Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஆதரவு! ஐரோ. ஒன்றியம் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஆதரவு! ஐரோ. ஒன்றியம் அறிவிப்பு!

[Thursday 2014-09-25 23:00]
Eu-250914-300-seithycom.jpg

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளுக்கு பெரும்பகுதியான நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

  

மொன்டன்கரோ, பிரித்தானியா போன்ற நாடுகளும் பூரணமான ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளன. வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் மற்றும் ஜனநாயக நெருக்கடி நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சாட்சியமளிப்பவர்களை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடாது எனவும் நெருக்குதல்களை வழங்கக் கூடாது எனவும் அயர்லாந்து தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு ஆக்கபூர்வமான வகையில் இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் விசாரணகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் நெருக்குதல்களுக்கு உள்ளாவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அயர்லாந்து பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு சில நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனா, ரஸ்யா, கியூபா, வெனிசுலா போன்ற நாடுகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. உள்நாட்டு ரீதியான விசாரணைகளுக்கு ஆதரவளிக்க்பபட வேண்டுமென கோரியுள்ளன. இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக்கூடாது என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஒரு தொகுதி நாடுகள் ஆதரவளிப்பதுடன் ஒரு தொகுதி நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், சர்வதேச விசாரணைளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=117502&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.