Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் தம்பதியினரைக் குழந்தையுடன் கவுரவ கொலை செய்த கும்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1406791896-8888.jpg
 

 

மன்னார்குடி அருகே தம்பதியினரை பச்சிளங்குழந்தையுடன், உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கவுரவ கொலை செய்துள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரைச் சேர்ந்தவர் 40 வயதுடைய பழனியப்பன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டனர். விஜயா தற்போது தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் பழனியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளியான இவர் நர்சிங் படித்து விட்டு ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
 
பழனியப்பன் கோவைக்கு கட்டடம் கட்டும் கூலி வேலைக்குச் சென்றார். அமிர்தவள்ளியையும் தன்னுடன் அழைத்து சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
 
இவர்களுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.
 
இந்நிலையில், ஆதிச்சபுரம் வேதபுரம் சாலையில் உள்ள வயல் வெளியில், பழனியப்பன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். அவரது முகம் சேற்றில் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. 
 
அமிர்தவள்ளி கூத்தாநல்லூர் சாலையில் அரிச்சந்திரா நதியில் பிணமாகக் கிடந்தார். அவர்களது குழந்தை என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்து வந்தது.
 
குழந்தையைக் காவல் துறையினர் தேடிவந்தனர், இதைத் தொடர்ந்து, அமிர்த வள்ளி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் கூத்தா நல்லூர் சாலையில், குன்னியூர் பேருந்து நிறுத்தம் அருகே வயல்வெளியில் குழந்தை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை குழந்தையின் உடலை காவல் துறையினர் மீட்டனர். 
 
இந்தக் கொலை சம்பவம் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், 3 பேரையும் பழனியப்பனின் சகோதரர்கள் கவுரவக் கொலை செய்ததது தெரிய வந்தது.
 
இதனால், பழனியப்பனின் சகோதரர்கள் ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், அவர்களது உறவினர் மகேந்திரன், ராமகிருஷ்ணனின் நண்பர் துரைராஜ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இது குறித்து, பழனியப்பனின் சகோதரர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
 
பழனியப்பனுக்கு 2 ஏக்கர் நிலமும், ½ ஏக்கரில் வீட்டு மனையும் உள்ளது. அவர் வேறு பிரிவைச் சேர்ந்தவருடன் குடும்பம் நடத்தி வந்ததால் சொத்து அந்தப் பெண்ணிற்குச் சென்று விடும் என்று நினைத்தோம்.
 
மேலும் பழனியப்பனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதற்காக அவரை கட்டி வைத்து அடித்துள்ளோம். ஆனாலும் அவர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததால் அவமானம் ஏற்பட்டது. இதனால்தான் 3 பேரையும் கவுரவ கொலை செய்தோம்.
 
சில தினங்களுக்கு முன்னர் அவர் ஊருக்கு வருவதை அறிந்து கொண்டோம். அவர்கள் ஆதிச்சபுரம் ஆர்ச் பகுதியில் இறங்கினார்கள். பின்னர் பழனியப்பன் மது குடிக்கச் சென்றார்.
 
மது குடித்து விட்டு வந்தவுடன் அவரது கழுத்தை நெரித்து சேற்றில் அமுக்கிக் கொன்றோம். அமிர்தவள்ளியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆற்றில் தண்ணீரில் மூழ்கடித்தோம். குழந்தையைக் கொன்று வயலில் வீசினோம். இவ்வாறு அவர்கள் அந்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
 
பிறந்து, 38 நாட்களே ஆன குழந்தை உட்பட 3 பேரை கவுரவ கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சாதி மனப்பான்மை தமிழனை ஆக்கி வைத்திருக்கும் நிலை.

இங்கு சாதி மனப்பான்மையை விட அந்த நபரின் பழக்கவழக்கம் நன்றாக இல்லை , நிறைய பெண்களுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கின்றார் . இந்த மாதிரியான ஆண்களை தான் தண்டிக்கவேண்டும் அந்த பெண்ணும் குழந்தையும் என்ன தப்பு செய்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகாரப்பாவிப்பயலுக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.