Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கென் மண்ணிலும் பெய்வாயோ...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1468589_10152516188669891_75222424928103

மழை பின்னிப் பெருமழையெனப் பொழிகிறது

மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம்

பூசத் தொடங்கிவிட்ட இம்மண்ணில்

இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின்

அன்னியமாகி தொலைந்தேவிடுவோம்

என்னும் துயராய் வாழ்வு அசைகிறது சலனமின்றி

மழையை ரசித்தலில் காற்றில் துகள்களாகி

கரைந்துபோகும் தேசம் அது

ஒரு கோடைத் துலம்பலில் பிரிந்துவந்த

என் மண்ணில் இன்னமும்

புதைந்திருக்கிறது மௌனத்துள் மழை

தடுமாறிக் கருக்கொள்ளும் மேகங்களும்

காற்றள்ளப் போய்த் தொலைகிறது...

வெள்ளிகள் முளைக்காத

இருண்ட இரவுகளில்

கடந்துபோகிறது துயர நிலவு

தடுமாறி உயிராகும் வார்த்தைகளை

கண்களில் நீர் அள்ள,

கடந்துபோகும் காலத்துடன்

மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்.

ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே

கேள்

வாழ்வின் இழப்புகளுக்கிடையிலும்

வாழ்தலில் குறியாய் உள்ள

எம் தோழர் கதையை

தெருவோரம் நாய் முகரக் கிடந்த

மரணம்

வேரறுந்து விலகிய மனிதரின் வாழ்நிலம்

சுவாலை விட்டெரிகிற தீயொடு நாட்கள்

என

வாழ்வைக் கடந்தவர் அவர்கள்

”விதி” என்றாகிவிட்ட சுதந்திரத்துடன்

திசையற்றுப் போன வாழ்வு

ஊழ் முடிந்த வெளியில்

உதிரம் சொட்டும் நினைவெச்சங்கள்

என

எல்லாவற்றின் பொருட்டாயும்

எஞ்சியிருகிறது நெடுமூச்சு

வீசும் காற்றில்

வெண் முத்தென முகம் நனைத்த நீரொடு

அழுவது அவர் குரலே

ஈரம் வற்றிப்போன தேசத்தில்

கோடை துரத்தல் கூடும்

ஆயினும்

வீரம் பாய்ந்த சிறகுகள் அவர்களது

பெருமழையே...

உன்னதமான கவிஞனின் துயரங்களுக்குத் தூணாகவும்

உயர்ந்த கவிஞர்களின் பாடல்களின் தாயாகவும்

பெய்யும் மழையே...!

கையேந்தா மனிதரின் கனவுகள்

உலர்ந்த காலத்தின் மீது,

மரணம் முற்றாய் தலைகுனிந்தவர்களது

காலடியின் மீது,

சிலதுளிகள்

தேடிப் பெய்வாயா என் தேசத்தில்...?

நீண்ட இறப்பின் பின் சற்றேனும் உயிர்ப்புற

தளிர்களும் வேர்களும் மீண்டு துளிர்க்க

உன் துளிகள்

கோடைக்கு விடைகொடுத்தல் கூடும்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ் கவிதைக்கு. அடிக்கடி பகிருங்கள்

துயர் ஊடுகடத்தும் வரிகள். எப்போதும் சுபேஸின் கவிதைகள் அழகியலுடன் தேசத்தின் நினைவுகளை கிளரச்செய்கின்றவையாகவே இருக்கின்றது. வாழ்த்துக்கள் நண்பா 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி சுபேசு..தொடருங்கள் என்று அன்பாக கேட்டுச் செல்கிறேன்..

அழகியலும் சோகமும் நினைவுகளும் ஒருசேர கிளர்வுறச் செய்கிறது கவிதை...

அயல்நாட்டில் இருப்பை தக்க வைத்து கொள்வதற்கான இயந்திர தனத்தையும், எவரிடம் கையேந்தாத மண்ணின் மைந்தரின் இன்றைய நிலையையும், கடந்த கால வலிகளையும், கையுன்றி அவர்கள் எழ தேவையாயுள்ள மழையின் அவசியத்தையும் அதன்பால் உள்ள அவர்களது இன்றியமையாத பொருளாதார தேவைகள் என பலவும் தொட்டு செல்கிறது...

தொடர்ந்தும் இது போன்ற கவிதைகள் தாருங்கள் அண்ணா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.