Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுகிறார் அமைச்சர் ரம்புக்வெல்ல! - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுகிறார் அமைச்சர் ரம்புக்வெல்ல! - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சாடல்.

[sunday 2014-09-21 06:00]
Jana-150-news.jpg

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். செட்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை அரசியலில் இவ்வளவு அமர்களம் நடந்தும் இவ்வளவு ஆராவாரம் நடந்தும் இவ்வளவு இன சம்ஹாரம் நடந்தும் எதுவுமே நடவாதது போலவும், வேற்றுக்கிரகம் இருந்து நேற்று வந்தவர் போலவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல என்ன பிரச்சினை என்று வினவுவது அவரது புத்திசுவாதீனத்தை கேள்விக்குறியாக்குகின்றது.

  

அரச தலைமை தொடக்கம் அமைச்சர் குழாம் வரை அன்றாடம் வெளியாகும் பத்திரிகை செய்திகளினை காணும் போது இவர்கள் தாம் என்ன கூறுகிறார்கள் என்ற சுயநினைவுடன் கூறுகிறார்களா அல்லது கனவுலகில் இருந்து கண்டபடி புலம்புகின்றார்களா என்று நினைக்கத் தோன்றுகின்றது. நாளுக்கு நாள் ஒவ்வொரு அமைச்சரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதபடி, ஒருவருக்கொருவர் முரண்பட்டபடி, கருத்துக்களை கூறுவது இன்று சாதாரன விடயமாகி விட்டது. உதாரணமாக ஒரு நாள் ஒரு அமைச்சர் கூட்டமைப்பு அழைப்பு விடின் கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுக்கு அரசு தயார் என்று கருத்து வெளியிடுவார் மறுநாள் இன்னொரு அமைச்சர் எந்த விடயமானாலும் பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையிலே இடம் பெறும் என்பர்.

அதனைப் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்பது போன்ற நிலையில் உள்ளதாக நினைக்கும் போது இன்னொரு அமைச்சர் பேசுவதற்கு என்ன இருக்கின்றது. பிரச்சினை இருந்தால் தானே பேசுவதற்கு எனவே பேச்சுவார்த்தை எந்தவொரு தரப்புடனும் தேவையில்லை என்பதாக கருத்தை தெரிவிப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறுகிறார் பிரச்சினை என்னவென்றும், தீர்வு என்னவென்றும் கூட்டமைப்பினர் கூறவேண்டும் என்று புதிய புரளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர் தம் பிரச்சினை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் காலக்கெடு விதித்தமை தொடர்பாக பத்திரிகையாளர் வினவிய போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உண்மையிலே கெஹலிய ரம்புக்வெல்ல சுயநினைவிலிருந்து தான் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தியிருந்தாரா என ஐயப்படுகின்றேன். ஏனெனில் இந்தநாட்டில் இனப்பிரச்சினையானது வரலாற்றுக் காலம் முதல் இருந்து வந்துள்ளது என்பதும் இது சாத்வீக முயற்சியால் தமிழர் தரப்பினரால் தீர்க்க முடியாதவேளை ஆயுத வழியை இளைஞர்கள் நாடினர் எனவும் அதுவும் முடியாத நிலையில் மீண்டும் அமைதி வழியிலும் பேச்சுவார்த்தை முறையிலும் பிரச்சினையினை தீர்க்க இருதரப்பும் முனைவதும் என்ன வெறும் பம்பாத்து என்றும் விளையாட்டு என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல கருதுகின்றாரா? அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் இருந்தவர். பின்னர் ‘பல்டி“ மூலம் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களைப் பின்தள்ளி அரசுக்குள் முன்னிலை வகிக்கின்றவர்.

எனவே இரு தரப்புக்களுமே இலங்கையில் இனப்பிரச்சினை உண்டு என்றும் அது தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது தெளிவு. அவ்வாறு ஏற்றுக் கொண்டுள்ளமை தான் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் தமிழ்மொழி உபயோக மசோதா, மாவட்ட அபிவிருத்தி சபைகள் முறை, இந்திய - இலங்கை ஒப்பந்தம், 13வது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் என்பனவெல்லாம் ஏற்படக்காரணம் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வில்லையா? அல்லது புரிந்து கொள்ளும் நிலையில் இல்லையா? மாறிமாறி ஆட்சி செய்த இருகட்சிகளும் வட்ட மேசை மகாநாடு, சர்வ கட்சி மகாநாடு, திம்பு மகாநாடு, நோர்வே, பாஙஹொக், ஜப்பான் என்று நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதும் யுத்தம் நடைபெற்ற வேளையில் இரு தரப்பு யுத்த நிறுத்தம் ஒப்பந்தமூலம் செய்து கொண்டமையும் நோர்வே நாடு அனுசரனையாகச் செயற்பட்டமைக்கும் காரணம் என்ன?

இவையாவும் இலங்கையின் இனப்பிரச்சினை ஒன்று உண்டு என்றும் அவை தீர்க்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை தெரியப்படுத்த வில்லையா?

இத்தனைக்கும் இன்றைய ஜனாதிபதி கூட தமது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம், அரச கொள்ளைப் பிரகடனம், இருதரப்பு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்கள் எல்லாவற்றிலுமே என்னிடம் பிரச்சினைக்கு தீர்வு உண்டு என்றும், தமிழ்மக்கள் எனது மக்கள், நான் உங்கள் ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று சிங்களத் தமிழில் கூறியது எதற்காக. எல்லாவற்றுக்கும் மேலாக 13+ என்ற எண்ணக்கருவை தோற்றுவித்தவரே எமது ஜனாதிபதி அவர்கள் தானே என்பதை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறியவில்லையா?

இலங்கை அரசியலில் இவ்வளவு அமர்களம் நடந்தும் இவ்வளவு ஆராவாரம் நடந்தும் இவ்வளவு இன சம்ஹாரம் நடந்தும் எதுவுமே நடவாதது போலவும், வேற்றுக்கிரகம் இருந்து நேற்று வந்தவர் போலவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல என்ன பிரச்சினை என்று வினவுவது அவரது புத்திசுவாதீனத்தை கேள்விக்குறியாக்குகின்றது. இந்த வேளையில் ஜனநாயகம் பற்றி அரசியலறிஞன் ஒருவன் கூறியது எனக்கு வந்து தொலைக்கின்றது. “ஜனநாயகம் என்பது தலைகளின் எண்ணிக்கையை கருதுகின்றதே தவிர தலைகளை உடைத்து இருப்பதை கருதுவதில்லை என்று” புரிந்தால் சரி.என்றார்.

 

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு அறிக்கை. மாலையில் ஒரு அறிக்கை என அறிக்கைகளை போதையில் விடும் ஒருவர். அதாவது போதைக்கு முன் ஒரு அறிக்கை போதைக்கு பின் ஒரு அறிக்கை என வெளியிடுபவர்.

  • கருத்துக்கள உறவுகள்
புத்திசுவாதீனம் அற்றவரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களைப் 'புத்திசுவாதீனம் அற்றவர் போல் பேசுகிறார்' எனச் சொல்வது கண்டிக்கப்பட வேண்டியது. ஊனமுற்றவர்களை உதாசீனப்படுத்துவது மிக மிகத் தவறான செயல். :icon_mrgreen:
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.