Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய பௌத்த கல்வி! - இராணுவம் மூலம் வழங்க அரசாங்கம் ஏற்பாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய பௌத்த கல்வி! - இராணுவம் மூலம் வழங்க அரசாங்கம் ஏற்பாடு. 
[Friday, 2014-05-16 08:52:41]
News Serviceஇலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிக்கவுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் இரண்டு அதியுயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடத்தினர் இது குறித்து வைத்த பிரேரணைகளை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த பீடத்தின் பேச்சாளரான மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
 
"மாறுதலுக்குத் தயாராங்குகள்"என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்படும் அந்தப் பயிற்சியின் மூலம் இளைய சமூகத்தினருக்கு மேம்பட்டக் கல்வியை அளித்து, அதன் மூலம் சமூகத்தின்பால் அவர்களுக்கு உள்ள அணுகுமுறையை மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கைக்கு புதிய அரசியல் சாசனம் தேவை என்றும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள அரசியல் சாசனத்தை வைத்துக் கொண்டு நாடு முன்னேற முடியாது என்றும், அதனால் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் அல்லது புதிய அரசியல் சட்டம் ஒன்று தேவை என்று தாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் மெதகம தம்மானந்த தேரர் கூறுகிறார்.
 
நாட்டின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அனைத்து சமூகத்து மாணவர்களும் தமது சொந்த மொழியில் இந்தப் பயிற்சியைப் பெறும்போது, அவர்கள் இந்தத் திட்டத்தின் நோக்கத்தை நன்கு புரிந்து கொள்வார்கள் எனவும் அவர் கூறுகிறார்.
 
இலங்கையில் சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக அமைதியாக வாழும் வாய்ப்பை 100 சதவீதம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.http://seithy.com/breifNews.php?newsID=109413&category=TamilNews&language=tamil

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய கல்லூரிகளில் இது சாத்தியமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்லாமிய கல்லூரிகளில் இது சாத்தியமா?

 

அவங்கள் மாடுவெட்டுற கத்தியின்ரை சைஸ் சிங்களவனுக்கு எப்பிடியும் தெரிஞ்சிருக்குமெண்டு நினைக்கிறன்.... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் செய்யப்போகிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் போன்ற வளர்ந்த வல்லரசு நாடுகளே இராணுவத்தைக் குறைக்கின்ற போது.. சிங்களம் அதனைப் பெருக்கிக் கொண்டிருப்பதன் விளைவு இது. ஊதிப் பெருக்கும் சிங்கள இராணுவத்திற்கு தொழில்..????!

 

இப்படியான ஆக்கிரமிப்பு நோக்கங்களை தொழிலாக்கினால் தான்.. உண்டு. இன்றேல்.. அது ஜே வி பி யாகவோ.. ஏதாவது ஆகவோ.. மகிந்த மீது.. கோத்தா மீது பாயும்.

 

சிங்களவனுக்கு.. அவனின் இந்த இராணுவமே ஓர் நாள் அழிவாகும்..! தமிழனை அழிச்சது.. ஓர் நாள் சிங்களவனையும் அழிக்கும்.. இதனை இப்படியே இனவாதமூட்டி வளர்த்தால்.. அதுதான் பயனாகும். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.