Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்சை அரசன் - 100வது நாள் விழாத்துளிகள்

Featured Replies

* வைகைப்புயல் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்த இம்சை அரசன் திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் அபார வெற்றி பெற்று நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. இதற்கான விழாவை தயாரிப்பாளர் ஷங்கரும், இயக்குனர் சிம்புதேவனும் "சந்தோஷப் பகிர்வு விழா" என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும், பத்திரிகையாளர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் அழைத்துக் கொண்டாடினார்கள்.

* 6 மணிக்கு விழா ஆரம்பிக்கும் என்று அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவின் சம்பிரதாயப்படி 1 மணி நேரம் தாமதமாக 7 மணிக்கே விழா தொடங்கியது.

* இயக்குனர் சிம்புதேவன் அநியாயத்துக்கு சிம்பிளாக இருக்கிறார். தயாரிப்பாளர் ஷங்கர் "சிவாஜி" பட விஷயமாக பிஸியாக இருக்க விழா ஏற்பாடுகள் முழுவதையும் சிம்புதேவனே PRO நிகில் உதவியுடன் கவனித்திருக்கிறார்.

* மேடையின் பேக் டிராப்பாக வடிவேலு அட்டகாசமாக இம்சை அரசன் வேடத்தில் சிரிக்கும் படம் பெரிய அளவில் Flexல் போடப்பட்டிருந்தது.

* விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே நடிகர் சிவக்குமார் வந்திருந்து சிம்புதேவனுக்கும், ஷங்கருக்கும் பொக்கே கொடுத்து விட்டு அவசர அவசரமாக கிளம்பினார்.

* இயக்குனர் மனோபாலா, நடிகர் ராஜேஷ், நடிகர் தியாகு, நடிகர் இளவரசன், இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி, காதல் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், இயக்குநர் லிங்குசாமி, புலவர் புலமைப்பித்தன், ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், லதா ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

* படத்தில் பணியாற்றிய வடிவேலுவின் காமெடி செட் தோழர்கள் பாலபத்திர ஓணாண்டி, சிசர்ஸ் மனோகர் உட்பட பலவர் வந்திருந்தனர்.

* படத்தின் நாயகிகளில் ஒருவரான மோனிகா ப்ளூ கலர் காக்ரா சோளியுடன் கலக்கலாக வந்தார். அவருக்கு வயது 16 இருக்கலாம். செம கலராக சூப்பராக இருந்தார்.

* படத்தின் இன்னொரு நாயகியான தேஜாஸ்ரீ தான் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தார். பிங்க் கலர் புடவையில் சூப்பர் கவர்ச்சியுடன் வந்திருந்தார்.

* நிகழ்ச்சிகளை காமெடி நடிகர் சந்தானமும், அவரது லொள்ளு சபா சகா ஒருவரும் தொகுத்து வழங்கினர். அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை.

* மேடைக்கு சரியாக ஏழு மணிக்கு நடிகர் நாசர், பிரபு, விவேக், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனோரமா, வடிவேலு மற்றும் சத்யராஜ் வந்தார்கள். மேடையில் நாயகிகள் இருவருக்கும் கூட இடம் தரப்பட்டது. சீனியர் தொழில்நுட்ப கலைஞரான ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்திக்கும், ஆர்தர் வில்சனுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் மேடையில் இடம் கொடுத்திருக்கலாம்.

* நடிகர் விஜய் கொஞ்சம் கருப்பாக இருப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் என்னை மாதிரி கலராக கொஞ்சம் உயரமாகத் தான் இருக்கிறார்.

* விஜய், சூப்பர் ஸ்டார் இருவருக்கும் விசில் சத்தம் பலமாக இருந்தது. ஆனாலும் இந்த இருவரையும் மிஞ்சக்கூடிய அளவுக்கு விசில்சத்தம் விழாநாயகனான வடிவேலுக்குத் தான் கிடைத்தது. கையை ஸ்டைலாக எம்.ஜி.ஆர் பாணியில் ஆட்டியபடியே மேடைக்கு வந்தார். எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இருக்கிறதோ, என்னவோ?

* வரவேற்புரையை புலவர் புலமைப்பித்தன் சுமார் 20 நிமிடம் நிகழ்த்தி வெறுப்பேற்றினார். வரவேற்புரை என்பதன் இலக்கணமே விழாவுக்கு வந்தவர்களை வரவேற்பது தான். இதில் இவரது "சமீபத்தில் 1965ல்" டைப் சுயபிரதாபம், நடிகர் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு ஐஸ் என்று ஜவ்வடித்தார்.

* மேடையில் இருந்தவர்களில் சத்யராஜ், வடிவேலு மற்றும் விவேக் தவிர வேறு யாருக்கும் மேடையில் எப்படிப் பேசுவது என்றே தெரியவில்லை. இவர்கள் மூவர் பேச்சை தவிர மற்றவர்கள் பேசாமல் இருந்திருந்தாலே இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

* விழாவில் ரொம்பவும் மகிழ்ச்சியாக தெரிந்தவர் நடிகர் விவேக் தான். தன் சகப் போட்டியாளரின் வெற்றியை ரொம்பவும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு பாராட்டினார். பின்னர் பேசிய மனோரமாவும் இதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

* விவேக் பேசும்போது "உயிருக்கு உயிர்" கொடுத்தவர் அண்ணன் வடிவேலு என்று "பொடி" வைத்துப் பேசினார். 'அண்ணன்' என்று சொன்னதுமே வடிவேலு வின்னர் ஸ்டைலில் விவேக்கை முறைக்க அரங்கம் அதிர்ந்தது.

* விழாவில் பேசிய அனைவருமே நாசரை "இரண்டாம் நம்பியார்" என்று வர்ணித்தார்கள்.

* பிரபு பேசியபோது அரசியலில் குதிக்கும் எண்ணம் எதுவும் இதுவரை இல்லை என்றார். சென்ற வாரம் தான் பிரபுவின் சகோதரர் ராம்குமார் "பிரபு அரசியலில் குதிக்கப் போகிறார்" என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* சத்யராஜ் பேசியபோது சில பழைய ஆங்கில சரித்திரப் படங்களுக்கும், இம்சை அரசனுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிட்டு இயக்குனர் சிம்புவையும், நடிகர் வடிவேலையும் பாராட்டினார். வழக்கம்போல தன் "பெரியார்" பட புராணத்தையும் பாடத் தவறவில்லை.

* வடிவேலு பேசும்போது படத்திற்காக தாங்கள் பட்ட இன்னல்களை விரிவாக நகைச்சுவையாக எடுத்துரைத்தார். "மயிறு", "பட்டக்ஸ்" போன்ற வார்த்தைகளை கொஞ்சமும் கூச்சமில்லாமல் படத்தில் பயன்படுத்துவதைப் போலவே எந்தக் கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக உபயோகித்தார். மன்னர் வேடம் போடும்போது காஸ்ட்யூமர்கள் படுத்தும் பாட்டை நகைச்சுவையாக வர்ணித்தார். அந்த உடை போட்டிருக்கும் போது "ஒண்ணுக்கு" கூட போக முடியாதாம். படம் எடுத்து முடித்தும் கூட வெளிவருவதில் இருந்த சிக்கல் என்ன என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். பிரச்சினையை முடிக்க நடிகர் தியாகு உதவியுடன் கலைஞரை சந்தித்தது வரை வெளிவராத பல தகவல்களை சொன்னார்.

* நாயகிகள் தேஜாஸ்ரீயும், மோனிகாவும் சன் மியூசிக் காம்பியரர்கள் ஸ்டைலில் தலா அரை நிமிடம் பேசினார்கள்.

* நடிகர் ராஜேஷ், லிங்குசாமி, இயக்குனர் பாலாஜி சக்திவேல் போன்றவர்களும் மைக் கிடைத்ததற்காக தலா 5 நிமிடம் பிளேடு போட்டார்கள்.

* ரஜினி பேசியபோது கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் சிம்பு, ஷங்கர், வடிவேலு மூவரோடு ஒப்பிட்டுப் பேசினார். ஒப்பிடுதல் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. பேச்சிலும் சுத்தமாக காரமில்லாமல் காஞ்சிப்போன மிளகாய் பஜ்ஜி மாதிரி இருந்தது.

* சிம்புதேவன் (32 வயசு தானாம்) ரொம்பவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாலும் மைக்கை பிடித்ததுமே ரொம்ப இயல்பாகப் பேசினார். அவருடன் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவருக்கு படசான்ஸ் கிடைத்திருப்பதைப் பற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். படத்தில் தன் பங்கு 1 சதவிகிதம் தான் என்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் பங்கு தான் 99 சதவிகிதம் என்றும் அடக்கமாகப் பேசினார்.

* இயக்குனர் ஷங்கர் தனக்கு மேடையில் பேசத்தெரியாது என்று பொய் சொல்லிவிட்டு அருமையாகப் பேசினார். சிம்புதேவன் சொன்னதைப் போல படத்தின் வெற்றியில் தனக்கு 99 சதவிகிதம் பங்கெல்லாம் இல்லை என்று மறுத்தவர் தனக்கு 1 சதம் பங்கு மட்டுமே உரியது. மீது 99 சதவிகிதமும் சிம்புத்தேவனையே சாரும் என்று ஒரு போடு போட்டார். தயாரிப்பாளர் என்ற முறையில் படம் வெளிவர உதவி புரிந்த கலைஞர், வனத்துறை அமைச்சர் ராஜா மற்றும் நடிகர் தியாகு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

* படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஷீல்டுகள் வழங்கப்பட்டது. வி.எஸ். ராகவன், மதுரம் போன்ற பழம்பெரும் கலைஞர்களும் விருது பெறும்போது பரவலான கைத்தட்டல் சத்தம் எழுந்தது. நாகேஷ் சார்பில் மனோரமாவே ஷீல்டினை பெற்றுக் கொண்டார்.

* விழா தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து தேசியகீதத்துடன் சுமார் 10.30 மணிக்கு இனியதாகவே முடிந்தது.

(http://madippakkam.blogspot.com)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இந்த கலர் பாக்கிறத எல்லாம் விட்டிட்டு வேறு நாடு போகின்றீர்களாமே? வாழத்துகள் எங்கு இருந்தாலும் யாழுடன் இனைந்து இருங்கள்...

  • தொடங்கியவர்

ம்ம்ம் இந்த கலர் பாக்கிறத எல்லாம் விட்டிட்டு வேறு நாடு போகின்றீர்களாமே? வாழத்துகள் எங்கு இருந்தாலும் யாழுடன் இனைந்து இருங்கள்...

யாருப்பா இதுமாதிரி கிசு கிசு எல்லாம் பரப்புறது?

சொர்க்கமே என்றாலும் அது

மடிப்பாக்கம் போல ஆகுமா? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் அப்பிடியே spencer plaza பக்கம் போய் கலர் பாக்கிற மாதிரி வருமா...

  • தொடங்கியவர்

அதுவும் அப்பிடியே spencer plaza பக்கம் போய் கலர் பாக்கிற மாதிரி வருமா...

அதெல்லாம் 5 வருஷம் முன்னாடி... இப்போல்லாம் ECR ரோடு தான் சென்னையின் சொர்க்கம்.... ERLலே ஏதாவது தீம்பார்க்குக்கு போயிட்டு அப்படியே மாயாஜால் மல்டிப்ளக்ஸ்லே ஒரு படம் பார்த்துட்டு....

யப்பா என்னதான் அரசியல் அராஜகம், ரவுடியிசம், கள்ள ஓட்டு அது இதுன்னு இருந்தாலும் ஒருவகையிலே பார்த்தா சென்னை சொர்க்கமே.

  • தொடங்கியவர்

அதுவும் அப்பிடியே spencer plaza பக்கம் போய் கலர் பாக்கிற மாதிரி வருமா...

அதெல்லாம் 5 வருஷம் முன்னாடி... இப்போல்லாம் ECR ரோடு தான் சென்னையின் சொர்க்கம்.... ERLலே ஏதாவது தீம்பார்க்குக்கு போயிட்டு அப்படியே மாயாஜால் மல்டிப்ளக்ஸ்லே ஒரு படம் பார்த்துட்டு....

யப்பா என்னதான் அரசியல் அராஜகம், ரவுடியிசம், கள்ள ஓட்டு அது இதுன்னு இருந்தாலும் ஒருவகையிலே பார்த்தா சென்னை சொர்க்கமே.

யாருப்பா இதுமாதிரி கிசு கிசு எல்லாம் பரப்புறது?

சொர்க்கமே என்றாலும் அது

மடிப்பாக்கம் போல ஆகுமா? :lol::lol::lol:

சிட்னி அன்னதானத்திலும் உங்களை பற்றி தான் கதை நீங்கள் எப்ப போறீங்கள்

:wink: :wink: :wink:

அதெல்லாம் 5 வருஷம் முன்னாடி... இப்போல்லாம் ECR ரோடு தான் சென்னையின் சொர்க்கம்.... ERLலே ஏதாவது தீம்பார்க்குக்கு போயிட்டு அப்படியே மாயாஜால் மல்டிப்ளக்ஸ்லே ஒரு படம் பார்த்துட்டு....

யப்பா என்னதான் அரசியல் அராஜகம், ரவுடியிசம், கள்ள ஓட்டு அது இதுன்னு இருந்தாலும் ஒருவகையிலே பார்த்தா சென்னை சொர்க்கமே.

சென்னை சொர்க்கம் என்று தெரிச்சு தானே உங்களை வெளியே அனுபுறம்லே :P

ஆனாலும் நல்ல இருந்திச்சு உங்கள் விமர்சனம் :wink:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நாரதர் மாம்பழம் கொண்டு செல்லாத இடத்துக்கு லக்கி போகப்போவதாக அன்னதானத்தில் கேள்விப்பட்டேன்

  • தொடங்கியவர்

யாழ்கள நாரதர் மாம்பழம் கொண்டு செல்லாத இடத்துக்கு லக்கி போகப்போவதாக அன்னதானத்தில் கேள்விப்பட்டேன்

இல்லை ஐயா. சென்னையை விட்டு எங்கேயும் போவதாக இல்லை. ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதுமாதிரி ஒரு திட்டம் இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.