Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் குரல் மீது வான்குண்டு தாக்குதல்

Featured Replies

புலிகளின் குரல்" வானொலியின் ஒலிபரப்பு நிலையம் மீது வான்குண்டுத் தாக்குதல்

[Tuesday October 17 2006 10:59:57 AM GMT] [யாழ் வாணன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையமானது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் குரல் தமிழீழ வானொலி ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொக்காவிலில் உள்ள அதன் மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும், றொக்கெற் குண்டுகளையும் ஏவின.

புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம், இரண்டு கலையகங்கள் ஆகியவற்றின் மீதும் அதன் சுற்றாடல் மீதும் 25 வரையான ரொக்கெட் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன.

இக்குண்டுத்தாக்குதலில் புலிகளின் குரலின் ஒலிபரப்புக் கோபுரம் முற்றாக அழிந்தது.

ஒலிபரப்பு நிலையம் மற்றும் அதிலிருந்த உயர்வலு ஒலிபரப்புச் சாதனம் மற்றுமொரு ஒலிபரப்புச் சாதனம், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியன அழிக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட உபகரணங்களின் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

சிங்கள அரசின் திட்டமிட்ட இத்தாக்குதலின் போது ஒலிபரப்பில் ஈடுபட்டிருந்தோர் உடனடியாக தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன. சுரேந்தர் (வயது 23) மற்றும் கரிதாஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இத்தாக்குதல் மூலம் புலிகளின் குரல் ஒலிபரப்பு மையத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின்குரல் ஒலிபரப்பு மையம் மற்றும் அதன் ஒரு கிலோமீற்றர் சுற்றாடல் பிரதேசம் கிபிர்த் தாக்குதலில் முற்றாக அழிவுற்றுக் காணப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான புலிகளின் குரல் வானொலி நிலையப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார்.

அமைதிப் பேச்சுகள் நடைபெறும் நிலையில் தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதற்கான தாக்குதல் இது என்றும் இருப்பினும் புலிகளின் குரல் வானொலியின் சேவை தொடர்ந்து ஒலிபரப்பாகும் என்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறினார்.

http://www.tamilwin.com/article.php?artiId...&token=dispNews

  • தொடங்கியவர்

இந்த தாக்குதல் இலங்கை படையின் திட்டமிட்ட ஊடக அடக்குமறையின் உச்சம இது..

புலிகளின் குரல் ஆனாது தனது பணியை மிக இக்கட்டான காலப்பகுதியிலும் தனது செயற்பாட்டை மிக சாதுரியமாக செய்து

அந்த மக்களின் அவலங்களை வெளியுலகுக்கு கொண்டு வந்த மிக சிறந்த ஊடகமாகும்...

இதன் அழிப்பு என்பது தமிழ் மக்களுக்க விழுந்த ஒரு அடியே..ஆனாலும் அதன் குரல் ஓயாது ஒலிக்கும் என்பதில் ஜயமில்லை...

இருந்தும் இது கவலைக்குரிய செயல்...கண்டிக்கதக்கது...

சிங்கள படைகளின் கையாலாகதனத்தின் வெளிப்பாடே இது...

நன்றி

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இடப்பெயர்வு நேரத்தில் கூட மரங்களில் ஒலிபரப்பியை வைத்து ஒலிபரப்புச் செய்தவர்கள் புலிகளின் வானொலியினர்.

கோபுரங்கள் வீழலாம், ஆனால் ஒலியலைகள் பரவியே ஆகும்.

மேலும் வன்னி மைந்தன், நீங்கள் இங்கே போட்டிருக்கும் செய்தியானது புதினத்தின் செய்தி.

இவர்கள் தமது செய்தியாக போட்டிருக்கிறார்கள். இது மிகவும் வேதனையான விடயம்.

செய்திகளை சிரத்தையுடன் தமது செய்திகளாக போடுகிறவர்கள் புதினம்.

20061017002.jpg

20061017001.jpg

படங்கள் நன்றி புதினம்

http://www.eelampage.com/?cn=29346

பேரினத்தின் கையாலகாத் தனத்திற்கு ஓர் உவமை. தமிழினத்தின் குரலை நசுக்கும் மிலேச்சத்தனமான அசிங்கச் செயல். விழ விழ எழுவோம் பகைவனே.

ஈழத்திலிருந்து

ஐhனா

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையமானது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.

"புலிகளின் குரல்", "தமிழீழ வானொலி" ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொக்காவிலில் உள்ள அதன் மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும், றொக்கெற் குண்டுகளையும் ஏவின.

"புலிகளின் குரலின்" ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம், இரண்டு கலையகங்கள் ஆகியவற்றின் மீதும் அதன் சுற்றாடல் மீதும் 25 வரையான ரொக்கெட் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன.

இக்குண்டுத்தாக்குதலில் புலிகளின் குரலின் ஒலிபரப்புக் கோபுரம் முற்றாக அழிந்தது.

ஒலிபரப்பு நிலையம் மற்றும் அதிலிருந்த உயர்வலு ஒலிபரப்புச் சாதனம் மற்றுமொரு ஒலிபரப்புச் சாதனம், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியன அழிக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட உபகரணங்களின் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

சிங்கள அரசின் திட்டமிட்ட இத்தாக்குதலின் போது ஒலிபரப்பில் ஈடுபட்டிருந்தோர் உடனடியாக தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன. சுரேந்தர் (வயது 23) மற்றும் கரிதாஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இத்தாக்குதல் மூலம் "புலிகளின் குரல்" ஒலிபரப்பு மையத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

"புலிகளின் குரல்" ஒலிபரப்பு மையம் மற்றும் அதன் ஒரு கிலோமீற்றர் சுற்றாடல் பிரதேசம் கிபிர்த் தாக்குதலில் முற்றாக அழிவுற்றுக் காணப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான "புலிகளின் குரல்" வானொலி நிலையப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார்.

அமைதிப் பேச்சுகள் நடைபெறும் நிலையில் தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதற்கான தாக்குதல் இது என்றும் இருப்பினும் "புலிகளின் குரல்" வானொலியின் சேவை தொடர்ந்து ஒலிபரப்பாகும் என்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறினார்.

http://www.eelampage.com/?cn=29346

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டுகளைபோட்டு "புலிகளின் குரலை நசுக்க முடியாதவர்கள் /முயன்றவர்கள்" - "புலிகளின் குரல்" வானொலி மையத்தின்மீது தங்கள் கைவரிசையை காட்டியிருக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.