Jump to content

பெல்ஜியம் அப்பார்ட்மென்டில் பரபரப்பு; துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதிகள் ?


adsharan

Recommended Posts

பிரஸ்சல்ஸ்: ஆஸி., சிட்னியில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ள சம்பவம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பெல்ஜியத்தில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியுடன் வந்தது பயங்கரவாதிகளா என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சிட்னி ஓட்டலில் சிக்கி உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுடன் கை தேர்ந்த அதிகாரிகள் பேசி வருவதாக ஆஸி., போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சிட்னியில் பிணை வைத்துள்ள பயங்கரவாதிகள் சிரியாவை அல் நுஷ்ரா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிட்னி ஓட்டல் பயங்கரவாதிகள் பிடியில் ஒரு இந்தியாவின் இன்போசிஸ் ஊழியரும் சிக்கியுள்ளதாக இன்போசிஸ் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.

இதற்கிடையில் வடக்கு பெல்ஜியம் ஹென்ட் ( டாம்பூர்ட்) பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் துப்பாக்கியுடன் சிலர் நுழைந்து அங்கிருந்த நபர்களை பிணை கைதிகளாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கம் , பக்கத்தில் உள்ள வீட்டுக்காரர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அப்பார்ட் மென்ட் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . அப்பார்ட்மென்ட் இருக்கும் சுற்றுப்பகுதி முழுவதும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பயங்கரவாத செயலா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை.

பெல்ஜியத்தில் இன்று ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் இந்த சம்பவம் ஆஸி.,யை அடுத்து மேலும் ஒரு பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

www.dinamalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவது முஸ்லிம்களால்தான் பிரச்சனை.   :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவது முஸ்லிம்களால்தான் பிரச்சனை. :blink:

இதைப் பத்தி கதைத்தால், துவுக்குத் தூக்கி, ஓய்வு பெற்றுக் கொண்டு, நாலு நியாயம் பிளக்கிற சிலர், நீங்கள் என்ன நாட்டாமையோ எண்டு பாஞ்சு அடிச்சுக் கொண்டு வருவினம்.... :o:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கோழிக்குஞ்சு போல் தமிழினத்தை பாதுகாத்து............தமிழினத்திற்காக அதி உன்னதமாக போராடிய போராளிகளை பயங்கரவாதிகளாக அறிவித்த மேற்குலகிற்கு இதுவும் வேணும்....இன்னும் வேணும்.  :)
 
இப்போது யார் உலகின் பயங்கரவாதிகள் என தெரியவரும். :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கென்யாவில super market ல் தாக்குதல் நடத்திய பின்னர், அங்கே, இந்த மூளை சலவை செய்த வெறுப்பினை போதிக்கும் பிரசங்கிகளை (hate prechers ) 5 பேரை இரவோடு இரவாக secret services தூக்க (வெடிதான்), இப்போது சிறிது குறைந்து விட்டதாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.