Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை – முத்தையா முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

muththaiya-muralitharan.jpg

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாகவே சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டுக்களின் போது அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

இது தவிர அரசாங்கத்துடன் வேறு எந்த கூட்டணியும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பல கட்சிகளினதும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற போதிலும் எவரும் அரசியலில் ஈடுபடுமாறு அழைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரசியல் களமிறங்கும் நோக்கம் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து உரிய முறையில் செயற்பட்டால் இலங்கை வீரர் சசித்திர சேனாநாயக்கவிற்கு எதிரான தடையை நீக்கிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

எனினும், தடையை நீக்கிக் கொள்வது சசித்ர சேனாநாயக்கவின் கையில் உள்ளது என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

முழு நேர பயிற்றுவிப்பாளராக செயற்படும் திட்டங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.e-jaffna.com/archives/28013

இலங்கை அரசின் படுகொலைகளை கண்டிக்க முரளிதரன் தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை ஒரு மனுசராக தன்னை அடையாளம் கண்டாலே போதும். ஆனால் இலங்கை அரசை காப்பாற்றுவதற்காக அதன் படுகொலைகளையும் இனவழிப்பையும் மறுத்து சொல்வதன் மூலம் தன்னை ஒரு காட்டுமிராண்டி என்றே உலகுக்கு உணர்த்துகின்றார். இவருக்கும் டக்ளசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டுமல்ல.. ஆறுமுகம் தொண்டமான் உட்பட்ட வகையறாக்களும் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. வடக்குக் கிழக்கு மக்களின் போராட்டத்தால் அதிகம் நன்மை பெற்றவர்கள் என்றால் அது மலையக மக்கள் தான். திம்புவில்.. எமக்காகவும் அவர்களுக்காகவும் பேசப் போய்.. அவர்களுக்காக குரல்கொடுத்து குடியுரிமையும்.. வாக்குரிமையும் பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் அதனை அவர்கள் எமக்காக பாவிக்க தவறி விட்டுள்ளார்கள். சந்திரசேகரன்.. மனோ கணேசன் போன்ற ஒரு சிலரைத் தவிர..! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நடுக் கடலிலை போனாலும் ***** *********

தென் பகுதியில் வாழும் பெரும்பான்மையான இந்திய வம்சாவழித் தமிழர்கள் சிங்களத்தையும் பேசிக்கொண்டு சிங்களத்துக்கு ஆதரவாகவே இருந்தனர். இவர்கள் இந்தியாவை மறக்கவில்லை!

நடுக் கடலிலை போனாலும் ***** *********

தென் பகுதியில் வாழும் பெரும்பான்மையான இந்திய வம்சாவழித் தமிழர்கள் சிங்களத்தையும் பேசிக்கொண்டு சிங்களத்துக்கு ஆதரவாகவே இருந்தனர். இவர்கள் இந்தியாவை மறக்கவில்லை!

 

மிகப் பிழையான அவதானம் இது.

 

தென்பகுதியில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பலர் தென்னிலங்கையில் இயங்கிக் கொண்டு இருந்த போராளிகளுக்கு பல உதவிகள் புரிந்தவர்கள். எத்தனையோ நிழல் வேலைகளுக்கு அவர்கள் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. அது மட்டுமன்றி ஈழப் போராட்டம் தொடர்பாக எப்பவும் கரிசனையும் ஆதரவும் கொண்டே இருந்து வந்தார்கள்.  இன்றும் சிறைகளில் இருக்கும் பல தமிழ் அரசியல் கைதிகளில் இந்திய வம்சாவளித் தமிழர்களும் கணிசமானோர் உள்ளனர்.

 

தொண்டமான் போன்ற சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாது இம் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டு அரசியல் செய்து வந்ததுக்கும் அவர்களின் சிங்கள அரசுக்கான ஆதரவும் இன்னொரு தளத்தில் வைத்து விவாதிக்க வேண்டிய விடயம்.

 

வடக்கு கிழக்கில் பிறந்து, வளர்ந்து ஒட்டுக் குழுக்களில் ஒட்டிக் கொண்டு காட்டிக் கொடுப்பும், படுகொலைகளும் செய்த தமிழர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமிழர் தாயகப் பிரதேச மக்களுக்கு செய்த விரோதமான செயற்பாடுகள் மிக மிக சொற்பமாகவே இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.