Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரசிறியின் அனுமதி பெற்றே விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு செல்லவேண்டும்!

Featured Replies

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்படுமா என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், விக்னேஸ்வரனின் இந்திய விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமா இல்லையா என்பது பற்றி கெஹலிய எதனையும் குறிப்பிடவில்லை.http://www.pathivu.com/news/33637/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
"இந்திய பிரதமரை விக்னேஸ்வரன் சந்திக்க இலங்கை அரசின் அனுமதி அவசியம்"
 
140904153629_c_v_vigneswaran_624x351_bbc

வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன்

இலங்கையின் வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டுமானால் அவர் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

 

இலங்கை அரசியல் யாப்புக்கு அமைய உயர்பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் வெளிநாடு செல்லும்போது அரசிடம் முன்அனுமதி பெற்றுக்கொள்வது அவசியமென்று தெரிவித்த ரம்புக்வெல்ல மாகாண அமைச்சரொருவர் வெளிநாடு செல்லும்போது அவர் முதலமைச்சருக்கு அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அதே போலவே மாகாண முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அதற்கான அறிவித்தலை மாகாண ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கூறினார் அமைச்சர் ரம்புக்வெல்ல.

வடமாகான முதலமைச்சர் இவ்வாறான வேண்டுகோளொன்றை சமர்ப்பித்தால் எடுக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து கேட்டபோது அதனை தற்போது கூறமுடியாது என்று பதிலளித்த ரம்புக்கவெல்ல அதற்கான வேண்டுகோள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து ஆராய்ந்து தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியமை சம்பந்தமாக இலங்கை அரசுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று கூறிய அமைச்சர் இந்திய பிரதமரின் நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கம் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக கேட்டபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க முடியுமென்று கூறிய அமைச்சர் ரம்புக்வெல்ல ஆதற்கு முன் 13ஆவது அரசியல் திருத்த சட்டம் தொடர்ப்பாக நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் மாத்திரமே இந்த பேச்சுவார்த்தைகள் நடத்த முடயுமென்றும் தெரிவித்தார்.

வடமாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் அந்த மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. ஆனால் அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கம் போதிய நிதி வழங்காமை காரணமாகவே வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை தம்மால் முன்கொண்டு செல்ல முடியாத நிலை எற்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140904_slgovtwarnsvigneswaran.shtml

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.