். ஹமீத்
 
 
**சிங்கார வதனந்தான்
  சிலிர்ப்பூட்டும் சிரிப்புந்தான்
  சேலைக்குள் இருக்கிறது
  எயிட்சும் இறப்பும்...!
 
 
**பளபளக்கும் பாம்புதான்
  வழுவழுக்கும் உடலும்தான்...
  பற்களில் இருக்கிறது
  விஷமும் சாவும்...!
 
 
**அழகான ஏரிதான்
  அன்னப் பறவையும்தான்...
  அடியில் இருக்கிறது
  முதலையும் முடிவும்...!
 
 
**அடர்ந்த காடுதான்
  அறுசுவைக் கனிகள்தான்
  கூடவே இருக்கிறது
  மிருகமும் மரணமும்...!
 
 
**தகதகக்கும் நெருப்புத்தான்
  தங்கத்தின் வண்ணம்தான்
  இறங்கினால் இருக்கிறது
  சூடும் சுடலையும்...!

 
 
**வெண்ணிற ஆடைதான்
  செந்நிற சால்வைதான்
  சேர்ந்தே இருக்கிறது
  குருதியும் கொலையும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுக்கு  பின்னே ஆபத்து என்று  எச்சரிக்கை செய்யும் தங்கள் கவிதைக்கு  நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.