Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடிக்க வேண்டும் மக்கள் புரட்சி.. மிரட்சி அல்ல..!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10710739_843061522379933_759443928257274

 

விழியோரங்கள் அரும்பிய

நீர் துடைத்து

கயிற்று நிரைகளுக்குள்

அடங்கி இருக்கும்

மக்கள் கூட்டம் நடுவிருந்து

கண்கள் அவனையே நோக்குகின்றன..!

 

பின்புலத்தில்

சீறிப் பாயும் புலியா

யாழ் இந்துவின்

உண்மைப் புதல்வனா

தாய் தமிழீழத்தின்

செல்லப் பிள்ளையா

மக்கள் விடுதலையின்

ஒற்றைக் குரலா...

கேள்விகள்

அவன் கோலம் கண்டெழுகின்றன..!

 

சின்னஞ்சிறுசுகளின் மாமா..

எங்கள் அண்ணா

உங்கள் தம்பி

பலரின் பிள்ளை

சிலரின் எதிரி

சிந்தனை ஒன்றை வைத்து

உண்ணா நோன்பிருந்து

மக்களை துயில்

எழுப்பிக் கொண்டிருந்தான்..!!

 

கனவுகள் அவன்

தனக்காக கண்டதில்லை..!

சனத்துக்காக தன் சாவிலும் கூட

மேலிருந்து

விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்...

தேகத்தையே

தேசத்தில் பிள்ளைகள் படிக்க

கொடுத்தவன்..

நம்பிக்கை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

 

இன்று...

வீழ்ந்துவிட்ட அவன் அடையாளங்கள்

வீழாது வைத்திருக்கிறது

இதயங்கள் எங்கும் அவன் நினைவுகள்.!!

உயிர் உள்ள வரை

தமிழன் என்ற இனம் உள்ளவரை

அண்ணன் திலீபன் வாழ்வான்

அது உறுதி..!

 

ஆனால்...

அவன் உயிர் தந்த இலட்சியம்..

செத்து விடுமோ..

சாகடிக்கப்படுமோ...??!

வினாக்கள் விளைகின்ற காலமிதுவாகிப் போனது

துரதிஸ்டம்..!!

இந்த நிலை மாற வேண்டும்

சுதந்திர தமிழீழம் மலர வேண்டும்

அதுக்கு வெடிக்க வேண்டும்

மக்கள் புரட்சி..

மிரட்சி அல்ல...!!!!

Edited by nedukkalapoovan

நாங்கள் சும்மா இருந்தாலும்

நாடு விடுவதாயில்லை...

எழுதுவதால் மட்டுமல்ல

கவிதை வாழ்வதாலும் வந்து சேரும்

எல்லோர்க்கும் ஒருசமயம்

கவிதையாய் வாய்க்கும்.

 

 

உலகில் பல ஆயிரம் வருடங்களில் பல ஆயிரம் ஆயிரம் புரட்சிகளை மக்கள் முன்னெடுத்தனர். இப்புரட்சிகள் எல்லாம் சமுதாயத்தில் அடிப்படை இயக்கவிதி மாறாது, அதன் மேல் அடுக்குகளில் மட்டுமே புரட்சிகர மாற்றத்தை நடத்தின.


இந்தப் புரட்சிதான் சமுதாயத்தின் அடிப்படை இயங்கு விதியை கேள்விக்கு உள்ளாக்கி, அதை தலைகீழாக புரட்டிப் போட்டு நொருக்கியது. இதனால் தான் இந்தப் புரட்சி உலகில் நடந்த எல்லாப் புரட்சியையும் விட கடும் எதிர்ப்புக்குள்ளாகியது.

யாழ்குடாவில் புலிகள் மீது வலிந்து தாக்குதலை ஒருதலைப்பட்சமாக நடத்திய போது, அதை பாரிய களையெடுப்பு மூலம், அதன் நிழலைக் கூட அழித்தொழிப்பு மூலம் சிதைத்தனர். அவை மனித உரிமை மீறலாக வெளிவந்த போது, அவற்றை மூடிமறைக்க அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர், கையாளுகின்றனர்.

எல்லா மனித உரிமை மீறலையும், வாய் திறந்து கதைப்பது இலங்கையில் குற்றமாகியுள்ளது, அமுல்படுத்தியுள்ளனர். அதையே இன்று அரசு செய்கின்றது. எங்கும் மனித அவலங்கள். எல்லையற்ற பாசிச வெறியாட்டம். இந்தியா முதல் அமெரிக்கா வரை இதற்கு ஒத்துழைப்பும், வழிகாட்டலும் செய்கின்றது. சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளுக்கும், இதே கதி தான்.

வாய் திறவாதே என்பதே தேசியம் முதல் புலியொழிப்பு வரை சொல்லும் செய்தி. இதைப் பற்றி பேசக் கூட, இந்த சமூகத்தில் யாரும் கிடையாது. ஒன்றில் புலி அல்லது புலியெதிர்ப்பில் கூதல் காய்ந்து கொண்டு, வெறியாட்டம் போடுகின்றனர். சமூகம் நடுங்கும் வண்ணம், படுகொலை அரசியல். இது தேசியத்தின் பெயரிலும் புலி ஒழிப்பின் பெயரிலும் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

இன்று நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு அடியும் எதிரியின் பிடிக்கு உள்ளாகின்றது. மார்க்சிய விரோதிகளை, திரிபு வாதிகளை, பல வண்ணக் கோட்பாட்டுக் கனவான்களை கதிகலங்க வைக்கின்றது, ஒப்பாரி வைக்க வைக்கிறது. அவதூறு பொழிய வைக்கிறது.

 

 

ஏட்டிலடங்காத கருத்துக்கள் நாங்கள்

எழுத்திலடங்காத உணர்ச்சிகள் நாங்கள்

வீட்டுக்கடங்காத சுயநலம் நாங்கள்

சும்மா இருப்போமா?

அம்மாவின் வயிற்றிலும்

சும்மா இல்லாதவர்கள் நாங்கள்,

இரத்தக்கனவினில் மெல்ல வளர்ந்து

இருட்டின் இமைகளை

எட்டி உதைத்து

வெளிச்சம் பார்க்க வெளியே வந்தவர்கள் நாங்கள்

நாடே இருட்டிக் கிடக்கையிலே

நாங்கள் சும்மா இருப்போமா?

பாட வாருங்கள் கவிஞர்களே!

பகலைப் பொழியும் கவிதைகளே...!!

 

Edited by மாறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச வேண்டியதை.. நியாயத்தோடு பேச முன்வராத வரை.. அநீதிகள் ஓயாது. புலிகள் மீது குற்றங்களை அடுக்கத் துடிப்பவர்கள்... பெரிய மனித இன படுகொலையாளர்களை பத்திரமாக பாதுகாக்க கங்கணம் கட்டி நிற்பதற்குப் பெயர்.. மனித உரிமை ஆர்வம் என்றால் அப்படி ஒன்று மக்களுக்கு அவசியம் இல்லை..!!

 

மேலும்.. இது தனக்காக வாழாது தன் சேதத்துக்காகவும் மக்களுக்காகவும் போராடி வீழ்ந்த ஒரு தியாகியின் நினைவு கூறல் தலைப்பு.

 

திலீபன் தப்புன்னா.. எத்தனையோ ஆயிரம் பேரை புரட்சி என்று தூண்டி.. வெள்ளையர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்கிய காந்தியும் தப்புத்தான். அதனை துணிவிருந்தால்..யாராவது.. எடுத்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்...?????!

 

புலிகளுக்கு ஒரு நீதி.. காந்திக்கு ஒரு நீதி கிடையாது. இந்தியாவுக்கு ஒரு நீதி.. தமிழீழத்துக்கு ஒரு நீதி.. ஸ்காட்லாண்டுக்கு ஒரு நீதின்னு கிடையாது.  எல்லோரும் சுதந்திரத்தை சுகிக்க விரும்பிய மக்களை நாட்டை பிரதிநிதிப்படுத்துவோரே..!!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"இன்று...

வீழ்ந்துவிட்ட அவன் அடையாளங்கள்

வீழாது வைத்திருக்கிறது

இதயங்கள் எங்கும் அவன் நினைவுகள்.!!

உயிர் உள்ள வரை

தமிழன் என்ற இனம் உள்ளவரை

அண்ணன் திலீபன் வாழ்வான்

அது உறுதி..!"

என் கருத்துகளை நீங்கள் தவறாக புரிந்து உள்ளீர்கள் நண்பரே ...

 

உங்களுக்காக இங்கு போலீசில் தடியடி வாங்கியவரில் நானும் ஒருவன்

 

என்னை உங்களுக்கு தெரியாது நண்பரே...

 

நான் அதை வைத்து இங்கு பெருமை கொண்டாடவோ இல்லை பரிதாபம் தேடவோ இல்லை..

 

கருத்துக்களை நிதானமாக வாசிங்கள் நண்பா..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கருத்துகளை நீங்கள் தவறாக புரிந்து உள்ளீர்கள் நண்பரே ...

 

உங்களுக்காக இங்கு போலீசில் தடியடி வாங்கியவரில் நானும் ஒருவன்

 

என்னை உங்களுக்கு தெரியாது நண்பரே...

 

நான் அதை வைத்து இங்கு பெருமை கொண்டாடவோ இல்லை பரிதாபம் தேடவோ இல்லை..

 

கருத்துக்களை நிதானமாக வாசிங்கள் நண்பா..!

 

நீங்கள் தவற விட்டிருந்த ஒற்றைச் சொல்.. உங்கள் மொத்தக் கருத்தையும் சந்தேகிக்க வைத்துவிட்டது. நீங்கள் திருத்திக் கொண்டிருக்கிறீர்கள். நாங்களும் திருத்திக் கொள்கிறோம். :icon_idea::)

:)    உண்மைதான் நண்பரே மீது என்கிற ஒருவார்த்தை மொத்த கருத்தையும் மாற்றிவிட்டது

 

அதனால்தான் சிவப்பு வர்ணத்தில் திருத்தியுள்ளேன் ...

 

 

 

 

உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி நண்பா ..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மாறன் நிலைமையை சரிவர புரிந்து கொண்டதற்கு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபன் அண்ணா நினைவாக...

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்ககங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.