Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறும்படம் - Elavu Jaffna Tamil Short film

Featured Replies

ஏழையின் சிரிப்பில்

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குறும்படம்

  • தொடங்கியவர்

Spare 5 minutes to watch this video with heart....Even if a single tear rolls out, then you are a real human.....

 

  • கருத்துக்கள உறவுகள்

பாசமலர் கனவிலேயே பல குறும்படங்கள் எடுத்து சாகடித்து விடுகிறார்கள். ஒரு சிறுவன் கேலி அவமானங்களைத் தாண்டி , நேர்மையாய் உழைத்து வாங்கிய முற்றுப்பெறாத வீதியில் வீசப்பட்ட கேக்கை விட ,

 

பொஸிட்டிவ் சிந்தனையுடன் வந்த கிழிந்த துண்டுப் பேப்பரில் பிஞ்ச தேன்குழல் துண்டு தித்திப்பாய் இருக்கு எனக்கு...!

  • தொடங்கியவர்

  • 5 months later...
  • தொடங்கியவர்

சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள்

 

அது ஓர் அழகான குடும்பம். கணவனும் மனைவியும் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டே தன் மகனோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னே நொறுக்குத் தீனி வகையறாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிறுவன் சற்றே தூரமாய் அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான்.

 
சைகை மொழியில் பெயரைக் கண்டுபிடித்து (டம்ப் ஷரட்ஸ்) விளையாடும் பழக்கம் கொண்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் மகன் செய்யும் சமிக்ஞையை வைத்து அதுவா? இதுவா? என ஆர்வத்துடன் கேட்கின்றனர். இல்லாத மீசையை முறுக்குவதாய்ச் சிறுவன் பாவலா காண்பிக்க 'மாமனார் - மருமகன்' என்ற அர்த்தம் கொண்ட படமொன்றைச் சொல்கின்றனர் பெற்றோர். அப்படியில்லை என்று மறுக்கும் சிறுவன், அதில் முதல் வார்த்தை மட்டும் என்கிறான்.
 
மாமாவா எனக் கேட்க ஆமாம் என்கிறான். அடுத்த வார்த்தை என்னவென்று அவர்களும் ஆர்வமாய்க் கேட்கின்றனர். தன் மீதே கைவைத்துக் கொள்ளும் சிறுவனைப் பார்த்து என்ன என்ன என்று பரபரக்கின்றனர். ஒரு வழியாய் மகன் தன்னைத்தானே குறிப்பிடுகிறான் என்பது அவர்களுக்குப் புரிகிறது.
 
முதல் வார்த்தை மாமா, இரண்டாவது என்னை, மூன்றாவது வார்த்தையில் என்ன இருக்கும் என யோசிக்கின்றனர். சிறுவனின் உடல்மொழி அந்தப் பெற்றோருக்கு மட்டுமல்ல... நமக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியது.
 
நம் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வை ஊட்டும் அந்தக் குறும்படத்தை நீங்களே பார்த்துணருங்கள்...
 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6969335.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குறும் படம்.

இணைப்புக்கு நன்றி.

  • 1 month later...
  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்
அவனால் அவளுக்கு நேர்ந்தது என்ன?
 
தலைநகர் டெல்லி முதல் தளவாய்ப் பட்டணம் வரை, பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பயம், இரவு வீட்டுக்கு பத்திரமாகப் போய்ச் சேருவோமா என்பதே!
 
நடக்கும் சம்பவங்களும், வெளிப்படும் செய்திகளும் எல்லோரின் மனதிலும் பயத்தை விதைத்து விட்டன. தவறான நோக்கோடு பார்க்கும், தொடரும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, செய்ய வேண்டிய வழிமுறைகளை ஃபேஸ்புக் முதல் பக்கத்து வீட்டு பாட்டி வரை அனைவரும் வாரி வாரி வழங்குகின்றனர்.
 
இங்கே ஓர் இளம்பெண் தனியாக நடந்து வந்துகொண்டிருக்கிறாள். இருள் சூழ்ந்த இரவு. வழியில் புகைப்பிடித்தவாறே ஓர் இளைஞன், அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 
பயத்தில் நகர எத்தனிப்பவளின் செல்பேசி அழைக்கிறது. தன் அம்மாவிடம் பேசிக்கொண்டே வீடு செல்லத் தொடங்குகிறாள். நடந்து செல்லச் செல்ல அந்த இளைஞன், இவளைப் பின் தொடர்வதைக் கவனிக்கிறாள். நடையில் வேகம் கூட்ட அவனும் அதற்கு இணையாக வருகிறான்.
 
ஒரு கட்டத்தில் அப்பெண் ஓடத் தொடங்க அவனும் ஓட்டமாய் வருகிறான். கால் தடுக்கி ஓரிடத்தில் கீழேயும் விழுந்துவிடுகிறாள். இளைஞன் அவளை நெருங்கிவிட, அடுத்து நேர்ந்தது என்ன? நீங்களே இந்த 2 நிமிட வீடியோவைப் பாருங்கள்...
 
நச்சென்று நாலே வாக்கியத்தில், ஓர் அவசியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது இக்குறும்படம்.

 


http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7173347.ece?homepage=true&relartwiz=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்


உன்னை அறிந்தால்... 'செல்ஃபி' குறும்படம்

 

ரயில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. குறுக்கெழுத்துப் போட்டியின் ஒரு கட்டத்தை நிரப்ப யோசித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பயணி. பதிலைக் கூறிவிட்டு, செல்பேசி அழைத்ததும் எழுந்து வெளியே வருகிறார் நம் கதாநாயகன்.

 
பேசி முடித்துப் பாக்கெட்டில் போட எத்தனிக்கும் சமயத்தில் தவறுதலாக முன்னால் நிற்கும் பயணியின் பேண்டில் கை படுகிறது. கண் முன்னேயே பிக்பாக்கெட்டா எனக் கேட்டு அசிங்கப்படுத்துகிறார் அப்பயணி. சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.
 
ரயிலை விட்டு இறங்கியதும், பரிசோதகர் எல்லோரையும் விட்டுவிட்டு இவரிடம் மட்டும் டிக்கெட்டைக் காட்டச்சொல்கிறார். சிறிது தூரம் சென்று டாக்ஸி அருகில் நிற்பவரிடம், டிரைவர் என்று நினைத்து வண்டி வருமா என இளம்பெண்ணொருத்தி கேட்கிறாள். இது போல வரிசையாய் நடக்கும் சில சம்பவங்கள் அவரைக் காயப்படுத்துகின்றன.
 
எப்போதுமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெண்ணி வருந்துகிறார் அவர். அவமானமாய் உணர்ந்து கலங்கி நிற்பவரின் முன்னால் நடக்கும் அந்த சம்பவம், மனவோட்டத்தையும், அவரின் மீதேயான மொத்த மதிப்பீடுகளையும் ஒற்றை நொடியில் தகர்த்தெறிந்து செல்கிறது. அப்படி என்ன நடந்தது? விடை, குறும்படத்தில்!
 
குறைவான வசனங்களில் சொல்ல வந்தது நிறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்ந்து ஒலிக்கும் இசை பார்ப்பவர்கள் மனதின் வழி ஊடுருவித் தாங்கவியலாப் பாரமொன்றை இறக்கி வைத்து விட்டுச் செல்கிறது.
 
எப்போதுமே, நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற நினைப்புதான் நம்மை அதிகம் அலைக்கழிக்கிறது; காயப்படுத்துகிறது. சுய பரிசோதனை தேவையோ என்று எண்ண வைக்கிறது.
 
வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையின் மூலமே மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும். நாம் எல்லோருமே நம் மனசைத்தான் முதலில் செல்ஃபி எடுக்க வேண்டும். தகுந்த காட்சியமைப்புகளோடு, தன்னை உணர்தலை மென்மையாய் உணர்த்துகிறது ஆகாஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட செல்ஃபி குறும்படம்.
 
  • 1 month later...
  • தொடங்கியவர்

என்னை மட்டும் மறந்திட்டியே - பிச்சைக்கார கடவுளே

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.