Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்! - மோடியிடம் வைகோ வலியுறுத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம் வைகோ வலியுறுத்தல்.

 

19DELVKO1.jpg

 

"ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம்' என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை வைகோ திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

மரண அடி கொடுக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சில மாநிலங்களில் ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு கூட்டணி வைக்க வேண்டிய தேவை காங்கிரஸூக்கு ஏற்பட்டுள்ளது.

வெற்றி பெற்றதற்கு பிறகு நன்றி அறிவிப்பு உரையில் "தேர்தலில் பெற்ற வெற்றி 125 கோடி மக்களின் வெற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வோம்' என மோடி கூறியது குறித்து, இது எந்தத் தலைவரும் கூறாத ஒன்று என அவரிடம் கூறினேன். "அந்த உரை தயாரிக்கப்பட்டதல்ல, இதயத்தில் இருந்து வந்தவை' என்று அவர் கூறினார்.

பிரதமராகப் பதவியேற்றதும் விவசாயிகளின் கவலைகளைப் போக்க நதிகள் இணைப்பு திட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்; அதில் தென்னக நதிகளை இணைக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். "நதிகள் இணைப்பு குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மே மாதத்தில் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த ராணுவ உதவியைக் கொண்டு இலங்கை ராணுவம், லட்சக்கணக்கான தமிழ் மக்களைப் படுகொலை செய்தது. காங்கிரஸ் தலைமை செய்த அதே தவறை மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் செய்யக் கூடாது என்று அவரிடம் வலியுறுத்தினேன். மேலும், "ஈழத் தமிழர்கள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்புப் பெறுவார்கள்' என நம்புவதாகவும் கூறினேன். "ஈழத் தமிழர் நலனில் நிச்சயமாக அக்கறையோடு செயல்படுவேன்' என்று அவர் உறுதியளித்தார்.

சிறுபான்மை மக்களுக்கு நீங்கள் பாதுகாவலன் என உணரும் நிலை நாட்டில் ஏற்பட வேண்டும் என்று கூறியபோது, "அந்த நம்பிக்கையை நான் பிரதிபலிப்பேன். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் கார்கில் தொகுதியில்கூட பாஜக அடைந்துள்ள வெற்றி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு' என்று மோடி கூறினார்.  தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அக் கூட்டத்தில் எங்கள் கட்சிப் பிரதிநிதியாக கணேசமூர்த்தி பங்கேற்பார் என்று அவரிடம் தெரிவித்தேன் என்றார் வைகோ.

 

 

http://www.dinamani.com/tamilnadu/2014/05/20/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/article2233996.ece

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தழிழர் விடயத்தில் கவனம் செலுத்துவேன்; வைகோவிடம் உறுதியளித்தார் நரேந்திரமோடி  
news
ஈழத்தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார் நாளை இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திரமோடி. ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார்.
 
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மண்கெளவியது. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி மோடி தலைமையில் புதிய அரசு அமைக்கவுள்ளது.
 
பாரதீய ஜனதாக் கட்சியுடன், தமிழகத்தில் கூட்டணி அமைத்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டிருந்தார். ஆயினும் அவர் தோல்வியடைந்திருந்தார். இந்த நிலையில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திரமோடியை நேற்று நேரில் சென்று சந்தித்தார் வைகோ.
 
இந்தச் சந்திப்பின் போது, இந்திய மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பிலுள்ள சோனியாவின் (முன்னைய ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி) கைக் கூலிகளை வெளியேற்ற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.
 
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வைகோ, ""ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மே மாதம் தமிழர்களுக்குத் துயரமான மாதம் ஆகும். 2009 மே 17, 18 திகதிகளில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் கொன்று குவிக்கப்படடனர். அதற்கு முழுக்க முழுக்க ஆயுத உதவி செய்து, இனப்படுகொலை நடக்கக் காரணமாக சோனியா காந்தியும் அவர் இயக்கிய காங்கிரஸ் அரசும் தான் செயல்பட்டன.
 
நான் சென்னையில் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டேன். காங்கிரஸ் அரசு செய்த துரோகத்தை, நரேந்திரமோடி அரசு ஒருபோதும் செய்யாது, சிங்கள அரசுக்கு உதவாது, ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு மோடி அரசில் வழிபிறக்கும் என்று குறிப்பிட்டேன். இவற்றையெல்லாம் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது தெளிவான எடுத்துரைத்தேன்'' என்று அவர் தெரிவித்தார்.
 
இருவருக்கும் இடையே கலந்துரையாடலின் முடிவில் ""ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் நான் உரிய கவனம் செலுத்துவேன்'' என்று நரேந்திர மோடி உறுதி வழங்கினார் என்று வைகோ தெரிவித்தார்.
 

vaiko_CI.jpg

இலங்கை பிரச்சினைகள் குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வை.கோவிற்கும், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நரேந்திர மோடிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி உறுதியளித்துள்ளார்.

சிறுபான்மையினரை பாதுகாக்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதனை சிறுபான்மை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107154/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன் பல்வேறுபட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.

முதலில் வீழ்ந்திருக்கும் இந்தியப் பொருளாதரம், பாக்கிஸ்தான் பயங்கரவாதம், சீன எல்லைப் பிரச்சனை
எனப் பட்டியல் நீளும். பரந்த அளவிலான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் மோடி அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை ஒரு சிறிய விடயம்.

 

ஆனால் இந்திய உளவுத்துறை இதை அனுமதிக்குமா? மோடி முதலில் செய்ய வேண்டியது

இந்திய உளவுத்துறையை மறு சீரமைப்பதாக இருக்க வேண்டும்.

இன்றைய இந்திய உளவுத்துறை மோடி அரசியலுக்கு நல்லதல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.