Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் தாக்குதல்களும் ஆங்கில ஊடகங்களின் அதிர்வலைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் தாக்குதல்களும் ஆங்கில ஊடகங்களின் அதிர்வலைகளும் தமிழர் தாயகத்தில் முகாமலை, சிறிலங்காவின் ஹபரணை, காலி உள்ளிட்ட தாக்குதல்களால் சிறிலங்கா தரப்பினர் எப்படியெல்லாம் நிலைகுலைந்துள்ளனர் என்பதை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

சில ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு:

சண்டே ரைம்சில் இக்பால் அத்தாஸ்:

காலி துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைக்கு அழிவை ஏற்படுத்திய தாக்குதலாளிகள் இலங்கைத்தீவின் தெற்கு முனையிலும் தாக்குதல் நடத்தும் இராணுவப் பலம் தம்மிடம் உள்ளது என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர் என்பது முக்கியமான விடயம்.

அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

பெரும்பாலும் சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டவர்களும் கொழும்பில் பணிபுரியும் வெளிநாட்டவர்களும் அதிக நாட்களை கழிக்கும் தெற்கு கடற்கரைப்பகுதி பாதுகாப்பற்றதொன்று அங்கு எவரும் போகாதீர்கள் என்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் 1000 கடற்படையினர் சிறிலங்காப் படையினருக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தையும் இரத்துச் செய்ய வைத்துள்ளது.

இது படையினரிடம் பெரும் விரக்தியை ஏற்படுத்தும்.

காலி துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படைக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய தாக்குதலையடுத்து கட்டளையகம் மற்றும் "தக்சினா" கடற்படைத் தளத்தின் தளபதிகளையும் சிறிலங்கா மாற்றியுள்ளது.

காலி துறைமுகத்தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தரப்பு தற்போது வெளியிடுகின்ற தகவல்களின் படி

ஒரு கரையோர சுற்று நடவடிக்கை கலமும்-

ஒரு சுற்று நடவடிக்கை கலமும்-

ஒரு டோறாப்படகும்

ஒரு வேகத்தாக்குதல் கலமும் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன.

இவற்றில் ஏற்கனவே சேதமாகி பயன்படுத்த முடியாது தரித்து நின்ற கடற்படை வேகத்தாக்குதல் கப்பலான "பராக்கிரமபாகு" தாக்குதலுக்கு இலக்காகி சேதமாகி தீப்பற்றியதாகவும் சிறிலங்கா அரசு தற்போது தரப்பு தெரிவித்துள்ளது. இது 1994 இல் சீனாவிடமிருந்து வாங்கப்பட்ட கப்பல்.

மேலும் கரையோரத்தில் இரண்டு குண்டுகள் தாக்கி எரிபொருள் தாங்கிகள் தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளன.

குண்டுத்தாக்குதலில் கட்டடங்கள் சேதமாகியுள்ளன. இதனையும் சிறிலங்கா இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் காலி "தக்சினா" கடற்படைத்தளத்தின் தளபதி, கடற்படை தெற்கு கட்டளைப்பிரிவான கொம் சௌத் தளபதியும் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதான இராணுவத்தின் கணிப்பீடு என்பது இராணுவத்தினரின் மீதான தாக்குதல்கள் மூலம் பொய் என்று நிருபித்துள்ளன.

சிறிலங்கா இராணுவமானது சிலரால் தவறாக வழிநடத்தப்படுகின்றது என்பது தெரிகின்றது.

சிறிலங்கா இராணுவத்தினரது இழப்புக்களை மறைப்பதால் இராணுவத்தினரின் மனவுறுதி வீழ்வதை தடுக்கலாம் என்று கருதுகின்றார்கள்.

ஆனால் மறைக்கப்பட்ட உண்மைகளை இல்லாமல் செய்து விடமுடியாது.

இரு தசாப்த போரில் பெருமளவிலான மில்லியன் ரூபாய்க்கள் பெறுமதியான போர்க்கலங்கள் இழக்கப்பட்டு விட்டன.

திகம்பத்தன தாக்குதலில் 116 கடற்படையினர் கொல்லப்பட்டனர். 130 கடற்படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து 110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற நிலைமை தொடர்கின்றது.

கொல்லப்பட்டவர்களில் கடற்படை லெப். கொமாண்டர் தர அதிகாரியும் அடங்குவார்.

முகமாலையில் கொல்லப்பட்டவர்கள் தவிர காயமடைந்த படையினரில் 283 பேர் பி1-பி2 என்ற ஆபத்தான கடும்காய நிலையில்தான் உள்ளனர்.

முகமாலை மோதலில் கலந்துகொண்ட அதிகாரிகள், விடுதலைப் புலிகளின் திட்டங்களின் திறமையைப்பற்றி சொல்கிறார்கள்.

ஆனால் அரசிடம் இழப்புக்கள் தொடர்பாகக்கூட ஒரு திட்டமுமில்லை.

இந்தக்களத்தில் ஈடுபட்ட 3 பிரிகேட்களின் தளபதிகள் விசாரணையில் நிற்கின்றனர்.

தோல்விகளால் இழப்புக்களால் இராணுவத்தினரின் மனவுறுதியில் பின்னடைவு ஏற்றப்பட்டுள்ளது.

இது இரகசியமான மறைக்கப்படக்கூடிய விடயமல்ல.

இழப்புக்களை அரசு மறைத்தாலும் அது இராணுவ அதிகாரிகளிடமும் இராணுவத்தினரிடமும் செல்ல அதிக நாட்கள் எடுக்காது. விரைவில் அவர்களுக்கு தெரிந்துவிடும் என்கிறார் இக்பால் அத்தாஸ்.

ஐலண்ட் ஏட்டின் இராணுவ ஆய்வு:

காலியில் பராக்கிரமபாகு கப்பல் மற்றொரு பீரங்கிப்படகு உட்பட்ட கடற்கலங்கள் தாக்குதலுக்குள்ளாகின. 3 கடற்கலங்கள் அழிக்கப்பட்டன.

காலி கடற்படைத்தளத்துக்குரிய டீசல் தாங்கி ஆர்பிஜி தாக்குதலில் எரிந்து அழிந்துள்ளது.

இந்த தாக்குதல் கடற்படைக்கு தெற்கில் யால முதல் கொழும்பு வரையான கடலையும் பாதுகாக்கும் கடமை வந்துள்ளது.

இத்தாக்குதலால் யேர்மனி, அவுஸ்திரெலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமது மக்கள் அங்கு சுற்றுலா செல்லவேண்டாம் என்று தெரிவித்துள்ளன.

இதனால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிக நிதியை அரசு செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகைக்காலம் சிதைக்கப்பட்டு விட்டது.

சன்டே ரைம்ஸ் பொருளியில் ஆய்வு:

திகம்பத்தன தாக்குதல் ஹபரண, சிகிரியா, தம்புள்ள சுற்றுலா மையத்தை ஆபத்துக்குள்ளாகியுள்ளது.

காலி துறைமுகத்தாக்குதல் தென்பகுதி சுற்றுலா மையத்தை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.

முக்கியமான சுற்றுலாப் பயணக்காலம் சிதைக்கப்பட்டு விட்டது.

இது சுற்றுலாப்பயணிகள் வரும் காலமாகும்.

கடந்த ஆண்டு 5 லட்சத்து 49 ஆயிரத்து 308 பேர் சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தனர். இந்த ஆண்டு 6 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்று கணிப்பிடப்பட்டிருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.