Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிசில் புலம்பெயர் தமிழ் தம்பதியினர் காருடன் தீ மூட்டி எரிந்து சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்தின் லுகார்னோ மாகாணத்திலுள்ள ஸ்ராபியோ எனும் இடத்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழரான கணவன் மனைவி இருவரும் காருடன் எரியூட்ப்பட்டு சாவடைந்துள்ளனர். கணவரான அமலதாஸ் (வயது 68) ஏற்கனவே திருமணமானவர் அவருக்கு முதல் மனைவியுடன் 5 பிள்ளைகளும் இருந்த நிலையில் முதல் மனைவி இறந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சாந்தி(வயது 49) என்பரை இரண்டாவதாக திருமணம் முடித்தார். சாந்தி 2009ஆம் ஆண்டே சுவிஸ் வந்திருந்தார். எனினும் இவர்களுக்கிடையேயான உறவு திருப்திகரமற்றிருந்தாகவும் அடிக்கடி இவர்களுக்கிடையே சண்டை ஏற்படுவதாகவும் அமலதாஸ் சாந்தியை மிகவும் துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது. இதனை சாந்தியே தனது தொழிற்சாலை முகாமையாளரான மரிசா புறுநோறோவிடம் தெரிவித்ததாக புறுநோறோ சொல்கிறார்.

   

இந்நிலையில் சாந்தி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றில் இருக்கும் வேளை சாந்தி பெண்களைத் தங்க வைக்கும் விடுதியொன்றில் அரசால் தங்கவைக்கப்பட்டிருந்தார். மேலும் சாந்தி லுகார்னோவிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தமிழ்ச் சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சம்பவதினம் சாந்தி வேலைக்குச் செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த போது. அமலதாஸ் அங்கு வந்து சாந்தியை கத்தியால் குத்தியுள்ளார்.சாந்தி அவ்விடத்திலேயே இறந்து விட அவரது உடலை தனது காரிலேற்றிக் கொண்டு ஸ்ராபியோ என்னும் இடத்தில் வைத்து காருடன் தன்னையும் சாந்தியின் உடலையும் சேர்த்து எரியூட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவத்தை விசாரணை செய்து வரும் சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கையில் தடயவியல் சோதனையின்படி இருவரின் எலும்புகளும் பற்களும் மட்டுமே எஞ்சியுள்ளதகவும் சாந்தி இறந்தது அமலதாசுக்கு முன்னர் எனவும் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தால் சுவிஸிலுள்ள தமிழர் மத்தியில் சோகமும் அதிருப்தியும் காணப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்களால் புலம் பெயர் தேசங்களிலுள்ள இளையோருக்கு பெரியவர்கள் எவ்வாறு வழிகாட்டமுடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

 

swiaa-tamilks-death-091114-394-seithycom

 

 

 

www.seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப உறவில் திருப்தி இல்லை என்றால்,
விவாகரத்து செய்து விட்டு... தனித் தனியே, மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழ்வது தானே... முறை.

 

இதற்கு ஏன்.... கத்திக்குத்து, கார் எரிப்பு, தற்கொலை என்று கிரிமினல் வழிகளை நாடுவான்.
இதனால்..... சுவிஸ் தமிழருக்கு இருக்கும் மரியாதையை மற்றவர்கள் மத்தியில் ஏன் கெடுக்க முனைவான்?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப உறவில் திருப்தி இல்லை என்றால்,

விவாகரத்து செய்து விட்டு... தனித் தனியே, மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழ்வது தானே... முறை.

 

இதற்கு ஏன்.... கத்திக்குத்து, கார் எரிப்பு, தற்கொலை என்று கிரிமினல் வழிகளை நாடுவான்.

இதனால்..... சுவிஸ் தமிழருக்கு இருக்கும் மரியாதையை மற்றவர்கள் மத்தியில் ஏன் கெடுக்க முனைவான்?

 

Stalking என்னும் சொல்லுக்கு 'துன்புறுத்தும் நோக்குடனான அதி தீவிர பின்தொடர்தல்' என்று சொல்லலாம் என்று நினைகின்றேன்.
 
கூடுதலான possessiveness உணர்வால், சம்பந்தப் பட்டவர் விலகி நிற்கும் போது, stalking நடக்கின்றது.
 
இதனைக் சரியாக அடையாளம் கண்டு, மேலை நாடுகளில் இதனை ஒரு கிரிமினல் விடயம் என்று சொல்கிறார்கள்.
 
தமிழ் படங்களில் 'திரத்தி, திரத்தி, காதலிக்கிறேன்' என்று இந்த கிரிமினல் விடயத்தினை, ஏதோ, வீர, தீர செயல் போல் காட்டுவார்கள். இதனால் தமிழகத்தில், அசிட் வீச்சு, கொலை போன்ற விடயங்கள் நடக்கின்றன.
 
சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில், போபாலில் ஒரு டாக்டர் மணப் பெண், மணவறையில், அவரை ஒரு தலையாய் காதலித்த, அவரது patient இனால் சுட்டுக் கொல்லப் பட்டார். லண்டனில், selfridge என்னும் மேல் தட்டு அங்காடியில், வேலை செய்த பெண்ணை ஒருவன் சுட்டு, அங்கேயே தானும் சுட்டுக் கொண்டு இறந்தான். அதே stalking.
 
இரண்டிலுமே, பெண்கள், இந்த ஆண்கள் காதலிப்பதாக அல்ல, தீவிரமாக பின் தொடர்ந்து ஒரு வித பய உணர்வை ஊட்டுவதாக பொலிசாரிடம் முதலே சொல்லி உள்ளார்கள். தம்மை குறித்த பெண்கள் பொருட்டாக எடுத்துக் கொள்ள வில்லை என்றவுடன், கொலை செய்யும் அளவுக்கு துன்புறுத்தும் அபாயகரமான மனநிலை வரும். 
 
இது ஒரு மன நோய்.
 
தமிழ் சினிமாவுக்கு இது சொல்லப் படும் வரை, அவர்கள் இதை தவிர்க்கும் வரை,  இந்த மனநோய் தொடரும்..... எம்மவர் மத்தியிலும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
எம்மவர் மத்தியில் இது குறித்த அறிவு இல்லை.
 
இது மிகவும் அபாயகரமான மனநோய். அண்மைக்காலமாக இங்கே மேற்கில் இதை தீவிரமாக அரசு எடுத்து சட்டம் கொண்டுவந்து உள்ளனர்.
 
இது குறித்த, தளங்கள் பல பாதிக்கப் பட்ட பெண்களால் (ஆண்கள் கூட உள்ளனர்) ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
 
தமிழ் சினிமாவில், இந்த மனநோய் குறித்த புரிதல் இன்றி, விடுதியில் இருக்கும் பெண்ணின் அறையில் 'ஹீரோ' எப்படியோ உள்ளே போய், அவர் தூங்கும் அழகை ரசிப்பதாயும், (திருட்டு தனமாக ஆனால்), துணிவாக, வீடு, வேலையிடம் அல்லது கல்லூரி, புகுந்து  பெண்ணுக்கு சந்தோச அதிர்ச்சி தருவதாயும், அபத்தமாக, காட்டுவார்கள்.
 
இவ்வகையான 'stalking' எனும் மனநோயினை இவர்கள் 'ஹீரோயிசம்' என காட்டும் போது, பார்பவர்கள் இது சாதாரணமானது என்று எடுத்துக் கொள்வார்கள்.
 
சிவாஜி படத்தில், ஆனானப் பட்ட ரஜனி கூட, கதாநாயகி வீட்டினுள், விவேக்குடன் புகுந்து கலாட்டா பண்ணுவதாக காட்டி இருப்பார்கள். ஆங்கிலத்தில் இந்த விடயத்தினை வைத்து 'Fatal Attraction' எனும் படம் வந்தது. ஆனால் பாதிக்கப் பட்டவர், ஆண் என காட்டி இருப்பார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
இதோ நான் சொன்ன stalking ன் இன்னுமோர் கொலை.
 
அக்காவின் நம்பர் எடுக்க, தங்கையின் போனை, கொலை செய்து திருடிய...அக்காவின் காதலன்....
 
அக்கா, தன்னை புறக்கணித்து சென்னையில் ஒளித்து இருப்பதாக கருதியே இந்த stalking கொலை.
 
சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த 8ம் வகுப்பு மாணவி கழுத்தறுத்து கொலை: வாலிபர் கைது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/teenage-girl-found-dead-salem-214819.html

 

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த 8ம் வகுப்பு மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் அழகாபுரம் வன்னியர் நகரில் வசித்து வருபவர் துரைராஜ்(48). தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி கஸ்தூரி(40) துணிக்கடையில் வேலை பார்க்கிறார். அவர்களின் மகள்கள் ஸ்ரீஹரிணி (22), தேஜாஸ்ரீ (13). ஸ்ரீஹரிணி பி.இ. படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தேஜாஸ்ரீ அழகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

 

ஸ்ரீஹரிணியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை பார்க்க கஸ்தூரி சென்னை சென்றார். வியாழக்கிழமை காலை துரைராஜ் வேலைக்கும், தேஜாஸ்ரீ பள்ளிக்கும் சென்றனர். துரைராஜ் இரவு வீட்டுக்கு வந்தபோது தேஜாஸ்ரீ கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது. தேஜாஸ்ரீ ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிர் இழந்தார். வீட்டில் பீரோ திறந்து கிடந்த போதிலும் நகைகள் எதுவும் திருடு போகவில்லை. மாறாக தேஜா வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மட்டும் தான் திருடு போயிருந்தது. தேஜா பள்ளியில் இருந்து மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புதிய பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த வாலிபரும், மங்கு குல்லா அணிந்த வாலிபரும் வந்து தேஜாவின் வீட்டில் அமர்ந்து அவருடன் பேசியுள்ளனர். இரவு 7.10 மணிக்கு அவர்கள் வேகமாக பைக்கில் ஏறி சென்றதை அக்கம்பக்கதினர் பார்த்துள்ளனர். மங்கி குல்லா அணிந்த வாலிபரும் தேஜாஸ்ரீயின் அக்கா ஸ்ரீஹரிணியும் காதலித்துள்ளார்கள். அவர் அடிக்கடி ஸ்ரீஹரிணியை பார்க்க வீட்டுக்கு வந்து வெளியே நின்று பேசியதை பலரும் பார்த்துள்ளனர்.

 

இந்நிலையில் துரைராஜ், கஸ்தூரி இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஸ்ரீஹரிணி சென்னை சென்றதுடன் அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்துவிட்டார். இதனால் அந்த வாலிபர் தேஜாஸ்ரீயை அடிக்கடி சந்ததித்து அக்கா இருக்கும் இடம், செல்போன் எண்ணை கொடு என்று கேட்டு வந்துள்ளார். நேற்றும் அவ்வாறு வீட்டுக்கு வந்து ஸ்ரீஹரிணியின் செல்போன் எண்ணை கேட்டு தேஜா கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் தேஜாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை இன்று காலை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பரையும் தேடி வருகிறார்கள். தேஜாஸ்ரீ கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அவர் படித்த பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,
நாம், எத்தனையோ.....
இரத்தத்தை... பார்த்து, வளர்ந்த இனம் என்றாலும்,
நீங்கள் இணைத்த படத்தை, மட்டும், நீக்கி விடுங்களேன்.
ஒரு வரவேற்பறையை..... இந்தக் கோலத்தில் பார்க்க, மனம் சகிக்கவில்லை.

 

* மன்னிக்கவும், எழுத்துப் பிழை, திருத்தப் பட்டது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நாதமுனி. :)  

  • கருத்துக்கள உறவுகள்

stalking குறித்த பிரித்தானிய சட்டம்

 

http://www.cps.gov.uk/legal/s_to_u/stalking_and_harassment/

 

stalking குறித்த விபரங்களுக்கு

 

http://en.wikipedia.org/wiki/Stalking

 

அண்மைய சம்பவம் ஒன்று

 

http://www.dailymail.co.uk/femail/article-2755035/This-man-s-stalked-seven-years-t-police-stop-A-horrifying-account-life-lived-fear-savage-indictment-UK-justice-NADINE-DORRIES-MP.html

 

நேரம் கிடைத்தால் தமிழில் முனைவேன்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.