Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

காலம் உலர்த்த மறந்த நீர்

விரல்களில் ஒட்டிக் கொண்டது

தன்னிலை பகிராமல்..

 

வலிந்த

வெப்ப இழப்பினை உருவாக்கி,

திரட்டத் தொடங்கியது 

ஆதிச் சிதைவுகளை,

 

ஈமத்தாழிகளையும்

வண்டல் படுகைகளையும் கிளறி,

 

சூரிய நட்சத்திரங்களுடனும்

கனியாத கருமேகங்களுடனும் உறவாடி,

 

காற்றில்

நெருப்பில்

உப்பு நீரில்

நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும்,

 

இழந்துபோன

ஈரலிப்பை தேடி அலைந்தது..

 

வழியெங்கும்..

 

வர்ணக் கலவைகளாலும்

நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக்

கலையாடிக்கொண்டிருந்தன சில.

 

அதீத மோகத்துடன்

காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில.

 

ஆதியின் அன்புப் போர்வைக்குள்

சிக்கிப் பிணமாய் கிடந்தன சில.

 

இன்னும் சில

கௌரவ வெற்றிடங்களில்

எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன.

 

பெருமூச்சோடு

காலம் மீதான வன்மத்தையும்  வெளித்தள்ளிவிட்டு

மௌனம் கலைக்க முயன்ற கணத்தில்,

 

கண்டடைந்தது

தற்கொலை செய்துகொண்ட மனிதத்தை...

 

பெருமூச்சோடு

காலம் மீதான வன்மத்தையும்  வெளித்தள்ளிவிட்டு

மௌனம் கலைக்க முயன்ற கணத்தில்,

 

கண்டடைந்தது

தற்கொலை செய்துகொண்ட மனிதத்தை.

 

 

எப்படி முடியுது இப்படி வரிகளை கோர்க்க அருமை .

  • கருத்துக்கள உறவுகள்

ஈமத்தாழிகளையும்

வண்டல் படுகைகளையும் கிளறி,

 

சூரிய நட்சத்திரங்களுடனும்

கனியாத கருமேகங்களுடனும் உறவாடி,

 

காற்றில்

நெருப்பில்

உப்பு நீரில்

நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும்,

 

இழந்துபோன

ஈரலிப்பை தேடி அலைந்தது..

 

 

இதை விட... எமதினத்தின்.. இழப்பை.. வரலாற்றை வேறு எந்த விதத்திலும் கூறி விட முடியாது, நெற்கொழு !

 

உனது ஆத்மா வலி தாங்காது 'துடிக்கின்ற' போதெல்லாம்.. அந்த வலிகளை. ஏக்கங்களைச் சுமக்க முடியாத போதெல்லாம்.. அந்த 'ஆற்றாமையே' உனது கவிதைகளாகச் சிந்துகின்றன என்பது எனது அனுமானம்!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. சிந்துகின்ற அந்தத் துளிகளைக் கவிதைகளாகச் சிறைப்படுத்தி வை!

 

இன்றில்லா விட்டாலும், நாளைய தலைமுறை... நமதினம் சுமந்த வலிகளைக் கொஞ்சமாவது.... உணர்ந்து பார்க்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு

 

இந்தக்கவிதையை என்ன மனநிலையில் இருந்து வடித்தீர்கள் வாசிக்கும் எம்மை வெவ்வேறு திசைக்கு வழிகாட்டுகிறதா? ஒரு கவிஞனின் வரைவை எத்தனை தூரம் நம்மால் உள்வாங்க முடிகிறது...... இந்தக் கவிதைவரிகளுக்குள் நீங்கள் உள்ளடக்க நினைத்த பொருள் யாது? ஒவ்வொரு வரிகளுக்கும் அதன் பொருள் எவ்வகையில் பொருந்துகிறது? மற்றவர்களுக்காக கேட்கவில்லை எனக்கு கடினமாக இருக்கிறது இதில் பொருள் காண உங்களின் பூடகமான குறியீட்டை கொஞ்சம் விளக்கமாக தெரிவித்தால் உங்கள் கவிதை வரிகளின் ஆளுமையை பிரமிப்புடன் நோக்கலாம். இல்லையென்றால் சிறிதுநேரம் மூளையைப்பிசைந்துவிட்டு அதன் உட்பொருளை அறியும் ஆவலின்றி விலகிச் செல்லவே மனம் சொல்லும்....:(

  • தொடங்கியவர்

நெற்கொழு

 

. இந்தக் கவிதைவரிகளுக்குள் நீங்கள் உள்ளடக்க நினைத்த பொருள் யாது? ஒவ்வொரு வரிகளுக்கும் அதன் பொருள் எவ்வகையில் பொருந்துகிறது? 

 

 

"மனிதம் ஏற்கனவே இறந்துவிட்ட ஒரு சூழலில், அதை அறியாமல் தேடும்போடு, காலத்தாலும் ஆற்றப்பட்டாத வலிகளைச்சுமந்த ஒருவனது மனம் அல்லது ஒரு குழுமத்தின் பொதுப்பண்பு, வேசங்களுக்கும் போலிகளுக்கும் அடிமைப்பட்டு இருக்கும் சில அற்ப மனங்களை கடந்துபோய் நொந்து மௌனம் கலைக்க முயன்ற கணத்தில்.... தற்கொலை செய்த மனிதத்தை கண்டுகொள்கிறது." அதன் பின்னான நிலை என்ன ........... 

 

அக்கா பொதுவாக குறியீட்டு கவிதைகளுக்கு விளக்கம் கொடுப்பது என்பது இயல்பு மீறிய ஒன்றுதான். நேரம் சந்தர்ப்ப சூழல் கவிதையின் கட்டமைப்பை தீர்மானிக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு சூழலில் வாழும் ஒருவருக்கு இன்னொரு பொருள் கிடைத்துவிடும்.

 

///குறியீட்டு கவிதைகள் வாசகனையும் படைப்பாளியையும் கூட்டுப்பாங்காளி ஆக்கிவிடுகின்றன. ஒவ்வொரு விமர்சகனுக்கும்   குறியீடு பாலா அர்த்தங்களை சுரந்து கோனே இருக்கும்.  ஒருவன் கையாளும் குறியீடுகள் செயல்படும் முறையை ஆய்ந்தால் அவன் எந்த நோக்கத்தோடு அவற்றைக் கையாண்டான் என்பதனைக் காணமுடியும் --அப்துல்ரகுமான்///

 

அக்கா, என் கவிதையில் குறைகள் இருக்கலாம் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கும் ஒருவன்தான் நான். எங்கே எங்கே தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறுகள் திருத்திக்கொள்வேன். 

 

கருத்துரைத்த அஞ்சன் மற்றும் புங்கையூரான் அண்ணாவுக்கும் என் அன்புகள். 

பல முறை வாசித்துப் பார்த்தும் கவிதை பிடிபடுகுது இல்லை. :(

  • தொடங்கியவர்

பல முறை வாசித்துப் பார்த்தும் கவிதை பிடிபடுகுது இல்லை

 

தோற்றுப்போய் விட்டேனோ அண்ணை. 

தோற்றுப்போய் விட்டேனோ அண்ணை. 

நான் என்ன இலக்கியத்தினை கரைச்சுக் குடிச்ச ஆளா நெற்கொழு, எனக்கு விளங்காவிடின் நீங்கள் தோற்றுப் போவதற்கு?

 

பல கவிதைகள் அந்தந்த உணர்வுகளினூடாக பார்க்கும் போதுதான் புரியும். இன்று இருக்கும் உணர்வுகளினூடாக இக் கவிதையை வாசிக்கும் போது அது தொகுக்கும் உணர்வு பிடிபடுகுது இல்லை. எனக்குத் தான் இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு உங்கள் கவிதையின் ஆளுமை பிரமிப்பிற்குரியது...ஆழ்ந்த வாசிப்பினால் மட்டுமே அடையாளம் காணக்கூடியவாறு பொருள் கொண்டிருக்கும். இங்கு உங்கள் கவிதைக்கான பொருளைத் தேடுவதால் நீங்கள் தோற்றுப் போனதாக எண்ணம் கொள்ளல் ஆகாது. இந்தக் கவிதை வெளியில் இயல்பாக எல்லோரிடமும் பேசிவிடமுடியாது பலரை இந்தப்படைப்புக்களம் கருத்தாடல் களமாக மாற்றம் கொள்ளும்போது காயப்படுத்திவிடவோ அல்லது சங்கடப்படுத்திவிடவோ வல்லது நான் இங்கு எல்லோருடைய கவிதைகளையும் அதன் பொருள்களையும் ஆராய்வதில்லை ஏனெனில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தூரம் புரிதல் இருக்குமென்று அறிந்து கொள்ள முடியாது ஆனால் ஒரு சிலரை நின்று நிதானித்து கேள்விகளால் துளைக்கிறேன் ஏனெனனில் அவர்கள் நல்ல புரிதல் கொண்டவர்கள் என்று அறிந்த பிற்பாடே என்னால் இப்படி பேச முடிகிறது. அந்த வகையில்தான் உங்களிடமும் கேட்டேன். இப்போது நீங்கள் மேலே பதிவு செய்திருக்கும் விளக்கம் கவிதையுடன் உடன் பயணிக்கிறதா இல்லையா என்பதையும் அக் கருத்தை பதிவிட நீங்கள் கவிதையில் எவ்வாறு முயற்சி செய்திருக்கிறீர்கள் என்பதையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்தி வைத்து பார்க்க முடிகிறது. கவிஞனின் ஆயுதமானது உங்கள் கவிதையில் எவ்வளவு தூரம் மர்மமாக முடிச்சுகளை போட்டுச் சென்றிருக்கிறது என்பதையும் பார்க்க முடிகிறது. நீங்கள் எழுதும் பாணியானது வாசிப்பிற்கு சடுதியாக பொருளுணர்த்தாது நீண்ட சிந்தனையில் மூழ்கடிக்கவல்லது. ஆனால் நீண்ட சிந்தனையில் நிலைத்து நிற்க நேரமில்லாதவர்களாக ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு இக்கவிதையின் பொருள் புரிதல் சிரமமாக இருக்கும்  மற்றப்படி அதீதமான ஆழமான சிந்தனையும் அதற்கான வார்த்தைக் கோர்ப்புகளும் அது உங்களுக்கே உரித்தான தனித்துவமானது.

  • தொடங்கியவர்

மிக்க அன்புகள் சஹாரா அக்கா,நிழலி அண்ணை. 

 

உண்மையில் மிக்க சந்தோசமாகவே உங்களின் கேள்விகளையும் கருத்துக்களையும் எதிர்கொள்கிறேன். அது என்னை இன்னும் வளப்படுத்தும். 

 

நான் தோற்றுவிட்டேனோ என்று கேட்டது உங்களை சங்கடப்படுத்துவதற்காக அல்ல. ஒரு திறந்த கருத்தாடல் மூலம் என் படைப்புக்களை எடைபோடுவதே என் நோக்கமாக இருந்தது. தொடர்ந்தும் உரையாடுங்கள் அது என்னை இன்னும் இன்னும் வளப்படுத்தும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.