Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை தொடங்கியது! முதல் அடி கொடுத்தது கனடா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை தொடங்கியது! முதல் அடி கொடுத்தது கனடா!

 

 
canada-150x150.gifஇலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது.

 

ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் நடந்த பொதுநலவாய அமைப்பு மாநாட்டை கனேடிய பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றல் இன்னும் நிகழாமல் இருப்பது தொடர்பில் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது” என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட் தெரிவித்துள்ளார்.

“சிறுவர் திருமணம், சிறுவர் நிர்ப்பந்தத் திருமணம், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சமுதாய வேலைத் திட்டங்கள் என்பவற்றை நோக்கி ஒதுக்கப்பட்டிருக்கும் குறித்த நிதி பயன்படுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

http://tamilleader.com/?p=31465

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை தொடங்கியது! முதல் அடி கொடுத்தது கனடா!

 

 
canada-150x150.gifஇலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது.

 

சபாஸ்.... கனடா.canada.gif

வாய்ச் சொல்லில் நிற்காமால்... செயலில் காட்டிய கனடாவுக்கு நன்றிகள்.

இதனைத் தொடர்ந்து... மற்றையை நாடுகளும், இலங்கைக்கு செய்யும்... அனைத்து  உதவிகளையும், நிறுத்தினால் தான்... இலங்கையை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும்.

எவ்வளவு காலத்திற்கு இடைநிறுத்தம்? மாற்று வடிவங்களில் இந்த உதவியை வழங்குவார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு காலத்திற்கு இடைநிறுத்தம்? மாற்று வடிவங்களில் இந்த உதவியை வழங்குவார்களோ?

 

 

பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

மாற்று வடிவம் பற்றி ஏதும் செய்திகள் இல்லை. அப்படி ஏதுமெனில் எதிர்க்கட்சிகள் பிரித்து மேய்ந்து விடுவார்கள். :)  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:-

 

 

William-Hague_CI.jpg

 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில், அனைத்து துறைசார்ந்தவர்களும் தகவல் மற்றும் சாட்சியப்பதிவு தொடர்பில் தெரிவுச்செய்யப்படுவர் என்று வில்லியம் ஹேக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நவநீதம்பிள்ளை வாய்மூல அறிக்கையை எதிர்வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பார் என பிரித்தானிய  பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முழு அறிக்கையை அவர் சமர்ப்பிப்பார் எனத் தெரிவித்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்,; பிரித்தானிய அரசாங்கம் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தார்.

கடந்த மார்ச் 27ம் திகதியன்று இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் அமெரிக்க யோசனை ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105659/language/ta-IN/article.aspx

 

இலங்கை தற்போது இங்கிலாந்து கனடா ஆகிய நாடுகளிடம் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளது. ஆப்பிலிருந்து வெளிவருவது மிகக்கடினம். இந்த நாடுகளின் நட்பு நாடுகளையும் இந்த வட்டத்தில் கொண்டுவரமுயற்சி செய்ய வேண்டும். அல்லது சிறிய இடைவெளி கிடைத்தால் இலங்கை தப்பிவிடும். கடைசியில் இரஸ்சியா, சீனா போன்ற நாடுகளையும் கையாள முடியும்.. முயன்றால் முடியாது எதுவுமில்லை. புலம் பெயர்தமிழ்மக்களின் திவீர முயற்சிதான் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. எதிர்காலம் ஒற்றுமையாக செயல்பட்டு, புல்லுருவிகளை அடையாளம் கண்டு சரியாக உலகை வழி நடத்தி எம்மக்களுக்கு உலக நாடுகளின் துணையுடன் நீதியை பெற்றுக்கொடுப்போம் என உறுதி பூர்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.