Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த நவராத்திரி நாட்கள்

Featured Replies

சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த ஏட்டுச் சுவடிகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும்.

முழுப்பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2006/09/blog...og-post_29.html

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் வந்து விழுமா காண பிரபா சார்

  • தொடங்கியவர்

ஏன் கறுப்பி, உங்களுக்கு இன்னும் ஏடு தொடக்கேல்லையே? :lol:

கரும்பே, கலாப மயிலே என்ற வரிகள் வரும் போது முகத்தில் முறுவல் பூக்க முந்திக்கொண்டே சகலகலா வல்லியே என்று எல்லோரும் ஒரு சேரப் பாடி வரிகளை முடிப்போம். அவல் தின்னவேண்டும் என்ற அவா வேறு:-)

கிகிகிகிகிகி கானாபிரபா! ஞாபகங்களை அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். அந்த பாடல் பாடி முடிக்க எவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க வேண்டி இருந்தது.

மீண்டும் அருமையான பதிப்பு

பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

தொடர்ந்தும் வாசித்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் ரமா:-)

பழைய மலரும் நினைவுகளை அழகாக அனுபவிச்சு எழுதி இருக்கிறீங்கள். ம்ம் இன்டைக்கு இங்கட யீனில செய்யுறாங்கள் பிரசாதம் வேண்டப் போவம் :lol::lol:

  • தொடங்கியவர்

வணக்கம் ரசிகை

தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்:-) பிரசாதத்தையும் மெயில்லை அனுப்பிவிடுங்கோ

நன்றி கானா பிரபா! சில மலரும் நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்ததற்கு!!

எங்கள் ஊரிலும் சரஸ்வதிபூஜை நாட்களை நினைவு படுத்துவது தனியார் கல்வி நிலையங்களே! அந்தக் காலத்தில் "அண்ணை ரைட்" என்று கே.எஸ்.பாலச்சந்திரனே அறிமுகமானது அங்குதான்!! கல்வி நிலையங்களின் போட்டியே ஊரே திருவிழாக் கோலம் கொண்டிருக்கும்!! பட்டிமன்றங்கள், நகைச்சுவை நாடகங்கள், பேச்சுக்கள், ....

சரஸ்வதிபூஜை என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது நாவற் பழங்களே!! சிறுவயதில் இந்தக்காலங்களில் நண்பர்களாக சில மைல்களுக்கு அப்பாலுள்ள நாவற்காட்டுக்கு பழம் பொறுக்க போய் வந்து வீட்டில் பிடிபட்டு வேண்டிக் கட்டிய அனுபவங்கள்!!

மறக்க முடியாத காலங்கள்!!! இப்போ????...

வணக்கம் ரசிகை

தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்:-) பிரசாதத்தையும் மெயில்லை அனுப்பிவிடுங்கோ

கானபிரபா சோ சாட் நான் போக லேட்டாப்போச்சு எனக்கு பிரசாதம் கிடைக்கலை ஆனால் எனது ரூமுக்கு சாப்பாடு தாற அன்ரி தந்தவ. நான் கொஞ்சம் உங்களுக்கும் பாசல் அனுப்பினான் கிடைச்சதா?? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானாபிரபா பளையநினைவுகளை மீட்டுப்பார்க்க வைத்தமைக்கு நன்றி. ஆனா மிஸ்டர் மகேந்திரத்தாரை நினைவூட்டி வயித்தில புளியைக் கரைச்சிட்டீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு நினைவுமீட்டல் இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்

ரசிகை, பிரசாதம் அனுப்பிய மெயில் கிடைத்தது. :-)

வாசித்துக் கருத்தளித்த நெல்லியான், பிறின்ஸ், இனியவள் உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

என்ன பிறின்ஸ், மகேந்திரன் மாஸ்டரின் அடியை இன்னும் மறக்கவில்லையோ?:-))

  • கருத்துக்கள உறவுகள்

மில்க்வைற் சோப் கனகராசா அவர்கள் இப்போது எங்கே? உண்மையில் ஒரு இனப் பற்றாளராக அவரைச் சொல்லலாம். முன்பு பனங்கன்று நாடுவதில் ஊக்குவிப்பு கூடச் செய்தவர் என நினைக்கின்றேன்!

  • தொடங்கியவர்

வணக்கம் தூயவன்

மில்க்வைற் கனகராசா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டர். அவருக்கு நேரடி வாரிசுகளும் இல்லை. இந்த ஆண்டு ஏப்ரல் தாயகம் போனபோது பார்த்தேன். மில்க்வைற் தொழிலகம் இருந்த இடத்தில் கணினிப் படிப்பு நிறுவனம் இருக்கின்றது. எமது சுதேச நிறுவனத்தின் கதி கண்டு கலங்கிப் போனேன்.

ஆமாம் பனை வளர்ப்பு, வேப்பம் கன்று நடல் என்று அவரின் சமூகப் பணிகள் ஏராளம்.

இன்று தான் உங்கள் 'அந்த நவராத்திரி நாட்கள்' வாசித்தேன். நானும் இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக உள்ள பாலா ஆசிரியரின் டியூட்டரில் படித்தேன். நாங்கள் அந்த டியூட்டரியை என்.இ.சி என்று தான் கூப்பிடுவோம்.

அங்கே நடந்த ஒரு வாணி விழாவுக்கு நானும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எங்களுடன் படித்த சிவராசலிங்கத்தினை நக்கல் அடிச்ச சம்பவமும் யாபகத்துக்கு வருகிறது. பிறகு பாலா ஆசிரியரிடம் கணித,விஞ்ஞான பாடங்களுக்கு பரிசில் வாங்கியதும் அருணா கோஸ்டியின் பாடல்கள் ரசித்ததும் யாபகத்துக்கு வருகிறது.

யூனியன் கல்லூரியில் ஆரம்ப பாடசாலையான தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளியிலும்,பிறகு யூனியனிலும் கல்ந்து கொண்ட சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் எனக்கு யாபகத்தில் வருகிறது.

கிரிமலை நகுலேஸ்வரகோவிலில் யாழ் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடாத்தப்பட்ட சகலாகலாவள்ளி மாலையில் பங்கேற்றுப் பரிசு பெற்றதும் யாபகத்துக்கு வருகிறது. எவ்வளவு இனிமையான நினைவுகள். எவ்வளவற்றை நாம் இப்பொழுது இழந்திருக்கிறோம். நல்ல பதிவு பிரபா

  • தொடங்கியவர்

வணக்கம் அரவிந்தன்

நீங்கள் சொல்லுவது சரி, என்.ஈ.சி தான் முன்னர் வாணி என்று அழைக்கப்பட்டது. இனிமையான காலங்கள் அவை. மறக்க்முடியுமா..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயவன்

மில்க்வைற் கனகராசா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டர். அவருக்கு நேரடி வாரிசுகளும் இல்லை. இந்த ஆண்டு ஏப்ரல் தாயகம் போனபோது பார்த்தேன். மில்க்வைற் தொழிலகம் இருந்த இடத்தில் கணினிப் படிப்பு நிறுவனம் இருக்கின்றது. எமது சுதேச நிறுவனத்தின் கதி கண்டு கலங்கிப் போனேன்.

ஆமாம் பனை வளர்ப்பு, வேப்பம் கன்று நடல் என்று அவரின் சமூகப் பணிகள் ஏராளம்.

மிகவும் சோகமான செய்தி! நாமே எமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கும், மற்றவர்களை விட எம் மண்ணில் பற்று வைக்க வேண்டும் என்பதையும் அவரின் செயற்பாடுகள் உணர்த்தின. நிச்சயமாக தமிழீழ மண் அவரைக் கெளவிக்கும்.

இப்படியான திட்டங்கள் எமக்குள் நிச்சயமாக உருவாக வேண்டும். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தாவர உற்பத்தி தொடர்பாக யாழ்பாணத்தில் பல செய்திருந்தது. அது பற்றிய பொருட்காட்சிகள் நல்லூர் திருவிழாவின் போது பார்த்தாக நினைவு!

அந்தப் பணி இப்போதும் தொடரும் என நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஓளியிலே தெரிவது தேவைதையா?... அதாவது நீங்கள் அழகி படம் பாக்கும் போது உங்களுக்கு யாபகத்தில் வரும் சுமித்திரா.......

வீட்டில தெரிஞ்சா சங்கு தான்.

86களில் வந்த சுரிதார்,பஞ்சாபி , இப்பொழுது தமிழ்பெண்கள் கோவிலுக்கு அணியும் ஆடையாகிவிட்டது. தமிழ்பெண்களின் பாரம்பர உடைகள் மெல்ல மெல்லமாக அழிந்து செல்கிறது. இனி வரும் காலங்களில் என்ன என்ன மாற்றங்கள் வரப்போகுதோ??. இன்னும் எத்தனை அடையாளங்களினை இழக்கப்போகினமோ?

  • தொடங்கியவர்

கந்தப்பு

பழைசையெல்லாம் ஞாபகப்படுத்தாதேங்கோ பிறகு தேவதாஸ் பாட்டு பாடவேண்டியிருக்கும்:-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.