Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறட்சியால் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு

Featured Replies

120822154819_sri_lanka_drought_vanni__30

கோப்புப் படம்

 

இலங்கையின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.

வட மாகாணத்தில் வவுனியாவில் அதிகூடிய வெப்ப நிலைமையாக 40 டிகிரி வெப்பம் பதிவாகியிருப்பதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர கூறியிருக்கிறார்.

இந்த வருடம் பல விவசாய மாவட்டங்கள் கூடுதலான வறட்சியை எதிர்நோக்கியிருப்பாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

வவுனியா, மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, குருணாகலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்கள் வறட்சியினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட பல இடங்களில் இம்மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் சூரியன் கடும் வெப்பத்துடன் உச்சம் கொண்டிருக்கும் என்று காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஜயசேகர தெரிவித்திருக்கின்றார்.

விவசாயம் பாதிப்பு
120822154550_sri_lanka_drought__304x171_

குடிநீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது

 

தற்போதைய வறட்சி காரணமாக வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விவசாயம் ஸ்தம்பித நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழக பூகோள பிரிவு பேராசிரியர் எஸ்.அன்ரனி நோபர்ட் அவர்கள் கூறியிருக்கின்றார்.

பூகோளம் வெப்பமடைவதாலும், சூரியனில் இருந்து திடீரென வெப்ப ஒளிவட்டம் தோன்றி வெப்பத்தை அதிக அளவில் வெளியிட்டிருப்பதனாலும், கூடிய வெப்ப நிலைமை அடுத்த சில வருடங்களுக்குத் தொடர்ந்து நிலவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வடபகுதி நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில், உட்கட்டமைப்புக்கள் சிதைவடைந்துள்ளதுடன், நிதியூட்டம் குறைந்த பிரதேசமாகவும் திகழும் நிலையில் இயற்கையின் பாதிப்பாக கடும் வறட்சியையும் எதிர் நேக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

"இம்முறை வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 91 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், வறட்சி காரணமாக 64 ஆயிரம் ஹெக்டேரில் மாத்திரமே நெல் பயிரிடப்பட்டது. அதிலும் வறட்சியினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அரைவாசியிலேயே நெல் உற்பத்தியைப் பெற முடிந்தது. இரணைமடு குளத்தின் கீழ் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுபோகம் செய்வதுண்டு. ஆனால் குறத்தில் நீர் இல்லாத காரணத்தினால் அதன் பத்தில் ஒரு பங்காகிய 800 ஏக்கரில் மாத்திரமே சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த கால போகத்திற்குத் தேவையான விதைநெல் உற்பத்திக்காகவே இந்த முயற்சி முக்கியமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது" என்று அவர் தெரிவித்தார்.

வறட்சியினால் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கென அரசாங்கம் மாவட்டம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா நிதியை அரசு ஒதுக்கியிருப்பதாகவும், இந்த நிதியைப் பயன்படுத்தி வினைத்திறன் மிக்க வகையில் குடிநீர் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு மாகாண சபையை அதிகாரிகள் கலந்து ஆலோசிக்கவோ இணைந்து செயற்படவோ இதுவரையில் முன்வரவில்லை என்றும் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/04/140406_srilankadraught.shtml

 

கிளிநொச்சியில் 25 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்.

கிளிநொச்சி மாவட்;டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 19 கிராம அலுவலகர்; பிரிவுகளிலுள்ள 25 கிராமங்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து கரைச்சி பிரதேச சபை பவுசர் மூலம் குடிநீர் விநியோகித்து வருவதாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் இ.கிருஸ்ணகுமார்  தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வறட்சி நிலவுவதால்  பொதுமக்கள் குடிநீருக்காக  அவஸ்தைப்படுகின்றனர். இந்நிலையில், தற்போது மேற்படி கிராமங்களுக்கு நாளொன்றுக்கு 17,000 லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன. இருப்பினும், குடிநீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தட்டுவன்கொட்டி, பொன்னகர், 50 வீட்டுத்திட்டம், 72 வீட்டுத்திட்டம், 17 வீட்டுத்திட்டம், உமையாள்புரம், ஸ்கந்தபுரம், அக்கராயன், வட்டக்கச்சி, பாரதிபுரம், கிருஸ்ணபுரம், செல்வாநகர், கணேசபுரம், உதயநகர் கிழக்கு, கோணாவில், மலையாளபுரம், விவேகானந்த நகர், சிவிச்சென்ரர், உருத்திரபுரம் வடக்கு, கண்ணகிபுரம், பெரியபரந்தன், செருக்கன்,   சாளம்பன், பரந்தன், கமறிக்குடா ஆகிய கிராமங்களுக்கே  குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/106002--25-.html

 

 

 

இதெல்லாம் கடந்த 40 வருட இரசாயன விவசாயத்தின் பயன்.

இரசாயன உரம்போட்டால் தாவரங்களுக்கு நிறைய நீர் கொடுக்கவேண்டும். நிறைய மேல்மட்ட சிறு குளங்களை நிறுவ வேண்டும். மேல்மூடு(straw mulching) போன்ற இயற்கை விவசாய முறைகளை பாவித்து நீரை நிலத்தில் சேமிக்கலாம்.

காய் கறி விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசனத்தை (drip irrigation)செய்யலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை அலுவலக ரீதியாக புலம்பெயர் மக்களிடம் கையளித்து விடுங்கள். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.