Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

 

 

ரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது; ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம்; நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்!’ - இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா!

 

'தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது, 'அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்!’ என்றார்.

 

குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து, 'கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார் ஜெயலலிதா!

 

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்புரத்தில் 'ஜெய விலாஸ்’, 'லலித விலாஸ்’ எனப் பெரும் பங்களாக்களில் அவரது மூதாதையர் வாழ்ந்தார்கள். அதன் நினைவாகத்தான் 'ஜெயலலிதா’ என இவருக்குப் பெயர் சூட்டினார்கள். இன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கும், 'ஜெயலலிதா இருக்கும் சிறை’ என்ற பாரம்பர்யம் தொற்றிக்கொண்டுவிட்டது. காலம் வழங்கிய அருட்கொடையான ஆட்சி அதிகாரத்தை, அதன் அருமை தெரியாமல் விளையாட்டுத்தனமாக உருட்டி விளையாண்டதன் விளைவு... வினையாகி, இன்று இருட்டுச் சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது ஜெயலலிதாவை!

 

p118b.jpg

 

'எனக்கு என்ன குடும்பமா... குட்டியா? தமிழக மக்கள்தான் என் குடும்பம்’ எனச் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா, யதார்த்தத்தில் அப்படி வாழவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 66 கோடி ரூபாய். இந்த 66 கோடியின் மதிப்பை 1991-ம் ஆண்டுக் கணக்கின்படி மதிப்பிட வேண்டும். 'இந்தச் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 3,600 கோடி ரூபாய்க்கும் மேல்’ என அரசு வழக்குரைஞர் பவானி சிங், சிறப்பு நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளார். ஓர் அரசு ஊழியர் தன்னுடைய ஒவ்வொரு பைசாவின் வரவுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்ற, மிகச் சாதாரணமான வழிமுறையைக்கூட உதாசீனம் செய்துவிட்டு நினைத்தை எல்லாம் வளைத்து  வசப்படுத்தி ஆண்டிருக்கிறார்கள்.

 

2013 அக்டோபர்  31-ம் நாள், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் வழக்குரைஞர் குமாரைப் பார்த்து, 'இது என்ன மாதிரியான வழக்கு? சுருக்கமாகச் சொல்லுங்கள்’ என்று கேட்டார் நீதிபதி. பொதுவாக இந்த மாதிரியான இயல்பான தன்மையை நீதிபதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும், அரசு வழக்குரைஞர்களிடம்தான் முதலில் கேட்பார்கள். ஆனால் குன்ஹா, எதிர்த் தரப்பில் இருந்து தொடங்கினார். குமார் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு, 'இப்படி பல குளறுபடிகள் உள்ள வழக்கு இது’ என முடித்தார். உடனே நீதிபதி, 'எல்லா வழக்குகளிலும் குளறுபடி இருக்கத்தான் செய்யும். அதைக் களைவதுதான் நம்முடைய பொறுப்பு’ என்றார். வார்த்தையைக் கவனியுங்கள். 'நீதிமன்றத்தின் பொறுப்பு’ எனப் பிரித்துச் சொல்லாமல், 'நம்முடைய பொறுப்பு’ என ஜெயலலிதா தரப்பையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

 

இந்த வழக்கில் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக குமார் வாதிட்டபோது, கொஞ்சம் குரலை உயர்த்தினார் நீதிபதி. 'யாரும் இந்த நீதிமன்றத்தில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’ என்று சொன்னார். பொதுவாக, 'எந்த வழக்காக இருந்தாலும் பேப்பர் பேசும்’ என்பார்கள். அந்த மாதிரி, தன் முன்னால் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பேன் என்பதைச் சொல்லாமல் சொன்னார் நீதிபதி.

 

 

மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கே நடந்தது!

1. 1991-96 வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கும் அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

2. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார்கள். இது இந்தியத் தண்டனைச் சட்டம் 109 (குற்றம் செய்யத் துணிதல்), 120-பி (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின்படி குற்றம்.

 

 

3. 66 கோடி ரூபாய்க்கு சரியான கணக்கு ஒப்படைக்காததால், ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ பிரிவின்படி குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள்.

 

- இந்தக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது. குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாகச் சொன்ன நீதிபதி, வழங்கிய தண்டனைதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல, ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்குமே அடிவயிற்றைக் கலக்கிவிட்டது.

p118a.jpg

 

 

ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அளித்துள்ள தீர்ப்பு, பொதுச் சொத்தை தன் சொத்தாகச் சுருட்டும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. சில நாட்களுக்கு முன் வட மாவட்டம் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர், 'ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் யாரும் பட்டாசு எல்லாம் வெடிக்க வேண்டியது இல்லை. வீட்டுல அமைதியா இருங்க’ என்றாராம். அவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. அதாவது, ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரையுமே ரத்தம் உறைய வைத்துள்ளது இந்தத் தீர்ப்பு.

 

 

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் போய்விட்டு, அந்த வழக்கையே முடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு, தன் வாழ்நாள் முழுக்க அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்துவரும் நிலைக்கு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. குற்ற வழக்கில் தண்டனை தரப்பட்டதும் பதவி போய்விடும் என்பதே அந்த உத்தரவு. அதேபோல், ஒரு குற்ற வழக்கை எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டும் என்பதையும் நீதிபதி குன்ஹா காட்டிவிட்டார். வெறும் சிறைத் தண்டனைதானே என ஜாமீன் வாங்கிவிட்டு வீட்டில் ஹாயாக இருந்துவிடக் கூடாது என்பதால், மொத்தச் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், சம்பாதித்த சொத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கவும் வழிகாட்டி இருக்கிறார் குன்ஹா. எடியூரப்பாக்களையும், ரெட்டி சகோதரர்களையும்கொண்ட கர்நாடக மாநிலத்தில் இருந்து நீதி, நேர்மை, நியாயத்துக்கு ஆதரவான குரலாக நீதிபதி குன்ஹா உயர்ந்து நிற்கிறார்.

 

 

திருமலைப்பிள்ளை வீட்டில், தன் தலையணைக்கு அடியில், 100 ரூபாயை வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜரையும், நுங்கம்பாக்கம் வங்கியில் 5,000 ரூபாயை வைத்திருந்த பேரறிஞர் அண்ணாவையும் கொண்ட தமிழகத்தில் இருந்து, ஊழல் வழக்குக்காக முதலமைச்சர் பதவியில் இருந்தபடியே சிறைக்குப் போன அவமானம் ஜெயலலிதாவால் நேர்ந்துள்ளது. இந்தியாவில் இனி ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் முன்னதாக ஜெயலலிதாவின் பெயர் உச்சரிக்கப்படும். அந்துலேவை அவரது மாநிலத்துக்காரர்களே மறந்துபோயிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் பேசப்படும்போதெல்லாம் அந்துலேவின் வழக்கும் பேசப்படுவதைப்போல ஜெயலலிதாவும் இனி நினைக்கப்படுவார்.

 

p118.jpg

 

சிறுவயதில் தந்தையை இழந்து, வளர்ந்து நின்றபோது தாயை இழந்து, வழி சொல்லத் தேவையானபோது அண்ணனை இழந்து, அரசியல் பாதை தொடங்கியபோது குருவான எம்.ஜி.ஆரை இழந்து தனியாக இருந்த ஜெயலலிதா, இப்போது பதவியை, மரியாதையை, நிம்மதியை இழந்து நிற்கிறார். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அந்தத் தண்டனை காலம் முடிந்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படிப் பார்த்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. அப்படியானால் ஜெயலலிதா இனி தேர்தலில் பங்கேற்பதே சிரமம்தான். கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் விடுதலை பெற்று வெளியில் வந்தால்தான், பத்தாண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடவே முடியும். ஒருவேளை அப்படி எதுவும் நடக்காதபட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்தாலும் ஜெயலலிதா வெளியில் இருந்து அதிகாரம் செய்ய முடியுமே தவிர, அதிகாரத்தை அவர் நேரடியாகச் சுவைக்க முடியாது. இது அவரை மனரீதியாகவும் பாதிக்கச் செய்யும்.  

 

இந்தச் சட்ட, நீதிமன்ற நடைமுறைகள் சாதாரணமாக நடந்தாலே இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிடும். ஊழல் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் எப்போதும் சாட்டையைச் சுழற்றிவரும் நிலையில், ஜெயலலிதா முழுமையாக வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது அசாதாரணமான விஷயமே. இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் காலதாமதங்கள் ஏகத்துக்கும் அதிகரிக்கும். அரசியலில் அபார வெற்றிக்குப் பிறகு, மிகப் பெரிய வாழ்க்கைத் தோல்வியை அடைந்துவிட்டார்.  

 

ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா?  

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99434


நன்றி: ஆனந்த விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

------

 

மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கே நடந்தது!

1. 1991-96 வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கும் அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

 

2. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார்கள். இது இந்தியத் தண்டனைச் சட்டம் 109 (குற்றம் செய்யத் துணிதல்), 120-பி (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின்படி குற்றம்.

 

3. 66 கோடி ரூபாய்க்கு சரியான கணக்கு ஒப்படைக்காததால், ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ பிரிவின்படி குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள்.

------

நன்றி: ஆனந்த விகடன்

 

1991-96 வரை முதலமைச்சராக இருந்த காலத்தில்,

அவர் முதலமைச்சருக்கு உரிய சம்பளமாக... ஒரு ரூபாய் மட்டுமே. பெற்றுக் கொண்டார்.

அது எப்படி..... 66 கோடி ரூபாய் ஆனது என்பதே, வழக்குப் போட்ட சுப்பிரமணிய சாமிக்கு எரிச்சல்.

 

ஆனந்த விகடன், ஏன்... ஜெயலலிதாவில் காட்டமாயிருக்கு?

முன்பு.... அந்த வார இதழில், நீண்ட காலமாக பணியாற்றிய காட்டூனிஸ்ட் மதன் என்பவரையும், 

அவரின் கேள்வி பதில் ஒன்றில், ஜெயலலிதா படம் போட்ட சர்ச்சை காரணமாக நீக்கப் பட்டதாக.... ஞாபகம்,.

முன்பு.... அந்த வார இதழில், நீண்ட காலமாக பணியாற்றிய காட்டூனிஸ்ட் மதன் என்பவரையும், 

அவரின் கேள்வி பதில் ஒன்றில், ஜெயலலிதா படம் போட்ட சர்ச்சை காரணமாக நீக்கப் பட்டதாக.... ஞாபகம்,.

 

மதனின் கேள்வி பதில் பகுதியில் அமைச்சர் ஒருவர் காலில் விழும் படத்தினை விகடன் பிரசுரித்து இருந்தது. அக்கால கட்டத்தில் மதன் ஜெயா ரீவியில் சினிமா திரை விமர்சனம் செய்து கொண்டு இருந்தமையால், அந்த தொழிலுக்கு ஆப்பு வந்து விடும் என்பதற்காக அப்படத்தினை தவறுதலாக போட்டதாக ஒரு அறிவிப்பை போடச் சொல்லி மதன் விகடனுக்கு அழுத்தம் கொடுத்து இருந்தார். இவ்வாறு சார்பு நிலை எடுப்பவரால் நடுநிலையுடன் கார்டூன் உட்பட எதனையும் செய்ய முடியாது என்று சொல்லி விகடன் மதனை வெளியேற்றியது.

 

பார்க்கவும்: http://www.vinavu.com/2012/05/28/madhan-ousted-from-vikatan/

 

மற்றது, விகடன் இக் கட்டுரை சரியான விடயத்தினைத் தானே எழுதியுள்ளது? திமுக மீது, முக்கியமாக கருணாநிதி மீது காட்டமாக பல கட்டுரைகள் எழுதியும் வருகின்றது.

 

இன்னொரு விடயம்: இரண்டு வாரங்களுக்கு முன் ஜூனியர் விகடனில் வெளியான ஒரு கட்டுரைக்காக ஜெயா ஜூனியர் விகடன் ஆசிரியர் மீது அவதூறு வழக்கு போட்டு இருந்தார் :)

Edited by நிழலி
இணைப்பை கொடுக்க

  • கருத்துக்கள உறவுகள்

------

மற்றது, விகடன் இக் கட்டுரை சரியான விடயத்தினைத் தானே எழுதியுள்ளது? திமுக மீது, முக்கியமாக கருணாநிதி மீது காட்டமாக பல கட்டுரைகள் எழுதியும் வருகின்றது.

 

இன்னொரு விடயம்: இரண்டு வாரங்களுக்கு முன் ஜூனியர் விகடனில் வெளியான ஒரு கட்டுரைக்காக ஜெயா ஜூனியர் விகடன் ஆசிரியர் மீது அவதூறு வழக்கு போட்டு இருந்தார் :)

 

(கொஞ்சம் நீளமான... பிளாஷ் பக். :D)

நான்... முன்பு,  பலவருடங்களாக... ஆனந்த விகடன், குமுதம்,  ஜூனியர் விகடன்,  ஜூனியர் போஸ்ட், சாவி, குங்குமம் போன்ற வார இதழ்களுக்கு சந்தா கட்டி, அவற்றை தபால் மூலம் பெற்றுக் கொண்டேன்.

பின்... இங்குள்ள தமிழ்க் கடைகளில், ஐரோப்பிய 50 சென்ருக்கு (சதம்) விற்றார்கள். அது அங்கு தபாலில் வாங்குவதை விட மலிவாக இருந்ததால்... வாங்கினேன்.

 

பிறகு... சில மாதங்களில் கடைக்காரர் அந்த இதழ்களின் விலையை, ஒரு ஐரோ ஆக்கினார், என்ன செய்வதென்று... பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கினேன். பின்பு.... 1 €, 20  சென்ற் ஆக்கினார். அத்துடன்... இவற்றை... வாங்கி வாசிப்பதை, நிறுத்தி விட்டேன்.

 

ஆதலால்..... கருணாநிதி மீது, விகடன் காட்டமாக எழுதுவதை, வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 

நீங்கள் சொன்னால்.... நான், நம்புறன் நிழலி. :)  

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை ஆழும் கனவும் போய் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவியும் போய்விட்டது.

இனி என்ன ஆனாலும் அவர் அரசியலுக்கு வந்தே ஆவார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை ஆழும் கனவும் போய் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவியும் போய்விட்டது.

இனி என்ன ஆனாலும் அவர் அரசியலுக்கு வந்தே ஆவார்

 

தமிழ் நாட்டிலும்..... ஆந்திர, கேரள, கர்நாடக ஒரு சில பகுதிகளிலும்.....

ஒரு கட்சியை... நடத்திக் கொண்டு, இந்தியாவை ஆளும் பிரதமராக வர. எவராலும் முடியாது என்பதை.... ஜெயலலிதா நன்கே அறிந்து வைத்திருப்பார் என்று, நான்... நம்புகின்றேன், வாத்தியார்.

 

சும்மா.... விசிலடிச்சான், குஞ்சுகளுக்ககாக.... அவர் அப்படி, அகன்ற மனதுடடன் சொல்லி... சில தொழிலதிபர்களையும், தன் வசமாக்க... மேடைப் பேச்சுக்களில்... குறிப்பிட்டிருக்கலாம்.

 

துணிச்சல் உள்ள, அந்தப் பெண்மணி செய்த....

வளர்ப்பு மகன் சுதாகரன் கலியாணம், இன்று அவரை.... ஜெயிலில் தள்ளி விட்டது.

 

இவ்வளவிற்கும்.... சுதாகரன் கலியாணம் கட்டியது, சிவாஜி கணேசனின் பேத்தியை என்று, நினைக்கின்றேன்.

அந்த விடயத்தில்..... சிவாஜி கணேசனும் இந்த உறவால், அவமானப் பட்டார்.

 

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவென்றால்.....

அட்ரஸ் இல்லாத ஆக்களால், அட்ரஸ் உள்ள ஆக்கள்.... அவமானப் பட வேண்டி வரும். :)   

அம்மா சொத்துகுவித்தது ஒரு பக்கம்மிருக்க,சுப்பிரமணியசுவாமி ஒரு தலையிடி கொடுக்கும் மனிதர்.என்னைப்பொறுத்தவரையில் பணத்துக்காக காரியம் பண்ணுவார் அதைவிட இவர் யூதர்கள்மீது பாசமானவர்.இவர் சைராகூஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் கூட,அந்தக்காலங்களில் யூதர்களின் ஒன்று கூடல் நிகழ்வுகளில் கிளிங்ரன் புஸ் போன்றவர்கள் தான் உரையாற்றுவார்கள்.இவர் பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளாராம்.இப்படியான சுப்பிரமணிய சுவாமி ஜெயலலிதாவின் மீது கேஸ்போட போதுமான ஆதாரமிருந்தது.போட்டுவிட்டார்.ஆனால் ஜெயலலிதாவோ ஒரு இரும்புப்பெண்மணிதான்.இந்த பதினெட்டு வருட காலத்தில் தி முகாவை பிழவு பட வைத்தார்.தமிழ் நாட்டில் மக்களுக்காக பணத்தை வாரியிறைத்து மக்களை அவர் பக்கம் இழுத்தார்.இந்த வழக்கின் தீர்ப்பின் பின்ணணியிலிருந்தது காங்கிரஸ்தான்,காரணம் அம்மா ஓகே சொல்லியிருந்தால் காங்கிரஸ் மத்தியிலிருந்திருக்கும். ஆனால் சுப்பிரமணிய சுவாமி தீர்ப்புசொல்லப்பட்ட நேரம் பெங்களூரிலிருந்திருக்கிறார்.தீர்ப்பு கூறி முடிய பத்திரிகைகளுக்கு அளித்த செவ்வியில் எனது அடுத்த இலக்கு ராகுல் மற்றும் சோனியா தான் என்று சொல்லியிருக்கின்றார்.இங்கு காங்கிரஸ் காப்பாற்றப்படுகின்றது.இவரது அடுத்த இலக்கு திமுகாவோ தெரியாது. இதைவிட வைகோ மற்றும் மோடியைப்பற்றியும் கூறியிருந்தார்.மோடியைப்பற்றி எவர் எது சொன்னாலும் பொய்யாகத்தானிருக்கும்.பாஜாக ஆட்சியைப்பிடிக்க ஆட்சியைப்பிடிக்க மோடியை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமிருந்தது.ஆனால்மோடிக்கு தற்போதிருக்கும் சவால் தனது திறமையை கட்சிக்கு நிருபிக்கவேண்டிய பொறுப்பிலிருக்கின்றார்.ஆகவே வீண் வம்பு வழக்குகளில் தேவையில்லாமல் மாட்டிகொள்ள மாட்டார்.ஆனால் சுப்பிரமணிய சுவாமி மீது திருப்பி கை காட்டி யாருக்கும் துணிவு இல்லை.ஆனால் அதிமுக அறுகு மாதிரி வியாபித்து விட்டது.அதே போலத்தான் ஜெயலலிதாவும்.இனித்தமிழ் நாட்டில் இவர்கள் ஆட்சிதான்.திமுகவிற்கு இனிமேல் இருந்த இடமும் கிடைக்காது.தமிழ் நாட்டின் கொந்தழிப்புக்காகவாவது அம்மா விரைவில் வந்து விடுவார் போல...
சிறு குறிப்பு-: ரஜீவ் காந்தி கொலையிலன்றும் ஏற்கனவே டெல்லி போய்விட்டார் சுவாமி,அதே போல அம்மாவுக்கு தீர்ப்பு கூறும் போது கூட பெங்களூர் வந்துவிட்டார் 
 
 

மோடியை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்! டெல்லி பத்திரிக்கை வெளியீடு!
Karunanidhi.jpgமுதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

 1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி" அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்" மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்" மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்" மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்" என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்" என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை" - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். -
 

தமிழ் நாட்டிலும்..... ஆந்திர, கேரள, கர்நாடக ஒரு சில பகுதிகளிலும்.....

ஒரு கட்சியை... நடத்திக் கொண்டு, இந்தியாவை ஆளும் பிரதமராக வர. எவராலும் முடியாது என்பதை.... ஜெயலலிதா நன்கே அறிந்து வைத்திருப்பார் என்று, நான்... நம்புகின்றேன், வாத்தியார்.

 

சும்மா.... விசிலடிச்சான், குஞ்சுகளுக்ககாக.... அவர் அப்படி, அகன்ற மனதுடடன் சொல்லி... சில தொழிலதிபர்களையும், தன் வசமாக்க... மேடைப் பேச்சுக்களில்... குறிப்பிட்டிருக்கலாம்.

 

துணிச்சல் உள்ள, அந்தப் பெண்மணி செய்த....

வளர்ப்பு மகன் சுதாகரன் கலியாணம், இன்று அவரை.... ஜெயிலில் தள்ளி விட்டது.

 

இவ்வளவிற்கும்.... சுதாகரன் கலியாணம் கட்டியது, சிவாஜி கணேசனின் பேத்தியை என்று, நினைக்கின்றேன்.

அந்த விடயத்தில்..... சிவாஜி கணேசனும் இந்த உறவால், அவமானப் பட்டார்.

 

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவென்றால்.....

அட்ரஸ் இல்லாத ஆக்களால், அட்ரஸ் உள்ள ஆக்கள்.... அவமானப் பட வேண்டி வரும். :)   

வணக்கம்!
ஒரே தராதரங்கள் பார்த்துகொண்டுதான் திரிகிறீர்கள்.அப்பாவின் டீக்கடையில் வேலை செய்தவர் இந்தியாவின் பிரதமர். சொந்தமாக டீக்கடை வைத்திருந்தவர் தமிழ் நாட்டின் முதலமைச்சர்.இதை விட என்ன தராதரம் வேண்டும் உங்களுக்கு.....
 
  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம்!
ஒரே தராதரங்கள் பார்த்துகொண்டுதான் திரிகிறீர்கள்.அப்பாவின் டீக்கடையில் வேலை செய்தவர் இந்தியாவின் பிரதமர். சொந்தமாக டீக்கடை வைத்திருந்தவர் தமிழ் நாட்டின் முதலமைச்சர்.இதை விட என்ன தராதரம் வேண்டும் உங்களுக்கு.....

 

வணக்கம்.... நீலப் பறவை :).

நீங்கள் எழுதிய கருத்தை வாசித்தேன். ஒளிப்பதிவை இன்னும் பார்க்கவில்லை.

காரணம்.... உங்கள் கருத்துக்கு, நான் சொல்ல விளைகின்ற காரணம்,

தடம் மாறிப் போகலாம் என்ற, அச்ச உணர்வு.

 

தராதரம் பற்றி கதைக்க..... எந்தக் கட்டத்திலும், நான் முயலவில்லை.

நீங்கள் குறிப்பிட்டதால், சொல்லுகின்றேன்...

மோடி பிரதமராக வந்தது....காங்கிரசின் இயலாத் தன்மை.

பன்னீர் செல்வம்  முதல்வராக வந்தது, அவரின் அடக்கம்.

இதற்குப் பின்... நமக்குத் தெரியாத, ஆயிரம் குத்து வெட்டுகள் இருக்கும்.

இதுகளை... ஆராய்ந்தால், விசர் பிடிக்கும். :rolleyes:  :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நீலப் பறவை....
நீங்கள் கனகாலம், களத்திற்கு வராமல்,
சின்னப்பிள்ளைத்தனமாக பதியப் பட்ட செய்திகளை, மீண்டும் பதிந்து எமக்கு, அலுப்பு ஏற்படுத்த வேண்டாம். ப்ளீஸ்.
முதலில்.... ஜெயா  அம்மையாரைப் பற்றி கதைக்க விருப்பம் என்றால்,
யாழ்களத்திலுள்ள... தமிழகச் செய்திகளை கொஞ்ச நேரம் படித்து விட்டு வாருங்கள்.
அதன் பின் உள்ள... எச்ச, சொச்சத்தை.. நாம் உரையாடுவோம். :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.