Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: நிறுவனருக்கு 940 ஆண்டு சிறை- தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ள தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம், பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 940 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.

இந்த தீ விபத்து தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் பி.பழனிசாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சியின் அப்போதைய ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்ற இந்த வழக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 488 பேரை காவல்துறையினர் சாட்சிகளாக சேர்த்து இருந்தனர். மேலும் 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

kumbagonam%20child%20death%201%281%29.jp

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோரை உயர் நீதிமன்றம் விடுவித்தது. இதேபோல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீ விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் மொத்தம் 230 பேர் சாட்சியம் அளித்தனர். 22 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த 17ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி, தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகரமைப்பு அலுவலர் முருகன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாதவன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அதேநேரத்தில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, பள்ளி தாளாளர் பழனிச்சாமியின் மனைவி சரஸ்வதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகிய 10 பேர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனையை பிற்பகலில் நீதிபதி அறிவித்தார். அதன்படி, பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையுடன்,  10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,  (ஒரு குழந்தைக்கு தலா 10 ஆண்டு என மொத்தமாக 940 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்) ரூ.51 லட்சம் அபராதமும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பள்ளி தலைமையாசிரியை சந்தானலட்சுமி மற்றும் நான்கு அரசு அலுவலர்கள் உள்பட 7 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், பள்ளியின் கட்டட பொறியாளர் ஜெயசந்திரனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் மற்றும் தலா ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் அபராதமும் விதி்த்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், அபராதத் தொகையில் தலா ரூ.50 ஆயிரத்தை குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், படுகாயம் அடைந்த 15 பேருக்கு தலா 25 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30750

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் 94 மாதங்களில் வெளியில் வந்துவிடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

94 பச்சிளம் பாலகர்கள், தீயில் கருகி இறந்த சம்பவம் உலகையே... அப்போது உலுக்கிய செய்தி.
அதற்கு தீர்ப்புச் சொல்ல, 10 வருடம் பிடித்திருக்குதா?

94 பச்சிளம் பாலகர்கள், தீயில் கருகி இறந்த சம்பவம் உலகையே... அப்போது உலுக்கிய செய்தி.

அதற்கு தீர்ப்புச் சொல்ல, 10 வருடம் பிடித்திருக்குதா?

 

இந்த தீர்ப்பில் பள்ளிக்கூடத்தினை அந்த கட்டிடத்தில் நடத்த அனுமதி அளித்த, வருடா வருடம் அதை புதுப்பித்த எந்த அரச அதிகாரிகளும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் தனக்கு கொடுத்த இடத்தில் சமைத்த அப்பாவி சமையல்பெண்ணுக்கு தண்டனை.

 

இது தான் இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்ப்பில் பள்ளிக்கூடத்தினை அந்த கட்டிடத்தில் நடத்த அனுமதி அளித்த, வருடா வருடம் அதை புதுப்பித்த எந்த அரச அதிகாரிகளும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் தனக்கு கொடுத்த இடத்தில் சமைத்த அப்பாவி சமையல்பெண்ணுக்கு தண்டனை.

 

இது தான் இந்தியா

 

கீழே உள்ள செய்தியையும் பாருங்கள்.....

பிள்ளைகளை வகுப்பறையில்.... வைத்து பூட்டி விட்டு, கோயிலுக்குச் சென்ற ஆசிரியை விடுதலை.

 

+++++++++

 

தீவிபத்து: வகுப்பறையை பூட்டிய ஆசிரியை தேவி விடுதலையா?

பெற்றோர் ஆவேசம்.

 

தஞ்சாவூர்: கும்பகோணம் பள்ளி தீவிபத்தில், வகுப்பறையை பூட்டிச் சென்ற ஆசிரியை தேவி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் மிகுந்த ஆவேசம் அடைந்துள்ளனர்.

 

கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடந்த தீவிபத்து தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 11 பேரில் ஆசிரியை தேவியும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

30-kumbakonam-fire1-600.jpg

 

இது குழந்தைகளை இழந்த பெற்றோர்களை ஆவேசப்படுத்தியுள்ளது. அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

  • பள்ளியில் தீவிபத்து நடப்பதற்கு முன்பாக, ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஆசிரியை தேவி, வகுப்பறையை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.
  • அவர் வகுப்பறையை பூட்டிச் செல்லாமல் இருந்திருந்தால் பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது பெற்றோர்களின் ஆதங்கமாகும்.
  • பள்ளி தீவிபத்துக்கு பள்ளி நிர்வாகம், கல்வித்துறை மற்றும் நகராட்சித் துறையினரின் அலட்சியப்போக்கே காரணம்.
  • தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு அமையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 11 பேரை விடுவித்து கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, ஏமாற்றமும் மனவேதனையும் அளிப்பதாக உள்ளது.
  • குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

-தற்ஸ் தமிழ்-

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தவறு எங்கோ இருக்க யாரையெல்லாமோ தண்டிக்கிறார்கள். அவசர வெளியேற்றுப் பாதை எதையும் சிந்தித்து வடிவமைக்காத கட்டுமானங்கள்தான் அங்கு நிறைய உள்ளன. இன்னொரு பள்ளியில் தீவிபத்து வந்தாலும் உயிரிழப்புகள் பலமாக இருக்கவே வாய்ப்புகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
1406710585.jpg
கும்பகோணம் தீவிபத்து வழக்கின் தீர்ப்பு - உங்கள் கருத்து?
திருப்தி தருகிறது
 
9.13%
1,291 Votes
இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம்
 
64.99%
9,192 Votes
என்ன சொல்வது என்று தெரியவில்லை
 
25.88%
3,661 Votes

 

-தற்ஸ் தமிழ் நடாத்திய கருத்துக் கணிப்பில்.... வாசகர்களின் வாக்குகள்.-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.