Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம் - இந்திய பாதுகாப்பு செயலாளர்

Featured Replies

இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம் என்று இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மதுர் தெரிவித்துள்ளார்.
Indian%20Defence_1.jpg
 
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே. மதுர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய பாதுகாப்பு செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்லான சந்திப்பு கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் வலய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
 
விசேடமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான இராணுவ பிரிவுகளிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பாதுகாப்பு செயலரும் கலந்துரையாடியுள்ளனர்.
 
மேலும் இந்தியாவில் இலங்கை இராணுவ அ திகாரிகளுக்கான பயிற்சி அனுபவங்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்ததாக இந்திய பாதுகாப்பு செயலர் ஜனாதிபதியிடம் இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
 
இது இவ்வாறு இருக்க தற்போது காணப்படும் பயிற்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக இரண்டு நாடுகளிலுமுள்ள பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களில் வருகை விரிவுரையாளர்களையும் நீண்டகால பயிற்சியாளர்களையும் பரிமாறிக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இலங்கையும் இந்தியாவும் ஆராயுமென எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தின் சர்வதேச ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை இந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடி காரணமாக இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி விடயங்களை முன்வைத்துள்ளார்.
 
'' சுற்றுச்சூழலின் அழிவு என்பது மிகப்பெரிய பிரச்சினை. ஆழ்கடல் மீன்பிடியை நாங்கள் தடை செய்துள்ளோம்' என்று ஜனாதிபதி சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.
 
ஆழ்கடல் மீன்பிடி நடைமுறை தொடருமானால் இலங்கை இந்தியா இரண்டிலுமிருந்து மீன்வளங்கள் முழுமையாக அழிந்துபோகும் என்பதனை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் வடக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மீனவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
 
அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்குஇடையிலான பேச்சுவார்த்தைகள் தீர்வு ஒன்றை கொண்டுவர உதவும் என சந்திபபின்போது இரண்டு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவென இந்திய பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட குழு இலங்கை வந்துள்ளது.
 
இரண்டு நாடுகளும் பங்குபற்றியுள்ள பல்வேறு பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்த உதவும் என ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு செயலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
 
மேலும் தெற்காசியாவின் இந்த இரண்டு அயலவர்களும் பகிர்ந்துவரும் பலமான நட்பில் இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்புத் துறைக்கான கூட்டுறவு ஒரு முக்கியமான அம்சம் என்பதனையும் இரண்டு தலைவர்களும் இந்த சந்திப்பின்போது ஏற்றுக்கொண்டனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம் - இந்திய பாதுகாப்பு செயலாளர்

 

 

இந்திய  மண் வெட்கித்தலைகுனிகிறது :(

ஆசியாவின் வல்லரசு.... :(

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம் - இந்திய பாதுகாப்பு செயலாளர்

 

 

இந்திய  மண் வெட்கித்தலைகுனிகிறது :(

ஆசியாவின் வல்லரசு.... :(

அப்படி ஒன்றும் இந்தியமண்ணைக் குறைவாக மதிப்பிடவேண்டாம். இது கடவுள் காட்டிய வழிதான் விசுகு அவர்களே...!! மகனைக் குருவாக வரித்து தந்தை சீடனான கதை இந்தியமண்ணில் என்றோ பிறந்துவிட்டது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு......  காக்கா பிடிக்கிறதுக்கு, எல்லா இந்திய அரசியல் வாதிகளும், ஒரு குட்டையில்.... ஊறிய மட்டைகள் தான்.
தேர்தலில், போட்டியிடும் இவர்களுக்கு... அடிப்படை உலக அறிவு ஆவது இருக்க வேண்டும்.

அது... இந்த துதிபாடும் கூட்டத்திடம் அறவே... கிடையாது.
"அணில் ஏற விட்ட நாய்களுக்கும்", இவர்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் இருந்து 1990 வரை கற்றுக் கொண்டது காலாவதியாகி விட்டது போலும்..!! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.