Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யாவில் இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை! மற்றொரு அதிகாரி படுகாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் இலங்கைத் தூதரக அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை! மற்றொரு அதிகாரி படுகாயம்!

 

 

Gunshot-150x150.jpgரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகச் நடந்த சம்பவத்தில், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவிளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார். 

ரஸ்யாவின் தென்பகுதியில் உள்ள ரொஸ்ரொவ் ஒன் டொன் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரொஸ்ரொவ் நகரில், ரஸ்யாவில் சிறிலங்காவின் நாட்கள் என்ற நிகழ்ச்சிக்காக ரொஸ்ரொவ் நகருக்கு வந்த சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞரே, வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா துதரகத்தில் இரண்டாவது செயலாளர் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா தூதரக அதிகாரிகளை அவர்கள் தங்கியிருந்த டொன் பிளாசா விடுதி அருகே, இவர்களின் பொதிகளை ஏற்றிவந்த பாரஊர்தியின் இரண்டு சாரதிகள் மேலதிக பணத்தைக் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போதே, எழுதுவினைஞரை தமது வாகனத்தால் மோதிக் கொன்று விட்டும், தூதரக இரண்டாவது செயலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டதாக ரஸ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவத்தை ரஸ்ய வெளிவிவகார அமைச்சு நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளது.

பார ஊர்தி ஒன்றின் சாரதியே, ரஸ்ய தூதரக நிர்வாக- தொழில்நுட்ப பணியாளரான ரணவிரு என்பவரை தனது வாகனத்தால் மோதிக் கொன்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா தூதரக இரண்டாவது செயலர் ரத்நாயக்க நெஞ்சில் படுகாயமடைந்துள்ளார் என்றும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

http://tamilleader.com/?p=35291

இந்தச் சம்பவத்துக்காக ரஸ்யா தனது கவலையை தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவத்துக்காக ரஸ்யா தனது கவலையை தெரிவித்துள்ளது
சுட்டுக்கொலை என தலையங்கம் போட்டிருக்கு ஆனால் உள்ளே செய்தியில் வாகனத்தால் மோதி கொலைசெய்யப்பட்டார் என எழுதியிருக்கு.....ஒரே குழப்பமா இருக்கு.....சரியான செய்தியை போட்டால் நாங்களும் கவலை படுவோமல்ல....

இந்தச் சம்பவத்துக்காக ரஸ்யா தனது கவலையை தெரிவித்துள்ளது
சுட்டுக்கொலை என தலையங்கம் போட்டிருக்கு ஆனால் உள்ளே செய்தியில் வாகனத்தால் மோதி கொலைசெய்யப்பட்டார் எ

"இதன்போதே, எழுதுவினைஞரை தமது வாகனத்தால் மோதிக் கொன்று விட்டும், தூதரக இரண்டாவது செயலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்."

இது எதோ கொத்தியின் ஆயுத கடத்தல் பிரச்சினை போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்பு2 - அமைச்சர் சீ.பி. ரட்நாயக்கவின் புதல்வரே ரஸ்ய மோதலில் காயமடைந்துள்ளார்
13 ஜூன் 2014
தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி. ரட்நாயக்கவின் புதல்வரே ரஸ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளார். ரஸ்யாவிற்கான இலங்கை தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக அமைச்சர் சீ.பி. ரட்நாயக்கவின் புதல்வர் நுவான் பண்டார ரட்நாயக்க கடமையாற்றி வருகின்றார்.
 
ரஸ்யாவின் மொஸ்கோ நகரின் சுவரோவ் ஹோட்டல் டொன் பிளாவில் (Suvorov Hotel Don Plaza) இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் ரஸ்யாவிற்கான இலங்தைத் தூதரக அதிகாரியயொருவர் கொல்லப்பட்டார்.
 
டாக்ஸி சாரதிகளுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த மோதலுக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது சாரதியொருவர், நுவான் பண்டார ரட்நாயக்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.வாகனத்தில் மோதுண்ட இலங்கை அதிகாரி உயிரிழந்துள்ளார்.
 
விபத்தில் காயமடைந்த அமைச்சரின் புதல்வருக்கு உயிராபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஷ்யாவில் இலங்கைத் தூதரக அதிகாரி வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்டார் - மற்றய அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்:-
 
12-06-20142:47
 
ரஷ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில், இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார்.  ரஷ்யாவின் தென்பகுதியில்  ரொஸ்ரொவ் ஒன் டொன் நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ரொஸ்ரொவ் நகரில், 'ரஷ்யாவில் இலங்கையின் நாட்கள்' என்ற நிகழ்ச்சிக்காக அந்த நகருக்கு சென்ற இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞரே, வாகனம் ஒன்றினால் மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இலங்கைத் தூதரக அதிகாரிகளை அவர்கள் தங்கியிருந்த டொன் பிளாசா விடுதி வரை அவர்களின் பொதிகளுடன் ஏற்றிச் சென்ற பார ஊர்தியின் இரண்டு சாரதிகள் அவர்களிடம் மேலதிக பணத்தைக் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. இதன்போதே, எழுதுவினைஞரை தமது வாகனத்தால் மோதிக் கொன்று விட்டும், தூதரக இரண்டாவது செயலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அவர்கள் தப்பிச் சென்றிருக்கிறார்கள். 
 
இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர் என ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. 
 
இந்தச் சம்பவத்தை ரஷ்ய வெளிவிவகார அமைச்சு நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளது. பார ஊர்தி ஒன்றின் சாரதியே, ரஷ்ய தூதரக நிர்வாக, தொழில்நுட்பப் பணியாளரான ரணவிரு என்பவரைத் தனது வாகனத்தால் மோதிக் கொன்றார் எனவும்,  இலங்கைத் தூதரக இரண்டாவது செயலர் ரத்நாயக்க என்பவர் நெஞ்சில் படுகாயமடைந்துள்ளார் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்காக ரஷ்யா தனது கவலையை தெரிவித்துள்ளது. 
  • கருத்துக்கள உறவுகள்
இராணுவ, காவல்துறைத் துணையோடு சிறீலங்காவில் சிறுபான்மை இனத்தவரை மிரட்டிக் காரியமாற்றிப் பழகிய பழக்கம், உருசிய நாடுவரை சென்று பரிசிலும் பெற்றுள்ளது. :o  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.