Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் செம்மணி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி பகுதியில் 5 நாட்களில் 6 தமிழர்களை காணவில்லை

யாழ். செம்மணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 5 நாட்களில் 6 பேரை காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது.

வலிகாமத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையே நுழைவு வாயிலாக செம்மணி உள்ளது.

கந்தர்மடத்தைச் சேர்ந்த சகோதரர்களான மோகனதாஸ் கண்ணதாஸ் (வயது 29) மற்றும் ராஜாஜி தவராஜ் (வயது 28) ஆகியோர் தென்மராட்சி செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

செம்மணியின் மேற்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 51-4 ஆம் படையணி உள்ளது. அரியாலை தெற்கு மற்றும் கிளாலிப் பிரதேசங்களில் முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆம் படையணி இயங்கி வருகிறது.

நாவற்குழி, கைதடி மற்றும் செம்மணி பிரதேசங்களை இந்த இரு படையணிகளும்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்தப் பிரதேசங்களிலேயே அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணிப் பிரதேசத்தில் தொடர்ந்து இளைஞர்கள் காணாமல் போவதால் முன்னைய செம்மணி புதைகுழி சம்பவத்தை நினைவூட்டுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1996-97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். இது தொடர்பில் எதுவித விசாரணைகளையும் சிறிலங்கா அரசாங்கங்கள் நடத்தவும் இல்லை.

http://www.eelampage.com/?cn=29452

  • கருத்துக்கள உறவுகள்

உம். அப்போதைய செம்மணிப் படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகள் தான் முதலில் அறிவித்தனர். பின்னர் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டதால் வேறு வழியின்றி, சந்திரிக்கா அம்மையார் வழக்கை நடத்தினார்.

அந்த நேரத்தில் குமார் பொன்னம்பலம் தான் இந்த வழக்கு தொடர்பாக யாழ் நீதிமன்றில் ஆஜராக முன்வந்தார். ஆனால் சிறிலங்கா அரசு, இவரை விமானத்தில் செல்லதைத் தடுத்தது.

அத் தடைக்கும், பிறகு அவர் சிறிலங்கா நீதிமன்றில் வழக்கு போட்டதாக அறியக் கிடக்கின்றது.

அந்த நேரத்தில் ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, டக்ளஸ் வீணை வாசிச்சுக் கொண்டிருந்தார். இன்று வரை அதைப் பற்றிய எவ்வித முன்னெடுப்பையும் செய்யவில்லை. ஒட்டி நின்று சேவகம் செய்பவர்களின் நிலை அவ்வளவு தான்!

இப்போதும் புது இரத்தக்கதையா?

ம்... மீண்டும் செம்மணியா? தாங்காது.

ஈழத்திலிருந்து

ஐhனா

செம்மணி பகுதியில் 5 நாட்களில் 6 தமிழர்களை காணவில்லை

ஏ-9 பாதை திறந்தால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள்??????

யாழில் இருப்பார்களா???? :?:

அந்த நேரத்தில் ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, டக்ளஸ் வீணை வாசிச்சுக் கொண்டிருந்தார். இன்று வரை அதைப் பற்றிய எவ்வித முன்னெடுப்பையும் செய்யவில்லை. ஒட்டி நின்று சேவகம் செய்பவர்களின் நிலை அவ்வளவு தான்!

அவருக்கென்ன அவருக்கு காசு கொடுத்தா காணும் கொள்கை என்றதுக்கே அர்த்தம் தெரியாத ஒரு அரசியல்வாதி வடகிழக்கு பிரிப்பு பற்றி கேட்டதுக்கு இப்போது பிரிப்பு சாத்தியமில்லை இந்த நிலையில் தேர்தல் வைக்கமுடியாது எண்டு சொல்லிவிட்டார்.ஆனால் அறிக்கை மாத்திரம் மாநிலத்தில் சுயாட்ச்சி மத்தியில் கூட்டாட்ச்சி என்றும் பிரிக்கப்படாத வடகிழக்கு??

என்ன கோமாளித்தனமிது கழுத்தில செல்போனை மாட்டிக்கொண்டு துரோகம் செய்வதிலே பிழைப்பை நடத்துகிறார்.

இனியாயினும் திருந்துக டக்லஸ் அவர்களே சிங்களவன் கட்ச்சி பேதமறந்து ஒன்றிணந்து விட்டான் பழையதை மறந்து எம்மினத்தின் நன்மைக்காய் ஒன்றுபடுங்கள் இனி அங்கு இவர் கறிவேப்பிலைதான் அதாவ்து கதிர்காமரை பாவித்து எப்படி கழ்ட்டிவிட்டார்களோ அப்படித்தான் இதுவும்.எமக்குள் இருக்கும் பிரச்சினையை எம் பொது பிரச்சினையை தீர்த்தபின் தீர்க்கலாம் என்பது என்கருத்து

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் தனித்திருந்தால் நீங்கள் அனைவரும் செய்த துரோகங்கள் கொஞ்சமாகும் மறையும் இனியாவ்து யோசியுங்கள் மாற்ருகருத்தாளர் மாற்று இயக்கம் என தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளும் கூட்டத்தினரே

இவர்களுக்கு எக்காலத்திலும் மன்னிப்பில்லை. இனியாவது பேரினத்தின் கபடத்தைப் புரிந்து கொண்டு உபத்திரவம் தராமல் ஒதுங்கியிருந்தால் செய்த அட்டூழியங்களை தமிழர் மறக்க வாய்ப்புண்டு.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.