Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் கடும் வரட்சி; விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

Featured Replies

DSC_0733.JPG
-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கடும் வரட்சியான காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழிருக்கும் 9 முக்கிய குளங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் இன்று (03) தெரிவித்தார்.

வரட்சி காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 14 அடி 5 அங்குலமாக  குறைந்துள்ளதுடன் கல்மடுக் குளத்தில் 6 அடி 7 அங்குலமும், அக்கராயன் குளத்தில் 5 அடி 1 அங்குலமும் கனகாம்பிகைக் குளத்தில் 4 அடி 9 அங்குலமாக நீர்மட்டம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வன்னேரிக் குளத்தில் 5 அடி 4 அங்குலமும், புதுமுறிப்புக் குளத்தில் 6 அடி 1 அங்குலமும், பிரமந்தனாறுக் குளத்தில் 4 அடி 3 அங்குலமும், குடமுறுப்பாட்டுக் குளத்தில் 6 அடி 5 அங்குலமும், கரியாலை நாகபடுவான் குளத்தில் 3 அங்குலமாகவும்  நீர் மட்டங்கள் காணப்படுவதாக  அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருவதுடன்  கிணறுகளின் காணப்படும் நீர்மட்டங்களின் அளவு கணிசமாக குறைவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

DSC_0735.JPG
DSC_0769%281%29.JPG
 
 
முத்தையன்குளத்தின் மூலம் 1048 ஏக்கரில் செய்கை

 

கிளிநொச்சி முத்தையன்கட்டுக்குளம் மற்றும்; அதன் கீழுள்ள 05 குளங்களின் மூலம் 518 ஏக்கர் நெற்செய்கையையும் 530 ஏக்கர் உப உணவுச் செய்கையையும் மேற்கொள்ளவுள்ளதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் இன்று (03) தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டில் முத்தையன்கட்டுக்குளம் மற்றும் கீழுள்ள 05 குளங்களின் மூலம்; சுமார் 14,000 ஏக்கர்; செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், தற்போது வறட்சி நிலவுவதால் குளங்களிலுள்ள நீரின் அளவு  வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், 1,048 ஏக்கர் செய்கையையே இவ்வருடம் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி மருதமடுக் குளத்தின் கீழ் 65 ஏக்கர் நெற்செய்கையும் 51 ஏக்கர் உப உணவுச்; செய்கையும் உடையார் கட்டுக்குளத்தின் கீழ் 303 ஏக்கர் நெற்செய்கையும் பனிக்கேணிக் குளத்தின் கீழ் 100 ஏக்கர் நெற்செய்கையும் 34 ஏக்கர் உப உணவுச்; செய்கையும் தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் 100 ஏக்கர் உப உணவுச் செய்கையும் மடவாளசிங்கம் குளத்தின் கீழ் 50 ஏக்கர் நெற்செய்கையும் 45 ஏக்கர் உப உணவுச் செய்கையும் முத்தையன்கட்டுக்குளத்தின் கீழ் 200 ஏக்கர் உப உணவுச் செய்கையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/105656---1048--.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயிருந்துதான் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் போகப்போகுதா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயிருந்துதான் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் போகப்போகுதா? :huh:

அட ஆமா சார் அந்தக்கிணத்தில இருந்துதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.