Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காட்சியும் கவிதையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகன்.. படத்தில் எழுதும் போது எழுத்துரு பருமனை..  28.. அதற்கு மேல்.. வைச்சிருந்தால்.. வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அல்லது படத்தில் எழுதப்பட்டதையும் பதிவில் இணைத்துவிடுங்கள்.  :icon_idea:  :)

  • Replies 109
  • Views 9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான்,  suvy,   சியோன் யாழ்வேந்தன்

ஆகியோருக்கும்  நெடுக்காலபோவான்.ஆலோசனைக்கும் நன்றிகள்.

Edited by Sembagan

  • தொடங்கியவர்

  

 

2ptw96q.jpg

 

 

 

 

 

 

 

 

   நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்

நின்மதி யிழந்து கொள்ளுறோம் ஏக்கம்

இளமை இன்பத்தை  இழக்காமல் நாம்

இணைந்து வாழ்வோம் இங்கேவா கண்ணே!

Edited by Sembagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்று.   "நாம் இணைந்து வாழ்வோம் இங்கே வா கண்ணே" என்பது சரியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

நன்று.   "நாம் இணைந்து வாழ்வோம் இங்கே வா கண்ணே" என்பது சரியாக இருக்கும்.

 

நன்றிகள் சியோன் யாழ்வேந்தன்.   மாற்றம் செய்துள்ளேன்.

  • தொடங்கியவர்

  

10ds4gp.jpg

 

 

   ஆசை ஆசையாய்க் கட்டியவர் வெளியே

அகதியாய் அலைகிறார் இருப்பிடமின்றி

அவர்களின் வருகை அழகூட்டுமென்று

ஆண்டுகள் பலவாய்க் காத்திருக்கிறோம் இங்கே.

Edited by Sembagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகிய கவிதை வரிகளுக்கு பொருத்தமான படம். வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

  

 

 

 

 

 

 

 

 

   vq65xh.jpg   எல்லைகளுமில்லை விசாக்களுமில்லை

எங்கு  செல்வதற்கும்  தடைகளுமில்லை

சென்ற இடங்களில் நாம் தங்காமல்

தேசத்தை நோக்கியே சிறகுவிரிப்போம்.

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

11024626_10152674853972944_2990102270473

  • தொடங்கியவர்

  

2j26ltz.jpg

   பங்களிப்புச் செய்யார்க்கு மேடை நிகழ்வில் தீண்டாமை

பள்ளி வேறானால் பொதுத் தேர்வில் தீண்டாமை

கட்சி மாறானால் கதைப்பதிலும் தீண்டாமை - இவை

கயவர்கள் கைக்கொள்ளும் புதுவிதத் தீண்டாமை

  • தொடங்கியவர்

  

 

  

   25tb3uc.jpg

 

   நிழல் தரும் மரமாய்

நிமிர்ந்து நிற்கும் காலம்

புகழ்பாடிப் பூரிப்புக் கொள்வார் - அது

சாய்ந்து வீழ்ந்தால் தறித்தெறிவார்

Edited by Sembagan

  • தொடங்கியவர்

   20hk1up.jpg

   பூக்களுடன் உறவாடிப் பூந்தேனைக் களவாடி

பூரிப்பாய்ப் பறந்த வண்டு வழியினிலே

மாம்பூவை  ஏமாற்றி மதுவுண்ட வேளையிலே -  அது

தன்னுள் அணைத்துத் தனிச் சிறையாக்கியதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாம்பழத்துக்குள் இருக்கும் வண்டு இப்படித்தான் மாட்டிக்கொண்டதா?

நல்ல கவிதை.

  • தொடங்கியவர்

  

 

 

 

 

 

 

 

 

 

   2vxg6t4.png   கோடைவெயிலின் கொடுமையால் தும்பி

கானகம் எங்கும் களைப்புடன் சுற்றி

தாகம்கொண்டு தடாகம் வர

தாமரைமொட்டு தாகம் தீர்த்தது.

Edited by Sembagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடையைக் குளிர்விக்கும் கவிதை. 

வாழ்த்துகள்!

 

( தும்பி அல்லது வண்டு என்று சொல்வது வேறொன்று.  இந்தப் படத்தில் உள்ளதை தட்டாம்பூச்சி, தட்டான், தட்டாரப்பூச்சி என்று தமிழ்நாட்டில் சொல்கிறோம்.)

  • தொடங்கியவர்

நன்றி seyon yazhvaendhan 

எங்கள்   பகுதிகளில்  தும்பி என்றும்  தட்டான் என்றும்    தட்டாம் பூச்சி என்றும்   அழைப்பது வழமை. 

தட்டானில் மிகப் பெரியதை தும்பித் தட்டான் என்று கூறுவதும் உள்ளது.  . இத்தட்டான்களுக்கு,

சற்கரைத் தட்டான், ஊசித்தட்டான், சீனித் தட்டான். ... இப்படிப் பல. பல பெயர்களும் வைத்திருப்பார்கள்.  

உங்களின் கருத்து என்னைத் தேடலுக்கு உட்படுத்தியது. நன்று தொடர்ந்து இணைந்து பயணிப்போம். நன்றி.

                

  • தொடங்கியவர்

   

15waw6b.jpg

 

    உள்ளன்பு இல்லார் உறவு உறவல்ல

    உண்மை  மகிழ்வு  மல்ல  - இத்

 தகவிலார்  வாழ்வுடன் இணைவது

 தண்ணீரில் தாமரை இலை போலாகும்

Edited by Sembagan

  • தொடங்கியவர்

  

   2ryh8hi.jpg   குளிர்காலம்  முழுதும் கூடிக்கிடந்து

வேனிற்காலம் வர வெளியே சென்றவர்

இருளாகியும்  இல்லம் திரும்பவில்லையெனில்

ஏங்கித் தவிக்கும்   இளம் பேடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை நண்பரே.

 

   குளிர்காலம்  முழுதும் கூடிக்கிடந்து

வேனிற்காலம் வர வெளியே சென்றவர்

இருளாகியும்  இல்லம் திரும்பவில்லையெனில்

ஏங்கித் தவிக்கும்   இளம் பேடு.

 

திரும்பவில்லையெனில் என்ற சொல்லுக்குப் பதிலாக,

 

 திரும்பவில்லையென,  திரும்பவில்லையென்று என்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

 

 

இருளாகியும்  இல்லம் திரும்பவில்லையென்

றேங்கித் தவிக்கும்   இளம் பேடு.

 

நன்றாக இருக்குமா என்று பாருங்கள்.

  • தொடங்கியவர்

 

தங்கள் கருத்துக்கு நன்றி    seyon yazhvaendhan

 

திரும்பவில்லையெனில்

ஏங்கித் தவிக்கும்   இளம் பேடு.

  என் எண்ணத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றால் சரி தோழரே!

  • தொடங்கியவர்

நன்றி  தோழரே!

  • தொடங்கியவர்

242e9gk.png

 

வண்டொன்று எனைச் சுற்றி வட்டமிட

வனிதையர் தூதோவென நானெண்ணி

மெல்ல அதனருனே காதை நீட்ட

கடித்து  விசமேற்றிப் பறந்ததுவே

Edited by Sembagan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பாட்டுக்குப் படம் தயார் செய்கிறீர்களா, அல்லது படத்துக்குப் பாட்டு எழுதுகிறீர்களா?   இந்தக் கவிதை முதல் வகை போலத் தோன்றுகிறது.  நன்று.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

seyon yazhvaendhan  நீங்கள் கூறுவது உண்மை.

சங்க காலத்தில் அன்னத்தைத் தூதுவிட்டார்கள். நாரையைத் தூது விட்டார்கள் என்று அறிய முடிகிறது. அவ்வகையில் பூங்காவில் நின்றபோது ஒரு குளவி என்னைச் சுற்றி வட்டமிட. யாராவது தூது அனுப்பினார்களோ என்று  என்னுள் ஒரு நப்பாசை.   படம் எடுக்க முடியவில்லை. படத்தைச் சேர்த்தேன். நன்றி உங்கள் ஆய்வுக்கும் கருத்துக்கும். .  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.