Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விபூசிகாவை பொறுப்பேற்க எவரும் சம்மதிக்காமையினாலேயே நன்னடத்தைப்பிரிவிற்கு அனுப்பப்பட்டார்; பொலிஸார் புதுக்கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dc47dcbf25cbc75830ecf7465db76e34.jpg

விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் நன்னடத்தை பிரிவில் சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தி தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தர்மபுரத்தை சேர்ந்த விஜயகுமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தாயார் பூசாவுக்கும் மகள் சிறுவர் நன்னடத்தைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டும் உள்ளனர். 

இது குறித்து யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனமேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களில் உண்மையில்லை. 

ஒரே வீட்டிலேயே இருவரும் வசித்து வந்தனர். எனினும் அன்றைய சம்பவத்தை அடுத்து தாய் கைது செய்யப்பட்டதனால் தனிமையில் 13வயது சிறுமியை விட்டுச் செல்ல முடியாது . அதன்டிப்படையிலேயே சிறுமி விபூசிகாவையும் அழைத்துச் சென்று நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தைப் பிரிவில் ஒப்படைத்தனர்.

எனினும் கைது நடந்த போது விபூசிகாவை பொறுப்பேற்குமாறு அயலில் உள்ள உறவினர்களிடம் கேட்கப்பட்டது. எனினும் அவர்கள் எவரும் முன்வரவில்லை இதனாலேயே அவரையும் கொண்டு சென்றனர். இது கைது கிடையாது. 

எனவே சிறுமியை பாதுகாப்போம் என்று கூறி அவர்களது உறவினர்கள் வந்தால் நீதிமன்ற உத்தரவின்படி அவர்களுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

மேலும் சிறுமியின் பாதுகாப்பில் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிக அக்கறையுடன் உள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=317542793628518988

dc47dcbf25cbc75830ecf7465db76e34.jpg

எனினும் கைது நடந்த போது விபூசிகாவை பொறுப்பேற்குமாறு அயலில் உள்ள உறவினர்களிடம் கேட்கப்பட்டது. எனினும் அவர்கள் எவரும் முன்வரவில்லை இதனாலேயே அவரையும் கொண்டு சென்றனர். இது கைது கிடையாது. 

எனவே சிறுமியை பாதுகாப்போம் என்று கூறி அவர்களது உறவினர்கள் வந்தால் நீதிமன்ற உத்தரவின்படி அவர்களுடன் செல்ல அனுமதிக்கப்படும்.  (எவனாவது பொறுப்பெடுக்க வந்தீங்க எண்டால்  பயங்கரவாத சட்டதிலை உள்ளே போட்டிடுவன் மவனே)

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=317542793628518988

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் எடுக்கின்றேன்  எனது ஐந்தாவது பிள்ளையாக....

 

தருவாரா என்று கேளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற உத்தரவின் பேரில் அயலில் உறவினரிடம் ஒப்படைக்கும் கூத்தெல்லாம் சொறி லங்காவில்தான் நடக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.